இடுகைகள்

போர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் முருகன் என்பவன் யார்?

 தமிழ் முருகன் கவிஞர் அறிவுமதி தர்மலிங்கம் அறக்கட்டளை பதிப்பகம் இந்த நூலுக்கான விமர்சனத்தை வெளியிடும்போது அநேகமாக ஒரு வார இதழில் அதன் ஆசிரியர் முருகன் தொடரை சில வாரங்கள் எழுதியிருப்பார் என நினைக்கிறேன். பதிலுக்கு போட்டியாக இன்னொரு வார இதழின் ஆசிரியர் கருப்பண்ணசாமியின் வரலாற்றை எழுதியிருப்பார்.. போட்டி மக்களுக்கு ஏதாவதொரு வகையில் நல்ல விஷயத்தைக் கொண்டு வரக்கூடும். இதெல்லாம் ஒருவித நம்பிக்கை அவ்வளவுதான்.  அறிவுமதி, நூலில் ஓரிடத்தில் தமிழ் முருகன் தொடரில் கூறும் விஷயத்தை தனிப்பட்ட சாதி, மதம் சார்ந்து பயன்படுத்தவேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், அப்படி பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது.  நூலைப் பார்ப்போம். நூலில், முருகன் என்பது முருகன் என்பது மட்டுமே, அவன் போர்வீரன், அரசாண்ட மன்னன் என்று கூறப்படுகிறது. இதற்கான இடைச்செருகலையும் விளக்குகிறது. சிவன், பார்வதியின் பிள்ளை கந்தன் என்ற புனைகதைகளை நூல் ஏற்கவில்லை. முருகன் வேறு, கந்தன் வேறு என்று நூலாசிரியர் தெளிவாக கூறுகிறார். தமிழ் இனத்தின் அடையாளமாக ஒற்றை கடவுளாக முருகனை கூறுவதோடு, அர்த்தமற்ற நெல் தூவுதல் தமிழர் ...

பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பற்றிய காரண காரியங்களை விளக்கும் அம்பேத்கர்!

 பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பி ஆர் அம்பேத்கர் தமிழில் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் அம்பேத்கர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டால் அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்க முடியும்? முஸ்லீம்களை அவர் விமர்சித்து எழுதியிருக்கக்கூடும். சரிதான். அந்த வகையில் முஸ்லீம்களை விமர்சிப்பதோடு, அவர்கள் படையெடுப்பு வழியாக இந்தியா அடைந்த சேதம், கோவில்கள் இடிப்பு, மக்கள் பலி என பலவற்றையும் அம்பேத்கர் ஆவணப்படுத்தி எழுதியுள்ளார்.  நூலில் அவர் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தனது போக்கில் அணுகி அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதியுள்ளார். இதை ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்புகளின் உள்நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.  நூலைப் படித்து எழுதும்போது இந்திய ஒன்றியத்தின் சுதந்திர தினம் கடந்துபோய்விட்டது. ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் இந்தியா பிரிவினை பற்றி பேச, ஆலோசிக்க, சரியான காலம்தான். நூலில், அம்பேத்கர் முஸ்லீம்கள் ஏன் தனிநாடு கேட்கிறார்கள், அதற்கான தேவை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அதேசமயம் இந்து மகாசபையினரின் இந்து அரசு அமைந்தால் ஏற்படும் பாதகங்களையும் அவர் கூறியிருக்கிறார். இந்துக்களின் சா...

கலவரம் போர் என இரண்டிலும் தப்பி பிழைப்பது எப்படி?

படம்
எப்போதுமே ஆபத்து நேரும் என விழிப்புணர்வோடு இருங்கள் என ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர் ரென் கூறியுள்ளார். அப்படியான விழிப்புணர்வு சாதி, மதத்தால் உடைந்து நொறுக்கிப்போயுள்ள பெயரளவு ஜனநாயகம் கொண்ட இந்தியாவுக்கும் பொருந்தும். இங்கு எப்போது எந்த மேல்சாதிக்காரன், பழங்குடிகளை, தாழ்த்தப்பட்டவர்களை, தலித்துகளை தீ வைத்து எரிப்பான், அந்த இன பெண்களை வல்லுறவு செய்து கொன்று மரத்தில் தூக்கிக்கட்டுவான் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவது இந்திய காவல்துறையின் தனிச்சிறப்பு. இப்படியான பண்பட்ட தேசத்தில் நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே உங்களைக் காத்துக்கொள்ள முடியும். கூடவே சொத்துகள், குடும்பம் ஆகியவையும் அழியாமல் காக்கலாம். வாட்ஸ்அப் வழியாக மதவாத அரசு சுயமாகவே தனித்தனி குழுக்களை வைத்து போலிச்செய்திகளை பரப்பி வருகிறது. எனவே, இதைக்குறித்து அறிந்து கொண்டு கலவரத்தில் சிக்காமல், வீடு, தொழிற்சாலை, கடை எரிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இந்தியாவில் இயற்கை பேரிடர்களை, மதவாதிகள் உருவாக்கும் பேரிடர்களே அதிகம். எனவே, விழிப்போடு மீதமுள்ள நேர்மையான ஊடகங...

பேரிடர் காலத்தை எதிர்கொள்ள எப்படி தயாராவது? பொருட்கள், ஆலோசனைகள்

படம்
  பிழைத்திருப்போம் பேரிடர் காலங்களில் உயிர் தப்பிப் பிழைப்பது எப்படி? வடக்கு நாட்டில் தென்னாட்டில் உள்ளவர்கள் பற்றி தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அதனால் யாருக்கென்ன நஷ்டம்? என வாழ்கிறார்கள். தென்னாட்டினர். வடநாட்டினர் பற்றி தெரிந்ததால் அவர்களின் மோசடிகளை அறிந்து பத்திரமாக வாழ்கிறார்கள். ஆக, தகவல்களை முடிந்தளவு சேகரித்து வைத்துக்கொள்வது நன்மைதான். அது வளர்ச்சிக்கு உதவும், குறிப்பாக ஆபத்துக்காலங்களில் தட்பவெப்பநிலை தகவல், வானிலை தகவல், ஏன் கல்லூரிகள் நடத்தும் சமுதாய வானொலி கூட பயன் தரும்தான். சில நாடுகளில் வானிலைக்கென தனி வானொலி அலைவரிசையே இயங்குகிறது. அந்தளவு இந்தியா வளரவில்லை என்பதால், உள்ளூர் அளவில் சமூக வலைதளத்தில் பகிரும் தகவல்களை பார்த்து எச்சரிக்கையாக இருக்கலாம். பேரிடர், மதக்கலவரம், மதவாதிகள் ஏற்படுத்தும் வன்முறை, கொள்ளை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும் தகவல்கள் உதவும். உலகத்தைப் பற்றி அறிவது சிறப்பு. அப்படி இல்லையென்றால் உங்கள் ஏரியா பற்றியேனும் அறிவது நல்லது. அப்போதுதான் திடீரென லாக்டௌன் என்று அரச தகராறு செய்தால் முன்னமே பாதிப்பிலிருந்து நம்மையும் குடும்பத்தினர...

தொன்மைக்கால தென்கொரியாவில் புரட்சிகர கண்டுபிடிப்புகளை செய்யும் பட்டத்து இளவரசர்!

படம்
 பிளாக் கார்ப்பரேஷன் மாங்கா காமிக்ஸ் குன்மாங்கா.காம் தென்கொரிய காமிக்ஸ். இதில் மன்னர் ஜோசியன் காலத்திற்கு நவீன கண்டுபிடிப்பாளர் பயணிக்கிறார். இவர் படிப்பாளி அல்ல. ஆனால் கருவிகளை புதிதாக உருவாக்குபவர். மன்னர் காலத்திற்கு சென்று அங்கு செய்யும் பல்வேறு 21ஆம் நூற்றாண்டு பொருட்களால் அந்த நாடு வளர்வதே கதை. தொன்மைக்காலத்திற்கு சென்று அங்கில்லாத பொருட்களை உருவாக்குவது, அதை பரவலாக்குவது, அதை கன்பூசியவாதிகள் எதிர்ப்பது என கதை நகர்கிறது. இதில் கதாசிரியர் ஏராளமான முன்னோடிகளின் அறிவுரைகளை, பழமொழிகளை கையாண்டிருக்கிறார். இந்த கதையின் நாயகன் நவீன காலத்தில் முப்பது வயது கொண்டவனாகவும், தொன்மைக் காலத்திற்கு செல்லும்போது ஒன்பது வயது கொண்டவனாக இருக்கிறான். அந்த வயதிலேயே அவன் தனது புத்திசாலித்தனத்தால் மன்னர் சேஜோங்கிற்கு எப்படி உதவுகிறார். பேனா, துப்பாக்கி, வெடிகுண்டு, அரசியல் நிர்வாக சீர்திருத்தங்கள், சின்னம்மை ஊசி என நிறைய விஷயங்கள் கதையில் வருகின்றன. அவை கதையில் முக்கிய பங்கும் வகிக்கின்றன. குறிப்பாக கதை நெடுக சாதி,மத, வர்க்க பேதம் நாட்டை முன்னேற்றாது என்று நாயகன் கூறிக்கொண்டே இருக்கிறார். மன்னர் சேஜ...

எளிய குடும்பத்தில் பிறந்து நாடுகளுக்கு இடையிலான போரில் கடவுள் தேசத்தால் பயிற்றுவிக்கப்படும் வீரனின் கதை!

படம்
    பிகினிங் ஆப்டர் தி எண்ட் மாங்கா காமிக்ஸ் 200 அத்தியாயங்கள். குன்மாங்கா.காம் இந்த காமிக்ஸில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று கிங் கிரேவின் கதை. அடுத்து அவரின் மறுபிறப்பு கதை. தொடக்கத்தில் நாம் வாசிப்பது கிங் கிரேவின் மறுபிறப்பு கதை. கிங் கிரே எப்படியோ திடீரென இறந்துபோகிறார். அவரது வாழ்க்கை பற்றிய விஷயங்கள் கூறப்படுவதில்லை. ஆனால், பதிலாக அவர் குழந்தையாக கூலிவேலைகளை செய்யும் ஒரு தம்பதிக்கு மகனாக பிறக்கிறார். அவன் இவன் என்று கூறிக்கொள்வோம். ஆர்தர் லெய்வென்னின் கதை இது. அக்கதையின் போக்கினூடே திடீரென கிங் கிரேவின் முன்கதையும் கூறப்படுகிறது. இடையில் ஜாஸ்மின் பிளேம்ஸ்வொர்த்தின் கதையும் கூட. எனவே, இருநூறாவது அத்தியாயத்தை தொடும்போது எதற்கு இத்தனை பாத்திரங்களின் முன்கதை கூறவேண்டும் என்று கூட தோன்றுகிறது. இந்த இடத்தில் கதாசிரியர் சற்று குழம்பிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆர்தர் லெய்வென் பிறப்பால் தாழ்த்தப்பட்டவன். அவன் தன்னுடைய உழைப்பால் மெல்ல முன்னேறி வளர்கிறான். ஒருகட்டத்தில் எல்ப் இளவரசியைக் காப்பாற்றி அவர்களுடை அரசரின் அன்பையும் ஆதரவையும் பெறுகிறான். அவர்களின் மருமகன் ஆகும் நிலை. அவனை ஏ...

மக்கள் அதிகாரத்துவ இயக்கங்களை அழித்த போல்ஷ்விக், பாசிஸ்ட் அமைப்புகள்!

படம்
    அரசியல் இயக்கமாக மக்கள் அதிகார அமைப்புகளை பார்ப்பது சுவாரசியமானது. அதன் செயல்பாடு, அமைப்பின் கட்டமைப்பு, உள்ளே நடக்கும் செயல்பாடுகள் என அனைத்துமே வேறுபட்டவை. வெளிப்படைத்தன்மை கொண்டவை. 1848-1914 காலகட்டத்தில் மக்கள் அதிகார அமைப்புகள் தீவிரமாக இயங்கின. அமைப்பிற்குள் மக்களை இழுக்க பிரசாரம் செய்தன. ஆனால், உலகப்போர் நிறைவடைந்தபிறகு, அமைப்புகள் பலரும் அறியாமல் காணாமல் மறையத் தொடங்கின. இதற்கு போல்ஷ்விக், பாசிஸ்ட் இயக்கங்களே முக்கியப் பங்காற்றின.   ஐரோப்பாவில் மக்கள் அதிகார இயக்கங்கள் அழிவதற்கு, அதைவிட வலிமையான கருத்தியல் அமைப்புகள் அரசு அதிகாரத்தை கைப்பற்றியதே முக்கியக் காரணம். 1945ஆம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பாவில் சில மக்கள் அதிகார அமைப்புகள் மெதுவாக இயங்கத் தொடங்கின. தனது கருத்தியல் சார்ந்து சில நூல்களை வெளியிட்டன. லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, உருகுவே ஆகிய நாடுகளில் சர்வாதிகாரம் காரணமாக மக்கள் அதிகார அமைப்புகள் செயல்பாடு தேக்கமடைந்தன. பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, மக்கள் அதிகார அமைப்புகளின் செயல்பாடு முழுக்க நின்றுபோய், அதன் நிழல்தான் மிச்சமிருந்தது. ப...

அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி - மக்கள் அதிகாரம்

படம்
            மக்கள் அதிகாரம் 1 தமிழ் திரைப்படங்களில் காவல்துறையினரின் கொடூரங்களை உண்மையைக் காக்க அப்படி செய்கிறார்கள் என காட்டியிருப்பார்கள். ஆய்வாளர், தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி யாரொருவரையும் கள்ளத்துப்பாக்கியால் சுடுவார். அல்லது அரசு வழங்கிய துப்பாக்கியால் சுட்டுவிட்டு எப்படி கணக்கு காட்டவேண்டுமென தனக்கு தெரியும், உரிமம் பெற்ற ரவுடி, எவுடாய்த்தே நாக்கேண்டி, சம்பேஸ்தா, கண்ட கோசேஸ்தா என பொறிபறக்க வசனம் பேசுவார். இதெல்லாம் திரையில் சரி. நிஜத்தில் பாதிக்கப்படும் மக்கள் எவரும் கல்லறையில் இருந்து மீண்டெழுந்து தனக்கு நடந்த அநீதியைக் கூறுவதில்லை. அதுதான் வன்முறையின் பலம். செத்தால் புதைத்துவிடலாம். உயிரோடு இருந்தாலும் கை, கால்களை உடைத்து விட்டால் அவன் சோறு தின்ன, மலம் கழிக்க உடல் ஒத்துழைக்கவே பல மாதங்கள் ஆகும். அதுவுமில்லாமல் வன்முறை ஏற்படுத்திய பயம் காரணமாக அரசுக்கு எதிராக அவன் சாட்சியமும் கூறமாட்டான். அரசுக்கு ஆதரவாக உள்ள தொழிலதிபர்களுக்காக, நேரடியாக அரசுக்காக என ஏதோ ஒருவகையில் மக்கள் மீது காவல்துறையின் தாக்குதல் அல்லது கொலை நடைபெறுகிறது. இப்படியாக வன்முற...

வணிகத்திற்காக நடந்த போர்!

படம்
    பாயும் பொருளாதாரம் 14 போர் எப்படி தொடங்குகிறது? போர் தொடங்கி நடப்பதற்கு அரசியல், வரலாறு, உளவியல் காரணங்கள் உண்டு. போருக்கு பின்னணியில் பொருளாதாரமும் உள்ளது. தொன்மைக் காலத்தில் ரோம் நாடு,போர் செய்து தன்னை செல்வாக்காக சொகுசாக வைத்துக்கொண்டது. சுரங்கம், பயிர் விளையும் வயல்கள், சொகுசு பொருட்கள் என பலவும் போர் காரணமாக அந்த நாட்டுக்கு சொந்தமாயின. இன்றும் கூட அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஜனநாயகம் பற்றி அக்கறைப்படுவதற்கு அந்நாட்டிலுள்ள கனிமங்கள், எரிபொருள் வளங்களே முக்கியக் காரணம். அமெரிக்கா மட்டுமல்ல உலக வல்லரசு நாடுகள் பலவும் ஏதேனும் ஒருவகையில் பலலவீனமான நாடுகளை தன்னுடைய காலனியாக்கிக்கொள்ள துடிக்கின்றன. கடன் கொடுத்தோ, ராணுவ ஆதரவு கொடுத்தோ தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கின்றன. இந்த வகையில் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் அடியாட்கள் போல மாறிவிட்டன. இங்கிலாந்து அபினியை சீன மக்களுக்கு கொடுத்து சட்டவிரோத வணிகம் செய்தே அந்த நாட்டிற்குள் சுதந்திரமாக வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றது. இதை தடுக்க முயன்ற சீன பேரரசர்களோடு 1839,1856ஆகிய காலகட்டங்களில் போர் செய்யவும் தயங்கவில்லை. ...

நாயகனுக்கும் உதவும் துணைப்பாத்திரம், இறுதியில் கதையின் நாயகனாக மாறினால்....

படம்
        ஐயம் போசஸ்டு ஸ்வார்ட் காட் மங்கா காமிக்ஸ் குன்மங்கா.காம் நகரில் உள்ள சிறுவன், காமிக்ஸ் ஒன்றை படித்துக்கொண்டிருக்கிறான். திடீரென அந்தக் கதையில் வரும் துணைப்பாத்திரமாக மாறி தொன்மைக் காலத்திற்குச் செல்கிறான். பத்தாண்டுகளுக்குள் தீயசக்தி இனக்குழுவோடு போர் நடக்கவிருப்பது அவனுக்கு முன்னமே தெரியும். அதாவது காமிக்ஸை படித்த காரணத்தால். அதற்கேற்ப நாயகனைக் கண்டுபிடித்து அவனுக்கு உதவி சண்டை போட வைப்பதுதான் கதை. நாயகன் மோ மோயங். நாம்கூங் குலத்தைச் சேர்ந்தவன். சரக்கு அடித்துவிட்டு பிறரை ஒரண்டு இழுப்பதுதான் அவனது வேலை. நகரில் உள்ள சிறுவனின் ஆவி, அவனது சுயநினைவு இல்லாத உடலில் புகுந்தபிறகு மாற்றம் ஏற்படுகிறது. அவனது காலை வெட்ட வந்த நாயகனிடம் மன்னிப்பு கேட்டு உயிர் பிழைக்கிறான். அதேநேரம், அவனுக்கு உதவி நெருக்கமாகிறான். அதேநேரம், வாள் பயிற்சியில் ஈடுபட்டு மெல்ல வலிமை பெறத் தொடங்குகிறான். அவனைப் பற்றி பெற்றோருக்கு பெரிய நம்பிக்கை இல்லை. மாமா, மாமா பையன் என யாருக்குமே இவன் உருப்படுவான் என்ற எண்ணமில்லை. இந்த அவநம்பிக்கையை மோ முயோங் மெல்ல மாற்றி துணைப்பாத்திரத்தில் இருந்து மையப் பா...

தீயசக்தி உலகை மாற்றியமைத்து நீதியின் பக்கம் கொண்டு வரத் துடிக்கும் தீயசக்தி இனக்குழுவின் இளம் தலைவர்!

படம்
    ஐ இன்கார்னேட்டட் கிரேசி ஹெய்ர் சீன காமிக்ஸ் தொடர் அத்தியாயம் 96- டீமன் கல்ட் எனும் தீமை இனக்குழுவில் வாழும் இளம் தலைவர் உடலில் ஆவி ஒன்று புகுந்துகொள்கிறது. அந்த ஆவி, முரிம் கூட்டணி தலைவரின் மூத்த மகனுடையது. அவர் நேர்மை நாணயம் நம்பிக்கை, கடப்பாரை என ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். இதைப் பொறுக்காமல் தேநீரில் விஷம் கலந்துவிட, ரத்தவாந்தி எடுத்து செத்துப்போகிறார். சாகும்போதே புயல் டிராகன் குழு எனும் தீமை இனக்குழுவை அழித்தொழிக்கும் வேலையை செய்கிறார். அக்குழுவின் தலைவர் கூட நாயகன்தான். அவரது ஆவி, தீமை இனக்குழுவைச் சேர்ந்த இளம் தலைவரின் உடலில் புகுந்தால் என்னாகும்? அதுதான் இந்த காமிக்ஸின் மையம். பொதுவாக நாம் அனைவருமே முப்பது வயதிற்குள் உலகில் வாழ்வதற்கான அடிப்படை நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்கிறோம். அதாவது, திருடப்போகிறோமா, அல்லது பிச்சை எடுக்க போகிறோமா என இரண்டு வாய்ப்புகள் நம்முன் உள்ளன. தேர்ந்தெடுப்பதை பொறுத்து வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளோடு அமையும். நன்மை, நீதி, நியாயம் என்று பேசுபவன், அதற்கு எதிரான குலம் என்று கருதப்படும் இடத்தில் அதை நிர்வாகம் செய்யக்கூடிய பதவிக்கு வந்தால் என்ன செய்வா...

மாவோவின் இளமைக் காலத்தை விளக்குகிற நூல்!

படம்
  மாவோ - ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் எட்ஹர் ஸ்னோ சவுத் விஷன் புக்ஸ் தமிழில் எஸ் இந்திரன் ப.127 இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1937ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகே வெளியுலகிற்கு சீனா, அதன் கம்யூனிச தலைவரான மாவோ பற்றிய முழுமையான அறிவு கிடைத்தது. மாவோவின் நூற்றாண்டான 1993ஆம் ஆண்டு மூல நூலின் மொழிபெயர்ப்பு சுருக்கமாக தமிழில் மொழிபெயர்ப்பாளர் இந்திரனால் எழுதி வெளியிடப்பட்டது. மாவோவின் இளமைப்பருவம் நூலில் சிறப்பாக வாசகர்களின் மனதில் பதியும்படி எழுதப்பட்டுள்ளது. மூல நூலின் சுருக்கம் என்பதால் மற்ற பகுதிகள் எல்லாம் வேகமாக கடந்துசெல்கிறது. அவை எவற்றிலும் மனதில் பதியும் எந்த சம்பவமும் இல்லை. அடிப்படையாக நூல் வழியாக தெரிந்துகொள்வது என்னவென்றால், நூலிலுள்ள சம்பவங்களை எட்ஹரிடம் ஐந்து மணிநேரத்தில் மாவோ கூறியிருக்கிறார். அவற்றை அவர் பதிவு செய்து அல்லது குறிப்பெடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். நூலில் ஆச்சரியமூட்டும் விஷயம், அவரோடு வேலை செய்த தோழர்களுக்கு என்ன ஆனது, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் கூட அக்கறையோடு பிராக்கெட் போட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த தகவல் வாசகர்களுக்கு எந்த...

சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி?

படம்
        சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி? இந்தியா, சீனாவுக்கு இடையில் பிரிட்டிஷார் வகுத்த எல்லைக்கோட்டை சீன பொதுவுடைமைக் கட்சியும், அரசும் ஏற்கவில்லை. 1949ஆம் ஆண்டு, சீனாவில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து மக்கள் சீன குடியரசு உருவாகிறது. அதை இந்திய அரசு அங்கீகரித்தது. சீன அரசுக்கு பிரிட்டிஷார், ஜப்பான் ஆகியோரின் தாக்குதலால் தங்களை வலுவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற வேட்கை உருவாகியிருந்தது. அதை சீனா, நவீன காலத்தில் பெருமளவு நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. சீனக்கனவு என அதை குறிப்பிடுகிறார்கள். 1962ஆம் ஆண்டு சீனா, எல்லையில் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெறுகிறது. இதன் விளைவாக முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றுகிறது. இது இந்தியாவின் மீது மாவோவின் போர் என அழைக்கப்படுகிறது. மார்க்சிய லெனினியவாதிகள் இதை எப்படி விளக்குவார்களோ தெரியவில்லை. இதற்குப் பிறகு, சீனாவின் அனைத்து செயல்பாடுகளும் சந்தேகத்திற்குரியவையாக மாறிவிட்டன. அல்லது அரசியல்வாதிகள் அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று கூறத்தொடங்கினர். குறிப்பாக, இந்து பேரினவாத கட்சி தலைவர்கள். சீனா, இந்தியாவை எல்லையில் தோ...

இந்தியர் என்ற இனவெறி பாகுபாட்டால், இசைக்கலைஞர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை!

படம்
    இசைக்கலைஞர் பார்வதி பால் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பால் இசைக்கலைஞர்களின் பாரம்பரிய இசையை உலக நாடுகளுக்கு பயணித்து கொண்டுசென்றிருக்கிறார். சனாதன் தாஸ் பால் என்பவரின் மாணவர் என்று கூறுகிறார். தான் இசைக்கலைஞர் அல்ல பால் பாரம்பரியத்தை பிரசாரம் செய்பவள் என்று கூறிக்கொள்கிறார். முதன்முதலில் எப்போது சர்வதேச மேடையில் நிகழ்ச்சி செய்தீர்கள்? 1999ஆம் ஆண்டு, எனக்கு அப்போது இருபத்தி மூன்று வயதிருக்கும். மனதில் அப்போது சோகமும், பயமும் இருந்தது. லெபனான் சென்று பிறகு பெய்ரூட் சென்றடைந்தேன். விமானநிலையத்தில் இறங்கி நகருக்குள் சென்றபோது, குண்டுவீச்சால் நொறுங்கிய ஏராளமான கட்டடங்களைக் கண்டேன். மக்கள் திரளான எண்ணிக்கையில் தெருவில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலைமையைப் பார்த்தும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. சால்வடோர் டாலியின் ஓவியம் போல வினோதமான சர்ரியலிச நிலையை அ்ங்கு பார்த்தேன். இப்படியொரு நாடு இருக்கமுடியுமா என்று அன்றுதான் யோசித்தேன். கைகால்களை இழந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பலரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சாலையெங்கும் பிச்சையெடுத்தபடி மக்கள் அலைந்தனர். ராணு...

போருக்கு செலவு செய்வதைவிட நிதியை ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு திருப்பலாம்!

படம்
           உள்நோக்கம் கொண்ட தேசபக்தி அரசியல்    ஒருவகையில் பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகள் மேம்படுவதாக  இருந்தாலும், இன்னொருவகையில் அந்நாட்டுடன் சுமூகமான உறவு ஏற்படக்கூடாது என்று விரும்புகிறோம். நமது பிரதமர் பாகிஸ்தான் பகுதிகளைப் பற்றிப்பேசும்போது நாடாளுமன்றத்தில் பல அணிகளாகப் பிரிந்து நின்று பேசுவது நடக்கிறது. நாட்டின் ஊடகங்களில் இரு தரப்பு பற்றி கடும் கூச்சல் இடுவதுமாக இரு நாட்டு உறவுகள் சமநிலையடையும் நிலையில், இச்செயல்கள் அதைக் குலைத்துப்போட்டுவிடுகின்றன.  நமது செயல்பாடுகள் பாகிஸ்தானுடனான ஒற்றுமையை உண்மையில் நாம் விரும்புவதில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. உறுதியாக, நாம் உறவுகளை சிறந்ததாகவும், ஆழமானதாகவும் கொள்ள முயற்சித்தும் அங்கே மனக்கசப்பும், கோபமும்தான் இறுதியில் மிஞ்சுகிறது. அனைத்தையும் விட பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை கற்பிக்கவேண்டும்; அவர்களை சரியான இடத்தில் வைக்கவேண்டும்; எனவும், பாகிஸ்தானை இகழ்ந்து பேசுவதுதான் தேசபக்தி என்று கூறுவதில் பெரும் அரசியல் உள்ளது.  மும்பை தீவிரவாதத் தாக்குதல் பிரச்சனைகளை தீர்க்காமல் பிரதமர் பாகி...