இடுகைகள்

கலைஞர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா வைரசில் இவர்கள் எந்த வகை?

கொரோனா பாதிப்பு நமக்கு நம்மையே கண்ணாடி மாதிரி அடையாளம் காட்டியிருக்கிறது. நாம் யார், எப்படிப்பட்ட ஆள், பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என்ன மாதிரியான ஆள் என்பதை இந்த இக்கட்டான நேரத்தில் அடையாளம் கண்டுகொள்ளலாம். அப்போதுதான் கொரோனாவை விட கொடுமையான ஆள் இவன் என பொட்டில் அறைவது போல சில வில்லங்க ஆட்களின் விஸ்வரூபம் நமக்கு தெரிய வரும்.  உலகிலேயே இந்தியர்கள் தனித்துவமானர்கள்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை. பின்னே, ஊரே கொரோனா பயத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தது. அந்த நேரத்திலும் பர்சேஸூக்காக அண்ணாச்சி கடைக்கு சென்னை மக்கள் போகிறார்கள் என்றால், எங்கண்ணனுக்கு தில்லு பார்த்தியா மொமண்ட்தான் நினைவுக்கு வருகிறது. சிலரது நம்பிக்கையை எப்பாடு பட்டாலும் அசைக்க முடியாது. சிலர் கொரோனாவை போலிச்செய்தி என நினைப்பார்கள். இன்னும் சிலர் பூமி மாதா நம்மை விழுங்கப்போறா என புராணக்கதையை பாட்காஸ்டில் ஒலிபரப்பியபடி இருப்பார்கள். தமிழர்கள் ஸ்டாலின் போல வெயில் வந்தா போதும். நோயெல்லாம் ஒழிஞ்சிடும் என வம்பாக கற்பனை வளர்த்து திரிவார்கள்.   சானிடைசரே நமக!