போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை!
போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை! மக்களுக்கு வழங்கப்படும் கல்வியே, நாட்டின் மேம்பாடு, வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. இதை ஐ நா அமைப்பும் அங்கீகரித்து ஏற்றுள்ளது. நவீன காலத்தில் தொடக்க கல்வி, தேசிய மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் மாறியுள்ளது. இதற்கு எதிராக 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இந்திய கலாசார தன்மைக்கேற்றபடி கல்வி என்ற போர்வையில், தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு கல்விமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்விக்கொள்கை, உண்மையான வரலாற்றை மாற்றி மாணவர்களை தவறான திசைக்கு வழிகாட்டுகிறது. இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களில் இந்திய அறிவுத்திட்டம் என்பதை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. ஜோதிடம், ஜவுளித்துறை, நகரங்கள் திட்டமிடுதல், வேத கணிதம் என வெளிப்படையாக பொதுவாக பார்த்தால் மாணவர்களுக்கு நன்மை தருவதுபோல தோன்றும். ஆனால், பகுத்தாய்ந்து பார்த்தால் வலதுசாரி கருத்துகளை உள்ளே திணித்து குறிப்பிட்ட சில இனக்குழுவினருக்கு சாதகமான கல்வி மாறியிருப்பதை அடையாளம் காணலாம். இதை பிரசாரம் செய்ய இலக்கியங்கள், நூல்கள், போஸ...