இடுகைகள்

கோவில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா ஒளரங்கசீப் அழித்த கோவில்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்! - பேராசிரியர் மக்கன்லால்

படம்
பேராசிரியர் மக்கன் லால், டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹெரிடேஸ் ரிசர்ச் அண்ட் மேனேஜ்மென்ட்.    நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதுவதில் ஏன் பிரச்னை எழுகிறது? வரலாறு எப்போதும் எழுதப்பட்டு பிறகு மாற்றி எழுதப்பட்டுத்தான் வந்திருக்கிறது. வரலாற்றை மூன்று விதமான ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள் . ஒன்று, பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், மார்க்சிய ஆய்வாளர்கள், மூன்று தேசியவாத ஆய்வாளர்கள். நேரு, இந்திராகாந்தி காலத்தில் இடதுசாரி ஆய்வாளர்கள் வரலாற்றை மாற்றி எழுதினர். அந்தகாலத்தில் அவர்களுக்கு வரலாற்று அமைப்பில் முக்கியமான பதவி இடங்கள் கிடைத்தன. நிதியுதவியும் செய்தனர். இப்போது நிலை மாறிவிட்டது. இடதுசாரி ஆய்வாளர்கள் இப்போது இல்லை. அவர்களின் ஆதரவாளர்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறது. எனவே வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என கூறி வருகிறார்கள்.  வரலாற்றில் ஒளரங்கசீப்  ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி கோவில்களை அழித்தார் என்று கூறப்படுவது ஏன்? ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் ஆகியோர் வரலாற்றில் மதிக்கப்படும் இடத்தைப் பெறவில்லை. ஆனால் அவர்களைப் பறிற நாம் இன்றும் விவாதம் செய்துகொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் ஒளரங்கசீப்பையும் நாம் விவாத

கருத்தியலை விட எப்படியாவது வெற்றிபெறுவதுதான் இன்று முக்கியமாகிவிட்டது! - சத்ருகன் சின்கா, இந்தி நடிகர்

படம்
  இன்று கருத்தியல் கடந்து வெற்றி முக்கியமானதாக மாறியுள்ளதா? அரசியலில் இன்று கருத்தியல் எல்லாம் கிடையாது. இறுதியில் வெற்றி பெறுவதே முக்கியம் என மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் அதிகாரம்தான் அனைவரும் அடைவதாக மாறியிருக்கிறது.  கோவில்களுக்கு செல்ல டிக்கெட்டுகள் அவசியமா? நான் இதை ஏற்கிறேன். கோவில்களுக்கு உள்ளே செல்ல எந்த வித சீட்டுகளும் தேவையில்லை. அவை எப்போதும் மக்களுக்காக திறந்து இருக்கவேண்டும்.  கிரிக்கெட் வீரர், நடிகர் தன்னை நிரூபிக்க சில திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிக்கான திறன், தகுதிகள் என்னென்ன? தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெல்லவேண்டும். வெற்றிக்குப் பிறகும் நீங்கள் மக்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.  தென்னிந்திய படங்களான ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் இந்தி வட்டாரத்திலும் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? அவர்களின் படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியப் படங்களின் கதைகளோடுதான் அவர்களும் இணையாக பயணிக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல அவர்கள் அதிகளவு வசூல் பெற்றிருக்கலாம். நாம் அனைவரும் ஒரே நாட்டில் உள்ள தொழில்துறைகள் என்பதை

புதிய மின்னூல் வெளியீடு - மயிலாப்பூர் டைம்ஸ் - அமேஸானில் வாசியுங்கள்

படம்
  பிளாக்குகளில் அதாவது வலைப்பூவில் எழுதுவது என்பது டயரிக்குறிப்பு போலத்தான் அதற்கு மேல் அதில் ஏதுமில்லை என்று கணியம் சீனிவாசன் ஒருமுறை கூறினார். வலைப்பூவில் எழுதப்படும் கட்டுரைகளைப் பொறுத்து இப்படி கூறலாம். அவர் கூறுவதற்கு மயிலாப்பூர் டைம்ஸ் கட்டுரைகள் சற்று ஒத்துவரும். இந்த நூலில், எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது வரையிலான  நிகழ்ச்சிகளை சுட்டப்பட்டுள்ளன.  மயிலாப்பூர் என்பது காஞ்சிபுரம் போலத்தான். இங்கும் தெருவுக்கு தெரு கோவில்கள் உண்டு. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கும் பிராமணர்களின் குழுக்கள் உண்டு. கபாலீஸ்வரர் கோவில், அதைச்சுற்றியுள்ள முக்கியமான நூல், உணவு நிறுவனங்கள் என பேச ஏதாவது விஷயங்கள் உண்டு. ஆண்டுதோறும் அனைத்து மாதங்களிலும் இங்குள்ள கோவில்களில் ஏதேனும் ஒரு விசேஷம் நடந்தவாறே இருக்கும். இங்கு வாழும் ஒரு பத்திரிகையாளன் பார்க்கும், கேட்கும், அனுபவித்த விஷயங்களின் தொகுப்புதான் நூல்.  இந்த அனுபவங்களை வாசிக்கும் யாவரும் புன்னகையுடன் அதை வாசிக்க முடியும். நூலின் கட்டுரைகள் அனைத்துமே சுய எள்ளல் தன்மையுடன் தான் உள்ளன. எனவே, வெறும் டயரிக் குறிப்பாக மட்டும

வரலாற்றை திருத்தி எழுதி அதனை அரசியலுக்க சில கட்சிகள் பயன்படுத்துகின்றன! - பேராசிரியர் உபீந்தர் சிங், வரலாறு, அசோகா பல்கலைக்கழகம்

படம்
  உபீந்தர் சிங் உபீந்தர் சிங் பேராசிரியர் வரலாற்றுத்துறை அசோகா பல்கலைக்கழகம் நீங்கள் எழுதியுள்ள நூலில் தொன்மை இந்தியா பற்றி பேசியுள்ளீர்கள். அதில் மதங்களுக்கு இடையில் பன்மைத்தன்மை இருப்பதோடு மதரீதியான வன்முறைகளும் இருப்பதைக் கூறியுள்ளீர்கள்.  தொன்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நிறைய நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துதான் ஆக வேண்டும். அகிம்சை, வன்முறை, கடவுள் நம்பிக்கை, நாத்திகம், சமூக பாகுபாடு பற்றி நான் நூலில் எழுதியுள்ளேன். இன்று மத வேறுபாடுகள் உருவாக்கப்படுவதைப் போலவே அன்றும் மத சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தன. அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார். மதம் தொடர்பான பன்மைத்துவத்தை கோட்பாடு அளவில் உருவாக்கினார். ஆனால் பிற அரசர்கள் இந்த அளவு யோசிக்கவில்லை. அவர்கள் இருக்கும் மத அமைப்புகளை அப்படியே பராமரித்தனர். மதங்களை பின்பற்றுவதில் பன்மைத்தன்மை நிலவியது.  அதேசமயம் மதரீதியான வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பௌத்த நூலான சூலவம்சத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. பல்லவர்களின் ராணுவம் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தின் புத்த சிலைகளை கொள்ளையடித்தது பற்ற

மனதை நிறைக்கும் ஆன்மிக அனுபவ பயணம்! - அருகர்களின் பாதை- ஜெயமோகன்

படம்
  சமணர்களின் கோவில் - ஜெயமோகன் வலைத்தளம் அருகர்களின் பாதை ஜெயமோகன் கிழக்கு  ரூ.285 (ராயப்பேட்டையிலுள்ள கிழக்கு பதிப்பகமே சென்று வாங்கினாலும் கூட ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டோம் என அன்போடு சொல்லிவிட்டனர்.) நூல் முழுக்க சமண வழிபாட்டிடங்களை தேடிச்செல்லும் எட்டுபேர் கொண்ட குழுவின் பயணத்தைப் பற்றியது. இதில் வரும் ஆரியர் வருகை, நாற்கர சாலை ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு பார்த்தால் நூல் முழுக்க பயணம் தொடர்பான செறிவான கருத்துகள் நிரம்பியுள்ளது என உறுதியாக கூறலாம்.  தொன்மைக் காலம் தொடங்கி இன்றுவரை சமண வழிபாட்டிடங்கள் வளர்ந்துகொண்டே வருகின்றன. கூடுதலாக அந்த மதம் சார்ந்தவர்கள் தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கோவில்களை வெண் சலவைக்கல் கொண்டு கட்டிக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக  கல்யாண்ஜி எனும் அமைப்பைச் சொல்லலாம். ஜெயமோகன் தன்னுடைய நண்பர்களோடு செல்லும் இடங்களில் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள் சமண தர்மசாலையினர்தான். இந்து மத அமைப்பினர் அல்ல. இது பற்றிய இடம் வரும்போது, ராமகிருஷ்ண மடத்தின் அணுகுமுறை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார் ஜெ. என்ன நோக்கம் என்பதே தெரியாமல் மடத்தை நிர்வாகம் செய்பவர

சீக்கிய மதத்தைப் பாதுகாக்கும் ராணுவப்படை நிகாங்குகள்!

படம்
  கடந்த வெள்ளிக்கிழமை அன்று, விவசாயிகள் போராட்டத்தில் 35 வயதான தலித் ஒருவரை நிகாங்க்  ஆட்கள் கோரமாக வெட்டிக்கொன்றனர். எதற்கு இந்தக்கொலை என்றபோது, சீக்கியர்களின் நூல்களை மதிக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு நிகாங்குகள் உதவி சப் இன்ஸ்பெக்டரின் கையை சீவி எறிந்தனர். பொதுமுடக்க காலத்தில் விதிகளை பின்பற்ற முடியாது என நிகாங்குகள் கூறியதன் காரணமாக நடந்த தாக்குதல் இது.  நீலநிற உடை, அலங்கார தலைப்பாகை, வாள், இன்னும் பிற ஆயுதங்களைக் கொண்ட படையை நிகாங் என்கிறார்கள். 1699ஆம்ஆண்டு குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது நிகாங் படை. இவர்களின் பெயருக்கு சமஸ்கிருதத்தில், பயமில்லாத உலகத்தில் லாப நஷ்டம் பற்றி கவலைப்படாதவர்கள் என்று அர்த்தம்.  பாபா புத்தா தல், தமா தல், தர்னா தல் என மூன்று பிரிவாக நிகாங்குகள் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றனர். பஞ்சாப்பில் நிகாங்குகளின் குழு 30க்கும் மேலாக சிறியதும் பெரியதுமாக செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்.  நாடோடிகளாக அங்கும் இங்கும் அலைவதால் நிகாங்குகளின் எண்ணிக்கையை முழுவதுமாக கணக்கிடமுடியவில்லை. சீக்கியர்களின் விழாக்களில் தற்காப்புக்கலைகளையும், குத

ஆர்எஸ்எஸ்ஸின் நிழலுடன்தான் எதிர்க்கட்சிகள் போரிட்டு வருகின்றன! - பத்ரி நாராயணன், சமூக வரலாற்று அறிஞர்

படம்
            பத்ரி நாராயணன் சமூக வரலாற்று அறிவியலாளர் பத்ரி நாராயணன் , ஆதி திராவிடர் மற்றும் இந்துத்துவா பற்றி பல்வேறு கட்டுரைகளை நூல்களை எழுதியுள்ளார் . அண்மையில் ரீபப்ளிக் ஆப் இந்துத்துவா என்ற நூலை எழுதியுள்ளார் . இதில் எப்படி இந்துத்துவா தன்னை மறுகட்டமைப்பு செய்து உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதைக் கூறியுள்ளார் . இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப்பவர்கள் , அதன் நிழலுடன்தான் போரிடுகிறார்கள் . இந்துத்துவ தத்துவத்தின் கர்ப்பகிரகம் என ஆர்எ்ஸ்எஸை நீங்கள் கூறியுள்ளீர்களே ? தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கம் , தாராளமயமாக்கம் அறிமுகமானது . அப்போதிலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பை நவீன காலகட்டத்திற்கு ஏற்றபடி தனது கொள்கைகளையும் செயல்களையும் சிந்தனைகளையும் மாற்றி அமைத்து வருகிறது . இன்று ஒருவர் பல்வேறு சமூக பிரச்னைகள் சார்ந்து ஆர்எஸ்எ்ஸ் அமைப்பை கேள்விகள் கேட்டாலும் அதனிடம் அதற்கான பதில்கள் உள்ளன . அண்மையில் கூட அதன் தலைவர் மோகன் பகவத் , கோல்வால்கரின் பேச்சுகள் அடங்கிய தொகுதியில் கூற்ப்பட்ட சில கருத்துகளை நாம் மறக்க வேண்டும் என்று கூறியுள்ளார் . காலமும் , மக்களும் ம

விக் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கும் இந்தியா! - ஏற்றுமதி செய்யப்பட்டு சீனாவில் தயாராகிறது விக்

படம்
              கோவில்களிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தலைமுடி ! ஆந்திர மாநிலத்தில் கோவில் பக்தர்களால் வேண்டுதலுக்காக இறக்கப்படும் தலைமுடி , ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது . இம்முடியை வாங்கும் நிறுவனங்கள் அதனை தூய்மைப்படுத்தி விக் தயாரிக்க ஏற்றது போல மாற்றி சீனா , ஹாங்காங் நாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகின்றனர் . ஆந்திரத்தில் பிரபலமான வெங்கடேஸ்வரா கோவிலை , திருமலா திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது . இங்கு வரும் பக்தர்கள் தங்களது ஆசைகள் , விருப்பங்களை பூர்த்தி செய்தால் முடியை இறக்குவதாக வேண்டிக்கொள்கின்றனர் . தினசரி 90 ஆயிரம் பேருக்கு மேல் கோவிலுக்கு வரும் பக்தர்களில் , 30-50 சதவீதம் பேர் தங்கள் தலைமுடியை இறைவனுக்கு காணிக்கையாக்குகின்றனர் . இதில் பெண்களின் பங்களிப்பு அதிகம் . இங்கு ஆண்டுக்கு 1 கோடியே 20 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்துக்கொள்கின்றனர் . முடியை இறக்குவதற்கு பதிலாக பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது . 2013 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது . இங்கு காணிக்கையாகப் பெறப்படும் முடியை

வட்டி கட்டி தன் சொந்த நிலத்தை மீட்க திருட்டை தொழிலாக கொள்ளும் நல்லவன் மாதவன்! - தொங்கோடு - ரவிதேஜா

படம்
              தொங்கோடு சிறுவயதில் தனது தோழிக்காக காத்தாடியை திருடும் சிறுவன் , வளர்ந்தபிறகு எப்படியாகிறான் என்பதுதான் கதை .    கிராமத்தில் நடைபெறும் கதையில் மாதவன் தனது தோழிக்காக முதலில் திருட்டில் ஈடுபட்டு வீட்டுக்கு வரும்போது வீடு வட்டிக்கடைக்கார ரால் சூறையாடப்பட்டுள்ளது . அந்த வட்டிக்கார ர் வேறு யாருமல்ல . அவனது பெண்தோழியின் அப்பாதான் . இந்த சோகத்தில் மாதவனின் தந்தை இறந்துவிடுகிறார் . தங்கையுடன் வீடில்லாமல் இருக்கும் மாதவன் மெல்ல கிராமத்தில் சோற்றுக்காக திருடத் தொடங்குகிறான் . அதுவே அவனது தொழிலாக மாற முன்னாள் திருடர் சிறப்பாக பயிற்சி கொடுக்கிறார் . ஆனாலும் மாதவனிடம் இருக்கு்ம் நேர்மை , தான் கட்டவேண்டிய வட்டியை சரியாகத்தான் வட்டிக்காரருக்கு கட்டுகிறார் . அவரது தந்தை வட்டிக்காரரால் இறந்துபோனாலும் கூட அவர் மேல் துவேஷம் கொள்வதில்லை .    ஆதரவற்ற சிறுவர்களை முடிந்தவரை படிக்க வைக்க பணம் கொடுத்து உதவுகிறான் . இதனால் ஊரிலுள்ளவர்கள் மாதவனை பெரிதாக நினைத்து பயப்படுவதில்லை . பணக்காரர்கள் மட்டுமே பயப்படுகிறார்கள் . இந்த நேரத்தில் நகரத்தில் படித்து வந்த பெண்தோழி வளர்ந்

காவிமயப்படுத்தலையும், ஊழல்களையும் எதிர்த்ததால் தேசவிரோதி ஆகிவிட்டேன்!

படம்
brijeshkumar/edexlive நீதிவெல்லும் என்ற நம்பிக்கை எனக்குண்டு ! பிரிஜேஷ் குமார் , உதவிப் பேராசிரியர் . பிரிஜேஷ்குமார் , ஐஐடி குவகாத்தியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் . 2011 ஆம் ஆண்டிலிருந்து மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பணி . இவர் கற்பித்தலுக்காக உலகிற்கு தெரியவரவில்லை . தனது மேலதிகாரிகள் ஐஐடியில் செய்த பல்வேறு ஊழல்கள் முறைகேடுகளை வெளியே சொல்லி உலகம் அறிய வைத்தார் . அதற்காகவே பிரிஜேஷ் பெயர் அனைவராலும் கூறப்பட்டது . உண்மையைப் பேசினால் சாதாரண மனிதருக்கு என்ன ஆகும் என்பதற்கு பிரிஜேஷ் மிகச்சிறந்த உதாரணம் . நிர்வாகத்திற்கு எதிராகவும் , அதில் செல்வாக்கு உள்ள மனிதர்களைப் பகைத்துக்கொண்டதால் அவர் தான் தங்கியுள்ள இடத்தை விட்டு உடனே காலி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார் . மேலும் அவரது பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . இதற்கும் மேலாக அவருக்கு மன உளைச்சல் அளிக்கும்படியாக , அவர்மீது காவல்துறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . ஐஐடியில் பெருகும் ஊழல் , அங்கு அதிகரித்து வரும் இந்துத்துவ நடவடிக்கைகள் பற்றி பேசினோம் .