சைனீஸ் ரெஸ்டாரெண்ட் சிண்ட்ரோம் - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு
நமக்கு ஐந்து உணர்வுநிலைகள் மட்டுமே உள்ளன? அதைவிட அதிகமாக இருக்கலாம். பறவைகளால் பூமியின் மின்காந்த அலைகளை உணர முடியும். கடலில் உள்ள சுறாக்கள், தம் இரை உமிழும் மின் புலங்களை எளிதாக அறிந்துவிடுகின்றன. வௌவால் திசையறிய மீயொலிகளைப் பயன்படுத்துகின்றன. சில உயிரினங்களால் அக ஊதாக்கதிர்கள், புற ஊதாக்கதிர்களை எளிதாக அறிய முடிகிறது. நாயைப் பொறுத்தவரை வாசனையை முகர்வதுதான் அதன் வாழ்க்கையே.அதில் தடுமாறும்போது அதனால் எதையும் கண்டறிய முடியாது. மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஐந்து உணர்வு நிலைகளுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு இடத்திற்கு சென்றால், அந்த இடத்தைப் பற்றிய அறிவை ஐம்புலன்களும் நமக்கு அளிக்கின்றன. இந்த தகவல்களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட முறையில் விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். தடுப்பூசி போடு்ம்போது ஏற்படும் வலிக்கும், மிளகாயை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வலி உணர்வுக்கும் வேறுபாடு உண்டு. சைனீஸ் ரெஸ்டாரெண்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன? சீன உணவுகளை குறிப்பாக மோனோ சோடியம் குளுட்டமேட் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்ட உணவுகளை கொலைப்...