இடுகைகள்

பெண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மினி டிராமா பெண்களின் பாத்திரம்

படம்
சீனா நாடகங்களுக்கு அரசு பெரும் இடவசதியில் தொன்மை அரசு கட்டடங்களை உருவாக்கித் தந்துள்ளது. பாராட்ட வேண்டியதுதான்.ஆனால் கதை என்றால் அப்படியே ஒரே ஐடியாவை தொடர்கிறார்கள். காப்பி அடிக்கிறார்கள். குடும்பம் என்றால் அடித்து உதைத்தாலும் அதை மகன் மகள் ஏற்கவேண்டும். பெண்ணை பாம்பு கடித்தால் அதுதான் சிறந்த காதல் காட்சி. 70,80களில் தமிழில் வரும் பாம்பு விஷத்தை வாயில் எடுத்து துப்புவது...இதை கம்யூனிச அரசு எப்படி அனுமதிக்கிறது.....

ஆண்களின் மேலாதிக்கத்தை, சுகத்தை ஆதரித்துப் பேசும் அராபிய காமசூத்திர நூல் - நறுமணத்தோட்டம்

 நறுமணத் தோட்டம் நெஃப் சுவாஹி ஆங்கில மொழிபெயர்ப்பு - ரிச்சர்ட் பர்ட்டன் தமிழில் பெரு முருகன் இந்த நூல் அராபிய காமசூத்திரம். இதை மொழிபெயர்ப்பாளர் தமிழுக்கு மொழிபெயர்த்து முக்கிய இலக்கியப் பங்காற்றியுள்ளார். நூல் எப்படிப்பட்டது என்றாலும் அதன் வழியாக அரபு நாடுகளில் உள்ள சமூக நிலைமை, ஆண், பெண் பாகுபாடு, மேலாதிக்கம் போன்றவற்றை  அறிய முடிகிறது. அதுவே முக்கியமான விஷயம்.  நூலில் அரபு நாட்டு ஆண்கள் எப்படிப்பட்ட பெண்களை உறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பதை திட்டவட்டமாக வரையறுத்துவிடுகிறார்கள். உடல் பருமனான, இடுப்பில் மடிப்புகள் விழும் பெண்கள். இவர்கள்தான் ஆண்களுக்கு சுகத்தை தருபவர்கள். உண்மையில் பாலுறவு என்பதில் பங்குகொள்ளும் இருவருக்குமே இன்பம் பகிரப்படுகிறது.  ஆனால், இந்த நூலைப் பொறுத்தவரை முழுக்க ஆண்களுக்கான பார்வையில் எழுதப்பட்டுள்ளது. ஆண்களுக்கு பெண்கள் எப்படி இருக்கவேண்டும், உடல் பருமனாக, யோனி அகலமாக, உடலுறவின்போது பெண் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு எழுச்சி திரும்ப திரும்ப உருவாக்கும் வகையில் இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. நூல் எழுதப்பட்ட காலம் பெண்களை அடிமைகளாக வைத்து...

ஆரோக்கியமான உறவுக்கு செக்ஸ் - பாலுறவு அவசியமா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி  ஆரோக்கியமான உறவுக்கு செக்ஸ் - பாலுறவு அவசியமா? பொதுவாக திருமண உறவில் பாலுறவு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பெண்களின் இன்பம் என்பதற்கும் குழந்தை பெறுவதற்கும் எந்த தொடர்புமில்லை. பிள்ளை பெற்றவர்களுக்கு கூட உடலுறவில் முழுமையான திருப்தி இல்லாமல் இருக்கலாம். உடல்ரீதியான தொடர்பு என்பதை உறுதியாக கொள்பவர்களே, இன்பத்தில் கரைத்துக்கொள்பவர்களே இசைவான தம்பதிகள். ஆண், பெண் என இருபாலருக்கும் வயது, பக்குவம் என்பது பாலுறவில் மாறுபடலாம். ஆனால், பாலுறவு முக்கியமானது என்பதை உளவியலாளர்கள் ஏற்கிறார்கள். சுய இன்பம் என்பது ஒருவர் தான் மட்டுமே இன்பத்தை அனுபவிப்பது. பாலுறவு என்பதில் ஆண், பெண் இருவருமே இன்பத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். திருக்குறளின் காமத்துப்பால், காமசூத்திரம் ஆகிய நூல்களை தெளிவாக பொருளுணர்ந்து படித்து காமத்தில்  ஈடுபடுவது நல்லது.  ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவு வேறுபாடுகள் என்ன? ஆண்கள், ஆபாசபடங்களைப் பார்த்து ஊக்கம் பெறுகிறார்கள். அந்தவகையில் அவர்கள் புகைப்படங்கள், காணொளி பார்த்து எழுச்சி பெறுகிறார்கள். உடலுறவில் ஈடுபடுகிறார்கள். ஆனால்...

கவர்ச்சியும் ஈர்ப்பும் கொண்ட பெண் இணையை எப்படி விவரிப்பது?

 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆண், பெண் இருவருக்குமான காதல், பெற்றோர் பிள்ளைகள் மேல் கொண்டுள்ள பாசம் என இரண்டும் வேறுபட்டதா? பெற்றோர், பிள்ளைகள் மீது கொண்டுள்ள பாசம் என்பது ஆண், பெண் இருவருக்கும் உள்ள காதலை விட முந்தையது. மனிதர்களை விட விலங்குகள், தங்கள் குட்டிகளை வளர்ப்பதில் அதிக தீவிரம் கொண்டவை. அதில் இடையூறை விரும்புவதில்லை. ஏற்பதில்லை. அந்தவகையில், இரு பாலினத்தவரின் காதலை, பெற்றோராக பிள்ளை மீது காட்டும் பாச உறவோடு ஒப்புமைபடுத்த முடியாது. இரண்டுமே செயல்பாடு, அணுகுமுறை இரண்டிலுமே வேறுபட்டது.  ஆண், பெண் என இருபாலினத்தவருக்கான காதல் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகிறதா? காதலிப்பவர்கள் , அந்த காதலை உறவைக் காத்துக்கொள்ள முயல்வார்கள். பிள்ளைகள் பிறப்பது, அவர்களை வளர்ப்பது, அன்பை வெளிக்காட்டுவது ஆகியவை நடைபெறுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பெற்றோரின் அன்பு, பாதுகாப்பு, பொருளாதார பலம் ஆகியவை கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளலாம். தாய், தந்தையினரின் அன்பு, நேசம் பிள்ளைகளுக்கு மனரீதியாகவும் மாற்றத்தை உருவாக்குகிறது.  காதலில் வீழ்வது என்பது ...

சீன மினி டிராமாக்களில் உள்ள கிளிஷேக்கள்!

  சீன மினி டிராமா சீனர்கள் ஏராளமான மினி டிராமாக்களை தயாரித்து தள்ளுகின்றனர். அவை பெரும்பாலும் டிடி1 இல் வரும் டெலிபிலிம் தரத்தில் உள்ளன. டிராமா தலைப்பை சீனமொழியில் எழுதிவிடுகிறார்கள். இதனால் நாடக தலைப்பை குறிப்பிட முடியவில்லை.  நிறைய வசனங்களை எழுதிவிடுகிறார்கள். அதை மானாவாரியாக பேசித் தள்ளுகிறார்கள்.  காமெடிக்கு நிகராக பல பெண்களை பெண்டாளும் ஆண் நாயகனாக இருக்கிறான்.  பெண் அரசியாக இருந்தாலும் அவளை நாயகன் காமக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறான். அவளை பெண் என்ற அடிப்படையில் பார்க்கிறான். மதிக்கிறான். அவளது அறிவுக்கு புத்திசாலித்தனத்திற்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை.  தொன்மை காலத்தில் நவீன அறிவியல் கருவிகள் வருவது போல ஏராளமான நாடகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படியான கதையில் எந்த லாஜிக்கும் கிடையாது. நீங்கள் ரிலாக்சாக காலை நீட்டிவிட்டு பார்க்கலாம். நல்லதே நடக்கும். நாயகனே ஜெயிப்பான்.  பெண் அரசன் அதாவது ஆண் என சொல்லி அரசாளுவாள். அதை நாம் ஒரே பார்வையில் அறிந்துகொள்ளும்போது அன்றைய கால அமைச்சர்கள் கண்டுபிடிக்க ஒன்றரை மணிநேரம் தேவைப்படுகிறது. பெண் திறமையாக இருந்து ஆ...

வாசனை திரவியம் தயாரித்து பாலுறவுக்கு உந்தி காதல் மோசடி செய்யும் பெண்களை தண்டிக்கும் நாயகன்!

படம்
  கம்மாத்து தெலுங்கு சுவாதி தீக்சித் ஆங்கிலத்தில் வெளியான பர்ஃப்யூம் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதன் மலினமான தழுவல். இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு கதை திரைக்கதை வசனம் என இயக்குநர் பெயர் போட்டுக்கொள்கிறார். கூச்சமே இல்லை. ஒரு படத்தை தழுவி இன்னொரு படத்தை எடுப்பது முற்றாக தவறு இல்லை. ஆனால், மூலப்படத்தை கேவலப்படுத்தாத வகையில் எடுக்கலாம். அதைவிட மேம்படுத்தி எடுக்கலாம். இப்படி எந்த இரண்டு வகையில் வராத மாதிரி படத்தை கிண்டி வைத்திருக்கிறார் இயக்குநர். அறிவியல் ஆராய்ச்சி செய்பவன் என்றாலே மூக்கு கண்ணாடி போட்டிருக்கவேண்டும். முடியை வெட்டாமல் விடவேண்டும் என கிளிஷே அவதாரமாக நாயகன் பாத்திரம் உள்ளது. பள்ளியில், கல்லூரியில் நன்றாக நடிப்பவர். ஆபாச படத்தை நண்பர்களுடன் பார்த்து வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கி அதன் வழியாக காம உணர்வை தூண்டவேண்டும் என லட்சியம் கொள்கிறார். முதுகலை படித்துக்கொண்டே ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானம்தான் அபார்ட்மென்ட் வாடகை, சாப்பாடு, அவரது அருகிலுள்ள திரைப்பட உதவி இயக்குநருக்கான உணவு, மதுபான செலவு எல்லாம்.... அந்த பக்கத்து வீட்டு அண்ணன் பாத்திர...

தர்மம் அர்த்தம் காமம் என உறவுகளில் அறநெறியை வலியுறுத்தும் காம சூத்திரம்!

படம்
       காமசூத்திரம் நாராயண ரெட்டி விகடன் பிரசுரம் ப.1000க்கும் மேல் விலை 230 நூலின் பெயர் காமசூத்திரம் என்றவுடன் பல்வேறு போஸ்களை கற்பனை செய்யவேண்டாம். இந்த நூல் முழுக்க தர்மம், அர்த்தம், காமம் என அடிப்படை நீதிநெறிகளைப் பேசுகிறது. நூலில் எவ்வித ஓவியங்களும் கிடையாது. அப்படி தேடுபவர்கள் வேறு நூல்களை தேடுங்கள். கண்டடையலாம். வடமொழி நூலை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். அதை புரிந்துகொண்டால் நூலை வாசிக்கும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை முன்னமே சகித்துக்கொள்ள முடியும். நூலில் வாத்சாயனார் சொன்னது மட்டும் இல்லை. நாராயண ரெட்டி சொல்லும் பழைமைவாத கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அன்னம் போல பிரித்துப்போட்டுவிட்டு அடிப்படையாக மூல ஆசிரியர் என்ன சொன்னாரோ அதை மட்டும் படிக்கலாம். காமம் என்பதை வாத்சாயனார் முன்னிலைப் படுத்தவில்லை. பெண்ணிடம் மென்மையாக பேசுவது எப்படி, மனதை தாம்பத்திய உறவுக்கு தயார்படுத்துவதற்கான ஆலோசனைகள், உத்திகள் ஆகியவற்றைக் கூறுகிறார். பலவந்தம் என்பதை அவர் ஆதரிக்கவில்லை. அதேசமயம் அவரின் காலத்தில் அரசர்கள், மந்திரிகள், பிரபுக்கள் பிடித்த பெண்களை அடைய பைசாசிக, ராட்சஸ ...

மதக்கலவர, பேரிடர் சூழலில் உங்களை தற்காத்துக்கொள்வதே முக்கியம்!

படம்
  உலகளவில் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக பெண்களே உள்ளனர். எழுபத்து மூன்று சதவீதம். தற்காப்புக்கலையில் பெல்ட்டுகள் வாங்கித்தள்ளாவிட்டாலும் அடிப்படையாக சில முறைகளைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். மதவாத நாடான இந்தியாவில் தலித்துகள் திருமணத்தின்போது கூட தாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் கீழ் ஏராளமான சகோதர குண்டர்கள் அமைப்பு உண்டு. இவர்கள் வேலையே தாழ்த்தப்பட்டவர்களை, சிறுபான்மையினரை தாக்கி சொத்தை கொள்ளையடிப்பதுதான். எனவே, தற்காப்புக்கலை கற்பது ஏழை நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த நாட்டிலும் நல்ல விஷயம்தான். உயிர்பிழைக்க சண்டைபோடும்போது ஆயுதம் என தனியாக பிரித்துச் சொல்ல ஏதுமில்லை, அனைத்துமே ஆயுதங்கள்தான். கல், மண், குச்சி, செங்கல், ஆணி, சுத்தி, என அனைத்தையும் பயன்படுத்தலாம். உடலையும் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.   கைகளை வைத்து ஒருவரை முதுகில் முன்புறமாக மார்பில் வைத்து பின்புறமாக எப்படி வேண்டுமானாலும் தள்ளலாம். உங்கள் ஆற்றலைப் பொறுத்து எதிரிக்கு மார்பு எலும்புகள் கூட உடையும். கையிலுள்ள மூட்டு காயமடையாமல் இருந்தால...

காதலை, அன்பை சுரண்டலுக்கு பயன்படுத்தும் பெண்களை கொள்ளையடிக்கும் புத்திசாலி!

படம்
  புத்திவந்தா கன்னடப்படம் உபேந்திரா, சலோனி, பூஜாகாந்தி, லஷ்மி இயக்குநர் ராம்நாத் இசை விஜய் ஆன்டணி தமிழில் வந்த நான் அவன் இல்லை என்ற ஜீவன் நடித்த படத்தை கன்னடத்தில் உப்பி நடித்திருக்கிறார். ஐந்து பெண்களை ஏமாற்றி நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதோடு, கல்யாணம் செய்து வைத்தால் காமத்தையும் அனுபவித்து எஸ்கேப் ஆகி, பிடிபட்டபிறகு நீதிமன்ற கூண்டில் கூட நான் அவன் அல்லா என்று சொல்லி வாதிடுவதே கதை. படத்தின் கிளைமேக்சை மாற்றியிருக்கிறார்கள். அதுவும் நன்றாகவே இருக்கிறது. இறுதியாக நீதிபதியின் மகளான பூஜாகாந்தி, நாயகனை துணை சேர்கிறார். அது கொஞ்சம் காமிக்கலாக இருக்கிறது. கல்யாண மன்னன், கல்யாண ராணி என பூந்தி பத்திரிகையில் விளக்கமாக எழுதுவார்களே அதுவே. பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். கல்யாண மன்னன் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை விரிவாக காட்டுகிறார்கள். விஜய் ஆன்டணி பின்னணி இசையில் சோபிக்கவில்லை. ஆனால், தமிழ் பாடல்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். பாடல்களை கன்னடத்தில் எழுதிவிட்டார்கள் என்பதால் ரசிப்பதில் பிரச்னை இல்லை. வெளிப்பகட்டுக்கு மயங்கி பேராசைப்படும் பெண்கள். அவர்களை பஞ்சாமிர்தம் என்ற உபேந்திர...

வன்முறையைப் பயன்படுத்தி மக்களை பணிய வைக்கும் சாமர்த்தியம்!

படம்
    மேலாதிக்க சாதியினர், கையில் பத்திரிகைகளை கொண்டிருக்கிறார்கள். டிவி சேனல்களை நடத்துகிறார்கள். அரசிடம் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்கள் அதிகாரத்தை வலியுறுத்துபவர்களை வெடிகுண்டு வீசுபவர்கள், ஒழுங்கின்மை கொண்டவர்கள், பேரிடரை விளைவிப்பவர்கள் என வசைபாடி தவறான கருத்துகளை முன்முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள். முதலாளித்துவத்தைக் கொண்டுள்ள அரசு, தன்னைக் காத்துக்கொள்ள பேரிடரை ஏற்படுத்துகிறது. வன்முறையை கைக்கொள்கிறது. மக்கள் அதிகாரம், இதற்கு எதிரான இயல்பைக் கொண்டுள்ளது. அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி என இரண்டையும் உருவாக்க முனைகிறது. ஜனநாயகவாதி, முடியரசு விசுவாசி, சோசலிசவாதி, போல்ஸ்விக், மக்கள் அதிகாரர்கள் என எவரும் கூட வெடிகுண்டுகளை வீசலாம். வன்முறையைக் கையில் எடுக்கலாம். இன்றைய சூழலில் வன்முறை ஒருவரின் கையில் திணிக்கப்படுகிறது. அதை மக்கள் எவரும் வேண்டுமென தேர்ந்தெடுக்கவில்லை. ப்ரூடஸ் தனது நண்பனான அரசன் சீசரைக் கொன்றான். அவனுக்கு தனது நண்பன் குடியரசுக்கு துரோகம் செய்துவிடுவானோ என்ற பயம் இருந்தது. ப்ரூடஸ் நண்பனை விட ரோமை அதிகம் நேசித்தான் என்று கூறமுடியாது. வி...

கிழக்காசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குக்கர் பெண்களின் வாழ்க்கையை மாற்றியதா?

படம்
      1962ஆம் ஆண்டு, கணவர் தனது மனைவிக்காக பிரஷர் குக்கர் ஒன்றை வாங்குகிறார். இதைப் பார்த்து அருகிலுள்ள வீட்டுக்காரரும் குக்கர் ஒன்றை வாங்கி மனைவிக்கு கொடுக்கிறார். குக்கரை வாங்கிக் கொடுப்பது, மனைவில் அதை வைத்து வேகமாக சமையல் செய்துவிட்டால் வெளியில் வேலைக்கு செல்லலாம் என கணவர் எதிர்பார்க்கிறார். சமையல் வேலையை செய்துவிட்டு வெளியில் செல்லும் இருவரின் மனைவிகளும் தாங்கள் சந்திக்கும் ஆண்களிடம் காதலில் வீழ்கிறார்கள். இன் தி மூட் ஃபார் லவ் என்ற புகழ்பெற்ற படத்தின் காட்சிகள் மேலேயுள்ளவை. திரைப்படத்தின் கதை ஹாங்காங்கில் நடந்தது. ஆசியாவில் நடந்த முக்கிய கண்டுபிடிப்புகளி்ல ஒன்று, பிரஷ்ர் குக்கர் கண்டுபிடிப்பு. இதன்மூலம் பெண்கள் சமையல் வேலையிலிருந்து சற்றே விடுபட்டு வேலைக்கு செல்ல முடிந்தது. ஒவ்வொரு வேளைக்கும் சமைத்துக் கொண்டிருந்த பெண்கள், குக்கர் வழியாக  ஒரே நேரத்தில் சமைத்து இறக்கிவைத்துவிட முடிந்தது. இன் தி மூட் ஃபார் லவ் படத்தின் இயக்குநர், வாங் கர் வாய் மேற்சொன்ன கருத்தை கூறியிருந்தார். ஆல் வி இமேஜின் ஏஸ் லைட் என்ற திரைப்படத்தை இயக்குநர் பாயல் கபாடியா என்பவர் இயக்கியிருந்த...

பொதுவாழ்க்கையை மதம் கட்டுப்படுத்தும்போது, மதச்சார்பற்றவராக இருப்பதே நல்லது - எழுத்தாளர் எலிஃப் சாஃபாக்

படம்
      நேர்காணல் எலிஃப் சாஃபாக் ஆங்கில துருக்கி பூர்வீகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சாஃபாக். தனது பத்தொன்பதாவது நூலை எழுதியிருக்கிறார். அந்த நாவலின் பெயர், தேர் ஆர் ரிவர்ஸ் இன் தி ஸ்கை.  நாவலின் கதை தொன்மைக்கால மெசபடோமியா, விக்டோரியா காலகட்ட இங்கிலாந்து எனச் சுற்றி நவீன கால துருக்கியில் வந்து நிறைவு பெறுகிறது. இந்த விஷயங்களை ஒன்றாக இணைக்கும் புள்ளியாக நீர் உள்ளது. ஹெவி மெட்டல் இசை கேட்டபடியே நாவல் எழுதும் பழக்கம் கொண்டவரிடம் பேசினோம். புதிய நாவலில், வரலாறு, நிலப்பரப்பு என இரண்டுமே கலந்துள்ளது. இப்படியான அம்சங்களை தொடர்ச்சியாக எடுத்து எழுத என்ன காரணம்? எழுத்தாளராக எனக்கு கதைகள் மட்டும் பிடித்தமானதில்லை, மௌனமும் பிடிக்கும். வரலாற்றில் மக்கள் மௌனமாக்கப்பட்ட இடங்கள் உண்டு. துருக்கியில் கூறப்பட்ட கதைகள் பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் கோணத்தில் அமைந்தவைதான். நமக்கு கூறப்படும் பெரும்பான்மை கதைகள் இப்படியான பின்னணி கொண்டவைதான். அதிகாரமற்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண் ஆகியோரின் கதைகள் மறந்துபோனவையாக உள்ளன. கூறப்படாத கதைகளைக் கூறுவதில் எனக்கு ஆர்வமுண்டு. மௌனம், இட...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் பாலின பாகுபாடு உள்ளது!

படம்
  டாமியன் பேட்ரிக் வில்லியம்ஸ் damien p williams நார்த் கரோலினா பல்கலையில் தகவல் அறிவியலாளராக உள்ளார். ஏஐ மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.  செயற்கை நுண்ணறிவில் பாகுபாடு உண்டா? ஏஐக்கு நாம் தரும் தகவல்களைப் பொறுத்துதான் அதன் செயல்பாடு அமைகிறது. அதை வெறும் கணித செயல்பாடுகளை செய்யும் தொழில்நுட்பமாக கருதவேண்டாம். அந்த அமைப்பிற்கு பயிற்சி அளிக்கும்போது கொடுக்கும் தகவல்களில் கவனம் செலுத்தவேண்டும். மனிதர்கள்தான் தகவல்களை ஏஐக்கு வழங்குகிறார்கள். எனவே, அவர்களின் மதிப்பீடுகள், பார்வைக்கோணம், பாகுபாடுகளும் அதில் சேர்ந்துவிடுகிறது.  ஏஐ அமைப்பிலுள்ள பாகுபாடுகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவுக்கு பொதுவெளியில் உள்ள தகவல்களை கொடுத்து பயிற்சி அளிக்கிறார்கள். இதில் அதிகம் கிடைப்பது கருப்பினத்தவர்களின் புகைப்படங்கள்தான். எனவே, குற்றம், தீவிரவாதம் தொடர்பான பிரச்னைகளில் செயற்கை நுண்ணறிவு கருப்பினத்தவர்களை குற்றவாளி என அடையாளம் காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் கருப்பினத்தவர்களின் பெயர்களை ஏஐ தவிர்க்கிறது. தகுதி இருந்தாலும் புறக்கணிக்கிறது. இதில் வேலை தருபவர்களின் ...

பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும்! - லீனா நாயர்!

படம்
  லீனா நாயர் leena nair by alana semules பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர் லீனா நாயர். அந்த நம்பிக்கையில்தான் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு வருகிறார். ஆறு ஆண்டுகள் யுனிலீவரில் வேலை செய்தார். தற்போது சேனல் என்ற பேஷன் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இவர் பொறுப்புக்கு வந்தபிறகு, நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள உள்ள பெண் தலைவர்களின் எண்ணிக்கை அறுபது சதவீதமாக அதிகரித்துள்ளது.  நமக்கு பின்னே ஆற்றல் வாய்ந்த தலைவர் பின்னே உள்ளார் என்பதை அறியவேண்டிய காலம் இது. நாங்கள் கலந்துரையாடலின்போது, தங்கள் கருத்துகளை கூற வரும் அனைவரையும் கவனித்து அவர்களின் குரல்களையும் கேட்கிறோம் என்றார் லீனா நாயர். சானல் நிறுவனத்தின் அறக்கட்டளை ஃபாண்டேஷன் சானல் அமைப்புக்கு கொடுக்கும் நிதி கூடுதலாகியுள்ளது. இருபது மில்லியன் டாலர்களிலிருந்து நூறு மில்லியன் என நன்கொடை நிதி அதிகரித்துள்ளது. இந்த நிதியை வைத்து திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள், மாங்குரோவ் காடுகளை வளர்க்கும் பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகள் ஆகியோருக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறார...

வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஆராய்ந்த பொருளாதார அறிஞர்!

படம்
  கிளாடியா கோல்டின்  claudia goldin கடந்த அக்.9 அன்று அதிகாலை 4.30 இருக்கும். அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவருக்கு பொருளாதார ஆய்வுக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதாக செய்தி கூறப்பட்டது. இந்த வகையில் அப்பரிசை பெறும் மூன்றாவது பெண்மணி கிளாடியா. எழுபத்தேழு வயதாகும் கிளாடியா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். இந்த வகையில் கூட அவர் முதல் பெண்மணி. வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு, பிரச்னைகள், பாலின பாகுபாடு, சம்பளம் ஆகியவற்றை பற்றிய ஏராளமான ஆய்வுகளை கிளாடியா செய்துள்ளார். நாம் எப்போதும் குடும்பத்தில் உள்ள ஆண்கள், ஆண் குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். திருமணமான, விதவையாக உள்ள பெண்களைப் பற்றி, அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைப் பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. வரலாற்றிலும் அவர்களைப் பற்றிய தகவல்களை தேடி அறிய வேண்டும் என்றார் கிளாடியா.  நான் யாருக்கும் எந்த அறிவுரையையும் கூறுவதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் எனது மாணவர்களுக்கு கூறுகிறேன். உங்களுக்கு செலவழிக்க நிறைய நேரம் கையில் இருந்தால், அதை சோதனை செய்ய புதிய விஷயங்களை அறிய பயன்படுத...

ஆற்றல் மாநாட்டை உருக்குலைக்க முயலும் உள்நாட்டு தீவிரவாதிகளை தடுக்க முயலும் கமாண்டோ படையின் வீரதீரம்!

படம்
  operation special warfare c drama 35 எபிசோடுகள்  ப்ளூலைட்னிங் என்ற கமாண்டோ படை. அதில் மொத்தம் பதினான்கு வீரர்கள். எட்டு பெண்கள். ஆறு ஆண்கள். இவர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் போராடி தீவிரவாதிகளை வீழ்த்தி தூய ஆற்றல் மாநாட்டை எப்படி வெற்றிகரமாக நடத்தினர் என்பதே கதை.  இதில் எட்டு பெண் கமாண்டோக்கள் உள்ளனர். அவர்களில் நிங் மெங்தான் நாயகி. இவருடைய அண்ணன் தீவிரவாத தாக்குதலில், தங்கையைக் காப்பாற்றிவிட்டு இறந்துபோவார். இதன் விளைவாக அம்மாவிற்கு அழுது அழுதே கண் பார்வை போய்விடும். நிங்மெங், தனது அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்க ராணுவத்தில் குறிப்பாக கமாண்டோ படையில் இணைவார். ஆனால், கமாண்டோ படை கேப்டன், நிங் மெங்கை மட்டும் வெளியேற்றுவதில் குறியாக இருப்பார். அவரை திட்டுவார். இழிவு செய்வார். ஆனால் நிங்மெங் திறமை மீது கமாண்டோ படையின் உயரதிகாரிக்கு நல்ல அபிப்பிராயம் நம்பிக்கை இருக்கும். எனவே அவர் அவளை வெளியேற்றக்கூடாது என கேப்டனை மிரட்டுவார்.  அடிப்படையில் பார்த்தால் தேசப்பற்று சீரியல்தான். ஆனால், ராணுவத்தில் கூட பெண்களை ஆண் வீரர்கள்தான் காப்பாற்ற வேண்டும். அவர்க...

கருப்பின பெண் தொழில்முனைவோருக்கு உதவும் முதலீட்டு நிறுவனம்!

படம்
  அரியன் சைமன் - அயானா பார்சன்ஸ் arian simone, ayana parsons கருப்பின பாகுபாடு என்பது மேற்குலக நாடுகளில் சாதாரண ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. சமநீதி, ஒரே சட்டம் என்றாலும் மறைமுகமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கீழே தள்ள நிறவெறியர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம், அவர்களிடம் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதற்கு நிதி முதலீட்டையும் பெருமளவு பெற்றுவிடுகிறார்கள். இவர்களோடு போராடி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேரளவுக்கு முதலீடு பெறமுடிவதில்லை.  ஆண்களே முக்கி முனகும்போது, கருப்பின பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்யும் தொழில்களுக்கு முதலீடு செய்யவே ஃபியர்லெஸ் ஃபண்ட் என்ற முதலீட்டு நிறுவனம் உருவானது. இதை 2018ஆம் ஆண்டு அரியன் சைமோன் தொடங்கினார். இவருடன் கூட்டாளியாக அயானா பார்சன்ஸ் இணைந்துள்ளனர். இவர்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குகிறார்கள்.  இதுவரை 44 நிறுவனங்களில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, வெள்ளையர்கள்தான். பெண்கள் தொடங்கும் நிறுவன...