கரையான்புற்று எப்படி உருவாகிறது?
கரையான்கள் மரம், செடிகளில் வெளிப்புற ஓட்டிலுள்ள செல்லுலோஸை (cellulose) உண்ணும் பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. எறும்பு, குளவிகள் ஏன் கரப்பான்பூச்சிகளுக்கும் நெருங்கிய உறவுகொண்டவை. உலகம் முழுவதும் 2,750 கரையான் பூச்சி இனங்கள் உள்ளன. காடுகளில் இறந்துபோன மரங்களை அரித்து தின்று மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. அதேவேளையில் கட்டுமானங்களிலுள்ள மரப்பொருட்களையும் விட்டுவைப்பதில்லை. இதன் காரணமாக கட்டிடங்கள் பலவீனமடைகின்றன. கரையான்கள் ஆப்பிரிக்காவின் சாவன்னா, பசிபிக் கடல் பகுதிகள், பருவமழைக்காடுகளில் புற்றைக் கட்டி வாழ்கின்றன. மரங்களை அரித்து நார்ச்சத்து பொருளான செல்லுலோஸை அதிகளவு உண்டாலும் அதனை எளிதில் செரிக்க ஒருவித பாக்டீரியாவை உடலில் கொண்டுள்ளன. கரையான் புற்றுகள் (termitarium) உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதில் 2 லட்சம் கரையான்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கட்டுமானப் பொருட்கள் கரையான்கள், தூய்மையான மண் மற்றும் தம் கழிவுகளைக் கொண்டு புற்றுகளை எழுப்புகின்றன. இவை விரைவில் காய்ந்துவிடுவதால் உறுதியாக இருக்கும். இடம் உயர்ந்த மலைப்பகுதி, மரங்களின் அடிப்பகுதி, நிலத்த