இடுகைகள்

இடது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னியல்பாக நடைபெறும் மக்கள் போராட்டம் எந்த இடத்தில் தவறாக செல்கிறது? 2010-2020 மக்கள் போராட்டக்கதை!

படம்
                போராட்டத்தின் வீழ்ச்சி எங்கு தவறு நடைபெற்றது ? 2010 -2020 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள் . இதில் எந்த தலைவர்களும் இல்லை . தன்னியல்பாக கோபம் கொண்ட இளைஞர்கள் , பெண்கள் பங்கேற்று போராட்டத்தை நடத்தினார்கள் . இப்படி போராட்டம் நடைபெறுவதற்கு அரசியல் வெற்றிடம் காரணம் என சிலர் கருத்து கூறுகிறார்கள் . ஆனால் அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது . எகிப்தில் ராணுவம் , பஹ்ரைனில் சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டுறவு கௌன்சிலும் , துருக்கியில் எர்டோகன் , ஹாங்காங்கில் சீன அரசு , பிரேசில் நாட்டில் வலதுசாரி சக்திகள் என வெற்றிடம் நிரம்பப்பட்டது . எனவே இந்த எடுத்துக்காட்டுகளின் வழியாக வெற்றிடம் என்று கூறப்படும் இடத்தை நிரப்ப யாரோ ஒருவர் தயாராக இருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும் . பிரேசில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது . எம்பிஎல் என்ற இடதுசாரி குழு , பேருந்து விலை குறைப்பிற்கான போராட்டத்தை தொடங்கியது . அதற்கு நாடெங்கும் வரவேற்பு

இடது, வலது பக்க மூளை ஆதிக்கம் கொண்டவர் என ஒருவரைக் கூறலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? நாய்கள் உணவை வேகமாக உண்டால், அதை விரும்புகின்றன என்று அர்த்தமா? அப்படி கூற முடியாது. அறிவியலாளர்கள் உணவை வேகமாக சாப்பிடும் நாய்களுக்கு மரபணு ரீதியாக பிறழ்வு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த வகையில் லேப்ரடார் இன நாய்கள் உணவை அதிக ஆர்வத்தோடு வேகமாக சாப்பிடுவதும், உடல் பருமனால் அவதிப்படுவதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நாயின் நாக்கில் மனிதர்களை விட சுவை மொட்டுகள் குறைவு. அவற்றால் இனிப்பு, கசப்பு, காரம் ஆகிய சுவைகளை உணர முடியும். ஆனால் மனிதர்களை போல சுவையை முழுமையாக அனுபவித்து அறிய முடியாது.  ஒருவர் இடது அல்லது வலது மூளை ஆதிக்கம் கொண்டவர் என கூறலாமா? வலது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள், கலையார்வம் கொண்டவர்கள் ; இடது மூளையின் ஆதிக்கம் கொண்டவர்கள், ஆராயும் இயல்பும், கணித திறமையும் கொண்டவர்கள் என கூறுவார்கள். இந்த கருத்தில் உண்மை இல்லை. மூளையைப் பொறுத்தவரை இடது, வலது என இரு பகுதிகளும் இணைந்துதான் செயல்படுகின்றன. இடது, வலது என இரு மூளைப்பகுதிகளையும் இணைக்கும் நரம்பிழைகளுக்கு கார்பஸ் கலோசம் (Corpus callosum) என்று பெயர். உடலின் மோட்டார் செயல்பாடுகள், கலை, கணிதம் ஆகிய

இந்திய வரலாறு குறிப்பிட்ட நெறிமுறைப்படி எழுதப்பட்டது! - மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர்

படம்
  மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் மிருதுளா முகர்ஜி வரலாற்று ஆய்வாளர்  மிருதுளா 2012-2014 காலகட்டத்தில் ஜேஎன்யூ சமூக அறிவியல் துறையின் தலைவராக செயல்பட்டார்.  2006 -2011 காலகட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தில் தலைவராக செயல்பட்டார்.  குறிப்பிட்ட முறையில் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால் இங்கு, தகவல்களை மறைக்கிறார்களா? வரலாற்றை நேரடியாக எழுதுவது என்ற அதிகாரப்பூர்வ செயல்பாடு எங்குமே நடைபெற்றது இல்லை.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவர்களாகவே சுயமாக ஆய்வு செய்து எழுதுகிறார்கள். இந்த வகையில் முதல்தரமான ஆய்வாளர்கள் பாடநூல்களை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். காலனி கால ஆட்சியின் சுவடுகளை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுதுவது முக்கியம்.  பிரிவினையை ஏற்படுத்தாத உண்மையான கருத்துகள் என்றால் அவை ஏன் வன்முறையை ஏற்படுத்தும் இயல்பில் உள்ளன? நீங்கள் கூறும் விதமாக எழுதப்படும் வரலாறு அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றப்படுவதுதான். இவை இயல்பான தேடுதலால் எழுதப்படுவதில்லை.  வலது சாரி வரலாற்று ஆய்வாளர்களை வரலாறு ஆய்வுகளை செய்ய அனுமதிப்பது, நூல்களை அங்கீகரிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழ

போரில் துயருற்ற புரட்சி மக்களின் கதை- உலக மக்களின் வரலாறு!

படம்
உலக மக்களின் வரலாறு! நிழல்வண்ணன் வசந்தகுமார் - மொழிபெயர்ப்பு ஆங்கில மூலம் கிறிஸ் ஹார்மன்ம விடியல் வெளியீடு பொதுவாக உலக வரலாறு எனும்போது என்ன எழுதுவார்கள் என்றால், முழுக்க அரசு, அதில் சதி, தம்பி தகராறு, அண்ணன் வரலாறு என்ற ரீதியில்தானே?  அதைத்தவிர உலகில் வேறு ஏதும் நடக்கவில்லை என்பது போல எழுதுவார்கள.   ஆனால் உண்மையில், அரசர்களின் முட்டாள்தனமான மூர்க்கத்தனமான விதிகளால் நொறுக்கப்படுவது ஏழை மக்கள்தான். பொதுவெளியில்  இதனைக் கவனப்படுத்தும் நூல்கள் மிக குறைவு. அப்படி அரிதான நூல்களில் ஒன்றுதான் இது.  இந்நூல் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் என்னென்ன காலகட்டங்களை கடந்து வந்தன, அதில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன என்பதைப் பதிவு செய்கிறது. குறிப்பாக இன்று அரசியலில் புழங்கும் பாசிசம், நாசிசம், தேசியம் உள்ளிட்ட வார்த்தை பதங்கள் எப்படி உருவாயின என்பதை வாசித்தறிவது, சுவாரசியமான பயணமாக இருந்தது. இது நேரடியாக மக்களின் பார்வையில் எழுதப்பட்ட நூலாக கொள்ளலாம்.  அரசருக்கு எதிராக புரட்சி நடக்கிறது. இதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள் பொறுப்பேற்கின்றனர். அப

மிச்சமுள்ள கம்யூனிச நாடுகள்!

படம்
udemy-blog மிஞ்சியுள்ள கம்யூனிச நாடுகள் எவை? சோவியத் யூனியன் தொண்ணூறுகளில் உடைந்து நொறுங்கியது. ஆனால் கம்யூனிச பாதை உடனே மூடப்படவில்லை. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், கம்யூனிசக் கருத்தில் நாட்டை வழிநடத்தினர். இதனால் மக்களுக்கு நல்லது நடந்ததா என்பது இங்கு முக்கியமல்ல. கருத்தியல் என்ன என்பது மட்டுமே இங்கு பேசப்படுகிறது. சீனா மாவோ, 1940 ஆம் ஆண்டு சீனாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். மக்கள் குடியரசு நாடாக சீனா மலர, முக்கியக் காரணம் இடதுசாரி கட்சி ஆகும். இடதுசாரிக் கட்சியின் ஆதிக்கத்தில் சீனா வளர்ந்து வர, சிவப்பு சீனா என்ற பெயர் கிடைத்தது. அனைத்திலும் அரசின் கட்டற்ற தலையீடு உண்டு. 2004 ஆம் ஆண்டுதான் பொதுவுடைமை என்ற த த்துவத்தைக் கைவிட்டு தனிநபர் சொத்து என்ற வழிக்கு வரத்தொடங்கியது சீனா. க்யூபா உலகிற்கு சர்க்கரை உற்பத்தி செய்து அளிக்கும் நாடுகளில் க்யூபா முக்கியமானது. இந்நாட்டில் 1959 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தில், பிடல் காஸ்ட்ரோ மற்றும் அவரது நண்பர்கள் வென்றனர். ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் நாடு என்பதால் அமெரிக்காவின் ஆயுள் எதிரியாக மாறியது க்

இடது

படம்
                        இடது சமூக அரசியல் பண்பாட்டு காலாண்டிதழ் ஆசிரியர் ஓடை.பொ.துரையரசன் மார்க்ஸ் புதிய உலகின் திறவுகோல் பேராசிரியர் ஹிரென் முகர்ஜி தமிழில் : நா. தர்மராஜன் உலகத்தில் கடைசி மனிதன் இருக்கின்றவரை, அவனுடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிற தகுதியுடைய பெரியோர்கள் சிலரே. அந்த சிலரில் கார்ல் மார்க்ஸ் தலைசிறந்தவர். அவர் பிறந்தநாள் (1818 மே 5) உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ‘’உலகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கின்றவரை நமக்கு முன்னாலிருக்கின்ற புத்தகத்தைப் போல தொழிலாளர்களுக்கு அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட வேறு புத்தகம் இதுவரை வெளிவரவில்லை’’  வாழ்நாள் முழுவதும் மார்க்சினுடைய நண்பராக சகாவாக இருந்த ஏங்கெல்ஸ் ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின்(1867) விமர்சனத்தை இப்படித்தொடங்கினார். இந்த வார்த்தைகள் முதன்முறையாக எழுதப்பட்டபோது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இன்றும்கூட உண்மையாக இருக்கின்றன. கார்ல் மார்க்சும் அவருடைய சகாவான ஏங்கெல்சும் ஒன்றிணைந்தும் தனியா