இடுகைகள்

வர்த்தகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெர்லின் சுவரும், சீனாவின் கம்யூனிசமும்!

படம்
பெர்லின் சுவர் இடிந்து 30 ஆண்டுகள் ஆகின்றது. உலகம் முழுக்க கம்யூனிச விஷயங்களின் சரிவும் அப்போதுதான் தொடங்குகிறது. சோவியத் ரஷ்யாவின் காலத்தில் அங்கிருந்த அகிலம், உலகம் முழுக்க இருந்த கம்யூனிச அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்தது. பின்னர் சோவியத் தொண்ணூறுகளில் கோர்ப்பசேவ் வந்து சோவியத்தை மறு உருவாக்கம் செய்தபோது அனைத்தும் நொறுங்கத் தொடங்கின. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நூறாவது நிறுவன தினத்தை கொண்டாடி வருகிறது. இவர்கள் சோவியத் வீழ்வதற்கு முன்னரே அங்கு சென்று அவர்களின் கோர்ப்பசேவின் கருத்தியல் சரியானதும் முறையானதும் அல்ல என்று கூறிவிட்டு வந்தனர் என்று நண்பர் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது. இன்றும் சீனா எப்படி உலகின் நெருக்குதல்களை சமாளித்து கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்றால் உள்நாட்டிலேயே பல்வேறு தடைகளை போட்டுத்தான் சமாளித்து வருகிறது. தடைகளை அன்று வேலியாக போட்டால் இன்று டிஜிட்டல் வடிவில் அரசுக்கு பாதகமான அம்சங்களை தவிர்த்து ஆட்சியை நடத்தி தனக்கேற்றபடி நாட்டை வடிவமைத்து வருகிறது சீன அரசு. கோர்ப்பசேவ் தனது சீர்த்திருத்தங்களை பெரஸ்ட்ரோய்கா, கிளாஸ்னாஸ்ட் என்ற ப

மேக் இன் இந்தியா- கூடுதல் வரி சாதிக்குமா?

படம்
இந்தியத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வரிவிதிப்பு! நடப்பு ஆண்டின் பட்ஜெட்டில் (2019-20) தங்கம், வெள்ளி, பெட்ரோலியம் நீங்கலாக பல்வேறு தொழில்துறையினருக்கு 10.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வரிவிதிப்புகள் கூடியுள்ளன. என்ன காரணம்? மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தத்தான். இந்த வரிவிதிப்புகளால் உள்நாட்டில் உற்பத்தித்துறை ஊட்டம் பெறும் என நம்புகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன்மூலம் இந்திய அரசுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக், ரப்பர் (33%), காகிதம் (11%), வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் (10%) இரும்பு மற்றும் உலோகப் பொருட்கள் (7%), எலெக்ட்ரிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் (34%) மற்றும் பிற பொருட்களுக்கு 4 சதவீத வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா (5.21%), ஐரோப்பா (15.17%), சீனா (25.38) ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அரசின் வரி உயர்வுகளால் அதிகம் பாதிக்கப்படுவது சீனா நாடுதான். வரிவிதிப்பை, இந்திய உற்பத்தித்துறையை காப்பாற்றும் வாய்ப்பாக அரசு நினைக்கி