இடுகைகள்

பத்மலட்சுமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  வழக்குரைஞர் பத்மலட்சுமி ஜெயாமோகன், கேரளா கேரளத்தில் சாதித்த முதல் பால்புதுமையின வழக்குரைஞர் கேரளத்தில் தினக்கூலி தொழிலாளரான மோகன் என்பவரின் மகள், பத்மலட்சுமி ஜெயாமோகன். இவர், பால்புதுமையின இனக்குழுவைச் சேர்ந்தவர். தான் யார் என்பதை அடையாளம் கண்டு பெற்றோருக்கு முதலிலேயே கூறிவிட்டார். பிள்ளை கூறியதைக் கேட்டு அவர்களும் அடித்து உதைக்காமல் ஆதரவாக இருந்த   காரணத்தால் இப்போது வழக்குரைஞராகி இருக்கிறார். இதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பத்மலட்சுமியின் பெற்றோர், தனது மகளின் இயல்பை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டதுதான். தங்களது மகளைப் பற்றி அறிய அதுதொடர்பாக இணையத்தில் நிறைய தேடி அறிந்துகொண்டனர். கூடுதலாக மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றிருக்கின்றனர். பெற்றோர் இந்தளவு ஆதரவாக இருந்தாலும் சுற்றமும், நட்பும், கல்விக்கூடமும், சமூகமும் அந்தளவு கரிசனம் காட்டவில்லை. இயல்புக்கு மாறான வினோதம் என்று பல்வேறு விஷ வார்த்தைகளை வசைகளை சொல்லி திட்டினாலும் இணையத்தில் உள்ளவர்கள் எதிர்மறை தன்மையை உருவாக்கினாலும் பத்மலட்சுமி ‘’நான் அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளப்போவதில்லை ஒருவர் வேலையில்லாமல் இண