ரயில் நிலையத்தில் ஜோதிட நிரூபணம் - கடிதங்கள் - கதிரவன்
ஜோதிட நிரூபணம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என கார்ட்டூன் கதிரவன் போன் செய்தபோது விசாரித்தார் . நலமோடு இருப்பதாக பதில் கூறினேன் . நாகப்பட்டினத்தில் இருந்து இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார் . அவர் மனைவி அகிலா , அரசுத்தேர்வுக்கு படித்து தேர்வுகளை எழுதி வருவதாக கூறினார் . ஒருமுறை தேர்வு எழுதிவிட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார் . திருவான்மியூர் ரயில் நிலையம் என்று சொன்னார் . அங்கு , ஆதவன் நாளிதழில் முன்னர் பணியாற்றிய குமார் என்பவரை சந்தித்திருக்கிறார் . முழுநேர ஜோதிடரும் , பகுதிநேர ஃப்ரூப் ரீடருமான குமார் , ரயில் நிலையத்திலேயே அகிலாவுக்கு ஜோதிடம் பார்த்து வேலை பற்றி கூறுவதாக சொல்லியிருக்கிறார் . கதிரவனுக்கு மனதில் சங்கடமாகியிருக்கிறது . இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கதிரவன் குமாரை சந்தித்திருக்கிறார் . ஆனால் அவர் அப்போதும் தனது ஜோதிட திறனை நிரூபிக்க வாய்பைத் தேடியிருக்கிறார் . அகிலா தடாலடியாக பேசக்கூடியவர் . கணவரின் நண்பர் என்பதால் நிதானம் கூட்டி பொறுத்திருக்கிறார் . நாளிதழ் பணிக்கான கட்டுரைகளைத் தேடி படித்து வர