இடுகைகள்

குடிநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரெஞ்சுக்கலைஞர் கேட்ட கடனும், மஞ்சள் நிற அறையும்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அவர்களுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று தாங்கள் அறிமுகப்படுத்திய ஆப்த தோழர் ஆலிவர் போன் செய்து பேசினார். செஞ்சி கோட்டையில் எடுத்த புகைப்படத்திற்கு சொன்னபடி 200 ரூபாயும் கூடுதலாக அவருக்காக நூறு சேர்த்து 300 அனுப்பினேன். அவர் சொன்னபடி புகைப்படத்தை அனுப்பியே வைக்கவில்லை. மேலும் அழைத்தாலும் போனை எடுக்கவில்லை. பிக்சல் குறைந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதோடு சரி.  பிறகு ஒரு நாள் இரவில் போன் செய்தார். அவரது பயோடேட்டாவை ஆங்கிலத்தில் எழுதி தரச் சொன்னார். அதற்கு நிறைய இலக்கண அறிவோடு சமகால வார்த்தைகளையும் பயன்படுத்தவேண்டும். எனவே, என்னால் ஆகாது என்று சொல்லிவிட்டேன். பிறகும் விடாமல் பேசியவர் திருவண்ணாமலைக்கு அடுத்து எப்போது வருவாய் என இழுத்து இழுத்தி பேசியவர். 500 ரூபாய் பணம் கேட்டார். நான் உடனே இல்லை என்று சொல்லிவிட்டேன்.  முன்னர் நீங்கள் சொன்னபடி, திருவண்ணாமலை வந்துவிட்டு உடனே சென்னைக்கு திரும்புவதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும். தினசரி மதுவைக் குடிப்பது, நமது ஊரைப் பொறுத்தவரை குடிநோயை உருவாக்கும் என நம்புகிறேன். ஆலிவர் அண்ணா அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

தனிமைதான் குடிக்கு முக்கியமான காரணமா? - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

படம்
  அன்புள்ள  வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா? இந்த வாரம் வடபழனியில் உள்ள ஃபாரம் மாலுக்கு போனோம். நானும் மோகன்ராஜ் அண்ணாவும்தான் கூட்டணி. அங்குள்ள ஸ்பார் மார்க்கெட்டில் புத்தாண்டு டைரிகளை குவித்து வைத்துவிட்டனர். நான் டைரியை வாங்கவில்லை. வாங்கி எழுதுவதில்லை. பிறகு வாங்கி என்ன செய்வது என கர்ச்சீஃப், நோட்பேட் ஆகியவற்றை வாங்கினேன். அறையில் சமையல் செய்வது இல்லை. எனவே, பொருட்களை கெட்டுப்போகும் முன்னரே, அலுவலக சகா ஒருவருக்கு இலவசமாக கொடுத்துவிட்டேன். அவர் திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் தங்கி அலுவலகம் வருகிறார்.  கொலைகுத்தாக வாசிப்பு வட்டம் நடத்தி என்னை மாட்டிவிட்ட நண்பர், வெட்கம், கூச்சமே இல்லாமல் விழா எப்படி என போன் செய்து கேள்வி கேட்டார்.  கொடுமை என்பதுதான் எனது மனக்குரல்.  ஆனால் என்ன செய்வது? மனதை மாற்றிக்கொண்டு பிரமாதம் என பொய்யை சொல்லிவிட்டேன். மனமகிழ்ந்து போய்விட்டார் அந்த நண்பர்.  முஸ்லீம்களின் வாழ்க்கையை மட்டுமே எடுத்து பேசிக்கொண்டிருப்பதில் வாசகர் வட்டம் என்று சொல்லி பொதுவான ஆட்களை வரச்சொல்லுவதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? வாசிப்பு வட்டத்தை மசூதிக்குள்ளேயே நடத்திக்கொள்ளலாமே

குற்றம் செய்யும் சாகச உணர்வை அழுத்தி வைக்க முடியாது!

படம்
                  குற்றவாளிகள் ஒரே விதமான குற்றங்களை திரும்ப செய்கிறார்கள் ? இதனை குடிநோய் போல குணப்படுத்த முடியுமா ? தொடர்ச்சியாக குற்றங்களைச் செய்பவர்கள் , குறிப்பிட்ட விதிகளுக்குள் அடங்குவதில்லை . இவர்களுக்கு பணம் , அதிகாரம் கட்டுப்பாடு ஆகியவை தேவைப்படுகிறது . எனவே கொலை , கொள்ளை , வல்லுறவு ஆகியவற்றை செய்கிறார்கள் . குடிநோய் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கும் உண்டு . இவர்களும் பிறர் போலவே வாழ விரும்புவர்கள்தான் . கொலைக்குற்றம் செயதவர்களை அதிலிருந்து மீ்ட்க வாழ்க்கைக்கல்வியை அளிக்கலாம் . சீரியல் கொலைகாரர்கள் , குற்றத்திற்கு அடிமையானவர்களா ? ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி வருகிறவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் . கொலை செய்தவர்களை ஆராயும்போது முன்னர் அவர்கள் கொள்ளை அடித்தவர்களாக இருக்கிறார்கள் . அல்லது குழந்தைகளை வல்லுறவு செய்தவர்கள் , ஆபாச புகைப்படங்களை எடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் . எனவே இவர்களை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூட ஒருவகையில் குறிப்பிடலாம்தான் . இந்த குற்றவாளிக்கு இடையில் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா ? பெரும்பாலான குற்றவாளிகளுக்கு

குடிநோயைக் கட்டுப்படுத்த எக்ஸ்டஸி உதவுமா?

படம்
                ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் உலகளவில் அதிகரித்து வருகிறது . மது அருந்துவது என்பது பெரும்பாலான மேற்கு நாடுகளில் கலாசாரமாகவே உள்ளது . ஆனால் தொடர்ச்சியாக குடித்து குடிநோய்க்கு உள்ளாவதை எப்படி தடுப்பது என்பது மருத்துவ்துறையில் முக்கியமான பிரச்னையாக உள்ளது . இதற்கு எம்டிஎம்ஏ வேதிப்பொருளைப் பயன்படுத்தி சைக்கோதெரபி கொடுக்க முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர் . இங்கிலாந்தில் மட்டும் மது அருந்துவதால் ஆண்டிற்கு எட்டாயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர் . நாட்டில் எழுபது சதவீத வன்முறையும் உருவாகிறது . இப்படி மது அருந்துபவர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 3.5 பில்லியன்களாக உள்ளது . மது அருந்துவதை அடிமைத்தனமாக மாறியது என்ற உண்மை தெரியாமல் இங்கிலாந்திலுள்ள ஆண்கள் 9 சதவீதமும் , பெண்கள் 3 சதவீதமும் மதுவில் மிதக்கின்றனர் . இவர்களது வாழ்க்கை மதுவைச் சார்ந்தே அமைந்துள்ளது . 3,4 மெத்திலின்டையாக்சி மெத்தாம்பீட்டமைன் அல்லது எக்ஸ்டசி என பொதுவாக அழைக்கப்படும் எம்டிஎம்ஏ வேதிப்பொருள் பயன்படுகிறது . இதனை மருத்துவத்துறையில் பிடிஎஸ்டி பிரச்னைக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள் . மதுவில் ப