இடுகைகள்

பஞ்சம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

படம்
         காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?   இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில் , ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் . காந்தி , சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர் . இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே , நேரு , ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை . ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார் . மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும் . இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது . பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை . தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார் . இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள் . அவர்கள் - ஜே சி குமரப்பா , வினோபா பாவே என்ற இருவரும் இந்தியாவின் சுயசார்பை

இந்தியாவை பிரிட்டிஷார் சுரண்டிய வரலாறு! - இந்தியாவின் இருண்டகாலம் - சசி தரூர்

படம்
  இந்தியாவின் இருண்டகாலம் சசிதரூர் தமிழில் ஜே கே ராஜசேகரன் கிழக்கு பதிப்பகம் நூலை தொடங்கும்போது, சசிதரூர் தான் இங்கிலாந்து அரசுக்கு வைத்த கோரிக்கை ஒன்றை முன்வைத்து தொடங்குகிறார். 200 ஆண்டுகளாக காலனி நாடாக இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். இந்த ஆட்சியில் இந்தியாவை சுரண்டியதற்கு அடையாளமாக நஷ்ட ஈடு தரவேண்டும். குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பேசுகிறார். பின்னாளில் இப்பேச்சுக்கு ஆதரவாக எதிர்ப்பாக நிறைய கருத்துகள் எழுகின்றன.  இவற்றை முன்வைத்து நூல் மெல்ல பல்வேறு தகவல்களை பேசத் தொடங்குகிறது. அட்டையில் பிரிட்டிஷார் இந்தியாவை கொள்ளையடித்த கதை என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தான் நூலில் சொல்லுகிறார். வித்தியாசம் என்னவென்றால், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நிறைய வசதிகளைக் கொடுத்ததாக பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தது என்பதற்கு இந்தியா நிறைய விலை கொடுத்திருக்கிறது என்பதை சசிதரூர் பல்வேறு ஆதாரங்கள் வழியாக விளக்குகிறார்.  ரயில்வே, சட்டம், நிர்வாக முறைகள் ஆகியவற்றை பிரிட்டிஷாரின் கொடை என்பார்க்ள். இன்று நூலை நன்கொடை என பெரிய விலை போட்டு விற்கிறார்க

இருபது ஆண்டுகளில் பதினெட்டு பஞ்சம்! - விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்!

படம்
  அனந்தப்பூர், ஆந்திரப் பிரதேசம் தெலுங்கில் அனந்தப்பூர் என்றால் நிறைய விஷயங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் நிஜமோ படுமோசமாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் வறட்சி, பஞ்சத்தால் பதினெட்டு முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஊர். காரணம் மழைப்பொழிவு குறைந்ததுதான். இதனால் அங்குள்ள மக்கள் நிறையப் பேர் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.  தென்னிந்தியாவின் வறண்ட மழைமறைவுப் பகுதியாக ராயலசீமாவின் அருகில் உள்ளது அனந்தப்பூர். இதன் வரலாற்றைத் தேடிப் பார்த்தால் 1882ஆம் ஆண்டு நெடும் பஞ்சங்களும் நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் பஞ்சங்கள் அதை விட மோசமாக இருக்கிறது.  இப்படி பஞ்சங்கள் வந்துகொண்டிருந்தால் எப்படி இங்கு விவசாயம் நடைபெற முடியும்.? கேள்வி நியாயமானதுதான். அதனால்தான் 30 லட்சமாக இருந்த விவசாய பரப்பு இப்போது 15 லட்சமாக குறைந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஏற்படும் பஞ்சத்தின் நடைமுறை மாறுகிறது.  1989 முதல் 2018 வரையில் பெய்த மழை அளவை கணக்கிட்ட வானிலை ஆராய்ச்சி நிலையம், இங்கு பஞ்சம் அல்லது வெள்ளம் வரும் என கூறியுள்ளது. அனந்தப்பூரில் நடைபெ

மரபணுமாற்ற அரிசியால் மாட்டிக்கொண்ட இந்திய அரசு!

படம்
  மரபணுமாற்ற பயிர் அண்மையில் பிரான்சில் அரிசிமாவு வணிகர், இந்தியாவிலுருந்து நொய்யரிசி 500 டன்களை வாங்கியிருக்கிறார். அதில் மரபணுமாற்ற சமாச்சாரங்கள் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அந்த அரிசியை ஏற்றுமதி செய்தவர், மகாராஷ்டிராவை சேர்ந்த வணிகர் ஒருவர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற பொருட்களை விற்பதற்கு பயன்படுத்த தடை உள்ளது. எனவே, இந்திய வணிகர் மரபணு மாற்ற பொருட்கள் இல்லை என்று சொல்லி அதற்கான சான்றிதழை வாங்கி இணைத்துத்தான் அனுப்பியிருக்கிறார். அப்படியிருந்தும் சோதனையில் மரபணுமாற்ற பொருட்கள் சிக்கியிருக்கின்றன.  அரிசியை அரைத்து மாவாக்கி அதனை மிட்டாய், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பேக்கரி உணவுகளை தயராக்கின்றனர்.  இந்தியா அரிசி விற்பனையில் முன்னிலை வகிக்கும் நாடு. கடந்த ஆண்டு 18 டன்களுக்கு தானியங்களை விற்று 65 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது. இதில் வருமானம் பெற்றுத்தந்தது பாஸ்மதி அரிசிதான். இந்த அரிசியை மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்கள் நேபாளம், வங்கதேசம், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்கின்ற

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எத்தனால் உற்பத்தி!

படம்
  உணவுப்பயிர்கள் எரிபொருளாகிறது... இந்திய அரசு எரிபொருளில், எத்தனால் கலக்கும் திட்டத்தை வைத்துள்ளது. தற்போது 8 சதவீதம் கலக்கப்படும் எத்தனாலின் அளவை விரைவில் இருபது சதவீதமாக்க அரசு யோசித்து வருகிறது. அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை இப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  எத்தனால் கடந்த ஜூன் மாதம், ஒன்றிய அரசு எத்தனால் உற்பத்தியை ஐந்தே ஆண்டுகளில் இருமடங்காக்க திட்டங்களை வகுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். இதற்காக எத்தனாலை உற்பத்தி செய்ய ஏதுவான பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்கவும், சூழல் தொடர்பான அனுமதியை கொடுக்கவும் தயாராக  இருக்கிறது அரசு. இதன் காரணமாக அரசிடம் உள்ள தானியங்கள் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதனால் இத்தானியங்கள் தேவைப்படும் மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.  அரசுக்கு புதிய எத்தனால் திட்டம் மூலம் ஆண்டுக்கு 4 பில்

தேவைக்கும் உற்பத்திக்குமான தடுமாற்றமான உறவு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  சைக்கிள், கழிவறை நாப்கின் தாள்கள், செமி கண்டக்டர்கள் ஆகியவை இப்போது தட்டுப்பாடாக உள்ளன. இதற்கு காரணம், பெருந்தொற்று எனலாம். உண்மையில், விற்பனைக்கும் , உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலுள்ள இடைவெளிதான் இதற்கு காரணம். இதனை புல்விப் விளைவு என்கிறார்கள் . இப்போது அதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  செமி கண்டக்டர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் துறைகளின் எண்ணிக்கை 169. இதனை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.  சிப் தட்டுப்பாட்டில் அமெரிக்காவில் 1 சதவீத ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் 78 சதவீதம் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் சைக்கிள் விற்பனை 38 சதவீதமாக மட்டுமே  இருந்தது.  பெருந்தொற்று ஏற்பட்டு பொதுமுடக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த்து. அப்போது மட்டும் அமெரிக்காவில் கழிவறை நாப்கின்களை வாங்க 1.4 பில்லியன் டாலர்களை செலவழித்திருந்தனர்.  சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜருக்கு கடையில் விற்பனையாகும் பொருள் பற்றித்தான் தெரியும். அவருக்கு, குறிப்பிட்ட பொருள் தொழிற்சாலையில் எந்தளவு விற்பனையாகிறது என்று தெரியாது. தொழிற்சாலையில் உள்ள

எலிகள் பற்றி நமக்கு என்ன தெரியும்?

படம்
தெரிஞ்சுக்கோ - எலிகள் எலிகள் என்றால் டிஸ்னியின் எலிகள் நினைவுக்கு வருகிறதா? அல்லது அறுவடை காலத்தில் நெற்கதிர்களை திருடி வைத்து பஞ்சத்தை உருவாக்குகிறது. பிளேக் போன்ற நோய்களை உருவாக்குகிறது. நாய்களைப் போலவே நம் காலுக்கடியில் குறுக்கும் மறுக்குமாக ஓடினாலும் எலிகளைப் பற்றி நாம் அறிந்தது மிக குறைவுதான். கஷ்டமோ நஷ்டமோ அத்தனை பிரச்னைகளையும் கடந்து குட்டி போட்டு ரேஷன் கார்டு வாங்காமல் அடுத்தவன் சோற்றில் கைவைத்து பிழைத்து வாழும் எலியை மக்கள் மறக்கவே முடியாது. ஜெனஸ் ராட்டுஸ் இனத்தில் பழுப்பு நிற எலிகள் உட்பட 51 இனங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றும் உடலில் செயலில் மாறுபட்டவை. பழுப்பு நிற எலியின் எடை 0.8 கி.கி என பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பௌண்டு எடை கொண்ட எலியை யாராவது பார்த்து பதிவு செய்தால் 500 டாலர்களை தான் பரிசளிப்பதாக ஆராய்ச்சியாளர் ராபர்ட் காரிகன் கூறியுள்ளார். சாதாரண எலி 2.5 செ.மீ. அளவுள்ள துளையை எலிகள் உருவாக்குகின்றன. எலிகள் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் ஒரு மணிநேரத்திற்கு ஒன்று என்று என உலகம் முழுக்க வெளியாகி வருகின்றன. ஆப்பிரிக்க வயல்களில் எலிகள் ஏறத்தாழ 15 சதவ

இந்திய கிராமங்களின் வறுமை நிலை! - சாய்நாத் பேசும் உண்மைகள்!

படம்
இந்திய மாநிலங்கள் தொழில் யுகங்களுக்கு முன்னர்,  சிறிய தொழில்களை நம்பி முன்னர் இருந்நதனர். தாழ்த்தப்பட்ட மக்கள் உணவுப் பொருட்களை விற்கும் கடைகளை தொடங்குவது சிரமம். எங்கள் ஊரில் தாழ்த்தப்பட்ட ஒருவர்தான் சீசனுக்கு கேழ்வரகு கூழ் (ராகி கூழ்) கடை வைத்தார். சாலையில் வண்டி ஓட்டி வருபவர், வாங்கிக் குடிக்கத்தான். எங்கள் ஊரில் சாதிக்கொரு தொழில் உண்டு. தலித் உணவுக்கடை வைத்தால் எப்படி? என மிரட்டி அவரது கடையை காலி செய்து கவுண்டர்கள் அந்த இடங்களை ஆக்கிரமித்து இப்போதும் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த விஷயங்கள் நகரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது. கிராமம் என்றால் அழகானது, அங்கு இருப்பவர்கள் பரம யோக்கியர்கள் என்று பகல் கனவு பலரும் காண்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் எப்படி கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதை அறிய நிறைய சம்பவங்களை உதாரணமாக கூறலாம். முக்கியமாக அங்கு வாழ்ந்த வந்த, தற்போது நகரில் உள்ளவர்கள் இதற்கு சரியானவர்கள். பி.சாய்நாத் அதே காரியத்தைத்தான் 1996 இல் செய்திருக்கிறார். இந்த நூலுக்கான களப்பணிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா உதவியிருக்கிறது. சாய்நாத்தின் விரிவான கட்டுரைகளை டைம்ஸ்

சில உருளைக்கிழங்கு வகைகள் மட்டும் சுவையாக இருப்பது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி சில குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்குகள் மட்டும் பிசைய சாப்பிட நன்றாக இருக்கிறதே ஏன்? உதயம் பருப்பு வகைகள் விளம்பரம் போல இருக்கிறது நீங்கள் கேட்பது. உபரி அதிகம் வரவேண்டும் என எதிர்பார்ப்பீர்கள் போல. உருளைக்கிழங்குகளை வேக வைத்து பிசைந்தால் நிறைய வருவது அதிலுள்ள ஸ்டார்ச் கையில்தான் உள்ளது. இதற்கென குறிப்பிட்ட வகைகள் உள்ளன. இவற்றை விதைத்து அறுவடை செய்து வேக வைத்து தாளித்து சாப்பிட வேண்டியதுதான். கிங் எட்வர்டு, மாரிஸ் பைபர் எனும் வகைகள் இதில் உங்களுக்கு உதவும். சார்லட் மற்றும் அன்யா ஆகிய வகைகள் குறைவான ஸ்டார்ச் கொண்டவை. இவற்றைப் பயன்படுத்துவதை விட மேற்சொன்ன வகைகள் சமைக்கவும் சாப்பிடவும் சிறப்பாக இருக்கும். பெப்சிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் சிப்ஸ் வகைகள் அவர்களின் தனித்துவமான உருளைக்கிழங்குகள் மூலம் உருவாகின்றன. இதனால் அவர்களுக்கு ஏற்றபடி உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய முடிகிறது. இதனால் அவர்களின் உருளைக்கிழங்குகளை சீவினால் மிக நேர்த்தியாக வரும். நன்றி - பிபிசி

வெப்பமயமாதல் அதிகரிக்கும் கார்பன் வெளியீடு

படம்
Scroll.in பஞ்சம் கார்பன் வெளியீட்டை அதிகரிக்கிறதா? வெப்பமயமாதல் காரணமாக ஏரிகளிலும், அணைகளிலும் வற்றிவரும் நீராதாரம் கரிம எரிபொருட்களை பயன்படுத்த ஊக்குவித்து கார்பன் வெளியீட்டை அதிகரிப்பதாக ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2001-2015 காலகட்டங்களில் கலிஃபோர்னியா, இடாகோ, ஓரேகான், வாஷிங்டன் ஆகிய அமெரிக்க மாநிலங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். ”நிலத்தடி நீர் குறையும் போது இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி சார்ந்த மின்சார தயாரிப்புக்கு பல்வேறு நாடுகளும் முயற்சிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்கிறார் ஆராய்ச்சியாளரான நோவா டிஃபன்பாக். அமெரிக்க மாநிலங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு(கொலராடோ, உடா, வாஷிங்டன், வியோமிங்), நைட்ரஜன் ஆக்ஸைடு(கலிஃபோர்னியா, கொலராடோ, ஒரேகான், உடா, வாஷிங்டன், வியோமிங்) வாயுக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு நுரையீரல் நோய்கள், அமிலமழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது. நீராதாரங்களின் பற்றாக்குறை காரணமாக  ஏற்பட்ட கார்பன் வெளியீடு 10 கோடி டன்களாக அதிகரித்துள்ள