இடுகைகள்

வகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைஞர்களிடையே வன்முறை இயல்பு எப்போதும் இருப்பதுதான்

படம்
  வன்முறை எப்போடு இயல்பானதாகிறது? அதை நீங்கள் தினசரி வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருந்தால் ஒருவர் அடித்து நொறுக்கப்படுவதை, பிறரை நீங்கள் தாக்கி ரசிப்பதைக் கூட பின்னாளில் செய்யலாம். அந்தளவு மனம் அத்தகைய காட்சிகளால் நிரம்பியிருக்கும். மனதிற்கு முதல்முறை நடக்கும் வன்முறை அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை மனதை மெல்ல மரத்துப் போகச் செய்கிறது. கலைகளில் உயர்வு பெற்ற மேற்குநாடுகளில் அதற்கு இணையான போர் கொடூரங்கள், சித்திரவதைகள் நடந்துள்ளன. மனதிற்கே ஒருபுறம் கலையின் உயர்வு, மறுபுறம் கற்பனை செய்யவே பயப்படும் கொடூரங்களை நடத்த முடிகிறது வன்முறையால் ஒருவருக்கு சாகச உணர்வும், சமூகத்தில் அந்தஸ்தும் கிடைக்கிறது என்றால் எப்படியிருக்கும்? இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் வன்முறையை இயல்பானதாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று உளவியலாளர்களான வோல்ஃப்கேங், ஃபெராகுட்டி ஆகியோர் கூறினர். இதற்கு ஆதாரமாக பெரு நகரங்களில் இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை நிறைய ஆய்வுகள் காட்டுகின்றன. வறுமை, இனக்குழு மோதல்கள், முரண்பாடுகள், விரக்தி ஆகியவற்றின் இறுதி வடிவமே வன்முறையாக உருவெடுக்கிறது. இப்ப

உடலை கீறி, துண்டாக நறுக்கி இன்பம் அனுபவித்த கொலைகாரர்கள்

படம்
        அடையாளம் , சடங்குகள் தனது மனதில் தோன்றும் கற்பனை , அதன் உந்துதலில் கிடைக்கும் வாய்ப்புகளால் ஒருவர் கொலை செய்கிறார் . அதேசமயம் ஏதாவது மெசேஜ் சொல்லியே ஆகவேண்டும் என யோசிக்கும் ஆட்களும் இந்தவகையில் உண்டு . இவர்கள் சாத்தானின் வடிவம் , கற்கள் , பேப்பர் என எதையாவது மடித்து கொலை செய்யப்பட்டவரின் உடலில் திணித்துவைத்துவிட்டு சென்றுவிடுவார்கள் . இவர்கள் , இதன் மூலம் காவல்துறைக்கு தங்களது அடையாளத்தை சொல்லுகிறார்கள் . இதன் மூலம் அடுத்து நடக்கும் கொலைகளையும் கூட ஒருவர் கண்டுபிடிக்கலாம் . இதெல்லாம் துப்பறியும் ஆட்களின் திறமையைப் பொறுத்தது . ஜோடியாக் கில்லர் என்பவர் வட்டம் வரைந்து அதில் சிலுவையை வரைந்து விட்டு சென்றார் . போஸ்டனைச் சேர்ந்த கொலைகாரர் பிறந்த நாள் ரிப்பன் வடிவத்தை வரைந்துவிட்டு செல்வது வழக்கம் . ராமிரெஸ் சாத்தானைக் குறிக்கும் அடையாளத்தை வரைந்தார் . க்ரீன் ரிவர் கில்லர் என்பவர் , பெண்களின் யோனியில் பிரமிட் வடிவ கற்களை திணித்து வைத்தார் . இப்படி வரைவது ஒருவகையில் இவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டவும் , ஊடகங்கள் நாயகர்களாக அல்லது தீய சக்தி என கூறப்படக்கூட காரண