இடுகைகள்

தாந்த்ரீகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கந்தர்வனை பல ஜென்மங்களாக துரத்தி பலிகொள்ளத் துடிக்கும் யட்சிணி! - குபேரவனக்காவல் - காலச்சக்கரம் நரசிம்மா

படம்
                குபேர வனக்காவல் காலச்சக்கரம் நரசிம்மா அமுதன் என்ற சிறுவனை அவனது தாய்மாமா குடும்பத்தினர் கிண்டல்செய்வது முதல் நாவல் தொடங்குகிறது . தந்தையும் , தாயும் காணாமல் போன சூழலில் அவன் தன் தாய்மாமா குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறான் . ஆனால் அவனது அத்தை , அவரது அம்மா என அனைவரும் அவனது நிறம் , அவனது காணாமல் போன அம்மாவின் நடத்தை ஆகியவற்றை மனதை வருத்தும்படி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் . அதனை நம்பாடுவான் என்ற சிவ பக்தர் மட்டும் கோபத்தோடு பார்க்கிறார் . அமுதன் யார் , அவனது அப்பா , அம்மா யார் என்ற ரகசியங்களை நம்பாடுவான் என்ற கிழவர் அவனுக்கு சொல்லுகிறார் . அதிர்ச்சியளிக்கும் அந்த சம்பவங்களின் முன்னொட்டாக புருஷாமிருகம் என்ற கதை நாவல் தொடங்கும் முன்னரே விவரிக்கப்பட்டுள்ளது . அதை படித்து விட்டு நாவலுக்குள் வந்தால் எல்லாம் சுலபமாக புரியும் . அமானுஷ்யம் கலந்த திகில் கதைதான் . புருஷோத்தமன் என்ற குழந்தை ஶ்ரீவாத்சாங்கம் என்ற வைணவரின் வீட்டு பெண்ணுக்கு மகனாக பிறக்கிறது . அந்த குழந்தையின் எதிர்காலம் என்னவென்று சகடவாக்கி ஒருவர் நாடிச்சக்கரங்களை தொட்டு சொல்கிறார் . அது ப

சாத்தானின் மகன் வருகையை தடுக்கும் சாபம் பெற்ற நாயகனின் போராட்டம்! கான்ஸ்டான்டின் 2005

படம்
              கான்ஸ்டான்டின்   Director: Francis Lawrence Produced by: Lauren Shuler Donner, Benjamin Melniker, Michael E. Uslan, Erwin Stoff, Lorenzo di Bonaventura, Akiva Goldsman Screenplay by: Kevin Brodbin, Frank Cappello டிசி காமிக்ஸின் படைப்பு   சிறுவயதில் பேய்களை பார்க்கும் அற்புத சக்தி கொண்டவன் கான்ஸ்டைன்டின் . ஆனால் பேய்களை பார்ப்பதாக கூறினால் அவருக்கு என்ன நடக்கும் ? அதேதான் அவரை உலகமே விநோதமாக பார்க்க , அவரை பல்வேறு சிகிச்சைகளுக்கு அனுப்புகிறார்கள் . இதனால் உலக விதிகளுக்கு மாற்றாக தற்கொலைக்கு முயல்கிறார் . ஆனால் அவரின் விதி முடியாததால் அவரை திரும்ப உலகிற்கு அனுப்பி வைக்கிறார்கள் . மா்ந்த்ரீக சக்தியால் கட்டப்பட்ட மனிதர்களை கான்ஸ்டான்டின் விடுவிக்கிறார் . அவருக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் , மறு உலக வாழ்க்கையில் சொர்க்கம் செல்லவேண்டும் . இதனால் பேய் பிடித்தவர்களுக்கு் , சாத்தான்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார் . இதற்கு இடையில் அவரது நுரையீரலில் புற்றுநோய் வேகமாக வளர்ந்து வருகிறது . உலகில் சாத்தானின் மகனின் மறுபிரவேசம் கடவ