அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை!
குடிநீர் போர் ! 2020 ஆம் ஆண்டில் 21 இந்திய நகரங்களில் நீர்தட்டுப்பாடு ஏற்பட உள்ளதை நிதிஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது . உலகெங்கும் சுகாதாரமான குடிநீர் இன்றி இறப்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் என காம்போசிட் வாட்டர் மேனேஜ்மென்ட் இன்டெக்ஸ் (CWMI) அறிக்கை ( ஜூன் 14,2018) தகவல் கூறுகிறது . டெல்லி , பெங்களூரு , சென்னை , ஹைதராபாத் ஆகிய நகரங்கள் 2020 ஆம் ஆண்டில் நீர்பற்றாக்குறையால் தீவிரமாக பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது . இதன்விளைவாக 2030 ஆம் ஆண்டில் 40% பேருக்கு நீர் என்பதே கானல்நீராகிவிடும் அபாயம் உள்ளது . தற்போதே ஆந்திரா , சத்தீஸ்கர் , தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது . 10-25 மி . மீ மழைநீர் 2002-2016 காலகட்டத்தில் குறைந்துள்ளது இதற்கு முக்கியக்காரணம் . நீர்தட்டுப்பாட்டால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6%(2050) பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறது நிதி ஆயோக் அறிக்கை . குடிநீர் 70% கலப்படமடைந்து நீர்தர அட்டவணையில் 122 நாடுகளின் வரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம் 120. உலகிலுள்ள நன்னீரில் அளவில் இந்தியாவிலுள்ளது 4% மட்டுமே . இதைக்கொண்