இடுகைகள்

பெட்டிஷிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களைக் கொன்று உறுப்புகளை வெட்டித் தின்று மகிழ்ந்த மனிதர் - ஜோச்சிம் க்ரோல்

படம்
  ஜோச்சிம் க்ரோல், ஜெர்மனியைச் சேர்ந்தவர்.   இவர் நிறைய பெண்களை, சிறுமிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானார். விசாரணையில்தான் ஒருவரை மட்டுமே கொன்றதாக நேர்மையுடன் ஒத்துக்கொண்டார். ஆனால் அது உண்மையல்ல என்பதை அவரது வீட்டுக்குப் போனதும் காவல்துறையினர் அறிந்துகொண்டனர். வீட்டில் காய்கறிகள் வேகவைத்துக்கொண்டிருக்கும் பாத்திரத்தில் பெண்ணின் கை கிடந்தது. குளிர்பதனப் பெட்டியைத் திறந்தால் இறைச்சிதான்   நிறைய பாக்கெட்டில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அசைவ விரும்பியோ என இறைச்சியை சோதித்தால் அத்தனையும் மனித உடலில் இருந்து வெட்டப்பட்ட பாகங்கள், கறி   சேமிக்கப்பட்டிருந்தன. கழிவறையையும் விடாமல் சோதித்தபோது அதில் மனித குடல்கள் மிதந்துகொண்டிருந்தன. அவற்றை சரியாக ஃபிளஷ் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் யார் என தேடினால் க்ரோல் மாட்டிக்கொண்டார். சிறுவயதில் சிறு பொம்மைகளை வைத்து பாலுறவு தொடர்பான கற்பனையில் மிதந்தவர். தனக்கு அருகில் ஓடிய விலங்குகளை கண்டந்துண்டமாக வெட்டியெறிந்தார். இந்த வகையில் அதிகம் அவரிடம் சிக்கியது பன்றிகள்தான். பொம்மைகளை வாங்கி அவற்றை கத்தியால் குத்தி, கழுத்தை இறுக்கிப் பார்த்து மனிதர