இடுகைகள்

ஜார்ஜ் ஆர்வெல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓஷியானா நாட்டில் ஒரே கட்சி நடத்தும் சர்வாதிகார அரசியல் கோமாளித்தனங்கள்- 1984 -ஜார்ஜ் ஆர்வெல் க.நா.சு

படம்
  1984 ஜார்ஜ் ஆர்வெல்   தமிழில் க.நா.சு ஓஷியானா என்ற சர்வாதிகார நாடு. அங்கு ஒரே கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. முத்தண்ணாதான் அதன் நிரந்தர தலைவர். அந்த கட்சி உருவாக்கும் கொள்கை, போர், எதிரிகளைப் பற்றிய பிரசாரம், மக்களின் அவலமான வாழ்க்கை, பொய்யான வளர்ச்சி பிரசாரம் என பல்வேறு விஷயங்களை அங்கதமாக கூறும் நாவல்தான் 1984. வின்ஸ்டன் என்ற அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்தான் நாவல் நாயகன். இவன்தான் கதையை நாடு எப்படி செயல்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறான். இவனது காதலியாக வரும் ஜூலியா தனது உடல் மூலம் புரட்சிக்கு எதிரான வகையில் செயல்படுகிறாள். அது எப்படி என்பதை நாவல் படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஒருவகையில் இந்த நூல் குறிப்பிட்ட கொள்கைகளை வலியுறுத்தி, கோஷம் போடும் கோரஸ் பாடும் கட்சிகளை சர்வாதிகாரத்தை கேலி செய்கிறது. தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அரசு எந்தளவு தலையிட்டு அவர்களை கட்டுப்படுத்துகிறது என்பதை விவரிக்கும் இடங்கள் பீதியூட்டுகின்றன. ஏறத்தாழ வளர்ந்த,வளரும் நாடுகளில் கண்காணிப்பு பொருட்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையை கருத்தில் கொண்டு ஜார்ஜ

1984 ஜார்ஜ்வெல் நூலுக்கு எழுபது வயது!

படம்
1984 ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நாவல். எரிக் பிளேர் என்பவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற பெயரில் இந்த நூலினை எழுதினார். இதில் வரும் ஸ்மித் என்பவர் அரசு அதிகாரி. நாளிதழ்களில் வரும் செய்திகளை கவனமான தணிக்கை செய்து அரசுக்கு ஆதரவாக மாற்றி எழுதி மக்களுக்கு பிரசாரம் செய்வதே பணி. இதில் டெலிஸ்க்ரீன் என்ற கருவி வரும். ஏறத்தாழ டிவி போல. ஆனால் இதனை நீங்கள் அணைக்க முடியாது. அதன் வழியாக நீங்கள் கவனிக்கப்பட்டு வருவீர்கள். இரண்டாம் உலகப்போரின் போது டிவி இருந்தாலும், அதனை அறிவியல் புனைவில் பயன்படுத்திய ஆர்வெல்,  முன்னதாகவே இதனை எழுதிவிட்டார். அப்போது ஜெர்மனியில் வீடியோ போன் சிஸ்டம்தான் உருவாக்கப்பட்டிருந்தது. நூல் எழுதிய காலகட்டத்தில் டிவி பார்க்கும் மோகம் அபரிமிதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு கூட அதிகம்தான். 2017 வாக்கில் மெல்ல டிவி செல்வாக்கிழந்து வருகிறது. இப்போது, டிவியின் இடத்தை இணையம், அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவை பிடித்து விட்டன. ஆனால் நூலில் வரும் அரசின் கண்காணிப்பு வேறுவகையாக மாறிவிட்டது. அமெரிக்கா, விசா கொடுப்பதற்கு முன்னே பயணிகளின் சமூக வலைத்தள கணக்குகளை ஆராய்ந்த பின்னரே நாட்டில் அனுமதிக்கும்