எழுத்தாளராக பாக்.கில் வாழ்வது கடினம்!
நேர்காணல்! “பாகிஸ்தானில் எழுத்தாளராக உயிர்வாழ்வது கடினம்!” முகமது ஹனிஃப், பாகிஸ்தானிய எழுத்தாளர் தமிழில்: ச.அன்பரசு பாகிஸ்தான் அரசியலைப் பற்றி வெளியே இருந்துதான் எழுதமுடியும் என தி கார்டியன் நாளிதழில் எழுதியுள்ளீர்கள். அப்படியென்ன பிரச்னையை சந்தித்தீர்கள்? பாகிஸ்தானில் பத்திரிகையாளர்கள் பலருக்கும் மூச்சுவிடமுடியாத சூழல்தான் உள்ளது. Dawn நாளிதழில் நான் சென்றாண்டு எழுதிய கட்டுரைக்காக அதன் துணை ஆசிரியர் ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார். என்னால் பிறரின் வாழ்க்கை அபாயத்தில் சிக்குவதை நான் விரும்பவில்லை. பாகிஸ்தானிலிருந்து வெளிநாட்டு பத்திரிகைகளில் எழுதினாலும் தேசதுரோகி என சித்தரிக்கப்படும் அபாயம் அங்கு நிலவுகிறது. எ கேஸ் ஆஃப் எக்ஸ்ப்ளோடிங் மேங்கோஸ் நூலில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்த வழி பற்றி விவரித்திருந்தீர்கள். புதிய நூலான ரெட் பேர்ட்ஸ் எழுதுவதற்கு எளிதாக இருந்ததா? நாவல் எழுதுவதிலுள்ள ஆபத்து, உங்களுக்கு சலிப்பு ஏற்படாமல் எழுதுவதோடு வாசகருக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே. தொடங்கிய நாவலை வெற்றிகரமாக முடிக்கவேண்டும