இடுகைகள்

பிளேடு ஆப் தி பாண்டம் மாஸ்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னியல்பாக பயணிக்கும் நாடோடி நாயகனின் கதை! பிளேடு ஆப் தி பாண்டம் மாஸ்டர் அனிமேஷன்

படம்
        பிளேடு ஆப் தி பாண்டம் மாஸ்டர்     பிளேடு ஆப் தி பாண்டம் மாஸ்டர் அனிமேஷன் பாலைவனத்தில் ஒருவர் நடந்து போகிறார். தண்ணீர் கையிருப்பு இல்லை. தாகத்தால் மயங்கி விழுந்து விடுகிறார். அவரை இளைஞன் ஒருவன் தண்ணீர் கொடுத்து காப்பாற்றுகிறான். அப்போது அவன் தன் கதையை சொல்லுகிறான். அவனது காதலியை மன்னர் கைது செய்து வைத்துள்ளார் என்கிறான். தண்ணீர் கொடுத்த கருணைக்காக அந்த வீரர் இளைஞன் சொல்வதையெல்லாம் காது கொடுத்து கேட்கிறார். மற்றபடி அவருக்கு யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள்தான் அவர்களை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்கிறார். அப்போது பாலைவனத்தில் மனிதர்களை வேட்டையாடி தின்னு்ம கூட்டும் திடீரென வந்து தாக்க, அந்த இளைஞன் தன் காதலியைக் காப்பாற்றச் சொல்லிவிட்டு கொடூர கூட்டத்திற்கு பலியாகிறான்.  shandow மூன்று குதிரைகள் என்ற அதிசய படைபல சக்திகொண்ட முத்திரையை வீரர் வைத்துள்ளார். அவரால் பல்வேறு மாறு வேடங்களை போட முடியும். இளைஞனின் காதலியை காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் கதை.