இடுகைகள்

கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் போல வெட்டப்பட்டாலும் அவள்

கோடைக்கால வாசிப்புக்கான ஆங்கில கட்டுரை நூல்கள்!

படம்
  அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை நூல்கள் 2023 கோடைக்கால ஸ்பெஷல் யாரி ஆந்தாலஜி ஆன் ஃபிரண்ட்ஷிப் பை வுமன் அண்ட் குயிர் ஃபோல்ஸ் தொகுப்பு ஷில்பா பட்கே, நிதிலா கனகசபை தெற்காசியாவைச் சேர்ந்த 95 பங்கேற்பாளர்கள் பெண்கள், பால்புதுமையினர் பற்றி எழுதியிருக்கிறார்கள். நூலில் கதை, கட்டுரை, கவிதை, காமிக்ஸ் என பல்வேறு எழுத்து வடிவங்கள் உள்ளன. இவற்றின் வழியாக நட்பு, அது எப்படி உருவாகிறது, அதை நல்ல முறையில் எப்படி பராமரிப்பது என பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஷாடோஸ் அட் நூன் – தி சவுத் ஆசியன் ட்வென்டித் சென்சுரி ஜோயா சட்டர்ஜி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என மூன்று நாடுகளின் வரலாறு, அதன் அரசியல், உணவு என பல்வேறு விஷயங்களை விரிவாக பேசுகிறார். மூன்று நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு எப்படி தங்களை தகவமைத்துக்கொண்டன என்பதை நூல் விளக்குகிறது. எம்பயர் இன்கார்பரேட்டட் பிலிப் ஜே ஸ்டெர்ன் பிரிட்டிஷார் ஆட்சி செய்த நாடுகளில் பெரு நிறுவனங்களை உருவாக்கி வணிகம் செய்தனர். வரலாற்று ஆய்வாளர், பிரிட்டிஷ் அரச வம்சமே காலனி நாடுகளில் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி திட்டம் தீட்டி அ

ஆடியோ கதைகள் மூலம் மக்களின் மனதை வென்ற பாக்கெட் எஃப்எம்! - பார்ச்சூன் 40 அண்டர் 40

படம்
  நிஷாந்த், ரோகன், பிரதீக்- துணை நிறுவனர்கள், பாக்கெட் எஃப்எம் பாக்கெட் எஃப்எம்- ஆடியோ கதைசொல்லி ரோகன் நாயக், நிஷாந்த், பிரதீக் தீக்‌ஷித் துணை நிறுவனர்கள் பாக்கெட் எஃப்எம் யூட்யூபை திறந்தால், ‘’பார்க்கிறதுக்கு பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். இவனுக்கு பேங்கில அக்கவுண்ட் இருக்கா, இந்த பிச்சைக்காரனுக்கு ஹோட்டல் டேபிளா,, அதை எங்களுக்கு கொடுங்க. பாக்குறதுக்கு சர்வர் மாதிரி இருக்க, இரண்டு கிளாஸ்ல டீ போட்டு எடுத்துட்டு வா ‘’ என்ற டோனில் பெண் குரல் பேசும் மோசமான அனிமேஷன் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அந்த கம்பெனிதான் பாக்கெட் எஃப்எம். கதைகளை ஆடியோ வடிவில் கூறும் நிறுவனம். ரோகன், நிஷாந்த் ஆகிய இருவரும் காரக்பூரல் ஐஐடியில் படித்தவர்கள். இவர்கள் பிரதீக்கை சந்தித்தபிறகு பாக்கெட் எஃப் நிறுவனத்தை உருவாக்கினர்.   இன்று பாக்கெட் எஃப்எம்மின் மதிப்பு, 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். அண்மையில்தான் 93.5 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றது. பாக்கெட் நாவல் என்ற சகோதர நிறுவனத்திலிருந்து பாக்கெட் எஃப் எம் நிறுவனம் உருவானது. திகில் கதைகளில் யட்சினி என்ற கதையை பொறியியல் மாணவர் ஒருவர் எழுதி, அக்

திரைப்படமாக்க தகுதியுள்ள படைப்புகளை எழுத்தாளர்களே கூறுகிறார்கள்- இமையம், சு வேணுகோபால், பவா, முருகேச பாண்டியன்

படம்
  எழுத்தாளர் இமையம் எழுத்தாளர் சு வேணுகோபால் எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் முருகேச பாண்டியன் ஆங்கில திரைப்பட உலகில் நிறைய நாவல்களை அடிப்படையாக வைத்து படம் எடுத்து வருகின்றனர். இதனால் நாவலும், அதை அடிப்படையாக கொண்டு கதை, திரைக்கதை   எழுதி எடுக்கப்பட்ட படம் என இரண்டுமே கவனிக்கப்படுகிறது.   தமிழைப் பொறுத்தவரை பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துகளை திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்துவது, தலைப்புகளை திருடுவது என வினோதமாக விளையாட்டுகளை திரைப்பட இயக்குநர்கள் செய்து வருகிறார்கள். திருட்டு வெளிப்பட்டாலும் கூட நவசக்தி விநாயகர் சத்தியமாக எனக்கு இப்படி ஒரு படைப்பு, தலைப்பு இருப்பது தெரியாது என கற்பூரம் அணைக்க தயாராக இருக்கிறார்கள்.  இயக்குநர்கள் ஒரு நாவலை படமாக இருப்பது இருக்கட்டும். படைப்பை உருவாக்கும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை திரைப்படமாக்க தகுதி உள்ளது என நினைக்கிறார்களா என கேட்டுப் பார்ப்போம். எழுத்தாளர் இமையம் ‘’ஒரு நாவலின் எழுத்தாளர், தனது நாவலின் அடிப்படை வடிவத்தில் திரைப்படம் எடுக்கப்படவில்லை என்று குறைகூற முடியாது. நாவலின் வடிவமும், இலக்கணமும், சினிமாவின் கட்டமைப்பும் வேறுப

இரண்டு கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் - செகன் கருணதிலகா, ஜேனிஸ் பாரியட்

படம்
  கவிஞர் ஜேனிஸ் பாரியட் எழுத்தாளர் செகன் கருணதிலகா கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் செகன் கருணதிலகா புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் படிப்பது… நான் ஒரே நேரத்தில் நிறைய நூல்களைப் படிப்பேன். செவ்வியல் இலக்கியம், கட்டுரைகள், என்னுடைய துறை சாராத நூல்கள், இப்போது அசோக் ஃபெர்ரியின் தி அன் மேரேஜபிள் மேன், ஆர்மிஸ்டிட் மௌபினின் மோர் டேல்ஸ் ஆப் தி சிட்டி ஆகியவற்றை படித்து வருகிறேன். எலிசபெத் கில்பெர்டின் கமிட்டட் – எ ஸ்கெப்டிக் மேக்ஸ் வித்   மேரேஜ், அன்னா ரோஸ்லிங் ரோன்லண்ட்டின் ஃபேக்ட்புல்னெஸ், ஹன்ஸ் ரோஸ்லிங்க், ஆலா ரோஸ்லிங்க், இரா லெவினின் ரோஸ்மேரி பேரி ஆகியோரது நூல்களை படித்து முடித்தேன். எழுதும்போது..   மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு எழுதுவேன். என்னைச் சுற்றிலும் கத்தரிப்பூ, மெஜந்தா நிற விளக்குகள் எரியும்.   செவ்வியலான இசையைக் கேட்பேன். எழுதி முடித்தவுடன் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பேன். ஒரு கிளாஸ் என்பதைத்   தாண்டினால் எழுத்து வேலைகளை செய்ய முடியாது. எப்போதும் பிடித்த நூல்கள் குழந்தையாக இருக்கும்போது தி குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா. அகதா கிறிஸ்டியின்   அண்ட் தென் தேர் வேர் நன் நூல்.

பஷீர் -தனிவழியிலோர் ஞானி! வாழ்க்கை முழுவதும் கனிவும் முரட்டுத்தனமுமாக வாழ்ந்த எழுத்தாளனின் கதை - யூமா வாசுகி

படம்
  வைக்கம் முகமது பஷீர் தனி வழியிலொரு ஞானி - வைக்கம் முகமது பஷீர் ஸாநு மாஸ்டர் தமிழில் - யூமா வாசுகி பாரதி புத்தகாலயம்  தலையோலபரம்பில் பஷீராக பிறந்தவர், எப்படி புகழ்பெற்ற வைக்கம் முகமது பஷீராக மாறினார் என்பதைச் சொல்லும் சுயசரிதை நூல்தான் தனி வழியிலொரு ஞானி. பஷீர் எழுதியதை விட அவரைப் பற்றிய இட்டுக்கட்டிய கதைகள் கொண்ட நூல்கள் அதிகம் என கூறப்படுகிறது. அந்தக் கூற்றை இந்த நூலின் இறுதிப்பகுதியிலும் கூறுகிறார்கள். அவற்றை எல்லாம் புறந்தள்ளினாலும் தனி வழியிலொரு ஞானி நூல் அதன் எழுத்து சிறப்புக்காக முக்கியத்துவம் பெறுகிறது.  தொடக்கத்தில் நூல் பஷீரைப் பற்றிய தகவல்களை அவரது சிறுகதைகள், நாவல்களிலிருந்து திரட்டுவது சற்று சோர்வு அளிப்பது உண்மை. ஆனால் அவையெல்லாம் பஷீரின் பிறந்த நாள் எது என்பதைக் கண்டுபிடிக்கும் வேகம்தான். அதைத் தாண்டி விட்டால் பஷீர் என்ற மனிதரின் பிம்பத்தை நாம் பிரமாண்டமான வடிவில் காண்கிறோம்.  இந்த நூல் படைப்பு சார்ந்து பஷீரின் சிறப்புகளைக் கூறுவதோடு அவருக்கு ஏற்பட்ட மனநோய் அதன் பாதிப்புகளையும் வெளிப்படையாக விவரிக்கிறது. இதனால் நூல் எழுத்தாளரை புனிதப்படுத்தி, படைப்புகளை உயர்வாக பேசுவது

கதையும் இயக்குநரும்தான் படத்திற்கு மிக முக்கியம்! - ராஜ்குமார் ராவ், இந்தி சினிமா நடிகர்

படம்
  ராஜ்குமார் ராவ் இந்தி சினிமா நடிகர் நீங்கள் பதாய் டோ படத்தில் நடித்த ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரமான ஷர்துல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கு உங்கள் நீங்கள் எப்படி தயார் செய்துகொண்டீர்கள்? ஷர்துல் பாத்திரம் பிற ஓரினச்சேர்க்கையாளர் பாத்திரம் போல இருக்க கூடாது என முன்னமே நினைத்தோம். அந்த பாத்திரம் உண்மையாக இருக்கவேண்டுமென நினைத்தோம். சிறுநகரம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவனின் வாழ்க்கையில் பாலியல் என்பது சிறுபங்கு வகிக்கிறது. ஆனாலும் அது முக்கியமானது. தன்னை வெளிக்காட்டாமல் அவன் வாழ்கிறான். அவனைப் போலுள்ள பிறர் அவனை தொடும்போது அது அவனுக்கு தெரிந்துவிடுகிறது. அவன் விழிப்பாகவே இருக்கிறான். நானும் படத்தின் இயக்குநரான வர்தான் குல்கர்னி இந்த நீளத்திற்குத்தான் பாத்திரம் பற்றி பேசினோம். இதைத்தாண்டி கூடுதலாக நான் ஏதும் செய்யவில்லை. காதல் என்பது நீங்கள் உணர்வது அதனை வெளிக்காட்டலாம்.  ஷர்துல் ஒரு ஆணழகன். கட்டழகு உடலுக்காக பயிற்சி செய்தது கடினமாக இருந்தது. நான் சைவ உணவு சாப்பிடுபவன் என்பதால், சற்று கடினமான சவால்தான். ஆனாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். ஆண்மைத்தன்மை கொண்ட நாயகன் என்பதால்தான் பா

கொரியாவிலிருந்து கற்போம்!- புகழ்பெற்று வரும் வார்த்தைகள்

படம்
  இட்ஸ் ஓகே டு நாட் பி ஓகே  கொரோனா காலத்தில் நெட்பிளிக்ஸில் ஏகப்பட்ட கொரிய டிவி தொடர்களை பார்த்த மக்கள், அந்த மொழி வார்த்தைகள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி கூட குறிப்பிட்ட வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இப்படி பொது அறிவை வளர்த்துக்கொள்ளாவிட்டால் உலகில் நாமும் வாழ்கிறோம் என்று எப்படி நிரூபிப்பது...  ஹலியு தென்கொரிய டிவி தொடர், படம், இசை, ஃபேஷன், உணவு ஆகியவற்றை எல்லாவற்றையும் இந்த சொல்லால் குறிக்கலாம்.  மன்ஹ்வா தென்கொரிய கார்ட்டூன்களைக் குறிக்கும் சொல். ஜப்பானிய மங்கா தாக்கத்தால் உருவான கார்ட்டூன், காமிக்ஸ் நூல்களை இப்படி சொல்கிறார்கள்.  டேபக் அற்புதம், ஆஹா என்று புகழ்கிறார்களே அதேதான்.  ஹாஜிமா  இப்படி செய்யாதே என்று கூறுவதற்குத்தான் இந்த கொரிய வார்த்தை. சாரங்கே என்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம். கே டிராமா என்றால் இந்த வார்த்தைகள் இல்லாமல் வசனங்களை அந்த நாட்டு இயக்குநர்கள் எழுதுவதே இல்லை.  முக்பாங் லைவாக தட்டு நிறைய உணவு வைத்துக்கொண்டு பார்வையாளர்களிடம் ஒருவர் பேசுவார். இப்படி லைவாக பேசும் வீடியோவை முக்பாங் என்கிறார்கள்.  ஐகூ அடக்க

2020 ஆம் ஆண்டின் பரிசோதனை முயற்சி படங்கள்! - ஓடிடியை சுவாரசியப்படுத்தும் புதிய இயக்குநர்கள்

படம்
              ஓடிடியாகட்டும் சினிமாவாகட்டும் சோதனை முயற்சிகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கும் . இந்த படங்களில் பட்ஜெட் குறைவாக இருந்தாலும் ஐடியாரீதியாக நிறைய முயற்சிகள் செய்திருப்பார்கள் . இன்று ஓடிடி தளம் இதற்கான வாய்ப்பாக உள்ளது . அப்படி வந்த படங்களைப் பார்ப்போம் . கார்கோ இறந்துபோனவர்களை திரும்ப பூமிக்கு அனுப்பி வைக்கும் பணியை நாயகன் செய்துவருகிறார் . அவருக்கு உதவும் உதவியாளர் கூட அப்படி பூமிக்கு வந்தவர்தான் . பட்ஜெட் குறைவுதான் என்றாலும் அறிவியல் கான்செப்டிக் இந்திய புராண சமாச்சாரங்களை கலக்கி சிறப்பாக செய்திருக்கிறார்கள் . விக்ரம் மாசே , சுவேதா திரிபாதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள் . இவர்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் வேண்டாம் என தூக்கியெறிந்தவைதான் . அதையெல்லாம் கவலைப்படாமல் படத்தைப் பார்த்தால் ரசிக்கலாம் . டைஸ் பிஜய் நம்பியார் இதற்கு முன்னர் எடுத்த படங்கள் எப்படியோ அப்படித்தான் இந்தபடமும் . புல்கித் சாம்ராட் , ஹர்ஸ்வர்த்தன் ரானே ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள்தான் படம் . படத்தின் இசை , காட்சிக்கோப்பு என அனைத்துமே பரிசோதனை முயற்சிதான் . படத

ஃபேன்டசி கதைகள் வழியாக முதலாளிக்கு ஐடியா சொல்லி ஹோட்டலை கைப்பற்றும் நாயகன்! - பெட்டைம் ஸ்டோரிஸ் 2008

படம்
        பெட்டைம் ஸ்டோரிஸ்     பெட்டைம் ஸ்டோரிஸ்  Director: Adam Shankman Produced by: Adam Sandler, Andrew Gunn, Jack Giarraputo Screenplay by: Matt Lopez, Tim Herlihy ஸ்டீக்கர் பிரான்சனுக்கு தன் தந்தையின் சிறிய ஹோட்டலை தான் வளரும்போது பெரிதாக மாற்றி கட்டவேண்டும் என்பது கனவு. ஆனால் தந்தைக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் ஹோட்டல் கைவிட்டு போகிறது. தந்தை அந்த ஹோட்டலை விற்றவரிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, தனது மகனை அந்த ஹோட்டலுக்கு நிர்வாகியாக நியமிக்கவேண்டும் என்பது. ஆனால் தோற்றுப்போனவர்களின் கோரிக்கை என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது. எனவே, அவரின் மகன் ஸ்டீக்கர் ஹோட்டல் பணியாளராகவே இருக்கிறான். அதனை முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறான். ஆனால் அதன் முதலாளி அதனை கண்டுகொள்வதில்லை. கூடவே தனது மகளைக் கட்டிக்கொள்ளவிருக்கும் மணமகனுக்கு புதிய ஹோட்டலுக்கான நிர்வாக பொறுப்பை கொடுக்க நினைக்கிறார். இந்த நிலையில் ஸ்டீக்கர் தனது அக்காவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவருக்கு அது பிடிக்கவில்லை. காலையில் பள்ளி ஆசிரியை ஜில் குழந்தைகளை பார்த்துக்கொள்வார். இரவில் ஸ்டீக்கர் பார்த்துக்

மலையாளத் திரைப்படங்களை விரும்புகிறீர்களா? - ஆசிப் மீரானின் நூல்

படம்
மலையாளத் திரையோரம் ஆசிப் மீரான் தமிழ் அலை பதிப்பகம்  மலையாள படங்களை பார்த்து ரசித்து ஆசிப் மீரான் எழுதிய கட்டுரைகள். நூல் என்றதும் புகழ்ந்து நெக்குருகி எழுதி விட்டார் என நினைக்காதீர்கள். புகழ்ச்சியும் உண்டு கழுவி ஊற்றுதலும் உண்டு. இதில் மலையாள இயக்குநர்கள் பற்றி சுய தம்பட்டம் பெருமை இருக்கிறது. கலை, வணிகப்படங்களில், பரிசோதனை முயற்சிகளில் மலையாள நடிகர்கள் ஈகோ பார்க்காமல் ஈடுபடுவதை தன் பல்வேறு கட்டுரைகளில் பதிகிறார் மீரான். கூடவே தான் படங்கள் பார்ப்பதில் மலையாளத்தைத்தான் முதல் தேர்வாக கொள்வேன் என்கிறார். விருப்பு வெறுப்புகள்தானே படத்தை தீர்மானிக்கும். பத்திரிகையில் விமர்சனங்களை எழுதினாலும் கூட அது அந்த தனிநபரின் கருத்துக்களை உள்ளடக்கியதுதானே? இந்த நூலையும் நாம் ஆசிப் மீரானின் சினிமா அறிவோடு பொருத்திப் பார்க்கவேண்டும். இந்த நூல் மூலம் மலையாள திரையின் சிறப்பான இயக்குநர்கள், நடிகர்களை அறிய முடியும். அந்த வகையில் இந்த நூல் முக்கியமானது. நூலின் இறுதியில் அவரைக் கவர்ந்த இயக்குநர்கள் பற்றிய குறிப்புகளையும் படங்களையும் கொடுத்திருக்கலாம். உதவியாக இருந்திருக்கும். மற்ற

குழந்தைகளுக்கு கதை சொல்வதில் முதியோர் எப்படி வெல்கிறார்கள்?

படம்
மிஸ்டர் ரோனி கதை சொல்வதில் வயதானவர்கள் தேர்ந்தவர்களாக இருக்கிறார்களே எப்படி? மரண அடிதான் ப்ரோ. வாழ்க்கை முழுவதும் ஏதேனும் ஒன்றை சுமந்துகொண்டு இருக்கிறார்கள். வீண்பழி சுமக்கிறார்கள். தினசரி ஏராளமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்களுக்குச் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன. மேலும் இளைஞர்களை விட (18-30), 60-92 வயது கொண்டவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளை கஷ்டப்படுத்தாத இலக்கணங்களைக் கொண்டது. எளிதில் புரியும்படியான விஷயங்களைக் கொண்டது. அறத்தை வலியுறுத்துவது என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கதைகளைச் சொல்லும்போது கதைகளுக்கு ஏற்றது போல குரலின் தொனிகளை மாற்றுவதும் பெரியவர்களுக்கு இயல்பாக வருவதை மைக்கேல் பிரான், சூசன் ராபின்ஸ், நான்சி மெர்க்லர் ஆகியோரின் ஆராய்ச்சிகள் விளக்கியுள்ளன. நன்றி: பிபிசி