இடுகைகள்

கண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாயின் கண்களிலுள்ள சோக உணர்வு, நீலநிறக்கண்களைக் கொண்ட குழந்தைகள்! உண்மையா? உடான்ஸா?

படம்
  நாயின் கண்கள் சோக உணர்ச்சி கொண்டது! உண்மையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓநாய்களிலிருந்து உருவாக்கப்பட்ட நாய்கள் மெல்ல வீட்டு விலங்காக மாறின. பரிணாம வளர்ச்சிப்படி,நாய்களுக்கு கண்களின் அருகில் தசைகள் உருவாகின. இதன் மூலம், நாய் மனிதர்களோடு எளிதாக தொடர்புகொள்ள முடிந்தது. மனிதர்களைப் பார்த்து புருவத்தை தூக்கும்போது, தசைகள் காரணமாக அதன் முகம் சோகமாக தெரிகிறது என 2019ஆம் ஆண்டு வெளியான புரோசீடிங் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்(Proceedings of the National Academy of Sciences)  ஆய்வு கூறியது.  பிறக்கும்போது, அனைத்து குழந்தைகளும் நீலநிற கண்களைக் கொண்டுள்ளனர்  உண்மையல்ல. ஆசிய, ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கண்கள் பழுப்பு நிறமாகவே இருக்கும். காகசியன் நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பிறக்கும்போதே கண்கள் நீலநிறமாக இருக்கும். தோல், முடி ஆகியவற்றின் நிறத்தைத் தீர்மானிக்கும் மெலனின் என்ற நிறமியே கண்களின் நிறத்திற்கும் காரணம். இதை மெலனோசைட்ஸ் (melanocytes) என்ற செல்கள் உற்பத்தி செய்கின்றன. மெலனின் மற்றும் மரபணுக்களின் பங்கு கண்களின் நிறத்தை தீர்மானிக்கின்றன.   https://www.allabout

செரிமானத்தின் வேதியியல் பற்றி ஆராய்ச்சிகள் செய்தவர் - வில்லியம் குஹ்னே

படம்
  வில்ஹெம் குஹ்னே ( wilhelm kuhne) வில்ஹெம், 1837ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.  கோட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் வேதியியல், உடல் அமைப்பு, நரம்பியல் பற்றிய பாடங்களைப் படித்து தேறினார். பட்டதாரியான பிறகு தவளையில் ஏற்படும் நீரிழிவு பற்றி செய்த ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டத்தைப் பெற்றார்.  ஐரோப்பிய நாடுகளில் அலைந்து திரிந்து உடலியல் பற்றிய பாடங்களைக் கற்றார். 1871ஆம் ஆண்டு ஹெய்டெல்பர்க் பல்கலையின் தலைவராக ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் பதவியேற்கும் முன்னரே, வில்ஹெம் உடலியல் பாடங்களைக் கற்றுவிட்டார். இப்பல்கலையில் வில்ஹெம் சேர்ந்தபிறகு, தசைகள், நரம்புகள் பற்றி கவனம் எடுத்து படித்தார். குறிப்பாக கண் நரம்புகள்.  கூடுதலாக, செரிமானத்தின் வேதியியல் பற்றியும் ஆய்வுகளைச் செய்தார். இதில்தான் ட்ரைப்ஸின் எனும் புரத என்சைம் ஒன்றைக் கண்டுபிடித்தார். 1899ஆம் ஆண்டு தனது பணி ஓய்வுக்குப் பிறகும் பல்கலையில்தான் இருந்தார். அடுத்த ஆண்டு அந்நகரில் காலமானார்.  the biology book big ideas simply explained book

கண்ணில் கருப்புக்கோடு கொண்ட பழுப்பு கீச்சான் !

படம்
  தரைவாழ் பறவைகள் பழுப்பு கீச்சான் ) அறிவியல் பெயர்:  லானியஸ் கிரிஸ்டாடஸ் (Lanius cristatus) குடும்பம்: Laniidae இனம்: எல்.கிரிஸ்டாடஸ் (L. cristatus) சிறப்பு அம்சங்கள்: ஆண் பறவையின் தலை, பழுப்பு நிறத்திலும், பெண் பறவையின் தலை, சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். பழுப்பு கீச்சானின் பின்புறப்பகுதியில், சிறு பிளவு காணப்படும். கண்ணுக்கு அருகில் காணப்படும் கருப்புக்கோடு இதன் முக்கிய அடையாளம்.இதற்குமேல் வெள்ளைநிற புருவம் அமைந்துள்ளது. புதர்ப்பகுதிகளில் பழுப்புக் கீச்சானைக் காணலாம். சிறுபூச்சிகள், பல்லிகள், சிலந்திகளை உண்கிறது. எங்கு பார்க்கலாம்: மத்திய, கிழக்காசியாவைச் சேர்ந்த காட்டுப்பகுதி, பாலைவனம், சதுப்புநிலத்தில் பார்க்கலாம்  ஐயுசிஎன்: அழியும் அச்சுறுத்தல் நிலையில் இல்லாதவை (Least Concern LC) ஆயுள்: 4 ஆண்டுகள் முட்டைகளின் எண்ணிக்கை: 2 - 6 எழுப்பும் ஒலி: கீச்...கிர்...(Keech..kirr) https://www.beautyofbirds.com/brownshrikes.html https://dibird.com/species/brown-shrike/

நுட்பமான கதாபாத்திர விவரிப்புகளைக் கொண்ட நகுலனின் கதைகள்! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.   எங்கள் நாளிதழுக்கான பதிப்பக வேலைகளை செய்து வருகிறேன். கூட்டுறவு வங்கி பற்றிய தகவல்களை சேகரித்து எழுதி வருகிறேன். ஐந்து வாரங்களில் மினி தொடராக எழுதியதை தொகுத்து பத்து அத்தியாயங்களாக மாற்றியுள்ளேன். தினசரி இதழுக்கான இலக்கணம், பதிப்பக நூலுக்கான இலக்கணம் என்பதை ஒன்றாக வைத்துக்கொள்வதா, தனியாக உருவாக்கிக்கொள்வதா என்பதில் குழப்பம் உள்ளது. வறட்சியான மொழியில் எழுதி நூல்களை எப்படி விற்பனை செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இப்படியே நூல்களை தொகுத்தால் இன்னும் சில தொடர்களை விரிவாக்கலாம். ஆனால் அதன் வடிவங்களை நிறைய மாற்றவேண்டும்.  மயிலாப்பூர் காரணீஸ்வர் கோயில் அருகே எப்போதும் தட்டடைதான் வாங்குவேன். ஆனால் இன்று அங்கு முத்து மாரியம்மன் என்ற பழைய புத்தக கடையைப் பார்த்தேன். நகுலன் கதைகள் - காவ்யா பிரசுரம் வைத்திருந்தார் கடைக்காரர். விலையைக் கேட்டதற்கு காவ்யா ஓனரே கண்முன் நிற்பது போல நூலை புரட்டிப் பார்த்துவிட்டு நாற்பது ரூபாய் என்றார். அவரது உடல்மொழி இருக்கிறதே அபாரம்....  நகுலனின் கதைகளை முன்னர் திரு

முழங்காலில் வழியாக உடலெங்கும் பாயும் மின்சாரம்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  அம்மா மற்றும் தங்களின் நலம் நாடுகிறேன். இந்த வாரம் நோய்களின் வாரம் என்றே சொல்லவேண்டும். ஆண்டுக்காக கண் பரிசோதனைக்கு ஆழ்வார்பேட்டைக்கு சென்றேன். அங்குள்ள உதி அறக்கட்டளை நடத்தும் உதி மருத்துவமனையில் சில ஆண்டுகளாக சோதனை செய்து வருகிறேன். கண்கள் வறண்டு வருகிறது. சில ஆண்டுகளில் காட்சியைப் பார்க்கும்போது மின்னல் வெட்டு, கரும்புள்ளி தோன்றினால் உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள் ஷெரின் ரவீந்திரன் கூறினார். இதில் பெண் மருத்துவரான அன்பரசி கூறியதும் சோதித்ததும் எனக்கு திருப்தியாக இல்லை. இவர் மருத்துவமனையில் உள்ள லேசிக், கான்டாக்ட் லென்ஸ் திட்டங்களை ஒப்பித்தார். மற்றபடி கண்களில் உள்ள பவர், மூன்று ஆண்டுகளாக அப்படியே தொடர்கிறது.  மருத்துவமனை போய்விட்டு வரும்போது எங்கு கால்களை ஊன்றினேனோ, கால் தசை பிசகிவிட்டது. முழங்காலில் மின்சாரம் பாய்வது போன்று வலி கடுமையாக இருக்கிறது. ஆபீசிற்கு காலை நொண்டிக்கொண்டுதான் சென்று வந்தேன். மயிலாப்பூரில் உள்ள சம்பத் மருத்துவமனைக்கு சென்றேன். வர்த்தமான் என்ற வட இந்திய மருத்துவர்தான் எனக்கு சிகிச்சை அளித்தார். மரு

குளிர வைக்கும் லேசர் !

படம்
  குளிர வைக்கும் லேசர் ! வாயுக்களிலுள்ள எலக்ட்ரான்களை குளிர்விக்க லேசர் ஒளிக்கற்றையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர். வெற்றிடமாக்கப்பட்ட கண்ணாடிக்குள் திரவம் அல்லது திட நிலையில் வாயுவை நிரப்ப வேண்டும். இந்நிலையில் அதிலுள்ள அணுக்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இதனை மாற்ற, லேசர் கற்றைகளை வாயுவை நோக்கிச் செலுத்த வேண்டும்.  இப்போது, வாயுவிலுள்ள எலக்ட்ரான் லேசரிலுள்ள ஒளித்துகளான போட்டானைப் பெறும். பதிலுக்கு வாயுவும் போட்டானை உமிழும். பல்வேறு திசைகளிலிருந்து லேசர் கற்றைகளை வாயு மீது செலுத்த வேண்டும். இச்செயல்முறை தொடரும்போது வாயுவின் எலக்ட்ரான் செயல்வேகம் குறையும். அணுக்களின் வேகத்தைக் குறைக்க இயற்பியலாளர்கள் லேசர் கூலிங் (Laser Cooling) எனும் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். இம்முறை 1970ஆம் ஆண்டு முதலாக செயல்பாட்டில் உள்ளது.  தற்போது இம்முறையை விட ஆவியாக்கும் முறையில் (Evaborate Cooling) அணுக்களை குளிர்விக்கிறார்கள்.  1926 ஆம் ஆண்டு வேதியியலாளர்கள், காந்த அலைகளைப் பயன்படுத்தி அணுக்களை குளிர்விக்கும் முறையைக் (adibatic DeMagnetization) கண்டுபிடித்தனர்.இம்முறையில் பொருட்களின் வெப்பநிலை ஒரு

வலியில்லாத அழகு சிகிச்சை வருகிறது!- மூலக்கூறு சிகிச்சை முறை!

படம்
வலியில்லாத அழகு சிகிச்சை! கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வலியற்ற முக அழகு சிகிச்சை முறையான மூலக்கூறு சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது. நோய்க்கு இணையாக மக்கள் அறுவை சிகிச்சைக்கு பயப்படுகின்றனர். காரணம், இதிலுள்ள வலி, ரத்தப்போக்கு, தையல் ஆகியவைதான்.  தற்போது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வலியற்ற அழகு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். இதற்கு மோலிக்குலர் சர்ஜரி (molecular Surgery) என்று பெயர். உடலிலுள்ள திசுக்களின் வடிவத்தை மாற்றிச்செய்யும் இச்சிகிச்சை, அழகு சார்ந்த விஷயங்களுக்கானது. ”எளிமையாக அனஸ்தீசியா கொடுத்து ஐந்து  நிமிடங்களில் இந்த மூலக்கூறு சிகிச்சையைச் செய்து முடிக்கலாம். இதன் செலவும் மிக குறைவானது” என்கிறார் மருத்துவர் மைக்கேல் ஹில். இம்முறையில் காது, மூக்கு ஆகியவற்றை சீர் செய்யலாம். சிறிய ஊசிகள், மின்சாரம், 3டி வடிவ பொருட்களை இதில் பயன்படுத்துகின்றனர். இதில் முகத்திலுள்ள குருத்தெலும்பில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை செலுத்தி வளையும் தன்மைக்கு மாற்றுகின்றனர். பின்னர், அதனைத் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கின்றனர். திசுக்களை அழிக்காமல் குருத்தெலும்பை வளைக