இடுகைகள்

இ சிகரெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இ சிகரெட்டை கண்டு அரசுகள் பயப்படுவது இதனால்தான்!

படம்
giphy.com புகை நமக்கு பகை! இ சிகரெட்டுகளைத் தடுத்து புகையிலைக்கு ஆதரவாக இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் உலகளவில் இ சிகரெட்டுகள புகழ்பெற்று வருகின்றன. இதுவரை அமெரிக்காவில் 26 பேர் இதற்கு பலியாகி உள்ளனர். 1200க்கும் மேற்பட்ட ஆரோக்கியம் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இளைஞர்கள் நேரடியாக இ சிகரெட்டை இப்போது புகைக்கத் தொடங்கியுள்ளதுதான் பிரச்னைக்கு காரணம். புகையிலை கம்பெனிகள் இ சிகரெட்டை தடை செய்யக்காரணம், மரபான சிகரெட்டுகள் பீடிகளுக்கான லாபம் பறிபோகிறதே என்றுதான். பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு மக்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி இருக்கின்றன. உண்மையில் இ சிகரெட்டுகளால் சிகரெட் சந்தை பேரழிவில் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியெல்லாம் கிடையாது என்று பதில் கிடைக்கிறது. தெரிஞ்சுக்கோ... உலகிலுள்ள நிகோட்டின் சந்தை மதிப்பு 785 பில்லியன் டாலர்கள். ஏறத்தாழ 89 சதவீத சந்தையில் சிகரெட்தான் ராஜா. 2013-2018 காலகட்டத்தில் சிகரெட்டுகளின் வளர்ச்சி 8 சதவீதம் என வளர்ந்துள்ளது. இதே காலத்தில் இ சிகரெட்டுகளின் வளர்ச்சி இருபது மடங்கு அதிகரித்துள்ளது. எங்கே என்கிறீர்க

இ சிகரெட்டுக்கு உலக நாடுகள் தடை விதிப்பது ஏன்?

படம்
இ சிகரெட்டைத் தடை செய்வது ஏன்? அமெரிக்காவில் சாதாரண புகையிலையைக் கொண்ட இ சிகரெட்டுகளைத் தவிர பலவித வாசனைகளைக் கொண்ட இ சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தயாரிப்பு, இறக்குமதி, விற்பனை ஆகிய  அனைத்து செயற்பாடுகளையும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இன்றுவரை இருபது நாடுகளில் இ சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே ஆகிய நாடுகள் புகையிலை, இ சிகரெட்டுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை விதிகளை இயற்றி அமல்படுத்தியுள்ளன.. இ சிகரெட்டுகள் தொடர்ச்சியாக சிகரெட்டுகளை புகைப்பவர்களுக்கு, அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தரும் என்கிறார்கள். ஆனால் இ சிகரெட்டுகளில் 1500க்கு மேற்பட்ட வெரைட்டியான வகைகள் உண்டு என்பதால், இளைஞர்கள் நேரடியாக இதற்கு வந்துவிடுகின்றனர். அமெரிக்காவில் 12-17 வயதில் உள்ளவர்களில் 81 சதவீதம் பேர் புகைக்கின்றது ஆபத்தான சங்கதிதானே? எண்ணிக்கையில் 3.6 மில்லியன் குழந்தைகளை இதனை புகைக்கத் தொடங்கியுள்ளன்ர. புகையிலையிலுள்ள நிகோட்டின் பாதிப்பை விட இ சிகரெட்டிலுள்ள வேதிப்பொருட்கள் இளைஞர்களை அதிகளவு பாதிக்கின்றன. இதனால் மரபான புகையிலையை விட இ சி