சென்னையின் முதல் மருத்துவமனை எப்போது தொடங்கியது?..
சென்னை சீக்ரெட்ஸ் ! - பிகே முதல் மருத்துவமனை! கோட்டை மருத்துவமனையின் முதல் சர்ஜன் ஜான் கிளார்க் . மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிடலான இங்கு எட்டு முதல் பத்து ராணுவ வீரர்கள் தங்கி சிகிச்சை பெறும் வசதி இருந்தது. 1680ல் கோட்டையில் புனித மேரி சர்ச் கட்டப்பட்டதும் மருத்துவமனையை விரிவுபடுத்த பேசி , 838 பகோடாகள் ( ரூ .3,000) நிதி திரட்டி சர்ச் அருகேயே இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது . கோட்டைக்குள் ஆட்கள் பெருக இடத்தேவையும் அதிகரித்தது. மருத்துவமனையின் கட்டுமானத் தொகையைத் திருப்பி தந்து கம்பெனியே அக்கட்டிடத்தை வாங்கிக் கொள்ள கோட்டைக்கு உள்ளே ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு மாறியது மருத்துவமனை. புதிய கவர்னராக வந்த சர் எலிஹு யேல் , கோட்டையின் வடபகுதியில் ( நாமக்கல் கவிஞர் மாளிகை ) புதிய மருத்துவமனைக் கட்டிடத்தை கட்டினார் . ஏறத்தாழ 60 ஆண்டுகள் மருத்துவமனை அதேயிடத்தில் செயல்பட்டது. 18 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த போர்களால் கோட்டையில் வீரர்கள் குவிந்ததாலும் , ஆயுதங்களின் சேமிப்பாலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதன்விளைவாக மருத்துவமனைக் கட்டிடம் ராணுவ முகாமாக மாறி