இடுகைகள்

வட இந்திய தொழிலாளர்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடையாளமற்ற இந்தியர்கள்! - அவலவாழ்வும் துயரும் அலசல் பார்வை!

அடையாளமற்ற இந்தியர்கள்!  உழைத்து அடையாளமற்று இறக்கும் வட இந்தியர்களின் அவல வாழ்க்கை. தமிழகத்தின் பெருநகரங்களிலுள்ள ஹோட்டல், பழச்சாறு கடை, பாலகம், தேநீர்க்கடை என அனைத்து இடங்களிலும் மாறாத ஒற்றுமை, மேற்சொன்ன அனைத்து இடங்களிலும் வேலை செய்யும் பணியாளர்கள்தான். இவர்கள் ஒருவர் கூட தமிழர்களாக இருக்க வாய்ப்பு கிடையாது. அனைவருமே உ.பி, பீகார், மேற்கு வங்கத்திலிருந்து இடம்பெயர்ந்த வட இந்தியர்கள்தான். இந்தி, போஜ்புரி பாடல்கள் ஒலிக்க எந்திரமாய் சுழன்று பிரமிக்க வைக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்ல கர்நாடகம், ஆந்திரா, கேரளா என சொந்த ஊர்க்காரர்கள் பலரும் நவீன பணம் கொழிக்கும் வேலைகளுக்கு மாறிவிட உடலுழைப்பு தொடர்பான வேலைகளுக்காகவே பல்லாயிரக்கணக்கான வட இந்தியர்கள் ரயில்களில் முட்டிமோதி ஏறிவருகின்றனர். இதற்கு முக்கியக்காரணம், கல்வி அறிவால் தென்னிந்தியர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டதும், கல்வியறிவின்மையால் வட இந்தியர்கள் அதனை தவிர்த்ததும்தான். அதிகரிக்கும் கிடுகிடு மக்கள்தொகை வட இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்த வளம்மிகுந்த சமூகத்திட்டங்கள் செழித்த தென் மாநிலங்கள் வட இந்தியர்களை