இடுகைகள்

தனிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏஐ சாட்பாட்களை விரும்பும் மனிதர்கள் ! - நட்பா, காதலா என்ன தேவை?

படம்
  காதல் செய்யும் ரோபோ...தேவைதான் வா வா.... இன்றைய நவீன காலத்தில் நிரந்தர நண்பர்கள் யாருமில்லை. பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் இருக்கமாட்டார்கள். கல்லூரி நண்பர்கள், வேலைக்கு சென்றபிறகு தொடரமாட்டார்கள். திருமணமானால் நட்புகள் இன்னும் சுருங்கும். பிறகு, வாட்ஸ் அப் குழு, பள்ளி, கல்லூரி ரீயூனியன் சூழலில் மட்டுமே நண்பர்களை சந்திக்கலாம். அதிலும் கூட யார் பெரியவன், வசதி யார் என்று போட்டியிடும் நிலைமைதான் இருக்கும். பிறகு நட்பை எங்கே தேடுவது? இன்றைய சூழலுக்கு, குறிப்பிட்ட இடத்தில் உதவுகிற நண்பனா என்றுதான் பார்த்து பழக வேண்டியிருக்கிறது. அலுவலக உறவுகளை நட்பாக நினைப்பது பேராபத்து. அப்படி நினைத்தால், நண்பன் போல சிரித்து பழகி பயன்களைப் பெற்றபிறகு பணபலன்களை அடைந்த பிறகு ஓடிவிடுபவர்களே அதிகம்.  அதிலும் சிலர், மனைவிக்கு, மகனுக்கு வந்த நோய்களை கூட தனக்கு விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி முன்னேறுகிறார்கள். சாதி, மத, இன அடையாளம் கூட பிரபலமாவதற்கு பயன்படுமா பயன்படுத்தலாம். நண்பன் பிரயோஜனப்பட்டால் அவனையும் டெபிட் கார்ட் போல போகுமிடமெல்லாம் தேய்த்து பயன்படுத்தவேண்டியதுதான். வினோந உலகம். வினோத குணச்சித்தர்க

உடல் மனதை பகிர்ந்தாலும் தனித்துவத்தை இழக்காமல் ஒருவரால் காதலிக்க முடியுமா?

படம்
வாழ்க்கையில் சோறு தின்பதற்கு தரித்திரம் துரத்தாமல் இருப்பவர்கள், நிச்சயம் தான் யார் என்பதற்கான தேடுதலை செய்வார்கள். இதற்காக சினிமா நடிகர்கள் படிக்கும் ஆன்மிக புத்தகங்களை தேடுவது, ஞான யோகியான ரமணரின் ஆசிரமத்தில் அடம்பிடித்து நுழைவது என செய்வார்கள். அடிப்படையான நோக்கம் தான் எதற்கு பிறந்திருக்கிறோம், என்ன செய்யப்போகிறோம், அதாவத நம் மூலம் என்ன நடக்கவிருக்கிறது என அறிவதுதான். ஒருவருக்கு கண்முன்னே இரு பாதைகள் உண்டு. ஒன்று மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த பாதை. அடுத்து, கடினமான அதிருப்தியான பாதை. வாழ்க்கைக்கான அர்த்தம் தேடுவது என்பதே மோசமான வாழ்க்கையை சமாளிக்கும் பொருட்டுதான் என்று உளவியலாளர் எரிக் ஃப்ரோம் கூறுகிறார்.  அன்புகொண்ட வாழ்க்கையே நல்ல மனிதனை உருவாக்குகிறது என எரிக் நம்பினார். வாழ்க்கை உணர்ச்சிகரமான விரக்தியைக் கொண்டது. ஒரு மனிதர் இயற்கையிலிருந்து தன்னை பிரித்துப் பார்க்கிறார். அவரின் இன்னொரு பகுதி, பிறரோடு தன்னை இணைத்துப் பார்த்து பொருத்திக்கொள்ள முயல்கிறது. இயற்கையிலிருந்து மனிதர்கள் வேறுபட்டு இருப்பதற்கான காரணம், அவர்களின் புத்திசாலித்தனம்தான். அறிவு கூடும்போது மெல்ல இயற்கையிலி

கிராஃபிக் டிசைனரைக் காதலிக்கும் பூனை இளைஞன்! மியாவ் தி சீக்ரெட் பாய் - கே டிராமா

படம்
  மியாவ், தி சீக்ரெட் பாய் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   இந்த கொரிய தொடர், எப்போதும் கொரிய தொடர்களில் உள்ள வன்முறை, பள்ளி சித்திரவதை,  பெற்றோர் செய்யும் பாலியல் வன்முறை, அடி உதை என ஏதும் இல்லாதது. சற்று நீளமாக இருந்தாலும் நிதானமாக பார்த்தால் மெல்ல அதன் தன்மைக்கு பழகிவிடுவீர்கள். நகரத்தில் உள்ள மனிதர்களால் தாங்க முடியாத தனிமைக்கு ஆதரவாக செல்லப்பிராணிகள் இருக்கிறார்கள். உண்மையில் மனிதர்களை விட செல்லப்பிராணிகளை காதலிக்கும் தனிநபர்களே அதிகமாகி வருகிறார்கள். இதைபற்றிய கற்பனைக் கதைதான் மியாவ், எ சீக்ரெட் பாய். ஒருவர் தன்னோடு சந்தோஷத்திலும் துக்கத்திலும் இருக்கும்போது கூடவே ஆதரவாக இருக்கும் பூனை ஒன்றை காதலிக்க தொட்ங்கினால் எப்படியிருக்கும்? அந்த பூனை, வளர்ப்பவரின் உடல் மணம் கொண்ட ஏதாவது பொருள் உடலில் பட்டாலே மனித உருவம் கொள்கிறது. தன்னை வளர்ப்பவரை அதீதமாக காதலிக்கத் தொடங்குகிறது. பாதுகாக்கத் தொடங்குகிறது. தொடரில் வரும் கிராஃபிக் டிசைனர் பெண்ணான கிம் சோல் ஆ, தனியாக அறையில் வாழ்ந்து வருகிறாள். அதே நகரில் அவளது கவிஞரான அப்பா, தனியாக உட்கார்ந்து நூல்களை படித்தபடி காலத்தை கழிக்கிறார். ஆனால்,

ஆதிகாலத் தோழன் - புதிய மின்னூல் வெளியீடு - தரவிறக்க இணைய இணைப்பு

படம்
  ஆதிகாலத்தோழன் மின்னூலின் அட்டைப்படம் நாய்களைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவே. காரணம் அவை நமக்கு கட்டுப்பட்டவை. உத்தரவைக் கேட்டு நடக்கும் உயிரினம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அதன் மூளையில் என்ன நடக்கிறது, மனிதர்களோடு இணைந்து சகித்து வாழ்வது, ஏறத்தாழ குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல அதீத நட்புணர்வு காட்டுவது என இதன பின்னணியில் உள்ள விஷயங்களை ஆதிகாலத் தோழன் நூல் வெளிச்சமிட்டு காட்டுகிறது. இந்த நூலை வாசித்தவர்கள், தங்களது நாய்களை கவனித்து வளர்ப்பதோடு, அதனைப் புரிந்துகொள்ளவும் முயல்வார்கள் என்பது உறுதி. https://www.amazon.in/dp/B0CDM2JZG1 இந்த நூலின் சில அத்தியாயங்கள் சப்ஸ்டாக் வலைத்தளத்தில் கிடைக்கும். அதில் இணைந்து வாசியுங்கள்.நன்றி!

குடும்பங்களை அழிக்கும் டெர்மினேட்டர் - அனடோலி

  மனிதர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால் சூழ்நிலை கொந்தளிப்பாக மாறும்போது அவர்களின் உள்ளே உள்ள ஆவேசம் வெளியே தெரியவரும். காதலோ, நட்போ, தொழிலோ ஏதோ ஒருவகையில் ஒருவருக்கு ஏமாற்றம் தருகிறது. சில சமயங்களில் ஒட்டுமொத்த உலகமே தன்னை வஞ்சித்ததாக ஒருவர் உணரும்போது வஞ்சகர் உலகத்தை பழிவாங்க குற்றங்களில் ஈடுபடுகிறார். இந்த வகையில் கோபம், வன்மம், பழிக்குப்பழி, உடலுறவுக்கான சாகச உணர்வு ஆகியவை மனிதர்களை பெரும்பாலும் கொலைகளை செய்ய வைக்கிறது. பாகிஸ்தானின் லாகூரில் ஜாவேத் இக்பால் இப்பபடிப்பட்ட மனிதர்களில் ஒருவர். தெருவில் வாழும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு உணவு, இருப்பிடம் தருகிறேன் என கூட்டிச் சென்று கொன்று அமிலத்தில் கரைத்துவிடுவார். இரு சிறுவர்களை அடித்ததாக அவர் மீது காவல்துறை புகார் இருந்தது. ஆனால் காவல்துறை அதை தீர விசாரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் நூறு தாய்களை அழவைக்கும் செயலை செய்தார். ஆம். நூறு சிறுவர்களைக் கொன்று உடலை அமிலத்தில் கரைத்து அந்த நீரை பாதாள சாக்கடையில் விட்டார். நான் நினைத்தால் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களை கொன்றிருக்க முடியும். ஆனால் என் மனதில் நூறு தாய்களை அழ வைக்கவேண்டும்

சமூகத்தில் தனியாக வாழ்வது சாத்தியமா?

படம்
அகம் புறம்  ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   கே.ஒருவர் ஏன் சமூகத்தில் வாழ வேண்டும், அவர் தனியாகவே வாழ முடியுமே? ப. உங்களால் தனியாக வாழ முடியுமா? கே.நான் சமூகத்தில் வாழ்வதற்கு ஒரே காரணம், எனது பெற்றோர் இங்கு வாழ்வதுதான்.. ப. உங்களுக்கு வேலை கிடைத்து, நல்ல வாழ்க்கை அமைந்தால் நீங்கள் சமூகத்தில் வாழ மாட்டீர்களா? நீங்கள் தனியாக வாழ முடியும் என நினைக்கிறீர்களா? நீங்கள் உண்ணும் உணவு, அணியும் உடை ஆகியவற்றுக்காக இன்னொருவரை சார்ந்திருக்கிறீர்கள். இங்கு யாரும் தனியாக வாழ்ந்துவிடமுடியாது. தனியாக இருப்பது என்பது ஒருவர் இறக்கும்போது மட்டுமே நடக்கும். வாழும்போது வாழ்க்கை என்பது உங்கள் அப்பா, அண்ணன், வணிகர், பிச்சைக்காரர் என யாராவது ஒருவரைச் சார்ந்துதான் அமையும். நீங்கள் இந்த உறவுகளுக்குள் உள்ள முரண்பாடுகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. உங்களுக்குள் எந்த முரண்பாடும் எழவில்லையென்றால், நீங்கள் தனியாக வாழ்வது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. கே. நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த சமூகத்தில் நாம் சுதந்திரமாக இருக்க முடியாதா? ப. நீங்கள் மனிதர்கள் கொள்ளும்

தனிமையோ தனிமை - ஸிஸோய்ட் மனிதர்களின் அடையாளங்கள்

படம்
ராசிகளுக்கான பொதுபலன்களைப் போல் அல்லாமல் ஸிஸோய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர் ஆட்களின் அறிகுறிகளைப் பார்ப்போமா? குடும்பம், அலுவலகம் என எங்குமே தனியாகத்தான் ஆவர்த்தனம் செய்வார்கள். இவர்களை குடும்ப நிகழ்ச்சி, சமூக குழு என எதிலும் ஒன்றாக சேர்க்க முடியாது. பெரிதாக எந்த உணர்ச்சியையும் காட்ட மாட்டார்கள். சமூக நிர்பந்தங்கள் அதிகரித்தால் வலியை மட்டும் உணர்ச்சியாக வெளிக்காட்டுவார்கள்.  காதலியுடன் வெளியே சுற்றுவது, டேட்டிங், மெழுகுவர்த்தியுடன் பாய் ஹோட்டலில் நெய்ச்சோறு என கனவுகண்டால் நடக்காது. திருமணம் செய்துகொள்வதிலும் ஆர்வம் இருக்காது. அப்படி வற்புறுத்தினாலும், உடலுறவு சார்ந்தும் பெரிய ஈடுபாடு இருக்காது. உணர்வுரீதியாக வற்றிப்போண கேணி போல இருப்பார்கள். எனவே, காதல், கல்யாணம் என பேசுவது நோ கமெண்ட்ஸ். சிம்ப்ளி வேஸ்ட்தான்.  கடற்கரைக்கு செல்வது, அஸ்தமனச்சூரியன் பார்ப்பது, இனிப்புச்சோளத்தை நண்பனின் காசில் வாங்கி சப்பித் தின்பது என்பதை ஸிஸோய்ட் நோயாளிகள் விரும்பமாட்டார்கள். தங்களது உணர்வை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதும் மிக அரிது.  அப்படியென்றால் என்னதான் செய்வார்கள். அவர்களுக்கான பொழுதுபோக்கை உருவாக்கிக்க

சோலோ டேட்டிங் தான் ஈஸி!

படம்
  சோலோ டேட் போகலாமா? இன்று ஒரு டூர் போக ஆபீசில் திட்டமிடுகிறார்கள் என்றால் என்ன பிரச்னை முன்னே வந்து நிற்கும்?  அவன் வந்தால் நான் வரமாட்டேன். அவன் வரலைனா நான் வரமாட்டேன். இப்படி எல்லாம் ஆபீஸ் ஊழியர்கள் வம்பு அரசியல் செய்வார்கள். ஆனால் யாருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போக இத்தனை அரசியல்களை, வம்புகளை சமாளித்து போக பிடிக்குமா? எனவே, நீங்கள் வரவே வேண்டாம் நானே போய்க்கொள்கிறேன் என பலரும் தனியாகவே போகிறார்கள். ஜாலியாக சூழலை அனுபவிக்கிறார்கள். மகிழ்ச்சியாக நினைத்ததை செய்கிறார்கள். இதில் நாம் டூர் என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம். ஆனால் சோலோ டேட் என்பது என்ன? அதுவும் நினைத்த லட்சியமான சுற்றுலா தலத்திற்கு போவதுதான்.ஆனால் காதலர், காதலி இருந்தாலும் கூட தனியாகவே போவதுதான் விஷயம்.  இன்று தனியாக வாழ்பவர்கள் மனதிற்கு பிடித்த இடங்களுக்கு நண்பர்கள், காதலர், காதலி, அலுவலக ஆட்கள் என யாரும் இல்லாமல் தனியாகவே செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதைப்பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடத் தொடங்கியிருக்கின்றனர். எனவே, இந்த டிரெண்ட் இப்போது அதிகளவு பரவலாகத் தொடங்கியிருக்கிறது.  இந்திய சமூகத்தில் ஆணோ

சமூகத்தில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம்! - லாரா தத்தா, இந்தி நடிகை

படம்
  லாரா தத்தா ஹைகப்ஸ் அண்ட் ஹூக்கப்ஸ் என்ற வெப் தொடரில் லாரா த த்தா நடிக்கிறார். டிரெய்லரைப் பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். கணவரைப் பிரிந்து வாழும் நாற்பது வயதுப்பெண் வசு. இவருக்கு மகள் டீனேஜில் இருக்கிறார். இந்த நேரத்தில் வசு தனக்கான இணையைத் தேடுகிறார். இதனை அவரது மகள் எப்படிபுரிந்துகொள்கிறார் என்பதுதான் கதை. இயக்குநர் குணால் கோலி.  உங்கள் தொடர் பற்றி பேசுங்கள்? இதுபோல முக்கியமான யாரும் பேசத்தயங்கும் விஷயங்கள் தொடராக வருவது அரிதானது. அம்மாவும் மகளும் டேட்டிங் ஆப் மூலம் தங்களுக்கான இணையைக் கண்டுபிடிப்பதுதான் கதை. இருவரின் உணர்வுகளும் எப்படி உள்ளன, அதனை இருவரும் புரிந்துகொண்டார்களா என்பதுதான் கதை.  இதுபோல ஆப் மூலம் பெண்கள் தவறான ஆண்களிடம் சிக்கிக்கொள்வது நிறைய நடக்கிறதே? நாற்பது வயதான பெண்ணுக்கு இந்த விஷயத்தில் நடைமுறை தெரியும். அவர் ஒன்றும் டீனேஜில் இருப்பவர் அல்ல. நீங்கள் கூறுவது உண்மைதான். நாற்பது வயதுக்கு பிறகு வாழ்க்கையை நாமே வழிநடத்திக்கொள்ள முடியும். இப்படி டேட்டிங் ஆப்பில் கிடைக்கும் உறவுகள் சிலசமயம் சரியாக இருக்கும். சில சமயங்களில் மோசமாகவும் அமையும். இப்படி கிடைக்கும் உறவுகள

சிங்கிளாக நிற்கும் சிறுத்தை, சிங்கங்களின் விருப்பம் என்ன?

படம்
  டேட்டிங் விருப்பங்கள் என்னென்ன? டேட்டிங் பிளாட்பாரங்கள்தான் விர்ச்சுவலாக ஒருவர் சந்தித்துக்கொள்ளும் பீச், பார்க், கஃபே என்றாகிவிட்டது. அதிலுள்ள டிரெண்டுகளைப் பார்ப்போம்.  வீடியோ டேட்டிங் 2021ஆம் ஆண்டு நாகரிகப்படி, ஒரு பெண்ணை அறிமுகம் செய்துகொள்ள மிகவும் மெனக்கெட வேண்டாம். வீடியோ டேட்டிங்கை முயன்று பார்க்கலாம். பம்பிள் டேட்டிங் வலைத்தளம் எடுத்த ஆய்வில் 39 சதவீதம் பேர் முதல் டேட்டிங் நாளுக்கே வீடியோவை நாடியிருக்கிறார்கள். நேரடியாக நேரில் பார்ப்பதைவிட வீடியோவில் விர்ச்சுவலாக பார்ப்பது பாதுகாப்பு என 48 சதவீதப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கூடவே நேரத்தையும் காசையும் மிச்சம் செய்கிறது என்று வேறு கூடுதல் மக்கள் கருத்தும் கிடைத்திருக்கிறது.  மெல்லகா மெல்லகா.... ஜாலி வாலி பெண்கள் எல்லாம் அடக்கமாக உட்கார வைக்கப்பட்டு டிண்டர் என் வாழ்க்கையை மாத்துச்சு என சொல்லுவார்களே அதே வலைத்தளம்தான் உறவை மெதுவாக செலுத்த சிங்கிள்கள் விரும்புகிறார்கள் என கூறுகிறு. இந்த வகையில் 62 சதவீதம்பேர், டேட்டிங் உடனே சீரியசாக வேண்டாம் நட்போடு தொடங்கட்டுமே என்கிறார்களாம். கோ ஸ்லோ என போர்டை பார்த்து நாம் என்றைக்காவது வண்

அமெரிக்கர்களின் தனிமையைப் பேசும் நூல்! - நூல் அறிமுகம் ஜூலை மாதம் 2021

படம்
              ரேஷர் பிளேட் டியர்ஸ் எஸ் . ஏ . காஸ்பை தனது மகன்களையும் , தம்பதிகளையும் கொன்ற கொலைகாரர்களை அவர்களின் தந்தை யர் இருவரும் சேர்ந்து எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் கதை . நிகழ்கால கதையின் நடுவே பழிவாங்குபவர்களின் கடந்தகால வாழ்க்கையு்ம் வந்துபோகிறது . அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் வன்முறையான சம்பவங்கள் கொண்ட கதை . கோஸ்ட் ஃபாரஸ்ட் பிக் சுயன் ஃபங்   அப்பா இறந்த பிறகு அவரைப் பற்றிய இறந்த கால விஷயங்களை மகள் எப்படி தெரிந்துகொள்கிறாள் என்பதைப் பற்றி இந்த நூல் விவரித்துச் செல்கிறது . இந்த கதையில் மகளின் மனதிலுள்ள கேள்விகள் , குடும்பம் , அவளுக்கு கிடைத்த அன்பு பற்றிய ஏராளமான விஷயங்களுக்கு பதில் கிடைக்கிறது . சீக் யூ கிரிஸ்டன் ராட்கே வரலாறு , தனிமை , ஒருவருக்கொருவர் எப்படி தகவல் தொடர்பு கொள்வது என பல்வேறு விஷயங்களை விளக்கி கிராபிக் கட்டுரை நூலாக ஆசிரியர் எழுதியுள்ளார் .

பெருந்தொற்றுகாலத்தை எதிர்கொள்ள முடியாத இளைஞர்கள் வீடியோகேமில் மூழ்கிவிடுகின்றனர்!

படம்
                  ஜெனிபர் கொலரி குழந்தை வளர்ப்பு வல்லுநர் பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் பலரும் மன அழுத்தம் , பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரே ? குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது . இதில் பல்வேறு விதமான நம்பிக்கைகள் , பிளவுகள் உள்ளன . 1960 ஆம் ஆண்டில் உங்கள் குழந்தையை அழ விடுங்கள் என்று கோட்பாடு ஆட்சி செலுத்தியது . குடும்பத்தில் குழந்தை மீது அதிகாரம் செலுத்துவது , சுதந்திரமாக விடுவது என்பது பல்வேறு கட்டங்களில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது . இப்போது குழந்தைகளுக்கு காலகட்ட நெருக்கடி காரணமாக பதற்றம் , மன அழுத்தம் , ஏடிஹெச்டி தொடர்பான அறிகுறிகள் உள்ளன . சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களைப் பேசும் இளைஞர்கள் எளிதில் பதற்றம் , மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர் . இவர்கள் தங்கள் நண்பர்களிடமும் , பிறரிடமும் கூட இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு , அதற்கு சாப்பிடும் மருந்துகளைப் பற்றி பேசுகிறார்கள் . ஆனால் விரைவில் நம்பிக்கையற்று போய்விடுகிறார்கள் . இந்த வகையில் யாரும் நம்பிக்கை பெ

முதியோர்களுக்காக பெரும் வீடுகள், இல்லங்கள், சேவைகள்!

படம்
            முதியவர்களுக்கான புதிய அடையாளம் ! இப்படி தலைப்பு வைத்ததும் காசா கிராண்டே ஏதாவது விளம்பரம் கொடுத்துவிட்டார்களா என அச்சப்படாதீர்கள் . விஷயம் அப்படிப்பபட்டதுதான் என்றாலும் , இது முதியவர்களை வைத்து பல்வேறு தொழில்நிறுவனங்கள் தொடங்கப்படுவது தொடர்பானது . இன்று அரசு வேலை , தனியார் வேலை என கடுமையாக உழைப்பவர்கள் வாழ்வதைப் பற்றி ஐம்பதுக்கு பிறகுதான் யோசிக்கிறார்கள் . ஆனால் அதற்குள் காலம் தலையில் வெள்ளை அடித்துவிடுவதோடு , பலருக்கும் முடி கூட கொட்டி விடுகிறது . அதற்குப்பிறகு மாமனார் வீட்டில் செய்துபோட்ட மோதிரம்தான் மிச்சமா என வாழவேண்டியதுதான் என நினைக்கிறார்கள் . ஆனால் பெருநகரங்களில் வயதானவர்கள் வேலைக்கு சென்றுகொண்டிருந்த காலத்தை விட இப்போது இன்னும் பெரியதாக வாழ்கிறார்கள் . வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட பிள்ளைகளைப் பற்றி இப்போது பெற்றோர் பெரிதாக கவலைப்படுவதில்லை . தங்களைக் கவனித்துக்கொள்ள அதற்கெனவே இருக்கும் சீனியர் சிட்டிசன் வில்லாக்களை தேர்ந்தெடுக்கிறார்கள் . அங்கு சென்று வாழ்கிறார்கள் . தனியாக அல்ல . அங்கும் இவர்களைப் போல வசதியான பல நூறு முதியவர்கள் வாழ்கிறா

சோலோவாக வாழ்பவனின் வாழ்வை மடக்கி சுருட்டும் காதல் சுனாமி! -

படம்
          சோலோ பிரதிக்கே சோ பெட்டர்  Director: Subbu Writer: Subbu Stars: Ajay , Vennela Kishore , Kalyani N     இருபது வயதில் கொடி ஏந்தி போராடும் மாணவர்கள் சாய் தரம் தேஜின் உருவப்படத்தை தீ வைத்து எரிக்கின்றனர். அதனை வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் சாய் தனது கதையை நமக்கு சொல்லுகிறார்.  காதலும், கல்யாணமும் நமது சுதந்திரத்தை நம்மிடம் இருந்து பறித்துவிடும் என்று நினைக்கும் சாய் தரம் தேஜ், அதனை புத்தகமாக எழுதி கல்லூரியில் விற்பனை செய்து தனக்கு பின்னால் மாணவர்களை திரட்டுகிறார். இதற்கு காரணம் அவருக்கு அவருடைய வேணு மாமா சொல்லும் விஷயங்கள்தான் உந்துதலாக உள்ளன. திருமணம் செய்யாதவர்களை ஆதர்சமாக வைத்துள்ளவர் தன் பெற்றோரிடம் கூட ஒட்டுதலாக நடந்துகொள்வதில்லை. வேலை கிடைத்ததை கூட சொல்லாமல் ஹைதரபாத்திற்கு செல்கிறார். அங்கு சென்று ஈவன்ட் மேனேஜ்மெண்ட் வேலையை ஏற்கிறார். அந்நகரில் அவர் நினைத்த கொள்கைக்கு மாறான விஷயங்கள் நடக்கின்றன. அவரது நண்பர்கள் மெல்ல திருமண வாழ்க்கை செய்து செட்டிலாகின்றனர். மெல்ல வாழ்க்கை யதார்த்தம் புரிந்து சாய் வாழத் தொடங்கினாரா அ

தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்?

படம்
            நம் உணர்வுகளில் முதலில் உருவானது எது? சுவையுணர்வு அடிப்படையானது. அதுவே முதலில் தோன்றியிருக்க வாய்ப்பு அதிகம். இதில் முடிவான தீர்வு என்பதை கூற முடியாது. காதுகளில் ஒலியைக் கேட்பது பெரியளவு மாற்றம் ஏற்படவில்லை. 275 மில்லியன் ஆண்டுகளாக அத்தன்மை அப்படியேதான் உள்ளது. 2015ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் லங்ஃபிஷ் சிறப்பாக காது கேட்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தனர். 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மீன்கள், தங்கள் துடுப்புகளை பயன்படுத்தி நிலத்தில் நடந்து சென்று வெவ்வேறு நீர்நிலைகளுக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறைந்த அலைவரிசை ஒலிகளைக் கேட்கும் திறன்கொண்டவை என இந்த மீன்களைக் குறிப்பிடுகின்றனர். தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்? மனிதர்கள் இயல்பாகவே புத்துணர்ச்சியாக காற்று, உடற்பயிற்சி, சூரிய வெளிச்சம் ஆகியவற்றை தவிர்க்க முடியாத தன்மை கொண்டவர்கள். சூழல் நெருக்கடியால் அப்படி நேரும்போது அதனை மனதளவில் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். இந்த மன நெருக்கடியை பதற்றம் எனலாம். இதனை சமாளிக்க சூழலை மெல்ல பழ

திருமணம் ஏற்படுத்திய அதிர்ச்சி! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 10 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலமாக   இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இங்கு மருந்துகளை விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். வருமானம் பற்றிய கவலை எப்போதும் இருக்கிறது. செய்யும் வேலைக்கு மதிப்பான சம்பளம் கிடைக்கவில்லை என்று படுகிறது. திருமணம் பற்றி கேட்டிருந்தீர்கள். அது பற்றி எனக்கு எந்த யோசனையும், சிந்தனையும் இல்லை. நீங்கள் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சகோதரரின் திருமணம் நடந்தவிதமே அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலான செலவுகளை நாமே ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உங்களுக்கு சகோதரரிடம் நிறைய பாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் எப்படி யோசிப்பார் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்பதை நான் நம்பவில்லை. இந்த வகையில் ஒப்பிட்டால் எனக்கு சில நண்பர்களே உள்ளனர். சாதி சார்ந்த உறவுகளை நான் பெரிதாக நினைப்பதில்லை. சகோதரருக்கு நீங்கள் உதவுவது பற்றி எனக்கெந்த ஆட்சேபனையும் கிடையாது. அது உங்கள் விருப்பம். சுதந்திரமும் கூட. நன்றி! ச.அன்பரசு 7.5.16