இடுகைகள்

உடல்நலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  எடை குறைப்பு கேள்விகள் எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா? ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது   சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல. பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும். உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.   கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது. எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி? தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, நீர், எடுத்துக்

சர்க்கரையால் குழந்தைகளை அடிமையாக்கி லாபம் பார்க்கும் ஊட்டச்சத்து நிறுவனங்கள்!

படம்
  குழந்தைகளுக்கான உணவுகளை கெலாக்ஸ், குவாக்கர், சஃபோலா ஆகிய   பிராண்டுகள் தயாரித்து வருகின்றன. மேற்சொன்னவை, இந்தியாவில் ஓரளவு விளம்பரம் மூலம் அறியப்பட்டவை. இவையன்றி, உள்நாட்டில் ஏராளமான சிறு நிறுவனங்கள் குழ்ந்தைகளுக்கான உணவைத் தயாரித்து வருகின்றன. மேற்சொன்ன நிறுவனங்களின் உணவுகளில் சர்க்கரை, உப்பு என இரண்டு விஷயங்கள்தான் அதிகமாக உள்ளன. ஆனால், அதை மறைத்து இயற்கையான கோதுமை, நார்ச்சத்து, உண்மையான பழத்துண்டுகள் என்றெல்லாம் கதை கட்டுவார்கள். விளம்பரங்களை அழகாக வடிவமைத்து உடனே வாங்கிச் சாப்பிடும் ஆசையை உருவாக்குகிறார்கள். இதெல்லாம் உண்மைதான். நான் மறுக்கவில்லை. குழந்தை சாப்பிடவில்லை. எனவே, ஊட்டச்சத்து பானத்திற்கு நகர்ந்தேன் என தாய்மார்கள் கூறலாம். ஆனால் அப்படி ஊட்டச்சத்து பானத்தை மட்டுமே நம்புவது ஆபத்தானது. உணவுடன் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் துணை உணவு பிரிவில் ஊட்டச்சத்து பானங்களை சேர்க்கலாம். அது உணவுக்கு மாற்று அல்ல. பல்வேறு தானியங்களை ஒன்றாக சேர்த்து அதில் பதப்படுத்தப்பட்ட பழத்துண்டுகளை போட்டு சூடான பால் ஊற்றி சாப்பிட்டால் குழந்தைக்கு அற்புதமான காலை உணவு என ரீல் ஓட்டுவார்கள். பள்ளி செல்ல

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்!

படம்
  பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளை வீணாக்கியிருக்கிறது. இதனை எப்படி புரிந்துகொள்ளலாம். தொழில், கல்வி, நம் வாழ்க்கை, இதுவரை போட்டிருந்து திட்டங்கள் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதிகம் அடி வாங்கியது, சமூக வாழ்க்கையை தொலைத்த குழந்தைகள்தான். இதில் வேறு மூடநம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் நோயைப் பற்றிய அச்சத்தை அறிவியல் மூலமாக தீர்க்காமல், கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள் என கூறிக்கொண்டிருந்தன.  இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். பள்ளி சென்றுகொண்டிருந்த, பள்ளி செல்லவேண்டிய பிள்ளைகள் அனைத்துமே இன்று சமூக வாழ்வை தொலைத்து தனியாக உள்ளனர்.  மும்பையில் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவி அவள். மாஸ்க்கை கழற்றச்சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் கழற்றவில்லை. ஆசிரியருக்கோ, நோய் பயமில்லை என்று சொல்லி தொண்டை தண்ணீர் வற்றியதுதான் மிச்சம். அவர் அந்த மாணவியின் முகத்தை பார்த்தே 600 நாட்களுக்கு மேலாகிறது. அதே மாணவி நடன வகுப்பில்  கலந்துகொண்டாள். அப்போது சக மாணவனின் கையை பிடித்ததுதான் தாமதம். உடனே போய் சானிடைசர் போட்டு கையை சுத்தப்படுத்தினாள். சுகாதாரம் பற்றிய பதற்றம்

கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் மாத்திரைகளின் பிரபலத்திற்கு என்ன காரணம்?

படம்
giphy இன்று சல்மான்கான் முதல் பிரபலமாக உள்ள கிரிக்கெட் வீரர்கள் வரை பல்வேறு மாத்திரைகளை தினசரி சாப்பிடச்சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். உண்மையில் இந்த மாத்திரைகளில் என்ன இருக்கிறது? உணவுப் பொருட்களிலிருந்துதான் கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகளை நாம் பெறவேண்டும். அப்படி இல்லாதபோது என்ன செய்வது? இதற்காகவே இந்த மாத்திரைகளை மருந்து கம்பெனிகள் தயாரித்து மக்களின் தலையில் கட்டுகின்றன. தவறு ஒன்றுமில்லை. உங்கள் உடலுக்கு இச்சத்துகள் போதாமை என்றால் நீங்கள் இம்மாத்திரைகளை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். நம் உடலில் உள்ள எலும்புகளில் 99 சதவீதம் கால்சியம்தான். எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உதவ ஜிங்க் உதவுகிறது. சூரிய ஒளியிலுள்ள விட்டமின்  டியை உடலில் இழுக்க மெக்னீசியம் உதவுகிறது. மேலும் கால்சியத்தை உடல் உட்கிரகிக்கவும் உதவுகிறது. மெக்னீசியம் மற்றும் ஜிங்க் இரண்டும் மூளையின் செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு சிறப்பாக நடைபெற அவசியம் தேவை. இப்பணிக்கான சத்துகள் உடலுக்கு கிடைக்காதபோது அதனை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளும் அவசியம் உள்ளது. மெக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துகள் உடலின்

நம்பிக்கை அளிப்பது காசு மட்டும்தான்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 7 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலம் வாழ இறையை வேண்டுகிறேன். நான் இங்கு நலமாக இருக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை. மஞ்சள் காமலைக்கான டெஸ்ட் எடுக்க பர்மிஷன் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கியுள்ளது. அதை எடுத்துவிட்டால் அம்முடிவுப்படி மருந்துகளை சாப்பிடும்படி இருக்கும். ஒரு ரூபாய் ஆலோசனைக் கட்டணமாக வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள். உடனே நமக்கு இவர்களை பாராட்டத் தோன்றும். ஆனால் கவனமாக நோயாளிகளைக் கவனித்துப் பார்ப்பதில்லை. இலவச மருத்துவமனை என்றாலே அங்கு பணிபுரிபவர்களுக்கு உடலிலும் மனதிலும் சுண்டுவிரல் அளவுக்கு அலட்சியம் முளைத்து விடுகிறது. வேலைகள் கூடியுள்ளதால், உடல் நலிவை மூளைச்சோர்வு இன்னும் கூட்டுகிறது. நீங்கள் அடிக்கடி இருமல் மருந்துகளை வாங்கி சாப்பிடுவீர்கள் அல்லவா? அதனை மத்திய அரசு தடைசெய்து உள்ளது. அதில் ஆபத்தான வேதிப்பொருட்கள் ஏதேனும் இருக்கலாம். தேனை மிதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சளி, இருமலுக்கு பயன் கிடைக்கும்.   உணவையும் கறாராக உண்டால் பிரச்னை இல்லை. மயிலாப்பூருக்கு ரூம்

இந்திய அரசிடம் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை!

படம்
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம்! டிஜிட்டல் இந்தியா என்ற நாளிதழ்களில் விளம்பரம் செய்தாலும், இந்தியா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விஷயங்களில் தடுமாறி வருகிறது. அண்மையில் வெளியான உலகளவிலான பட்டினி நாடுகளின் தொகுப்பு பட்டியலில் இந்தியா 102 வது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 112 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் இந்தியாவின் இடம் பரிதாபகரமானது. தெற்காசிய நாடுகளில் மிகவும் கீழே சரிந்துள்ளது இந்தியா. போஷன் அபியான் திட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சந்திரகாந்த் எஸ் பாண்டேவிடம் இதுபற்றி பேசினோம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளன. அதனைத் தீர்க்க என்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்.  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊட்டச்சத்து பிரச்னை கொண்ட மாவட்டங்கள் நாங்கள், இதற்கான குழுக்களை அமைத்து இப்பிரச்னையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இதற்கான களப்பணியில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்? நாங்கள் என்ஆர்சி எனும் மையங்களை அமைத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையான குழந்தைகளை பராமரித்து அவற்றை நீக

மதுவால் ஏற்படும் ஹேங்ஓவர் பிரச்னை - சமாளிப்பது எப்படி?

படம்
giphy ஆண்டு இறுதியை நெருங்கி விட்டோம். அதனால், பார்ட்டி பண்ணலாம் வா என்றால் கோரிக்கையையும் மறுக்கமுடியாது. பேசியபடி குடிப்பதிலும் அளவு அதிகரிக்கிறது. இதனால் அடுத்தநாள் என்னாச்சு என தலையைப் பிடித்தபடி பலரும் எழுகிறார்கள். உண்மையில் மது அருந்துவதால் உடலுக்கு என்னாகிறது? மது அருந்துவது உடலில் கடுமையான நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இதனால்தான் மது குடித்தவர்களுக்கு, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. கல்லீரலை மட்டும் மது பாதிப்பதில்லை. குடலையும் பாதிக்கிறது. மது அருந்துபவர்களுக்கு, அதன் மூலம் வயிற்றில் அசிட்டால் டிஹைடு என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே ஹேங்ஓவரின் வாந்தி, குமட்டல், சோர்வு ஆகியவற்றின் காரணி. சிலர் சிவப்பு வைன், பார்பன் பருகுவார்கள். அவர்களது நம்பிக்கை, அதில் வாந்தி போன்ற பிரச்னைகள் அடுத்த நாள் ஏற்படாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் உண்மையில் ஜின், வோட்காவை விட மோசமான பிரச்னைகளை மேற்சொன்ன பானங்களே ஏற்படுத்துகின்றன. இதிலும் சிலருக்கு மட்டும் அதிக போதை பாதிப்பு ஏற்படுகிறது. ஆராய்ச்சியில் அவை மரபணு மற்றும்  குடிப்பவரின் வயது, எடை சார்ந்தவை என்று கண்டறியப்

ஆரோக்கியம் பேணுவதற்கான சில டிப்ஸ்கள்!

படம்
முன்னே நீங்கள் பார்த்த, படித்த கட்டுரையின் தொடர்ச்சி இது. வாசியுங்கள். நன்றி. தோல் நோய் பாதிப்புகளை உங்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே சொல்வது தோல்தான். குடல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரையில் தோலில் பாதிப்புகளை எளிதாக பார்க்க முடியும். எனவே வெயில் பாதிப்பைக் குறைக்கும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை உடலில் பூசலாம். மிதவெப்பநாடான இந்தியாவில் லேக்டோ கேலமைன் அல்லது வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை பூசுங்கள். இதெல்லாம் எண்பது, தொண்ணூறு ரூபாய் போட்டு வாங்கும் முன்பு வீடுகளில் பாட்டிகளைப் பாருங்கள். தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்த்துவிட்டு மிஞ்சியதை கைக்கும் கால்களுக்கும் பூசுவார்கள். அந்த பாரம்பரியம்தான் இப்போது இன்டென்சிவ் கேர் வாசலினுக்கு மாறியுள்ளது. க்ரீம்களிலுள்ள வேதிப்பொருட்கள் தோலைப் பாதித்தால் நீங்கள் சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு மாறுவதே நல்லது. பருப்புகளைத் தின்னுங்கள் கொழுப்பு என்றால் அதைப்பற்றி பெண்களிடம்தானே பேசவேண்டும். அதாவது தோலிலுள்ள கொழுப்பு. பருப்பு வகைகளை எலிபோல கொறித்து தின்பது இருபாலினத்தவருக்குமே நல்லது. இதில் புரதம், விட்டமின்கள் ஆகிய சத்துகள் உண்டு. இப்ப

ஆயுள் அதிகரிக்க சில டிப்ஸ்கள்!

படம்
ஆயுளை அதிகரிக்கும் பழக்கங்கள் உடனே ஆபீஸ் போவதை நிறுத்திவிடலாமா என்று கேட்காதீர்கள். அதை நிறுத்தினால் சோறு கிடைக்காது. அதை தவிர்த்து பிற விஷயங்களை செய்யவேண்டியதைத்தான் சொல்லுகிறோம். கேளுங்கள். வியர்வைக் குளியல் ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட குளியல் அறையைத்தான் மேன்ஷனில் கட்டுகிறார்கள். துண்டைக் கதவில் போட்டுவிட்டு ஜட்டியுடன் அப்படியே உட்கார்ந்துவிடுங்கள். குபீரென வெப்பத்தில் வியர்க்கும். ஆம் . பிளான் அதுதான். நன்கு வியர்த்தால் உடலின் அழுக்குகள் கழிவுகள் வெளியேறிவிடும். பிறகு ஹமாம் போடாமலேயே குளிக்கலாம். ஆயுளும் அதிகரிக்கும் என ஜமா இன்டர்னல் மெடிசின் இதழ் 2015 இல் அறிக்கை வெளியிட்டது. ஏறத்தாழ 2000 பின்லாந்து ஆட்களிடம் செய்த ஆய்வு அறிக்கை முடிவு இது. வியர்வையால் இதயத்துடிப்பு அதிகரிப்பதை எளிய உடற்பயிற்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள். தியானம் வேதாத்ரி தொடங்கி கைலாசா நித்தியானந்தா வரையிலும் சொல்வது இந்த ஒன்றைத்தான். நமக்கு கண்ணை மூடினால் தியானத்தை தவிர அத்தனையும் வருகிறது என்பதால் இதை எங்கே சென்று முறையிட. விடுங்கள். அப்படி செய்தால், சிறிதுநேரம் மூளை, மனது ஆகியவற்றின் கொதிப்புக

உட்கார்ந்து வேலை செய்தால் வயதாகுமா? ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி giphy.com நாற்காலியில் உட்கார்ந்தே இருந்தால் நோய் வருமா? இன்று பல்வேறு வேலைகளை உட்கார்ந்தே செய்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. பஸ் ட்ரைவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் உட்கார்ந்து வண்டி ஓட்டாவிட்டால் நாம் எங்கேயும் போகமுடியாது. கால்சென்டர். ஐடி வேலைகள் என பல்வேறு இடங்களிலும் கூட உட்கார்ந்து வேலை செய்வது முக்கியம். இங்கிலாந்தில் செய்த ஆய்வுப்படி உட்கார்ந்து வண்டி ஓட்டும் ஓட்டுநர்களுக்கு பெருமளவில் மாரடைப்பு ஏற்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.இது நின்றுகொண்டே இருக்கும் நடத்துநர்களை விட அதிகம். அவர்கள் மட்டுமல்ல மேற்சொன்ன பல்வேறு பணிகளில் உட்கார்ந்துகொண்டு ஏழுமணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு நிச்சயம் இதய நோய்கள், டிமென்ஷியா, நீரிழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரச்னை எங்கிருந்து தொடங்கும் தெரியுமா? தோள்பட்டை, முதுகெலும்பு என தசைகள் வலுவிழக்கத் தொடங்கும். பின்னர் மெல்ல அந்த இடங்களில் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதன்விளைவாக எலும்புகள் வலுவிழந்து நம் உடல் மெல்ல நோய்களை நோக்கிச் செல்லும். விரைவில் வயதாவதும் இப்படித்தான் நடக்கும். நன்றி - பிபிசி

படுக்கையில் படுத்தும் தூக்கம் வரவில்லையா?

படம்
giphy.com டாக்டர். எக்ஸ் படுக்கையில் படுக்கப்போகும்வரை தூக்கம் வருவது போலிருக்கிறது. ஆனால் பெட்டில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. ஏன்? காரணம் படுக்கையை நீங்கள் தூங்க மட்டும் பயன்படுத்துவதில்லை என்பதுதான். அதில் உட்கார்ந்து போனை நோண்டுவது, நெட்பிளிக்ஸ் தொடர்களை பார்ப்பது எல்லாம் செய்தால் எப்படி? முடிந்தவரை ஆறுமணிக்கு மேல் காஃபீன் பானங்களை குடிக்காதீர்கள். அவை மூளையிலுள்ள ஏராளமான சுரப்பிகளைத் தூண்டிவிட்டு நடுராத்திரியிலும் உங்களை கொக்கரக்கோ கோழியாக்கி விடும். நல்ல கம்பெனி படுக்கையைப் பயன்படுத்துங்கள். இது அடிப்படையானது. அதற்குமேல் ஏதாவது பிரச்னை என்றால் நீங்கள் உறுதியாக உளவியலாளரை அணுகியே ஆகவேண்டும். வயதாகும்போது தூக்கம் குறையும் என்பதால் அதற்கேற்ப உணவுப்பழக்கங்களை குடும்ப மருத்துவரை அணுகிப் பெறுவது நல்லது. கார்ல்மார்க்ஸின் நூலைக் கூட படிக்கலாம்.  த த்துவ நூல்களைப் படிக்கும்போது உங்கள் வாழ்நாளில் நீங்கள் தூங்கியிராதது போல அடித்து போட்டது போல தூங்க முடியும்.  ஆசானின் வெண்முரசு போன்ற நூல்களும் உதவும். நன்றி - மென்டல் ஃபிளாஸ்

டீக்கப்பில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்!

படம்
மெக்கில் பல்கலைக்கழகம் நாம் பயன்படுத்தும் டீ பேக்குகளில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் வெளியாகியுள்ளன. டீ பேக்குகளில் பதினாறு மைக்ரோகிராம் இருப்பதுதான் இன்று சர்ச்சையாகி உள்ளது. இதில் மட்டும்தான் என்றில்லை. முன்பே மீன், தேன், பீர் போன்றவற்றில் பிளாஸ்டிக் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருந்தனர். தற்போது தேயிலையின் முறை. டீபேக்குகளில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்குகள் உங்களைக் கொன்றுவிடும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால் அவை உயிரினங்களின் சமநிலையில் பாதிப்பை ஏற்படும்தும் என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நதாலி டுஃபென்ஜி. டீ பேக்குகளில் சிலிகான் பேக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சிலிகான் செய்யப்பயன்படுத்தும் வேதிப்பொருட்கள்தான் உடலை குலைக்கின்றன. பாலி எத்திலின் டெரப்திலின் எனும் பொருள் இது. 2017 ஆம் ஆண்டு இந்தியா பயன்படுத்தும் டீ பேக்குகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உள்ளது. இதற்கடுத்து சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையில் டீ குடிக்கின்றனர். இந்தியாவில் இதுதொடர்பான தகவல்கள் இன்னும் முறையாக சேகரிக்கப்படவில்லை. நன்றி: டவுன் டு எர்த்

டெக் புதுசு! - குதித்தால் குறையும் கலோரி!

படம்
விளையாட்டுகளில் விளையாடினால் மட்டும் போதாது. காலத்திற்கேற்ப அப்டேட் ஆவது அவசியம். அதற்காகத்தான் உங்களுக்கு டெக் புதுசு பகுதியில் சில ஐட்டங்களை சுட்டு வந்திருக்கிறோம். பிளேஸ் பாட்ஸ்! எக்சர்சைஸ் செய்யும்போது, குறிப்பிட்ட தடவை செய்தபின் அடுத்த பயிற்சிக்கு மாற வேண்டும். நேரத்தை நினைவுபடுத்தவேண்டும். இதற்காக உதவுவதுதான் பிளேஸ்பாட்ஸ். நீங்கள் செய்யும் பயிற்சிக்கு உதவியாளனாக இருக்கும். விலை 400 டாலர்கள்தான். ஸ்மார்ட் ரோப் பள்ளிகளில் தோழிகளோடு ஸ்கிப்பிங் ஆடி மகிழ்ந்திருப்பீர்கள் அல்லவா? இப்போது அதே ஸ்கிப்பிங் கயிற்றில் சீரியல் பல்புகளை செட் செய்து ஸ்மார்ட் போனோடு இணைத்திருக்கிறார்கள். நீங்கள் ஸ்கிப்பிங் செய்வது போனிலுள்ள ஆப்பில் பதிவாகும். கூடுதலாக, எத்தனை கலோரி கரைந்தது என்ற தகவலும் இதில் உண்டு. விலை 80 டாலர்கள். ஸ்விம் கோச் கம்யூனிகேட்டர் நீருக்குள் நீந்தும்போது கோச் என்ன கோதண்டராம சுவாமிகளே நம்மை தொடர்புகொள்ள முடியாது. காரணம், நீரின் அழுத்தம். இதற்காகத்தான் இந்த கருவி. ஸ்விம் கோச் கம்யூனிகேட்டரில் ஆப்பும் உள்ளது. இரண்டையும் ஒரு பட்டனில் இணைத்திருக்கிறார்கள். இதனா

உள்ளூர் உணவுகள் உடல் நலம் காக்கும்! - புதிய சமையல் புத்தகங்கள்!

படம்
சமையல் புத்தகங்கள் வோல் ஃபுட் லைக்கிங் எவரி டே 1. ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த சமையற்கலைஞர் சாப்ளின், உள்ளூர் பொருட்களைக் கொண்டு சமைத்துள்ளார். மேலும் பால், சர்க்கரை இன்றியும் குளூட்டேன் தவிர்த்தும் ரெசிபிகளை அமைத்துள்ளார். எனவே ஆர்கானிக் ஆன்மாக்கள் தாராளமாக நூலை பிடிஎஃபில் தரவிறக்கி பயன்படுத்தி மகிழலாம். குக் லைக் லோக்கல் 2. உங்கள் அருகிலுள்ளவர்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். எனவே, உங்கள் சுற்றுவட்டார த்தில் கிடைக்கும் காய்கறிகளைப் பயன்படுத்துங்கள். அது அவர்களுக்கும் பொருளாதார அடிப்படையில் உதவும். உங்களுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார் சமையற்கலைஞர் ஷெப்பர்டு. இவர் இதில் எழுதியுள்ள அனைத்தும் இப்படி சமைக்கப்பட்ட ரெசிபிகள்தான். நூலை இந்தியர்கள் வாங்கினாலும் கூட அதனை உள்ளூர் காய்கறிகள் கொண்டு சமைத்துப் பார்க்கலாம். பட்சர் பிளஸ் பீஸ்ட் இறைச்சி சேர்க்காமல் நாள் முடியாது என அடம் பிடிப்பவர்களுக்கான நூல். அமெரிக்காவில் பீட்ரிஸ் இன் என்ற உணவகம் நடத்தும், ஆன்ஜி மார், பன்றி இறைச்சி, கோழி இறைச்சியில் என்னென்ன செய்ய முடியும் என்று எழுதியுள்ளார். தன் உணவகத்தில் இதனை செய்து காட

புகைத்தால் இறப்பு - சீனா வேபிங் பென்ஸ் காரணமா?

படம்
நிகோடின் கொண்ட இ சிகரெட்டுகள் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளன. இவை அங்கு 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. இன்று பல லட்சம் பேர் இதனை அங்கு புகைத்து வருகின்றனர். இ சிகரெட்டுகளில் நிகோடின் திரவ வடிவில் இருக்கும். பேட்டரி மூலம் அந்த திரவம் மெல்ல புகையாகும். அது சிகரெட் புகைப்பது போன்ற உணர்வைத் தரும். தற்போது இ சிகரெட்டுகளைப் பிடிப்பவர்கள் நுரையீரல் பாதிப்புற்று இறந்து வருகின்றனர். விஸ்கான்சின், இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் ஐந்துபேர் இ சிகரெட் பிடித்து இறந்துள்ளனர். இதனால் அந்தந்த மாநில நிர்வாகங்கள் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று கூறியுள்ளது. 33 மாநிலங்களைச் சேர்ந்த 450 பேர் இசிகரெட்டால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இ சிகரெட்டில் நிகோடின், மரிஜூவானா, டிஹெச்சி, பூச்சிக்கொல்லி, நச்சு ஆகியவை காணப்பட்டுள்ளன. அரசு 140க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து சோதித்து வருகிறது. நிகோடினுடன் விட்டமின் இ அசிட்டேட் சேர்ந்துள்ளது ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. புரப்பலைன் கிளைக்கால் மற்றும் கிளிசரால் ஆகியவை விட்டமின் இ அசிட்டேட்டிற்கு அடுத்தபடியாக சந்தே

சிட்அப்ஸ் பயிற்சி எதற்கு?

படம்
சிட்அப்ஸ் பயிற்சிகளை சலிப்பூட்டும் பயிற்சிகளாக பலரும் நினைக்கலாம். இதனை பத்து வடிவங்களில் செய்யலாம். வயிற்றுத் தசைகளை அழகாக்கும் இப்பயிற்சி, உடல் எடையை மட்டுமே அடிப்படையாக கொண்டது. தினசரி சிட் அப்ஸை மட்டுமே செய்தால் உங்கள் உடல் கட்டுடலாக மாறாது. இப்பயிற்சி, உங்களின் தசைகளை அழகானதாக மாற்றி வலிமையைக் கூட்டும். ஜிம் செல்லாமல் நெருக்கடியான பணிக்கிடையேயும் சிட் அப்ஸ்களை செய்தால் இடுப்புத்தசை, வயிறு, பின்முதுகு தசை, கால்கள் ஆகியவை வலிமைபெறும். தினசரி பணிகளில் நடப்பது போன்றவற்றை வயதான பின்பும் செய்ய சிட்அப்ஸ் உதவுகின்றன. குறிப்பாக, குழிகளில் கால் வைத்தால் சமநிலை தவறும் போதும் சுதாரிப்பாக செயல்பட இப்பயிற்சி உதவுகிறது. மேலும் இப்பயிற்சியினால் முதுகெலும்பு வலுவாகிறது. எடைகளைத் தூக்குவதும் எளிதாகிறது. சிட்அப்ஸ் பயிற்சி, கலோரிகளை வேகமாக எரிப்பதால் உடலின் வளர்சிதைமாற்றம் சீராகிறது.

புரோட்டின் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நல்லதா?

படம்
புரோட்டின் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா? சாதாரண ஐஸ்க்ரீமில் கொழுப்பு அதிகம் இருக்குமென்றால், இதில் புரோட்டீன் சார்ந்த பொருட்கள் அதிகமாக இருக்கும். மற்றபடி அனைத்தும் ஒன்றுதான். செயற்கை இனிப்பூட்டி ஸ்டெவியா என்பதை ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்கள் சேர்ப்பாளர்கள். விலை குறைவு, சுவையோ சுவை என்பதால்தான் இந்த சுவையூட்டியை பயன்படுத்துகிறார்கள். 473 மில்லி ஐஸ்க்ரீமில் புரோட்டினின் சதவீதம் 20 ஆக இருக்கும். சர்க்கரையின் கலோரிகளை இதில் குறைத்திருப்பார்கள். வே புரோட்டின் இந்த ஐஸ்க்ரீம்களில் சேர்க்கப்படும் முக்கியமான பகுதிப்பொருள். உடற்பயிற்சியை தீவிரமாக செய்பவர்களுக்கு இந்த ஐஸ்க்ரீம் சுவாரசியமான நொறுக்குத்தீனியாக இருக்கும். புரதம் எளிதாக செரிமானம் ஆகாது. விற்பனைக்காக இதில் சர்க்கரை கூடுதலாக சேர்ப்பதும் உண்டு. பிற ஊட்டச்சத்துக்கள் இதில் கிடையாது. மேலும் அதிகம் சாப்பிடத் தூண்டும் ஆபத்தும் இதில் உண்டு. இதனை வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்பது உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு நல்ல செய்தி. நன்றி: ஹெல்த்லைன்

கார்ன் எண்ணெய் நல்லதா?

படம்
பூர்ணா கம்பெனி தவிட்டு எண்ணெய்யுடன் சோள எண்ணெய் வணிகத்தையும் செய்து வருகிறது. சூரியகாந்தி எண்ணெய்க்கு இது போட்டியா என்று பார்த்தால் இது தனி வியாபாரமாகவே நடந்து வருகிறது. உண்மையில் சோள எண்ணெய்யில் என்ன இருக்கிறது. புரதம், மாவுச்சத்து கிடையாது. ஒரு டீஸ்பூனில் (15 மி.லி) கலோரி, விட்டமின் இ, கொழுப்பு ஆகியவை உள்ளன. சோப்பு,ஷாம்பூ, பெட்ரோல், டீசல் எஞ்சின்களில் எரிபொருளாக, தொழில்துறையில் தூய்மைப்படுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது. பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கப்படும் சோள எண்ணெய் வீடுகளில் சமைக்கவே அதிகம் பயன்படுகிறது. சமையலில் வறுக்க இதனைப் பயன்படுத்தலாம். கொதிநிலை அதிகம் என்பதால் இதற்கு உதவுகிறது. விட்டமின் இ, லினோலெய்க் அமிலம், பைட்டோஸ்ட்ரோல் ஆகிய விஷயங்கள் இருப்பதால் இதயநலம் காப்பதற்கான எண்ணெய் பட்டியலில் சோள எண்ணெய்க்கும் இடம் உண்டு. ஓமேகா 6 ரக கொழுப்பு அதிகம் என்பதால் இதனை அதிகம் பயன்படுத்தக்கூடாது. அது எதிரிடையான விளைவுகளை ஏற்படுத்தும். நூறு சதவீத கொழுப்பு கொண்ட எண்ணெய். மருத்துவர்கள் சோள எண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைப