இடுகைகள்

ரிலையன்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ

படம்
  பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ ஐஐடி பாம்பே தலைமை தாங்கி வழிகாட்ட ஏழு இந்திய பொறியியல் கழகங்களின் உதவியுடன் பாரத் ஜிபிடி குழுமம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதரவை வழங்கி வருகிறது. பாரத் ஜிபிடி குழுமம், ஹனுமான் எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கி வருகிறது. இந்த பணிக்கு சீதாலட்சுமி ஹெல்த்கேர் நிறுவனம், உதவியையும், பங்களிப்பை வழங்கியுள்ளது.  ஹனுமான் ஹனுமான் என்பது செயற்கை நுண்ணறிவு மாடல். இதை எல்எல்எம் என குறிப்பிடுகிறார்கள். மொத்தம் பதினொரு மொழிகளில் இயங்கவிருக்கிறது. தமிழ், மராத்தி, இந்தி ஆகிய மொழிகள் இதில் அடங்கும். இருபது மொழிகளுக்கு செயல்பாடுகளை விரிவாக்கும் திட்டமும் உள்ளது. மருத்துவம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படவிருக்கிறது. இதுதொடர்பாக பாரத் ஜிபிடி குழுமம், வெளியிட்ட வீடியோவில் பல்வேறு மொழிகளில் மக்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது காட்டப்பட்டது.  இப்படி உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு வெறும் உரையாடுவதற்கான பாட் மட்டும் கிடையது. இதைப் பயன்படுத்தி எழுத

வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

படம்
  இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்   செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.   இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்   இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநிறுவனங்களில் கைக்கு

அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்று சாதித்த திருபாய் அம்பானி மற்றும் அவரது மகன்களின் கதை! - முகேஷ் அம்பானி - என் . சொக்கன்

படம்
              முகேஷ் அம்பானி என் சொக்கன் கிழக்கு திருபாய் அம்பானி , முகேஷ் , அனில் ஆகியோரின் வாழ்க்கை பற்றி நூலில் சுருக்கமாக கூறியிருக்கிறார்கள் . நூலின் தலைப்பு முகேஷ் அம்பானி என்றாலும் திருபாய் அம்பானிதான் படிக்க சுவாரசியம் தருபவராக இருக்கிறார் . ஒப்பீட்டளவில் நூல் முகேஷ் அம்பானிக்கானதுதான் என்றாலும் நூல் முழுமையாக அவரைப்பற்றிய விளக்கங்களை கூறவில்லை . 1932 இல் பிறந்த திருபாய் அம்பானி பற்றிய தொடக்கம் . அவர் ஏடனுக்கு சென்று வேலை தேடுவது , அதில் சம்பாதிப்பது , பின் மும்பைக்கு வந்து புறாக்கூண்டு வீடுகளில் குடும்பம் நடத்துவது , தன் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொடுக்க நினைத்து என அனைத்துமே சிறப்பாக உள்ளது . மக்களைப் புரிந்துகொள்ள தனி ஆசிரியரை நியமித்து எளிய வாழ்க்கை பற்றி பாடங்களை சொன்னது அனைத்து தொழிலதிபர்களும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்தான் . திருபாய் அம்பானி தனது சாதுரியத்தால் அனைத்து விஷயங்களை செய்தாலும் கல்வி பற்றிய அவரது ஏக்கம் உண்மையானது . அதேசமயம் வெறும் படிப்பும் எல்லாம் தெரியும் என்ற மனோபாவமும் ஒருவருக்கு வெற்றியைத் தராது என்பதை