சைபர் குற்றங்களை தடுக்க தயாராகிறது தமிழ்நாடு!
தயாராகிறது சைபர் குற்றத் தடுப்பு படை! தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால், சைபர் குற்றத் தடுப்பு பிரிவுகளில் கணினி வல்லுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இன்று இந்தியா விலுள்ள அனைத்து மாநிலங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மெல்ல அதிகரித்து வருகின்றன.இணையத் தொழில்நுட்பம் இன்று சிறு, குறு கிராமங்கள் வரை பரவலாகியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களை அணுக வங்கிகள், வணிகப் பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் எளிமையாகியுள்ளன. அதேசமயம், இணையத்தை குறிவைத்து நடைபெறும் நிதிமோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, நாட்டிலேயே முதல் மாநிலமாக சைபர் குற்றப்பிரிவு பணியிடங்களை முழுமையாக நிரப்பியுள்ளது. தற்போது , மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் பட்டதாரிகள் 185 பேரை, இணை ஆய்வாளர்கள் பதவியில் நியமித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமான பட்டதாரி இளைஞர்களை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் துணை ஆய்வாளர்கள், சைபர் குற்றங்கள் சார்ந்த விசார