இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
குழந்தைகளுக்கு கூட தாமாக எங்கும் வெளியே செல்வதற்கு நாம் அவர்களை அனுமதிப்பது இல்லையே?       அதேதான். குறிப்பிட்ட வடிவிலமைந்த கல்வித்திட்டம் நாம் வாழ்க்கையுடன் பொருந்திப்போகும் தன்மையை அழித்துவிடுகிறது. மாறுதல்களை ஏற்காதவர்களாக மாறிவிட்டோம். வளைந்து கொடுக்காத அத்தன்மையிலேதான் முழு வாழ்க்கையும் நடைபெறுகிறது. நாம் இந்த தவறான முறைகள் மற்றும் தவறான சுய பாதுகாப்பு முறைகளை எதிர்த்து போரிட வேண்டியுள்ளது.       என்னுடைய குழந்தைப்பருவம், என்னுடைய இளமைப்பருவம் என பல்வேறு உடைகளை நம்மேல் போட்டுக்கொள்கிறோம். ஆன்மாவின் மேல் உள்ள இந்த உடைகளை கழற்றி எறிய நமக்கு அதிகளவு நேரம் தேவைப்படுகிறது. நம்மிடம் வரும் விஷயங்களை அறியக்கூட நமக்கு நேரமிருப்பதில்லை. உண்மையிலே மதிப்பு மிகுந்த முக்கியமான விஷயங்கள் இந்த வகையில் உங்களை விட்டு வெளியேறுகின்றன. நீங்கள் கூறிய மூன்று வார்த்தைகளில் முதலாவது, கனிவோடு கூடிய தாயின் அன்பு பற்றியது; இரண்டாவது, வாழ்வில் அகதியாக தன்னைக் கருதும் ஒருவரைக் குறித்தது. மூன்றாவதாக கூறும் அர்ஹதனி யின் பொருளான மிக தாமதமான இரவு என்பது எதனைக் குறிக்கிறது?       ம

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 4- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
வாழ்க்கையில் நாம் பெரும்பகுதி அந்நியர்களாக அகதிகளாகவே வாழ்கிறோம் என்கிறீர்களா?       நாமாகவே அந்நியராக வாழ்கிறம் என்று கூறமுடியாவிட்டாலும், ஒருவகையில் இதற்கு ஆம் என்றே பதில் கூறவேண்டும். எ.கா: என்னை நான் கிரீசில் ஒரு அந்நியராகவே உணர்கிறேன். இது என் நாடில்லை என்ற நிலையும், எனக்கென வீடு இல்லாத நிலையும் இருக்க நான் இங்கே வாழ்ந்து வருகிறேன். தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில்(டு மீட்டீயோரோஷமா டோ பெலர்கோவ், 91) மாஸ்ட்ரோயன்னி இதனை வார்த்தையில் கூறும்விதமாக, ‘‘எல்லைகளை கடந்தும் நாம் இன்னும் இங்கேயே இருக்கிறோம். எத்தனை எல்லைக்கோடுகளைக் கடந்தால் நம் வீடு சென்றடைவோம்? ’’ கூறியிருப்பார். உங்களது படங்களில் மக்கள் ஆறு ஒன்றினால் பிரிக்கப்படும்போது ஒவ்வொருவரும் எப்போதும் நாயகன் புறமே நிற்கிறார்களே?       எனது கடைசி மூன்று படங்களில் முக்கியமாக இடம் பெற்ற காட்சி என இதனைக் கூறலாம். குறிப்பிட்ட சூழ்நிலை ஒன்றில் உங்களை மேலும் மேலும் ஆழமாக உள்ள செலுத்திக்கொள்வதுதான் இதற்கு காரணமா? உணர்ச்சிகளை தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில் வெளிப்படுத்தும் மாஸ்ட்

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இத்திரைப்படம் கிரேக்கப்புனைவுகளை அடிப்படையாக அல்லது அதனைக் மென்மையாக கூறிச்செல்கிறதா?       எழுத்தாளர் மற்றும் கவிஞர் என வார்த்தைகளை உருவாக்கும் அதனோடு உறவு கொண்டிருக்கும் இவர்களையே படம் அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. படத்தில் அலெக்ஸாண்டர் சிறுவனுக்கு கவிஞர் ஒருவரைப்பற்றிக் கூறுகிறார். அவர் கிரீசில் புகழ்பெற்ற ஒரு மனிதராவார். டையோனிஸியோஸ் சாலமோஸ் ஸ்கின்டோஸ் இல் பிறந்தவர். இத்தாலியில் வளர்ந்தவர். சில காலத்திற்கு பிறகு தன் கீரிக் அடையாளத்தை தேடுகிறார். இத்தாலியிலிருந்து திரும்பும்போது தனக்கு தெரியாத கிரீக் வார்த்தைகளை  மக்களிடம் வாங்குகிறார். 22 வயது ஆகும்போது தனது தாய்நாட்டிற்கு கிரீக்கில் கவிதைகள் எழுத முயல்கிறார். 1818 எனும் அக்காலகட்டத்தில் துருக்கியர்களுக்கு எதிரான புரட்சிப்போராட்டத்தில் தனது கவிதைகளின் வழியாக பங்கேற்க முடிவு செய்து, செயல்படும் அவரது ஆளுமையான நாட்டுப்பற்று கொண்ட காலப்பகுதி தொடங்குகிறது. சிறிய குறிப்பேட்டில் அவர் கேட்கும் வார்த்தைகளின் உலகத்தில் நுழைகிறார். இது தாந்தே – எஸ்க்யூ என்பவர்களின் சிந்தனையான கிரீஸ் மொழியை மறு இணைப்பு செய்த

தடைபடாத காலம் மற்றும் முடிவில்லாத தன்மையும் ஒரு நாளும் 2

படம்
பின் எவ்வாறு திரைப்படத்தை நிறைவு செய்தீர்கள்?       என்னால் அது இயலுவதில்லை. என்னுடைய படங்களைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும் அவை உண்மையில் நிறைவுறுவதில்லை. அவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிற நிகழ்வுகள் என்றே கூறுவேன். எ.கா: கட்டப்படும் கட்டிடங்கள் போல. நான் ஒரே படத்திற்கு எத்தனை முறை கதை எழுதியிருக்கிறேன் தெரியுமா? 16 வது முறை ஒரே கதையையே வேறு ஒரு கோணத்தில் படமாக்க எழுதிக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. கூட்டல் கழித்தல் என கதையினை சிதைக்காமல் மாற்றிக்கொண்டு இருக்கிறேன். படப்பிடிப்பு நடைபெறும்போது மெல்ல வாழ்க்கையில் அதனைக் கொண்டு வந்து அதனை மேம்படுத்தல்களை செய்கிறீர்களா? இது ஒரு மாயச்செயல்முறை போலானதா?       நீங்கள் மிக எளிதாக கூறிவிட்டீர்கள். மாயை என்று. மாயை என்பதற்கான பொருள் என்ன? இரவில் மாயம் என்பதை எப்படி விவரிப்பீர்கள்? அதனை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? படப்பிடிப்பின் போது அதனை விளக்க என்ன படத்தினை பயன்படுத்துவீர்கள்? இதில் முக்கியமான கேள்வி என்பது ‘படத்தினை தேர்ந்தெடுப்பது ’ . வார்த்தைகளை படங்களாக மாற்றுவது – படமாக்குதல

சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும்

படம்
சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும் கோர்ட் பட இயக்குநர் சைதன்யா தம்ஹனே ஆங்கில மூலம்: மாணிக் சர்மா தமிழில்: வின்சென்ட் காபோ கோர்ட் படத்தில் நாராயண் காம்ளே எனும் சமூக செயல்பாட்டாளர் தன் அறுபது வயதில் மும்பை தெருக்களில் சிறுநாடக இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி நகரத்தின் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அனைவரும் அறியும் விதமாக செயல்பாடுகளை மேற்கொள்கிறார். காம்ளே தனது பாடல்களினால் மலமள்ளும் தொழிலாளர் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டி வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. அடுத்து அவ்வழக்கின் விசாரணை, அதில் அதில் பங்கேற்கும் விசித்திரமான மனிதர்களான அரசு வழக்குரைஞர் (நியூடன்) நீதிபதி (சதவர்தே), பிரதிவாதி தரப்பு வழக்குரைஞர் (வினய் வோரா) ஆகியோரின் வாழ்க்கையை பின் தொடர்கிறது கதை. கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் கோர்ட் படமானது அண்மையில் தேசியவிருதினையும் வென்றுள்ளது. கோர்ட் படத்தினை உருவாக்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?       ஆங்கிலப்பட்டதாரியான நான் எனது பதின