இடுகைகள்

கார்டெல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதைப்பொருள் கடத்தலில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி கால்டாக்சி டிரைவர்!

படம்
        டாப் கியர் தெலுங்கு ஆதி, ரியா, மைம் கோபி போதை மாபியா குழுவின் விவகாரத்தில் கால் டாக்சி டிரைவர் சிக்கிக்கொள்கிறார். அவரது மனைவி உயிரைக் காப்பாற்ற போதைப்பொருளைக் கண்டுபிடிக்க செல்கிறார். இறுதியில் என்னவானது என்பதே கதை. படத்தில் காதல் காட்சி, நகைச்சுவை என எதுவும் கிடையாது. முழுக்க ஆக்சன் திரில்லராக எடுக்க நினைத்த இயக்குநர், அதை படத்தின் பாதியிலேயே மறந்துவிட்டார். நிறைய காட்சிகளில் பிஜிஎம் உறுமலோடு காட்சி மெதுவாக நகர்கிறது. எலிவேஷனுக்கு வெறும் இசை மட்டும் போதாது அல்லவா, காட்சியில் ஏதேனும் இருக்கவேண்டுமே? அப்படி ஏதும் இல்லை. நாயகன் டாக்சி டிரைவர். காதலித்து மனைவியை சார்பதிவாளர் அலுவலகத்தில் மணம் செய்கிறார். ஆனால், அவரின் கூட நிற்க எந்த நண்பர்களுமே இல்லை. அப்புறம் எப்படி சாட்சி கையெழுத்து போடுவது? இப்படியான லாஜிக் இடரல்கள் படம் நெடுக உண்டு. நேரடியாக கதைக்கு போகவேண்டும். எனவே, நாயகனுக்கு காதலி கிடையாது. மனைவி உண்டு. நாயகன், நாயகி தரப்பில் எந்த நண்பர்களும் இல்லை. ஏன், வீட்டில் கூட அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த செட்டப் ஒருவித செயற்கையான தன்மையை ஏற்படுத்துகிறது....

போதை கார்டெல் குழுவை அழிக்க கைகோர்க்கும் இரு நண்பர்களின் போராட்டக்கதை!

படம்
  சிட்டி ஆஃப் சாவோஸ்  சீன தொடர் 24 எபிசோடுகள் ஐக்யூஇ ஆப் கலின்சியா என்ற  நாடு உள்ளது. அதில் புகழ்பெற்ற நகரம் லாங்புக். இங்கு போதைப்பொருட்கள் கார்டெல்கள் வலுவாக உள்ளன. அதில் முக்கியமான கார்டெல், செவன்ஸ்டார் சொசைட்டி. இந்த அமைப்பு, ஆர்எக்ஸ் 45 என்ற போதைமருந்தை தயாரித்து மறைமுகமாக விற்று லாபம் பார்த்து வருகிறது. நேரடியாக செய்யும் வியாபாரங்கள் தனி. குளியலறை, கடை, மதுபானம் விற்பது, வணிக வளாகங்கள், கிளப்புகள், சூதாட்ட மையங்கள்  என ஏராளமானவை நடைபெறுகிறது.  சீனவீரர், இந்த போதைப்பொருள் மாஃபியாவை ஒழிக்க கலின்சியா வருகிறார். அதற்காக அவர் வேண்டுமென்றே குற்றம் ஒன்றில் சிக்கிக்கொண்டு லாங்புக் கடல் சிறைக்கு செல்கிறார். அங்கு, யு யோங்ஜி என்ற செவன்ஸ்டார் சொசைட்டியின் துணைத்தலைவர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொல்பவர்களை இடைமறித்துக் கொன்று அந்த மனிதனுக்கு நெருக்கமாகி போதை மாஃபியாவில் சேருகிறார். கூடவே, தீவின் சிறையில் இருந்த வார்டன் லாவோ பாயும் சேருகிறார். இவர், யு யோங்ஜியின் பள்ளிக்கால நண்பர்.  சீன வீரர் லூஜா, தன்னைப் பற்றிய ரகசியங்களை லாவோ பாயிடம் வெளிப்படையாக சொல்ல...

கார்டெல்கள் ஆளும் மெக்சிகோ தேசம்! - தினசரி கொல்லப்படும் அப்பாவி மக்கள்!

படம்
  மெக்சிகோ அதிபர் ஆம்லோ கார்டெல்கள் ஆட்சி செய்யும் மெக்சிகோ தேசம் மெக்சிகோ நாட்டை இடதுசாரி பாப்புலிச தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரடார் ஆள்கிறார். இப்படி கூறுவது பெயரளவில்தான். உண்மையில் மெக்சிகோவை   ஆள்வது போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் குழுக்கள்தான். அதிபரான ஆம்லோ ஆட்சிக்கு வரும்போது தினசரி 89 கொலைகள் நடந்துவந்தன. இப்போது அந்த எண்ணிக்கை கூடி 96 ஆக மாறியிருக்கிறது. ஆட்சி மாற காட்சியும் மாறியிருக்கிறது. என்னதான் நடக்கிறது? இடதுசாரி தலைவரின் ஒற்றைத்திட்டம் கூட நடைமுறைக்கு வரவில்லை. அணுவளவு பயனும் தரவில்லை என்பதே உண்மை. கார்டெல்களில் வேலை செய்யும் நெருக்கடி சூழலில் தள்ளப்பட்ட 2.3 மில்லியன் இளைஞர்களுக்கு   வேலைவாய்ப்பு திறன்களை அளிப்பதாக அதிபர் ஆம்லோ கூறினார். கொலைக்குற்றங்களைக் குறைக்க அறுபதாயிரம் பேர் கொண்ட தேசிய காவல்படையை உருவாக்குவதாக வாக்களித்தார். ஆனால், தேசிய காவல்படை மத்திய அமெரிக்க அகதிகளை தேடி வேட்டையாடி வருவதால், கொலைக்குற்றங்களை தடுக்கமுடியவில்லை. அதேசமயம் நாட்டில் நடைபெறும் கொலைக்குற்றங்களும் கூடி வருகின்றன. அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்ட...

போதைப்பொருட்களுக்கு தடை நீக்கமா?

படம்
மெக்சிகோவில் அதிபராகியுள்ள இடதுசாரி தலைவர் லோபஸ், விரைவில் போதைப்பொருட்களுக்கான தடையை நீக்கவுள்ளார். கஞ்சாவிற்கான தடையை நீக்கியதற்கும் இதற்குமான வேறுபாட்டை லோபஸ் புரிந்துகொள்ளவில்லை என பலரும் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர். மெக்சிகோவின் குவாரெரோ பகுதியில் ஹெராயின் கள்ளத்தனமாக ஏராளமாக உற்பத்தியாகி கண்டம் விட்டு கண்டம் ஏற்றுமதியாகிறது. திருட்டுத்தனமாகத்தான். அரசுக்கு, போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் சண்டைகளைத் தடுப்பதே பெரும் வேலையாக உள்ளது. எனவேதான் இந்த முடிவு. மெக்சிகோவில் போதைப்பொருட்கள் உற்பத்தி நடந்தாலும், இதற்கான வாடிக்கையாளர்கள் அமெரிக்கர்களே. ஆனால் இத்தொழில் காரணமாக ஏற்படும் வன்முறை, மெக்சிகோ கார ர்களின் உயிரைப் பறிப்பதோடு நாட்டிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசின் முடிவைத் தொடர்ந்து ஹெராயின், பெனடாயில் ஆகிய பொருட்களை அதிகம் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். லோபஸ், போலீஸ் மீது நிறைய புகார்கள் வருவதால் அவர்களிடம் போதைப்பொருட்கள் சார்ந்த விசாரணையை தருவதில்லை என முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பான விசாரணையை தேசிய கார்டு படையை இதற்கென உருவாக்கியுள்ளார். இனி...