இடுகைகள்

மியூசியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வைரத்திற்குள் இருந்த புதிய கனிமம்! - புதிய ஆராய்ச்சியில் வெளிப்பட்ட கனிமம்

படம்
  வைரத்திற்குள் இருந்த புதிய கனிமம்! போட்ஸ்வானா நாட்டில்  தொன்மையான வைரம் ஒன்று பெறப்பட்டது. இதனை ஆராயும்போது தற்செயலாக அதில் கிடைத்த கனிமம் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கனிமத்திற்கு டேவ்மாவோய்ட் (davemaoite)என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  போட்ஸ்வானாவின் ஆரபா நகரிலுள்ள சுரங்கத்தில், வைரம் கண்டறியப்பட்டது. . நான்கு மில்லிமீட்டர்  அகலம் கொண்ட வைரத்தின் எடை 81 மில்லிகிராம் ஆகும். 1987ஆம் ஆண்டு இதை வைத்திருந்த வைர வியாபாரி, இதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானியிடம் விற்றுவிட்டார். விற்றவருக்கோ, அதை வாங்கிய விஞ்ஞானிக்கோ கூட வைரம் எந்தளவு சிறப்பான அம்சம் கொண்டது என்று அப்போது தெரியவில்லை.  தற்போது இந்த வைரம், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெவடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆலிவர் சானர் ஆய்வு செய்துள்ளார். பொதுவாக, வைரம் பூமியின் கீழ்ப்பகுதியில் 120 முதல் 250 கி.மீ. தொலைவில் உருவாவது வழக்கம். இன்னும் சில வைரங்கள் மீசோஸ்பியர் அடுக்கில் அதாவது, மேற்பரப்பிலிருந்து 660 கி.மீ. தொலைவில் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

வேடிக்கையான சலிப்பூட்டாத டிஜிட்டல் அருங்காட்சியகம்!

படம்
      sample picture-pixabay         அபிஷேக் போடார் மியூசியம் ஆப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி நீங்கள் பல்வேறு பிரபலமான கலைஞர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளீர்கள் . அவர்களைப் பற்றிய சுவாரசியங்கள் ஏதேனும் பகிருங்கள் . கலைஞர் மீரா முகர்ஜியை எனது சகோதரி திருமணத்திற்கு அழைத்திருந்தேன் . வந்தவருக்கு அணிகலன் ஒன்றை பரிசாக கொடுத்தேன் . அடுத்தமுறை அவரது வீட்டுக்கு சென்றபோது , அப்பரிசு அவரது வீட்டு வேலையாளின் உடலில் இருந்தது . அதனை கவனித்தனவர் . நான் அதிகம் எங்கும் செல்வதில்லை . சிலமுறை போட்டுப் பார்த்தேன் . பிறகு அவளுக்கு கொடுத்துவிட்டேன் . நீ எனக்கு கொடுத்தபிறகு அது எனக்கு சொந்தம் . எனது விருப்பம் போல அவளுக்கு கொடுத்தேன் என்று சொன்னார் . ஓவியக்கலைஞர் எம்எஃப் ஹூசைன் வெளிநாட்டில் இருந்தபோது , அவரை நான் சந்தித்தேன் . நான் அவரிடம் எதை மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டேன் . இந்திய மண்ணைத்தான் என்று சொன்னார் . இப்படி சொல்ல என்னிடம் நிறைய கதைகள் உண்டு . ஆனால் அவை அனைத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவுகூரவைப்பவைதான் . கலை சார்ந்த விஷயத்தில் உங்களை ஈர்த்தது என்ன ? சில ஆண்ட