இடுகைகள்

அ.சி.விஜிதரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதி வாழ்க்கையின் வலி, வேதனைகளைக் கூறும் கவிதை நூல்!

படம்
  மரண வீட்டின் முகவரி அ சி விஜிதரன் சிந்தன் புக்ஸ் 150 ரூபாய்  இது ஒரு கவிதை நூல். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அகதி முகாமில் வாழும் நிலை ஏற்பட்ட ஒருவர் தனது மனப்புழுக்கங்களை கவிதையாக எழுதியுள்ளார். இந்த நூலில், முகாமின் நிலை, அங்கு அகதிகள் நடத்தப்படும் நிலை, அங்குள்ள அறைகள் எப்படி கட்டப்பட்டுள்ளன, அதிகாரிகள் எப்படி பேசுவதற்கு எழுதுவதற்கு கூட தடை விதிக்கிறார்கள், பெயர்கள் இல்லாமல் எண்களை அடையாளமாக வைத்து மனிதர்களை அழைப்பது, இப்படியான இடம்பெயர்வு வாழ்க்கையில் பிற மனிதர்களுக்கு நடைபெறும் காதல், திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாமல் போவது என நிறைய விஷயங்களை கனமான வலி நிரம்பிய வார்த்தைகளை வைத்து எழுதியிருக்கிறார்.  எக்ஸ் - ட்விட்டரில் சிலர் தேநீர் கவிதைகளை எழுதுவார்களே அதுபோலத்தான் இந்த கொட்டடி கவிதைகள் என புரிந்தகொள்ளலாம். தங்குமிடம் தவிர்த்து, பேனா, பென்சில், பேப்பர் கவிதைகளில் அதிகம் இடம்பிடிக்கிறது.இந்த கவிதை நூல் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. கவிதைகளை எழுதியவரே உள்பக்க வடிவமைப்பை செய்திருக்கிறார். அட்டை வடிவமைப்பு லார்க் பாஸ்கரன். அட்டை சிறப்பாக உள...