இடுகைகள்

சைக்கிள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சந்தைக்குப் புதுசு - ஒரே ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் போதும். போனை கழற்றி மாட்டிவிடலாம்!

படம்
  சந்தைக்குப் புதுசு  ஃபேர் போன் 650 டாலர்கள் விலை கொண்ட ஸ்மார்ட்போன். இந்த போனிலுள்ள பாகங்களை நாமாகவே அவர்கள் கொடுக்கும் ஸ்க்ரூ ட்ரைவர் வைத்து கழற்றி மாட்டிக்கொள்ளலாம். பழுது பார்க்கலாம். கெட்டுப்போன பாகங்களை மாற்றிக்கொள்ளும் விலையும் குறைவுதான். திரை போய்விட்டதா உடனே அதை தூக்கியெறிந்துவிட்டு புதிய போன் வாங்குபவர்கள், இந்த போனை வாங்கலாம். ஐந்து ஆண்டு ஆண்ட்ராய்ட் அப்டேட் உண்டு. அதே ஆண்டுகள் வாரண்டியும் உண்டு. இந்த போன் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கிறது. அமெரிக்காவில் உள்ளவர்கள் ஆர்டர் போட்டுத்தான் வாங்கவேண்டும்.  பிஎம்டபிள்யூ ஐ5 முழுக்க எலக்ட்ரிக் கார். சார்ஜ் போட்டால் முப்பது நிமிடங்களில் எண்பது சதவீதம் சார்ஜ் ஏறுகிறது. ஆனால் இந்த கார் முழுக்க எலக்ட்ரிக் காராக மாற்ற பத்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இந்த காலதாமதம் சற்று ஏமாற்றமளிக்கிறது. விலை 68,800 லிருந்து தொடங்குகிறது. இதில் நிறைய மாடல்கள் உள்ளன. காரில் கேம் விளையாடும்போது உங்கள் ஸ்மார்ட்போனை கண்ட்ரோலராக பயன்படுத்தலாம். 321 கி.மீ. தொலைவு தொடங்கி 361 கி.மீ. வரை செல்ல முடியும்.  மோனோ பிரைஸ் டேபிள் லேம்ப் இந்த நிறுவனம் ஒருவர் வீட்டிலே

முப்பது ஆண்டுகளாக தேடப்படும் டீனேஜ் பெண்!

படம்
  தாரா காலிகோ நெடுஞ்சாலையில் காணாமல் போன டீனேஜ் பெண் – முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீளும் தேடல் 1988 ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி. தாரா காலிகோ என்ற பெண்ணுக்கு வயது பத்தொன்பதாகியிருந்த்து. தன் அம்மாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாக்மேன் பிளேயரை எடுத்துக்கொண்டு பாட்டு கேட்டபடியே வெளியே சென்றார். நியூ மெக்சிகோ பகுதியில் வாழ்ந்து வந்தவரான தாரா பிறகு சைக்கிளோடு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதோ   முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் காவல்துறையினர் நம்பிக்கையை கைவிடவில்லை. குற்றவாளியை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். தாரா சைக்கிளில் சென்று வந்த பகுதி பாலைவனத்தை ஒட்டிய நெடுஞ்சாலை. அவர் அடிக்கடி சைக்கிளில் முப்பதைந்து கி.மீ. தூரம் சென்று திரும்புவது வழக்கம். போகும்போது, ‘’நான் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு திரும்பலைன்னா, சைக்கிளுக்கு ஏதோ பிரச்னைனு புரிஞ்சுக்கிட்டு என்னை கூட்டிக்கிட்டு போறதுக்கு வந்துடுங்க’’ என்று   கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை அவரது சகோதரி சரியாக நினைவில் கொண்டிருக்கிறார். அதுதான் தாரா பேசிய கடைசி வார்த்தைகள். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் அவரைப்

உணவு வீணாவதால் உருவாகும் மீத்தேன் வாயு!

படம்
  ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகி வருகின்றன. உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், வீணாகிவருவதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. உணவு வீணாவது எந்தெந்த நிலையில் நேரிடுகிறது? உற்பத்தி, அதை ஓரிடத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வது, விற்பனை, வீட்டு பயன்பாடு என பல்வேறு செயல்களில் உணவு வீணாகிறது. உலக நாடுகளில் நாற்பது சதவீதம் உணவுப்பொருட்கள் அதன் விற்பனை நிலையில்தான் வீணாவது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சாப்பிட உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் வீணாவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுப் பொருட்கள் பட்டியால் தசை உருகி கிடக்கும் மக்களுக்கு சென்று சேருவது பல்வேறு உலகளவிலான பொருளாதார கொள்கைகளால் தடுக்கப்படுகிறது.   மக்களுக்கு பயன்படாமல் கெட்டு அழுகிப்போகும் பொருட்களால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவான மீத்தேனின் அளவு கூடுகிறது. உணவு வீணாவதால் உலகளவில் 28 சதவீத வேளாண்மை நிலங்களின் பயன்பாடு சீர்கெடுகிறது.   60 க்யூபிக் கி.மீ அளவு நீர் வீணாகிறது. வீணாகும் உணவை உற்பத்தி செய்யும் செயல்முறையில் வெளியாகும் கார்பன் அளவு 3.6 பில்லியன் டன் ஆகும். உணவை உற்பத்தி செய்ய ப

சூழல் செய்திகள்- ஊழியர்களுக்கு சைக்கிள் கொடுத்த நிறுவனம், கடற்புரத்தை சுத்தம் செய்யும் மனிதர்!

படம்
  pixabay சூழல் செய்திகள் முட்டுக்காடு சூழல் காப்பாளர்! முட்டுக்காட்டில் வாழ்ந்து வருபவர், கிரேஷியன் மேத்யூ கோவியாஸ். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக கடற்கரையில் அலைகள் கொண்டு வந்து போடும் குப்பைகளை பொறுக்கி தனியாக அதனை ஒரு இடத்தில் போட்டு வருகிறார். இதன்மூலம் சூழலுக்கான ஆபத்து தவிர்க்கப்படுகிறது.  கடல் அலையில் ஒதுக்கப்படும் மரப்பொருட்களை இவர் புகைமூட்டம் போட எடுத்துச்செல்கிறார். மரம் உப்பில் ஊறி விட்டால் அதனை எளிதாக விறகாக பயன்படுத்த முடியாது. ஆனால் அதில் நிறைய புகை வரும். அதனை வைத்து தான் வாழும் வீட்டில் கொசுக்கள், பூச்சிகளை விரட்ட பயன்படுத்திக்கொள்கிறார். வீட்டில் இருந்து கடற்கரைக்குப் போகும்போதே அலுமினிய கண்டெய்னர் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அதில், கடற்கரையோரம் அலை ஒதுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கிறார். இப்படித்தான் பிளாஸ்டிக் பொருட்கள் சூழலைக் கெடுக்காமல் அதனை அப்புறப்படுத்தி வருகிறார்.  அனைவருக்கும் சைக்கிள் இப்படி கூறுவதற்கு இது அரசு திட்டமல்ல. மணலியில் செயல்படும் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் சைக்கிள்களை ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் தொழி

தேவைக்கும் உற்பத்திக்குமான தடுமாற்றமான உறவு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  சைக்கிள், கழிவறை நாப்கின் தாள்கள், செமி கண்டக்டர்கள் ஆகியவை இப்போது தட்டுப்பாடாக உள்ளன. இதற்கு காரணம், பெருந்தொற்று எனலாம். உண்மையில், விற்பனைக்கும் , உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலுள்ள இடைவெளிதான் இதற்கு காரணம். இதனை புல்விப் விளைவு என்கிறார்கள் . இப்போது அதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  செமி கண்டக்டர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் துறைகளின் எண்ணிக்கை 169. இதனை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.  சிப் தட்டுப்பாட்டில் அமெரிக்காவில் 1 சதவீத ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் 78 சதவீதம் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் சைக்கிள் விற்பனை 38 சதவீதமாக மட்டுமே  இருந்தது.  பெருந்தொற்று ஏற்பட்டு பொதுமுடக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த்து. அப்போது மட்டும் அமெரிக்காவில் கழிவறை நாப்கின்களை வாங்க 1.4 பில்லியன் டாலர்களை செலவழித்திருந்தனர்.  சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜருக்கு கடையில் விற்பனையாகும் பொருள் பற்றித்தான் தெரியும். அவருக்கு, குறிப்பிட்ட பொருள் தொழிற்சாலையில் எந்தளவு விற்பனையாகிறது என்று தெரியாது. தொழிற்சாலையில் உள்ள

தாயிற்கு அஞ்சலி செலுத்த இலவசமாக நாப்கின்களை வழங்கும் மருத்துவக்கல்லூரி மாணவர்!- நியூஸ் ஜங்ஷன்

படம்
  நியூஸ் ஜங்ஷன்  10.8.2021 ஆஹா! சைக்கிள் நகரம் தெலங்கானா மாநிலத்திலுள்ள வாராங்கல் நகரம், சைக்கிள் ஓட்டுவதற்கு வசதியான நகரமாக அறியப்பட்டுள்ளது.  4 கி.மீ. தொலைவுக்கு உருவாக்கியுள்ள சைக்கிள் வழித்தடம் விரைவில் 50 கி.மீ. தொலைவுக்கு விரிவுப்படுத்தப்படவிருக்கிறது. இதற்கு 40 - 50 கோடி ரூபாய் தேவை என மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு, சைக்கிள் ஓட்டுவதற்கான சிறந்த 11 நகரங்களில் வாரங்கலும் இடம்பிடித்துள்ளது. சைக்கிள் ஃபார்  சேலஞ்ச் எனும்  மத்திய அரசின் போட்டியில் வெல்லும் நகரங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.  https://www.thenewsminute.com/article/how-warangal-changed-tyre-become-one-indias-top-cycling-cities-153665 அழகோ அழகு! ஒலிம்பிக் போட்டி நிறைவு நாளன்று நடைபெற்ற வாணவேடிக்கை காட்சி!  இடம் டோக்கியோ, ஜப்பான் இது புதுசு! பாதுகாப்பு! ஆப்பிள் நிறுவனம், தனது ஐக்ளவுட்  சேவையை சோதித்து, அதில் குழந்தைகளின் மீதான வன்முறை குற்றங்களைக்  கொண்ட புகைப்படங்களை தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ஆப்பிள் பயனர்களின் போன், டேப்லெட் ஆகியவற்றை தானிய

பாகுபாடுகளை வெளிக்காட்டும் இமோஜி ஐகான்கள்! - புதிய இமோஜிகள் வெளியீடு

படம்
 செய்திஜாம்  ஆஹா! தேர்வில் வெற்றி! மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வில், 99.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர்களால் நடத்தப்படும் தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ”15,75,806 மாணவர்கள் பத்தாவதில் இணைந்தனர். இவர்களில் 15, 75,752 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 4.65 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது” போர்டு தலைவர் தின்கர் பாடீல் தெரிவித்தார்.  https://www.thenewsminute.com/article/maharashtra-board-class-10-results-declared-9995-students-pass-152459 இனவெறி கூடாது இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஸ்போர்டுக்கு ஆதரவாக திரண்டு குரல் கொடுக்கும் ஆதரவாளர்கள் இடம் பிரிட்டன், மான்செஸ்டர் அப்படியா!? என்ன உயரம்! சீனாவைச் சேர்ந்த பேஸ்கட்பால் வீராங்கனை ஸாங் ஸியூ, தனது அபார உயரத்தாலும், திறனாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பதினைந்து வயதுக்குட்பட்ட தேசிய பேஸ்கட்பால் போட்டியில் ஸாங் பங்கேற்றார். ஏழு அடி நாலு அங்குல உயரத்தில் உள்ள ஸாங், போட்டியில் 45 புள்ளிகளை எடுத்து தனது அணியை

சைக்கிளின் முன் டயர் பெரிதாக இருந்தால் என்னவாகும்? மிஸ்டர் ரோனி

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி 123rf முதல் சூப்பர் மார்க்கெட் எப்போது தொடங்கப்பட்டது? அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1903ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி கிங் குலன் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது. அதிக பொருட்கள் குறைந்த விலை என தள்ளுபடியை அடித்து தூள் கிளப்பியதால் கடை தொடங்கிய வேகத்தில் ஹிட்டானது. மேலும் கடைகளின் கிளைகளும் கூட வேகமாக தொடங்கப்பட்டன. மைக்கேல் ஜே குல்லன் என்பவர்தான் கிங் குலன் கடைகளின் முதலாளி. இவர் இறக்கும்போது மொத்தம் 17 கிளைகள் தொடங்கப்பட்டுவிட்டன.  1870களில் சைக்கிள் முன் டயர் பெரிதாக இருப்பது ஏன்? வேகமாக செல்வதற்குத்தான் இவைதான் இப்போதைய சைக்கிள்களின் முன்னோடி. இதற்குப்பிறகுதான் சைக்கிள் ரிம்களின் டயர்களை அணிவிக்கப்பட்டு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அன்றைக்கு பென்னி ஃபார்த் என்றழைக்கப்பட்ட இந்த பெரிய வீல் சைக்கிள்தான் புகழ்பெற்றிருந்தன. பெரிய வீலில் இணைக்கப்பட்டு பெடலை மிதிக்க சைக்கிள் நகரும்.  பல்பு உடையாமல் வாகனத்தை ஓட்டுவது நமது சாமர்த்தியம்தான்.  வேகமாக செரிக்கும் உணவு எது? எதில் குளுகோஸ் உள்ளதோ அதுதான் செரிக்க எளிமையான உணவு, ஸ்டார்ச், நார்ச்சத்த

சந்தையில் அசத்தும் இசைக்கிள்கள்!

படம்
              இ சைக்கிள் சக்தி சாதாரண சைக்கிள் ஓட்டுவதற்கான இடங்கள் கூட கார் பார்க்கிங்குகளாக மாற்றப்பட்டுவிட்டன . இருந்தாலும் கூட எரிபொருள் விலையுயர்வு ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் சைக்கிள் என்பது முக்கியமானதுதான் . பராமரிப்பு செலவு குறைவு என்பதோடு இதனை பயன்படுத்துவது உற்சாகமான அனுபவத்தை தரும் என்பது நிச்சயம் . இ சைக்கிள்கள் எடை குறைவாக , கவர்ச்சிகரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன . பேட்டரியுடன் ஆற்றலுடன் உள்ளதோடு காரை விட குறைந்த மாசுபாட்டைய ஏற்படுத்துகிறது . இப்போது இதில் சிறப்பான இ சைக்கிள்களைப் பார்ப்போம் . ஆல்ரவுண்டர் பெஸ்ட் டர்போ வாடோ எஸ்எல்   சைக்கிளின் பிரேம்களில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள ஸ்டைலான இபைக் இது . பார்க்க சாதாரண சைக்கிள் போல இருந்தாலும் மணிக்கு 28 கி . மீ வேகத்தில் காட்டுப்பகுதிகளுக்குள் செல்லலாம் . எடை 33 பவுண்டுகள்தான் என்பதால் சைக்கிளின் ஹேண்டிலை பிடிக்கும்போது கை வலிக்காது . வேறுபட்ட நிலப்பரப்புகளிலும் அதிக கஷ்டமின்றி பயணிக்க முடியும் . விலை 4,750 டாலர்கள் சிறந்த பயணம் பேட்ச் இபைக்   2,100 டாலர்களுக்கு வாங்கும

பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்!

                  பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் ! சைக்கிள் 1817-1880 பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே சைக்கிள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன . அப்படித்தான் இரண்டு , நான்கு சக்கர வண்டிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் பாதுகாப்பான இரு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு நானூறு ஆண்டுகள் தேவைப்பட்டன . 1817 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளர் கார்ல் வான் டிரெய்ஸ் , மரத்தினால் ஆன சக்கரங்களை இணைத்த சைக்கிளை உருவாக்கினார் . இதில் சீட்டும் கூட இருந்தது . 1860 ஆம் ஆண்டு பெடல்களைக் கொண்ட சைக்கிள் உருவானது . இதனை வெலோசிபெட் என்று அழைத்தனர் . இதனை பிரான்சில் உருவாக்கினர் . வடிவமைப்பு ஓகே என்றாலும் சைக்கிள் டயர் கடினமாக இருந்ததால் இதில் பெடல் போடுவது எலும்புகளை உலுக்கும் அனுபவத்தை கொடுத்தது . எனவே இதனை போன்சேக்கர் என்று அழைத்தனர் . பிறகு 1880 இல் உருவாக்கப்பட்ட சைக்கிள் தான் பெடல் அமைப்பும் , செயின் அமைப்பும் இணைந்து சைக்கிளை செலுத்துவதற்கு சமநிலையைக் கொடுத்தது . 1865 பதப்படுத்துதல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உணவு , ப

டென்மார்க்கை தோற்கடிக்க நினைக்கும் பாரிஸ்! - சைக்கிள் சவால்!

படம்
giphy.com சைக்கிள் சொர்க்கம் பாரிஸ்! 1980 களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட சைக்கிள் இன்று பாரிசில் அபரிமிதமாக பெருகியுள்ளன. காரணம், அரசு சூழலுக்கு ஏற்றபடி தன் சட்டங்களை மாற்றி வருவதும். அதற்கேற்ப மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இசைவாக இருப்பதும்தான். கடந்தாண்டு செப்டம்பர் 2018 முதல் நடப்பாண்டு 2019 வரையில் மட்டும் சைக்கிள்களின் 54 சதவீத த்திற்கும் அதிகமாகியுள்ளது. அரசு பல்வேறு இடங்களில் சைக்கிள்களை ஷேரிங் செய்வதற்கான வசதிகளைக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் சைக்கிள் சதவீதம் 62 ஆக உள்ளது. அந்த அளவை எட்ட இன்னும் மக்கள் சைக்கிள் மீது பாசம் காட்டி லட்சுமி, செல்லம்மா என செல்லம் கொஞ்ச வேண்டும். அவ்வளவேதான். ”இப்போது சைக்கிள் ஓட்டுபவர்களைப் பார்த்தால் உங்களுக்கு மாற்றம் நடந்திருப்பதுபோல தோன்றலாம். உண்மையில் காரில் செல்பவர்கள் யாரும் சைக்கிளை அதற்கு மாற்றாக எடுக்கவில்லை. எப்போதும்போல பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவர்கள்தான் சைக்கிளை கையில் எடுத்துள்ளார்கள். பிறரும் தங்களுக்கு ஏற்ற மாசு குறைவான வழியை தேர்ந்தெடுக்கின்றனர். ஒருவர் மட்டும்

சென்னை மாநகராட்சியின் சைக்கிள் பூங்கா

படம்
ஜாலியான சைக்கிள் சவாரிக்கு ரெடியா? செய்தி: சென்னை கார்ப்பரேஷன், விரைவில் சைக்கிள்களை வாடகைக்கு விட 25 சைக்கிள் பூங்காக்களை  அமைக்கவிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக சைக்கிள் பயணங்களை பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் சைக்கிள்களில் மக்கள் பயணிக்க தனிப்பாதைகள், வாடகை சைக்கிள் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் சைக்கிள்களை வாடகைக்கு விடும் ஸ்டார்ட்அப்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. சென்னை கார்ப்பரேஷன் 25 சைக்கிள் பூங்காக்களை அமைக்கவிருக்கிறது. இதன்மூலம்  250 சைக்கிள்களை முதல்கட்டமாக வாடகைக்கு அளிக்க உள்ளது. சைக்கிள் நேச நாடுகள் உலகில் டென்மார்க்கின் கோபன்ஹேகன், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் ஆகிய நகரங்கள் சைக்கிள் பயணங்களுக்கு புகழ்பெற்றவை. சைக்கிள் பயணங்களுக்கேற்ப பாதைகள் இங்கு உண்டு. திட்டம் வெல்லுமா? தமிழக அரசின் நோக்கம், திட்ட அளவில் நன்றாக உள்ளது. ஆனால் நடைமுறையில் நிறைய சிக்கல்களை சந்திக்கவிருக்கிறது. முதலில் சைக்கிளை ஓட்டுவதற்கா