இடுகைகள்

நீலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பீப்பர் மினி செயலி மூலம் அனைத்து குறுஞ்செய்தி செயலிகளுக்கும் செய்தி அனுப்ப முடியும்!

படம்
  ஆப்பிளோடு மல்லுக்கட்டும் பீப்பர்! அண்மையில், பீப்பர் என்ற செயலி  இணையத்தில் பிரபலமானது.  இதன் சிறப்பு, இதை ஒருவர் ஆண்ட்ராய்ட் போனில், தரவிறக்கி அதன் மூலம் பிற உரையாடல் செயலிகளுக்கு செய்திகளை அனுப்ப முடியும். குறிப்பாக, ஆப்பிளின் ஐபோனில் உள்ள ஐமெசேஜ் செயலிக்கு செய்திகளை அனுப்பலாம். உலக நாடுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற உரையாடல் செயலிகளுக்கு வரம்புகள் உண்டு. அதாவது, அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் மட்டுமே அவர்களுக்குள் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ள முடியும், வாட்ஸ்அப்பில் இருப்பவர் டெலிகிராம் அல்லது சிக்னல் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்தியை அனுப்ப, பகிர முடியாது. ஆனால் பீப்பர் செயலி மூலம் பிற உரையாடல் செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்குக் கூட செய்திகளை அனுப்ப முடியும். இதுவே பீப்பரை பிரபலப்படுத்திய முக்கிய அம்சம். ஆப்பிள் ஐபோன் அதன் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் விரும்பப்படுகிறது. தற்போதைய சூழலில், ஆண்ட்ராய்ட் இயக்கமுறைமையைப் பயன்படுத்துபவர் அனுப்பும் செய்தி, ஐபோனுக்கு வரும்போது பச்சை நிறத்தில

பௌத்தம்/ சமணத்தை போலச் செய்து சைவம் வென்ற வரலாறு - வைத்தியர் அயோத்திதாசர்/ஸ்டாலின் ராஜாங்கம்

படம்
  வைத்தியர் அயோத்திதாசர் நூல் ஸ்டாலின் ராஜாங்கம் வைத்தியர் அயோத்திதாசர் ஸ்டாலின் ராஜாங்கம் நீலம் ரூ.175                                           தமிழன் என்ற நாளிதழை நடத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். இவர், சித்த வைத்தியராக ராயப்பேட்டையில் மருத்துவமனை நடத்தியவர். மருத்துவமனை என்பதை விட வைத்திய சாலை என்று கூறலாம். தனது நாளிதழில் சித்த மருத்துவ சிகிச்சை பற்றியும், உண்ண வேண்டிய பல்வேறு மருந்துகளைப் பற்றியும் எழுதி வந்தார். பௌத்தம்/சமணம் ஆகிய மதங்களிலிருந்து எப்படி சைவம், வைணவம் போலச்செய்தல் முறையில் தன்னை வளர்த்திக்கொண்டது. அதற்கேற்ப திரிக்கப்பட்ட இலக்கியங்கள், பாடல்கள் உருவாக்கப்பட்ட விதத்தை பல்வேறு ஆதாரங்களின்படி நூல் விளக்குகிறது. நூலில் வரும் சிறுவன் ஒருவனுக்கு அயோத்தி தாசர் வைத்தியம் செய்விக்கும் முறை சிறுகதை போல உள்ளது. அந்தளவு நுட்பமான தன்மையில் விளக்கப்படுகிறது. அந்த சிறுவன்தான், வளர்ந்தபிறகு திரு.வி.க என்று அழைக்கப்பட்டவர். நூல் முழுக்க எண்ணெய், பூநீறு எனும் பூமிக்கடியில் உள்ள உப்பு, பத்திய முறைகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசப்படுகிறது. பௌத்தம் எப்படி

நமது உடலில் தெரியும் நரம்புகள் நீலநிறமானவையா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மனிதர்களின் உடல் வெப்பநிலை வெப்பமயமாதலை கூட்டுமா? மனிதர்களின் உடல் வெப்பநிலை என்பது நூறு வாட் அளவுதான் இருக்கும். இதனை வழக்கொழிந்து போன குண்டு பல்பின் திறனோடு ஒப்பிடலாம். மக்கள்தொகை கூடினாலும் கூட வெப்பநிலை பெரிய பிரச்னையாக இருக்காது. பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புதான் சூரியனின் வெப்பம் பூமியில் அதிகம் படுவதற்கு காரணம். கரிம எரிபொருட்கள், பசுமை இல்ல வாயுக்களின் அளவுதான் வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம்.  நமது நரம்புகள் நீலநிறமாக இருப்பது உண்மையா? ரத்தம் சிவப்பாக இருக்க காரணம், ரத்த சிவப்பணுக்கள்தான். இதில்  ஆக்சிஜன் இருந்தால்  பளிச்சென சிவப்பாகவும், இல்லையென்றால் அடர் சிவப்பாகவும் மாறும். ரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது. கையில் பார்க்கும்போது நரம்புகள் சிலருக்கு புடைப்பாக நீலநிறமாக, அல்லது பச்சை நிறமாக தெரியும். இது ஒளியின் சிதறல்களால் ஏற்படுகிறது.  சிவப்பு நிறம், நீளமான அலைநீளம் கொண்டது. எனவே அது உடலில் எளிதாக பயணிக்க முடியும். இதனால் ரத்த த்தில் உள்ள ஹீமோகுளோபினால் இந்த நிறம் கிரகிக்கப்படுகிறது. நீலநிறம் என்பது குறைந்த அலைநீளம் கொண்டது. எனவே உடலா