இடுகைகள்

சுய முன்னேற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் நம்பிக்கையை பெறுவதே முக்கியம் - ஆனந்த் மகிந்திரா

படம்
  மகிந்திரா நிறுவனம் நேர்காணல் ஆனந்த் மகிந்திரா முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து பெரும்பாலான தொழில்கள் நடைபெறுகின்றன. இதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதைப பற்றி தங்கள் கருத்து என்ன? 2007-2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. நிறைய பெரிய நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் மக்களுக்கு பெரு நிறுவனங்கள் என்றாலே நம்பிக்கை வைக்க முடியாது என நம்பத் தொடங்கினர். பிறகுதான், மெல்ல நிலைமை மாறியது. கோவிட் -19 ஏற்பட்ட காலம் மீண்டும் நிறுவனங்களுக்கு சோதனையான காலகட்டம். பெரிய நிறுவனங்கள் நடப்பு நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவிப்பது சாத்தியமில்லை. இதில் சில நிறுவனங்களிடம்தான் டிவி சேனல் அல்லது பத்திரிகைகள் உள்ளன.      நிறுவனத்தின் தேவை, லட்சியம் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும். முதலீட்டாளர்களுக்கும் விளக்கி விடுவது நல்லது. இப்படி எதையும் கூறாதபோது மக்கள் நிறுவனங்களை நம்ப மாட்டார்கள். இதனால் தொழில் சரிவுக்கு உள்ளாகும். முதலீட்டாளர்களுக்கு செலவிட்ட பணம் திரும்ப கிடைக்காது. சில நிறுவனங்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் லாபம் பெற முயல்கிறார்கள். ஆனால் நீ

வணிகராக சிறந்த பழக்கங்களை கற்றுக்கொள்ள சொல்லித்தரும் அற்புதமான குறுங்கதை நூல் - உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்

படம்
  உங்களுக்குள்ள விலையில்லாத ஆற்றல்  மாக் ஆண்டினோ நாகலட்சுமி சண்முகம்  மிஸ்டிக் ரைட்  இந்த நூல் ஒரு சுய முன்னேற்ற நூல். ஆனால் நாவல் போன்ற மொழி வடிவம் கொண்டது. இதனால் நூலை படிக்கும்போது கட்டுரைகளைப் படிக்கிறோம். அதில் நிறைய மாறுங்கள், மாற்றுங்கள் என்பது போன்ற அறிவுறுத்தல்களை பார்க்கும் சங்கடம் நேராது.  நூலில், தனது இறுதிக்காலத்தை எட்டும் வயதான வணிகர் இருக்கிறார். அவர், உலகிலேயே பெரிய பணக்கார வணிகர் என்ற பெருமையை எட்டிவிட்ட நிலை. அந்த நிலையில் அவர் தான் இதுவரை சேர்த்த பணத்தை தன்னோடு வியாபாரம் செய்தவர்கள், ஏழைகள் என பலருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இது அவரின் நண்பராக தொழிலை கவனித்து வரும் மேலாளருக்கு கடும் அதிர்ச்சியைத் தருகிறது. அதிர்ச்சியும் திகைப்புமாக ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று சொல்லும்போது, தான் இறக்கப்போகிற காலகட்டம் வந்துவிட்டது. இந்த தொழிலை தொடங்கும்போது நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி தான் பணத்தை மக்களுக்கு பகிர்ந்துகொண்டேன். நான் இறந்தபிறகு இதுவரை வசித்த இந்த மாளிகையை எனது உண்மையான நண்பரும், மேலாளருமான உனக்கு வழங்குகிறேன் என பணக்கார வணிகர் சொல்லுகிறார்.  ஏன் தனது ச

சுயமுன்னேற்றத்திற்கு உதவும் செயலிகள்!

படம்
 சுயமுன்னேற்றத்திற்கு உதவும்  செயலிகள்  நவீன கால இளைஞர்கள் தங்களின் சுயமுன்னேற்றம் மற்றும் திறன் வளர்ப்புக்கு பல்வேறு ஸ்மார்ட்போன் செயலிகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.  நவீன காலத்தில் சுயமுன்னேற்றம் மற்றும் திறன் வளர்க்கும் பயிற்சிகளுக்கு நூல்களை மட்டும் யாரும் நம்பியிருக்கவில்லை. பல்வேறு ஸ்மார்ட் போன் ஆப்ஸ்கள் மற்றும் கைகளில் அணிந்துகொள்ளும் சாதனங்கள் என புதுமையாக உள்ளன.  மொழி கற்றுக்கொள்ள, தினசரி குறிப்பிட்ட தூரம் நடந்துசெல்வதை நினைவுபடுத்த, சந்திப்புகளை ஒழுங்கமைக்க, வாசிக்கும் நூல்களை கணக்கிட என அனைத்திற்கும் தொழில்நுட்பம் கைவசம் தீர்வுகளை வைத்துள்ளது.  பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மானஸ் சலோய், ஆப்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் பொருட்கள் மூலமாக தன் வாழ்க்கையை வாழ்கிறார். நூல்களைப் படிக்கவும், எழுதவும், தன் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடவும் ஹேபிட் ட்ராக்கர் (Habit tracker) என்ற ஆப்பைப் பயன்படுத்துகிறார். ஹெட்ஸ்பேஸ் (Headspace) ஆப்பை தியானம் செய்யவும், மி ஸ்மார்ட் பேண்டை (Mi Smart band) உடற்பயிற்சிக்காகவும் மானஸ் பயன்படுத்துகிறார்.  ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயக்கமுறைக

வெற்றிக்கொள்கைகள் 25- நம்பிக்கை ஊற்றை பெருக வைக்கும் நூல்!

படம்
வெற்றிக்கொள்கைகள் 25 ஜாக் கேன் ஃபீல்டு தமிழில் - நாகலட்சுமி சண்முகம். சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால் இதில் வெற்றியாளர்களின் கதைகள் நிறைந்துள்ளன. பொதுவாக வெற்றி, ஏதாவது செய்யுங்கள் என்று வம்படியாக பேசாமல், இதைச்செய்தால் இந்த விளைவு. நீங்கள் உங்கள் சூழலில் இதை செயல்படுத்திப் பாருங்கள் என்று ஜாக் சொல்வது புதுமை. இருபத்தைந்து கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமா என மலைக்காதீர்கள். இதில் எதைக் கடைபிடித்தாலும் உங்களுக்கு அதற்கான விளைவுகள் கிடைக்கும். காரணம், இவர் காட்டும் உதாரணங்கள். இதில் நிறைய மேற்கத்திய உதாரணங்கள் இருப்பதால் முதலில் புரியாதது போல தோன்றலாம். ஆனால் நாகலட்சுமி சண்முகம் ஜாக் கேன் ஃபீல்டிடம் நேரடியாக பயிற்சி  பெற்றவர் என்பதால், நிறைய விஷயங்களை பிரமாதமாக நமது குடும்ப உறுப்பினர் போல உரையாடலில் கூறுகிறார். அதுவும் நன்றாகவே இருக்கிறது. வெறும் வார்த்தைகளில் எதைச்சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.இதனால் நூலிலுள்ள 285 பக்கங்களில் வெளி உதாரணங்களோடு தன் சொந்த அனுபவங்களையும் இணைத்தே பேசுகிறார். இதனால் கொள்கைகள் மீது படிக்கும் யாருக்கும் நம்பிக்கை பிறக்கும். பொதுவாக நூல

எனக்கு இன்ஸ்பிரேஷன் இசைதான் - ராபின் சர்மா

படம்
Pinterest/robin sharma அவர் ஒரு வழக்குரைஞர். ஆனால் திடீரென தன் வேலையைக் கைவிட்டு சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளராக மாறுகிறார். முதல் நூல், அறிமுகமில்லாதவர் என்பதால், தானே அச்சிடுகிறார். அவரது அம்மா அதனை திருத்துகிறார். முப்பது வயதில் அவர் எழுதிய அந்த நூல் தி மங் ஹூ சோல்டு ஹிஸ் ஃபெராரி என்ற நூல். மெகா வெற்றி அந்த நூலுக்குப் பிறகு அந்த எழுத்தாளர் திரும்பிப் பார்க்க நேரமில்லை. இதுவரை 15 நூல்களுக்கு மேல் எழுதிய சாதனையாளர். ஆம். ராபின் சர்மாவைத்தான் மேலே குறிப்பிட்டேன். இவர் எழுதிய பதினைந்து நூல்கள் 75 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. வழக்குரைஞராக இருந்தீர்கள். திடீரென சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளராக மாற்றம் எப்படி சாத்தியமானது என்று சொல்லுங்களேன்.  நான் வெற்றிபெற்ற வழக்குரைஞர்தான். ஆனால் என் பணியில் எனக்கு திருப்தியில்லை. உள்ளே ஒரு வெறுமையான சூழ்நிலை. அப்போது தத்துவார்த்தமான சிந்தனைகளையும் அனுபவங்களையும் தேடி வந்தேன். அதுவே நான் தேடிய விஷயங்களை எனக்கு கண்டுபிடிக்க உதவின. அதை விவரித்து எழுதியதுதான் என்னுடைய முதல் நூல்.  உங்கள் அப்பா இந்தியர்