இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓட்டுநர்களை ஒருங்கிணைக்கும் பிளாக்பக் நிறுவனம்! - ஃபார்ச்சூன் 40/40

படம்
    பிளாக்பக் நிறுவனர்கள், ராஜேஷ், ஹிருதயா ஆகியோருடன் நிறுவன இயக்குநர்.   ராஜேஷ் யாபாஜி,34 சாணக்யா ஹிருதயா,33   துணை நிறுவனர்கள், பிளாக்பக்.   ராஜேஷ், ஹிருதயா என இரண்டுபேரும் இணைந்து சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கான தளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தளத்தில் ஒருவர் தனக்கு தேவையான வாகனங்களை பதிவு செய்துகொள்ள முடியும். வாகனம்   சென்று கொண்டருக்கும் இடம், அதன் நிலை   பற்றி எளிதாக அறியலாம். தொடக்கத்தில், ஐடிசியில் விநியோகப் பிரிவில் ராஜேஷ், ஹிருதயா என இருவரும் வேலை செய்தனர். அப்போது, பொருட்களை விநியோகம் செய்ய சரக்கு போக்குவரத்து வாகனங்களை ஏற்பாடு செய்வது கடினமாக இருந்திருக்கிறது. இதை நாம் எளிமையாக்கி டிஜிட்டல் செய்தால் வேலை எளிதாக இருக்குமே என இருவருமே எண்ணினர். அதன் அடிப்படையில் வாகன ஓட்டுநர்களிடம் பேசி, அவர்களை திட்டத்தில் இணைத்து பிளாக்பக்எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது.   இந்த நிறுவனத்தின் சேவை முழுக்க சிறுகுறு நிறுவனங்களுக்கானது. லாரி ஓட்டுநர்களில் இருபது சதவீதம் பேர்தான், ஸ்மார்ட்போனை வைத்திருந்தார்கள் என்பது நிலையை சிக்கலாக்கியது. தாங்கள் என்ன செய்கிறோம் என இவர்களிட

அதிக கட்டண உயர்வால் பயணசேவை நிறுவனத்தை தொடங்கியவர்! - ஈஸி மை ட்ரிப் - ஃபார்ச்சூன் 40/40

படம்
  நிஷாந்த் பிட்டி, ஈஸி மை ட்ரிப் நிஷாந்த் பிட்டி, 36 இயக்குநர், ஈஸிமை ட்ரிப் ஈஸி மை ட்ரிப் என்ற பெயரைக் கேட்டதும் முடிவுசெய்திருப்பீர்கள். ஆகாய விமானத்தில் பயணம் செய்வதற்கான முன்பதிவை செய்துகொடுக்கும் நிறுவனம். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்துகொண்டு வணிகம் செய்கிறார்கள். ஈஸி மை ட்ரிப், விமான நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு இயங்கி வருகிறது. 3,716 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் 106 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, 1,800 கிளைகளை நடத்தி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த நிஷாந்த் தொடங்கிய நிறுவனம்தான் ஈஸி மை ட்ரிப். அவரது அப்பா, நிலக்கரியை தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். டெல்லியில் இருந்து குவகாத்திக்கு நிலக்கரியை க் கொண்டு செல்லவேண்டும்.   தந்தை வேலை காரணமாக குவகாத்திக்கு சென்றுவிட நிஷாந்தும் அங்கே செல்ல வேண்டிய நிலை. போகும்போது விமான டிக்கெட் விலை சல்லிசாக இருந்தது. ஆனால், திரும்பி வரும்போது நிலைமை அப்படியில்லை. டிக்கெட் விலை அதிகரித்து இருந்தது. நிஷாந்தின் முகவர், கு

அழகு மற்றும் ஆடைகளை விற்கும் மசாபா குப்தாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  மசாபா லவ் சைல்ட் லிப்ஸ்டிக் வடிவமைப்பாளர் மசாபா குப்தா மசாபா குப்தா நிறுவனர் ஹவுஸ் ஆஃப் மசாபா   ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் மசாபா குப்தா. அவரின் நிறுவனம்தான் ஹவுஸ் ஆஃப் மசாபா. இந்த நிறுவனம், லவ் சைல்ட் என்ற பெயரில் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்கிறது. இந்த பொருட்கள் சல்பேட், பாரபீன் போன்ற வேதிப்பொருட்கள் கலப்பில்லாதவை. வீகன் முறையில் தயாரிக்கப்படுபவை. 75 நாடுகளுக்கு மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஹவுஸ் ஆஃப் மசாபா கடைகளில், லவ் சைல்ட் அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கடைகளில் வாங்க முடியாதவர்கள் இணையத்தில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். லவ் சைல்ட் பிராண்டில் அடுத்ததாக நிறைய பொருட்கள் வெளியாக உள்ளன. மும்பையில் தனது கடையைத் தொடங்கவுள்ள மசாபாவுக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் கைகொடுத்துள்ளது. இந்த நிறுவனம், மசாபாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதனால், மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகளை ஆதித்ய பிர்லாவின் கடைகளிலும் பெற முடியும். 2022இல் நெட்பிளிக்ஸில் வெளியா

யுனிலீவரை பீதியடையச் செய்த மாமா எர்த் நிறுவனம் ! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  நடிகை ஷில்பா, நிறுவனர்கள் வருண், கசல், மாமாஎர்த் கசல் ஆலாக் 34 வருண் ஆலாக் 38 மாமா எர்த்   குழந்தைகளுக்கான வேதிப்பொருட்கள் இல்லாத அல்லது அளவில் குறைந்த சோப்புகளை, ஷாம்பூகளை தயாரிப்பதும், சந்தைபடுத்தி வெற்றி பெறுவதும் கடினம். மாமாஎர்த் நிறுவனம், இந்த விஷயத்தில்தான் மகத்தான வெற்றி பெற்று யுனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனத்திற்கே போட்டியாக மாறியுள்ளது. கடந்த ஆண்டில்தான், டவ் பிராண்டில் குழந்தைகளுக்கான சோப்புகள், ஷாம்புகள் அறிமுகமாகி உள்ளன. இந்த பிராண்ட், பல்வேறு உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடு போட்டிபோட்டு விளம்பரம் செய்து வருகிறது. குறிப்பாக, மாமாஎர்த். யுனலீவரின் முதலீட்டாளர் ஒருவர், நிறுவனத்திடம் மாமாஎர்த்தோடு போட்டியிட்டு வெல்ல திட்டங்கள் இருக்கிறதா என வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் மாமாஎர்த் நிறுவனம் தொடங்கி ஏழு ஆண்டுகள்தான் ஆகிறது. 2016ஆம் ஆண்டு ஆறு பொருட்களை விற்றது. இந்த நிறுவனத்தின் பொருட்கள், நாடெங்கும் 50 ஆயிரம் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மொத்த நிறுவன வருவாயில் 35 சதவீதம், மேற்சொன்ன கடைகளிலிருந்து கிடைக்கிறது. ‘’நாங்கள் போட்டியாளர்களைப் பா

கணிதம் கற்றுத்தரும் க்யூமேத் நிறுவனம்! - ஃபார்ச்சூன் 40/40 தொழிலதிபர்கள்

படம்
  மனன் குர்மா மனன் குர்மா 37 க்யூமேத் கணக்கு என்றால் மாணவர்கள் பலருக்கும் தடுமாற்றமாகவே இருக்கிறது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் எப்படி தடுமாறுமோ அதேபோல்தான் கணக்கும் நகர, கிராம வேறுபாடின்றி பிரச்னையாக உள்ளது. இதை மனன், தான் கணக்கை கற்றுத்தரும்போதே உணர்ந்தார். அதற்காக தொடங்கியுள்ள நிறுவனம்தான் க்யூமேத். இந்த நிறுவனத்தில் ஒரு ஆசிரியர் நான்கு மாணவர்களுக்கு (ஒரு குழு) என பிரித்து வைத்து கணக்கை சொல்லித் தருகிறார். க்யூமேத் வலைத்தளத்தில் 2 லட்சம் பயனர்கள் உள்ளனர். இவர்களுக்கு கற்றத்தர 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். உலகம் முழுக்க 80 நாடுகளில் க்யூமேத் செயல்பட்டு வருகிறது. நான்கு மணி நேரத்தில் கணக்கை சிறப்பாக கற்க முடியும் என நிரூபித்ததோடு, வருமானத்தையும் ஈட்டி வருகிறது. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட க்யூமேத், விளையாட்டு மூலம் கணக்குகளை கற்பதை அடிப்படையாக கொண்டது. ஜினா கிருஷ்ணன் ஃபார்ச்சூன் 

அகோர பசியை எதிர்கொள்ளும் வழிமுறை!

படம்
  எப்போதும் பசி அமெரிக்காவில் உள்ள மக்களில் 61ச தவீதம் பேர் சர்க்கரை, மாவுச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். அவை ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளை மனத்தூண்டல் பெற்றதால் எடுத்து சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதயநோய் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, இலைக்காய்கறிகளை, புரதம் கொண்ட தானிய வகைகளை மெல்ல உண்ணக் கற்பதுதான். உடலுக்கு உணவை சரியான முறையில் பழக்கப்படுத்துவது அவசியம். ஒருவர் காலை எட்டு மணிக்கு இட்லியும் வடகறியும் சாப்பிடுவது வழக்கம் என்றால் அதை அவர் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் வயிற்றில் கர முர என மாவு மில் சத்தம் கேட்கும். உடல் அந்த நேரத்தில் உணவு கிடைக்கும் என பழகிவிட்டது. அப்போது, உங்களுக்கு உணவு உண்ணும் தேவை இல்லாதபட்சத்தில் கூட பசி எடுக்கும்.  சிலர் தங்க கிளி கடலை மிட்டாய், கங்கோத்திர பால் பொருட்கள் சார்ந்த இனிப்புகள், ஏ1 சிப்ஸ் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்டபிறகும் கூட இடைவெளியில் இப்படி குப்பை உணவுகளை உண்பது உடலை பாதிக்கும். உடலுக்கு இதுபோன்ற உணவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஊட

இடைவேளை விட்டுத் தொடரும் உண்ணாவிரதம் - உடல் எடையை கணிசமாக குறைக்கிறது!

படம்
  உடல் எடையைக் குறைக்கும் உண்ணாவிரதம் ஒருவர் மூன்று வேளை உணவு உண்டாலும் மாதம் ஒருமுறை மூன்று வேளை உணவுகளில் ஒருவேளையை தியாகம் செய்து உண்ணாவிரதம் கடைபிடிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பயன்கள், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறுவது, அடுத்து உடலின் செரிமான மண்டலம் சீராவது. ஒருவர் முழுநாளும் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் அது சற்று கடுமையானது. அதற்கென பயிற்சி செய்து அதைக் கடைபிடிக்கலாம். இன்டர்மிட்டர் ஃபாஸ்ட் எனப்படும் உண்ணாவிரதம் பதினாறு மணிநேரம் தொடங்கி சில நாட்கள் வரை நீள்கிறது. இதில் உணவு என்பது முழுமையாக நீக்கப்படுவதில்லை. அதற்குப் பதில் திரவ ஆகாரங்கள், பழங்கள் ஆகியவற்றை உண்ணலாம். பிறகு உண்ணாவிரதத்தைத் தொடரலாம். மூன்று வேளை உணவுண்டு பழகியவர்களுக்கு இந்த முறை ஏற்றது.   அமெரிக்கர்கள் மத்தியில் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் தீவிரமாகி வருகிறது. வெறுமனே டிரெண்டிங் என்பதாக அல்ல. அதில் பயனும் கிடைக்கிறது. எந்த டயட்டைக் கடைபிடித்தாலும் இடைவேளை விட்டுத் தொடரும்  உண்ணாவிரதம் மூலம் அவர்களுக்கு எடை குறைகிறது என்று கூறுகிறார்கள்.  நீரிழிவு நோயாளிகளுக்கும் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் உதவுகிறது என்பது ஆச்சரியமான சமாச்ச

எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  எடை குறைப்பு கேள்விகள் எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா? ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது   சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல. பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும். உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.   கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது. எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி? தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, நீர், எடுத்துக்

டேட்டிங் ஆப்பில் தீயாய் காதல் வளர்க்கும் இந்தியர்கள்! - இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் காட்டாறாக பாயும் காதல்

படம்
  பம்பிள் டேட்டிங் ஆப் டிண்டர் போன்ற வடிவத்தில் ட்ரூலிமேட்லி ட்ரூலிமேட்லி ஆப் காற்றில் பரவுகிறது காதல் தலைப்பை பார்த்ததும் எங்கே என கேள்வி கேட்க கூடாது. இதெல்லாம் நாமே கற்பனை செய்துகொள்ளவேண்டியதுதான். இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தி தங்களுக்கான காதலை, நட்பை ஆண்களும், பெண்களும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். டிண்டர், பம்பிள், ட்ரூலிமேட்லி, அய்லே ஆகிய டேட்டிங் ஆப்கள் இன்று மிக பிரபலமாகிவிட்டன. காரணம், இவற்றின் வழியாக லட்சக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக 18-23 வயதுப் பிரிவினர் காதலைத் தேடி டேட்டிங் சென்று வருகிறார்கள்.   பெருந்தொற்று காலகட்டம் காதலி, நண்பர்கள் என பலரையும் சந்திக்க விடாமல் செய்தது. இந்த சூழல் பலரையும் மனதளவில் பாதித்தது. அந்த நேரத்தில் உதவியாக இருந்தது இணையமும், அதன் வழியாக அறிமுகமான டேட்டிங் ஆப்களும்தான். ட்ரூலிமேட்லி என்ற ஆப், இந்தியாவில் உருவாக்கப்பட்டது மாதம் 699 தொடங்கி 2,800 வரை காசு கட்டினால் டேட்டிங் அனுபவத்தை சுகமானதாக்குகிறார்கள். அதாவது, நிறைய வசதிகளை பயன்படுத்தி பெண்களைப் பற்றி அறியலாம். பாதுகாப்பு என்ற வகை

சிறிய இமேஜரி ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து கொடுக்கும் கேலக்ஸ் ஐ! - சுயாஸ் சிங்

படம்
  சுயாஸ் சிங், கேலக்ஸ் ஐ கேலக்ஸ்ஐ குழுவினர் சுயாஸ் சிங், இயக்குநர், துணை நிறுவனர் கேலக்ஸ் ஐ இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான தேவைகளுக்கான இமேஜிங் ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறது, கேலக்ஸ் ஐ. இந்த நிறுவனம், உலகளவில் உள்ள இமேஜிங் ரேடார் சந்தையை குறிவைத்துள்ளது. 40 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இந்த சந்தை   வளர்ந்துள்ளது. தற்போது இந்தியா, இமேஜிங் ரேடார் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் மற்றும் பிற வெளிநாடுகளிடம் பெற்று பயன்படுத்தி வருகிறது. அரசியல் சூழல்கள் மாறும்போது வெளிநாடுகள், தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது நிறுத்தப்படும். எனவே, உள்நாட்டில் அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியம். அந்த வகையில் கேலக்ஸ் ஐ என்ற தனியார் நிறுவனம் இமேஜிங் ராடார் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் வணிக மதிப்பு 15 மில்லியன் டாலர்களாக உள்ளது. மல்டி சென்சார் இமேஜிங் தொழில்நுட்பத்தில் கேலக்ஸ் ஐ மூன்று காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சிறிய செயற்கைக்கோள்களை , போனில் உள்ளடங்கும் அளவிலான பொருட்களைக் கொண்டு தயாரித்து வருகிறது

தேநீர் தேசத்தில் மக்களை காபி குடிக்க வைக்க கஃபே திறக்கும் தொழிலதிபர்! - சிவம் சாகி

படம்
  ப்ளூ டோகாய் கஃபே சிவம் சாகி, நம்ரதா ஆஸ்தானா, மேட் சித்தரஞ்சன் ப்ளூ டோகாய் காபி சிவம் சாகி 32 துணை நிறுவனர், செயல் அதிகாரி, ப்ளூ டோகாய் இந்தியாவில் டீ குடிப்பவர்களே அதிகம். குறிப்பிட்ட சதவீத ஆட்கள் மட்டுமே காபி என குரல் கொடுத்து காபி குடிப்பார்கள். இப்படியான சிக்கல் உள்ள தேசத்தில் காபிக்காக தனி கஃபேக்களை தொடங்கி நடத்துவதை யோசித்துப் பாருங்கள். அதை சிவம் சாகி தனது உழைப்பு மற்றும் நம்பிக்கை மூலம் சாதித்திருக்கிறார். டெல்லி, சண்டிகர், புனே, மும்பை ஆகிய நகரங்களில் அறுபது கஃபேக்களை தொடங்கி தனது காபியை விற்பதே சாகியின் லட்சியம். 2024ஆம் ஆண்டு, 130 கஃபக்ககளை திறக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு உழைத்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான சாகி, தனது நண்பர்கள் மேன் சித்தரஞ்சன், நம்ரதா ஆஸ்தானா ஆகியோருடன் இணைந்து 2015ஆம்ஆண்டு ப்ளூ டோகாய் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம், அமேஸான் வலைத்தளத்தில் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்டன்ட் காபி அல்லாமல் செயல்படும் பெரிய நிறுவனம் ப்ளூ டோகாய்தான். இதை நமக்கு சொன்னது கூட சிவம் சாகிதான். இப்படி தனக்குத்தானே ஜெயிப்போம்டா என்று சொல்லி காபி

பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

படம்
  நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ் செல்வம் விஎம்எஸ் நிறுவனர், இயக்குநர் வீலோசிட்டி   வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.   இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது. விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?   ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளு

ஆடியோ கதைகள் மூலம் மக்களின் மனதை வென்ற பாக்கெட் எஃப்எம்! - பார்ச்சூன் 40 அண்டர் 40

படம்
  நிஷாந்த், ரோகன், பிரதீக்- துணை நிறுவனர்கள், பாக்கெட் எஃப்எம் பாக்கெட் எஃப்எம்- ஆடியோ கதைசொல்லி ரோகன் நாயக், நிஷாந்த், பிரதீக் தீக்‌ஷித் துணை நிறுவனர்கள் பாக்கெட் எஃப்எம் யூட்யூபை திறந்தால், ‘’பார்க்கிறதுக்கு பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். இவனுக்கு பேங்கில அக்கவுண்ட் இருக்கா, இந்த பிச்சைக்காரனுக்கு ஹோட்டல் டேபிளா,, அதை எங்களுக்கு கொடுங்க. பாக்குறதுக்கு சர்வர் மாதிரி இருக்க, இரண்டு கிளாஸ்ல டீ போட்டு எடுத்துட்டு வா ‘’ என்ற டோனில் பெண் குரல் பேசும் மோசமான அனிமேஷன் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அந்த கம்பெனிதான் பாக்கெட் எஃப்எம். கதைகளை ஆடியோ வடிவில் கூறும் நிறுவனம். ரோகன், நிஷாந்த் ஆகிய இருவரும் காரக்பூரல் ஐஐடியில் படித்தவர்கள். இவர்கள் பிரதீக்கை சந்தித்தபிறகு பாக்கெட் எஃப் நிறுவனத்தை உருவாக்கினர்.   இன்று பாக்கெட் எஃப்எம்மின் மதிப்பு, 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். அண்மையில்தான் 93.5 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றது. பாக்கெட் நாவல் என்ற சகோதர நிறுவனத்திலிருந்து பாக்கெட் எஃப் எம் நிறுவனம் உருவானது. திகில் கதைகளில் யட்சினி என்ற கதையை பொறியியல் மாணவர் ஒருவர் எழுதி, அக்

காவல்துறைக்கு மாற்றாக பணியாற்றும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவன காவலர்கள் - அதிகரிக்கும் குற்றங்கள்

படம்
  பிங்கர்டான் நிறுவன பாதுகாப்பு காவலர்கள் அமெரிக்காவில் தனிநபர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள்! -   நம்பிக்கையிழந்து தடுமாறும் காவல்துறை 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி, ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கொன்றார். இதற்கு அன்றைய அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைத்த வெறுப்புவாதம், இனவெறி, நிறவெறி என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடைமுறையில் காவல்துறையில் சேர்ந்த ஆட்கள் கூட காவல்துறையில் இப்படித்தான் நிலைமையா என பணியை விட்டு வேகமாக விலகி அடுத்தவேலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதம் பேர் இப்படி காவல்துறைக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின்னாளில் விலகி விட்டதாக ஆராய்ச்சி அமைப்புகள் தகவல் கொடுக்கின்றன. பிலடெல்பியா, லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் காவல்துறைக்கு குற்றங்களை தடுக்க போதுமான அதிகாரிகள் இல்லை.இதனால் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வல்லுறவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. பிலடெல்பியாவில் ஏடிஎம் கொள்ளை அடிக்கப்பட்டு ஆறுமணிநேரங்களுக்கு பிறகு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அரசு காவல்துற

காதலியை பேருந்து விபத்தில் பறிகொடுத்துவிட்டு, வினோதமான நபராக மாறும் காதலன்! - ஸ்டில் 17- தென்கொரிய தொடர்

படம்
  ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 தென்கொரிய டிவி தொடர் யூட்யூப் – எஸ்பிஎஸ் வேர்ல்ட் கொரியாவின் சியோல் நகரம். இங்கு, பதினேழு வயதான காங் வூ ஜின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது, இசையை அனுபவித்து வாசிக்கும் பள்ளிச்சிறுமி ஒருத்தியை பார்க்கிறான். அவள் வயலின் வாசிப்பவள். பள்ளியில் போட்டியில் வாசித்து வென்று ஜெர்மனிக்கு பயிற்சிக்கு போகும் சூழலில் இருக்கிறாள். காங்கிற்கு, அவள் பெயர் தெரியாது. ஒருநாள் சைக்கிளில் வரும்போது, பள்ளிச் சீருடையுடன் சிறுமி ஒருத்தி நடைமேடையில் நிற்கிறாள்.   கைவிரல்களை முயல்போலாக்கி நிலவைப் பார்த்தபடி இருக்கிறாள். அப்போதுதான் தான் விரும்பும் சிறுமியின் பெயரை நோ சுமி என அறிகிறான். அந்த போஸை அப்படியே படமாக வரையும் காங், அவளிடம் கொடுத்து நட்பாக நினைக்கிறான். ஆனால், திடீரென நடக்கும் பேருந்து விபத்தில் நோ சுமி என்ற பெயர் கொண்ட சிறுமி இறந்துபோகிறாள். இதனால், காங் மனம் உடைந்து போகிறான்.   விபத்தான பேருந்தில் அன்றைக்கு பயணித்த காங், தான் விரும்பிய சிறுமிக்கு கலை அரங்கம் செல்ல தவறான வழியை சொல்லிவிடுகிறான். அந்த சிறுமியும் அதேபோல அவன் சொன்ன