இடுகைகள்

டெல்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரலாற்றை உண்மைகளின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டும் - வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள்

படம்
  வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டால்ரிம்பிள் வில்லியம் டால்ரிம்பிள், டெல்லியைப் பற்றிய நிறைய நூல்களை எழுதியுள்ளார். டெல்லி பல்வேறு வம்ச மன்னர்களின் கதைகளைப் பேசிக்கொண்டே இருக்கும் நகரம். அங்கு எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு மன்னரின் கல்லறை, நினைவுத்தூண் இருக்கும். எழுத்தாளர் வில்லியம், டெல்லியில்   நிஜாமூதீன் கல்லறை அருகில் அறை எடுத்து தங்கியிருந்தார். சிலந்திவலைகள் கட்டிய மூலை, தூசி படிந்த ஜன்னல்கள், கசியும் நீர்க்குழாய்   என வசதிகள் நிறைந்த அறை அது. சிட்டி ஆஃப் ஜின் (1993), தி அனார்ச்சி, வொயிட் முகல்ஸ், ரிடர்ன் ஆப் எ கிங், தி லாஸ்ட் முகல் என தொடர்வரிசையாக நூல்களை எழுதியுள்ளார். 2021ஆம் ஆண்டு ‘கம்பெனி குவார்டர்’ என்ற நூலை எழுதினார். இப்போது இந்து நாளிதழின் இந்து லிட் ஃபார் லைஃப் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அவரிடம் அவரின் அடுத்த நூல், பாட்காஸ்ட், வரலாறு பற்றியும் பேசினோம். நீங்கள் காலத்திற்கு ஏற்ப உங்களை புதுப்பித்துக்கொள்கிறீர்களா? நான் முதல் நூல் எழுதும்போது என்ன செய்தேனோ அதைத்தான் இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனது பேச்சுகள் குறிப்பிட்ட காட்சிப்பரப்பை விளக்கி வரு

வீடு தேடி வந்து வலியைப் போக்கும் தன்னார்வ அமைப்பு - கேன் சப்போர்ட் தன்னார்வ அமைப்பு

படம்
              வலிநிவாரண சிகிச்சைக்கு நாங்க இருக்கோம் - கேன் சப்போர்ட் அமைப்பின் மருத்துவ சேவை இந்திய மாநிலங்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு, அதன் இறப்பு அளவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. புற்றுநோய் தொடக்கத்தில் கண்டுபிடித்தால் தடுக்கலாம் என்பது உண்மை. ஆனால் அறிகுறிகளை கவனிக்காதவர்களுக்கு இறப்பு உறுதி. இறுதிக்கட்டத்தில் புற்றுநோய் காரணமாக ஏற்படும் வலி என்பது நோயாளிகளின் உறவினர்களே பயங்கொள்ளும்படியாக இருக்கும். டெல்லியைச் சேர்ந்த கேன் சப்போர்ட் என்ற தன்னார்வ அமைப்பு, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகரங்களில் வலி நிவாரண சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இந்த தன்னார்வ அமைப்பு திரட்டும் நன்கொடைகள் மூலமே மாத்திரை, சிகிச்சை, நோயாளிக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் வழங்க முடிகிறது. பொதுவாக இந்தியாவில் தற்போது மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் என்பது ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை, மருந்துகள் என்பது ஏழைக் குடும்பங்களை கடன் வலையில் சிக்க வைத்துவிடும். இப்படி வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று மருந்து, மாத்தி

கரும்பருந்தின் வாழ்க்கை பற்றி அறியும் ஆய்வு!

படம்
  கரும்பருந்து கரும்பருந்துக்குப் பாதுகாப்பு!  இயற்கைச்சூழலில் கரும்பருந்தின் (Milvus migrans) பங்கு,குப்பைகளைத் தூய்மைப்படுத்துவதுதான். டில்லியைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரி  இளைஞர்,நிஷாந்த்குமார். இவர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள குப்பைக்கிடங்குகளை அடிக்கடி பார்ப்பார். அங்கு இரைதேட வரும் கரும்பருந்துகள் வானில் வலம் வரும் காட்சி அவருக்கு பிடித்தமானது. ஆனால் இப்படி அவர் பார்வையில் படும்  கரும்பருந்துகளின்  எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. உண்மையில் கரும்பருந்துகளுக்கு என்னவானது என்ற கேள்வியே 2009ஆம் ஆண்டு,கரும்பருந்து பாதுகாப்பு திட்டத்தை (black kite project ) ஊர்வி குப்தா என்பவரோடு சேர்ந்து தொடங்கவைத்தது.  இந்த திட்டத்திற்கான உதவிகளை வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வழங்குகிறது. பொதுவாக குப்பைக்கிடங்குகளில் காணும் சிறிய பருந்துகள்,(Small indian kites)  கரும்பருந்தின் இனத்தைச் சேர்ந்த துணைப்பிரிவைச் சேர்ந்தவை. டில்லியில் கரும்பருந்துகளுக்கான உணவில் குறையேதும் இல்லை. டில்லியின் தொன்மையான நகரப்பகுதிகளில் முஸ்லீம்கள், கரும்பருந்துகளுக்கென இறைச்சித்துண்டுகளை உணவாக வீசி வருகிறார்கள். இ

கவிதைகளின் நகரமாக டெல்லி எனக்கு பிடிக்கும்! - விமானி மார்க்

படம்
  மார்க் வான்ஹோனாக்கர்  விமானி, எழுத்தாளர்  சிறுவயதிலிருந்து வானத்தில் விமானம் ஓட்ட அசைப்பட்டவர்தான் மார்க். இப்போது அங்கே இங்கே என அலைந்து ஒருவழியாக காக்பிட்டில் உட்கார்ந்துவிட்டார். கூடுதலாக கிடைத்த நேரத்தில் ஸ்கை ஃபேரிங் என நூலை வேறு எழுதிவிட்டார். அதுதான் முதல் நூல். பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்றவர், அந்த அனுபவங்களை காதல் கடிதம் போல எழுதிய நூல்தான் இமேஜின் எ சிட்டி என்ற நூல். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  உங்களுக்கு பிடித்தமான விமானநிலையம் எது? மும்பையின் டெர்மினல் 2 என்பது எனக்கு பிடித்தமான இடம்.  2007இல் விமானத்தை முதல்முறையாக ஓட்டும்போது மும்பைக்குத் தான் ஓட்டிச்சென்றேன். இதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. டெல்லி விமானநிலையமும் எனக்கு பிடித்தமானது.  பிடித்தமான நேரம்? இரவில் விமானத்தில் பறப்பது பிடித்தமானது. அப்போது வானம் நிறைய நட்சத்திரங்கள் இருக்கும். அந்த நேரத்தில் கீழே பார்க்கும்போது நகரங்கள் ஒளிவிட்டபடி இருக்கும். சாலைகளிலிலும் பிரகாசம் தெரியும்.  பொதுவாக கார் ஓட்டுநர்களுக்கு பிறர் கார் ஓட்டி தான் உட்கார்ந்து வருவது பிடிக்காது. உங்களுக்கு எப்படி? ந

சீக்கியர்களை கொன்ற சம்பவங்களை நானே நேரடியாகப் பார்த்தேன்! - எழுத்தாளர் எம் முகுந்தன்

படம்
        எழுத்தாளர் எம் . முகுந்தன்   நேர்காணல் எம் . முகுந்தன் டைம்ஸ் ஆப் இந்தியா கே பி சாய் கிரண்   பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்ற டெல்லி வந்தவர் , அந்த நகரைப் பற்றிய நூல்களை எழுதியுள்ளார் . டெல்லி எ சாலோக்யூ என்ற நூலை எழுதி நடப்பு ஆண்டிற்கான ஜேசிபி இலக்கிய விருதை வென்றுள்ளார் . நீங்கள் டெல்லி பற்றி டெல்லி , டெல்லி 1981, டெல்லி என சாலிக்யூ என்ற நூல்களை எழுதியுள்ளீர்கள் . நீங்கள் வெளியிலிருந்து வந்து டெல்லியில் குடியேறி வெகு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறீர்கள் . உங்கள் பார்வையில் டெல்லியைப் பற்றிய கருத்து என்ன ? அறுபதுகளில் நான் டெல்லிக்கு வந்துவிட்டேன் . அடுத்த நாற்பது ஆண்டுகளில் நகரம் ஏராளமான மாற்றங்களை சந்தித்துள்ளது . இதனை நான் வெளிப்புற தன்மையில் மட்டும் கூறவில்லை . கலாசாரம் சார்ந்தும் பேசுகிறேன் . அன்றைய காலத்தில் நகரமாக இருப்பதை விட பல்வேறு கிராமங்களின் இணைப்பு புள்ளியாகவே நகரம் இருந்தது . முபாரக்பூரில் கோதுமையும் காலிப்ளவரும் ஏராளமாக விளைந்து வந்த்து . எருமைகளும் இங்கே சாலைகளில் ஏராளமாக உலவி வரும் . இப்போது டெல்லியில் வன்முறையும் குற்றங்களும் அ

மோ(ச)டிகளின் தலைநகரம் டெல்லி!

படம்
  மோசடிகளின் தலைநகரம் டெல்லி! 2020ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பத்தொன்பது நகரங்களில் பணமோசடிகள் எங்கு அதிகம் நடைபெறுகிறது என ஆய்வு செய்யப்பட்டது. இதில் தேசிய குற்ற ஆவணகத்தின்  தகவல்படி டெல்லி முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் என்ற தலைப்பில் இந்த அறிக்கை கடந்த வாரம் வெளியானது.  பொருளாதார மோசடி சார்ந்து டெல்லியில் மட்டும் 4,445 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கடுத்த இடத்தில் மும்பை 3,927 குற்றங்களுடன் உள்ளது. ஜெய்ப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்து 3,127 குற்றங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் குற்றங்களின் அளவு என்பது ஜெய்ப்பூரில் 10.4 சதவீதமாக உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் 2.72, 2.13 சதவீதமாக உள்ளது. பாட்னா, லக்னோ, ஹைதராபாத் ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.  மொத்த வழக்குகளில் 44.5 சதவீத த்திற்கு டெல்லி காவல்துறையினர் சார்ஜ்ஷீட் பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக டெல்லியின் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதன் காரணமாக பொருளாதார குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  நொய்டா, காச

விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும்!

படம்
  விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும் கடந்த சில மாதங்களாக பாஜக அரசு ஆளும் ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வேகம் பெற்றுள்ளது. இதனை முடக்க அந்த மாநில அரசு இணையத்தை துண்டித்தது. தங்களது உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது, தேச துரோக வழக்கு போடப்பட்டது. தடியடி நடத்தி விவசாயிகளை காவல்துறையினர் தாக்கினர். ஆனாலும் கூட விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இதெல்லாம் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசின் சதி என ஊடகங்களில் பேட்டி தட்டி விட்டுக்கொண்டிருக்கின்றனர்.  என்னதான் பிரச்னை? ஹரியானா அரசு, ஜாட் அல்லாதவர்களின் வாக்குகளை கணக்கு செய்து போராட்டத்தை முக்க நினைக்கிறது. ஒருவகையில் இப்படி போராட்டத்தை முடக்குவதும் கூட பிரித்து ஆளும் தந்திரம்தான். பின்னாளில் இவர்கள் ஜாட் இனத்தவர், ஜாட் அல்லாதவர் என வாக்குவங்கி பிரியும் என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் பிரமோத் குமார். மத்திய அரசும் தன் பங்குக்கு விவசாயிகள் போராட்டத்தை தீவிரவாத த்துடன் இணைத்து பார்த்து பேசி வருகிறது. ராம் ராம் என்று கூறுபவர்களை எப்படி நீங்கள் காலி

நளபாக ருசியில் எழுதப்பட்ட கட்டுரைகள்! - பாட்டையாவின் பழங்கதைகள் - பாரதி மணி

படம்
                  பாட்டையாவின் பழங்கதை பாரதி மணி வாசகசாலை உயிர்மையில் பாரதிமணி தொடராக எழுதிய கட்டுரைகளை வாசித்தவர்கள் யாரும் சுவாரசியமான கட்டுரைகளை தவறவிட மாட்டார்கள் . இந்த நூலில் மொத்தம் பதினான்கு கட்டுரைகள் உள்ளன . இவைதவிர பேஸ்புக்கில் எழுதிய சிறு பத்திகளும் உள்ளன . பாரதிமணி எழுதிய கட்டுரைகள் பேஸ்புக் பதிவுகளை சிறப்பானவையாக வந்துள்ளன என்பதை வாசகர்கள் உணர முடியும் . க . நா . சுவின் மகளான ஜமுனாவை திருமணம் செய்த சம்பவங்களை விளக்கும் கட்டுரை பிரமாதமாக உள்ளது . ஒருவர் எந்த சூழ்நிலையிலு்ம் தனது நேர்மையையும் நாணயத்தையும் கைவிடாமல் இருந்தால் அவருக்கு எந்த ஆபத்தான நிலையிலும் துணைநிற்கும் நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதற்கு வழக்குரைஞர் அகுஜாவே சான்று . தி . ஜானகிராமன் பற்றிய கருத்துகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன . எது அவருடைய சிறந்த நாவல் என்ற சர்ச்சை இன்றைய வரைக்கும் உள்ளது . விமர்சனங்களையும் அதை எப்படி அவர் எடுத்துக்கொண்டார் என்பதையும் வாசிப்பின் சுவாரசியம் குறையாதபடி பாட்டையா எழுதியுள்ளார் . பிரண்டையை வயிற்றில் கட்டு

தலைநகரான டெல்லியை சட்டங்களால் குதறும் மத்திய அரசு! - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊதாசீனப்படுத்தப்படும் வரலாற்று களங்கம்!

படம்
          ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்     மத்திய அரசு, மெல்ல தனது கட்சி ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாநில உரிமைகள் மெல்ல பறிபோகத்தொடங்கியுள்ளன. இதில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள மாநிலங்கள் கூட விதிவிலக்கின்றி அனைத்து சமாச்சாரங்களும் டெல்லி மூலமே தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரே பிரதமர் ஒரே நாடு என்று கூறும்படி பிற அதிகாரிகள், ஏன் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் கூட செல்லாக்காசு நிலைக்கு மாறி வருகிறார்கள்.   இதற்கு சாட்சிதான் அண்மையில் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் இதன் காரணமாக அங்கு மக்களால் தேர்ந்தெடுக்ககப்பட்டு ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கு இனி எந்த அதிகாரங்களும் இருக்காது. வகுப்பறையில் இருக்கும்போது பாத்ரூம் செல்ல ஆசிரியரிடம் அனுமதி கேட்பது போலவே சாலை, கல்வி, மருத்துவம் என அனைத்து விஷயங்களூக்கும் ஆளுநரின் தலையசைப்பிற்கு யூனியன் பிரதேச முதல்வர் காத்திருக்க வேண்டி வரும்.  அதன் பொருள், இனிமேல் அங்கு தேர்தல் தேவையில்லை

தொடக்க நிலை சுகாதாரம் - உயர்ந்து நிற்கும் டெல்லி

படம்
2015ஆம் ஆண்டு டெல்லி அரசு மொகல்லா மருத்துவச் சேவையைத் தொடங்கியது. நடப்பு ஆண்டுவரை 40 லட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். பல்வேறு நோய் கண்டறியும் சோதனைகளும் அவசியமான மருந்துகளும் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது, தொடக்கநிலை மருத்துவச் சேவைகள் என்பதை மட்டும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அக்டோபர் 20 வரை 300ஆக இருந்த மொகல்லா மருத்துவமனைகளின் எண்ணிக்கை விரைவில் கூடவிருக்கிறது.  மக்கள் முடிந்தவரை நோயுடன் அதிக தொலைவு நடக்ககூடாது. எளிமையாக அவர்களுக்கு மருத்துவம் கிடைக்கவேண்டும். சாதாரண மனிதர்கள் அரசியலுக்கு வந்தால்தான் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கும் என்று ஒருவாறு பேசி மக்கள் நலனிலிருந்து அரசியலுக்கு பைபாஸ் ரூட்டில் சென்று முடித்தார். இந்த சிறு மருத்துவமனைகளை நாம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் ஒப்பிடலாம். டெல்லி அரசு இலவச பேருந்து வசதி, மொகல்லா மருத்துவமனைகளை சொல்லி வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மொகல்லா மருத்துவமனைகளில் 60 ஆயிரம் மதிப்புள்ள நோய் கண்டறியும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, நீரிழிவு நோய

ஆசிரியரிடம் நான் சொன்ன பொய் - அனுபம்கேரின் குரு மரியாதை!

படம்
பாஜக ஆதரவாளர், படுகொலைகளை ஆதரிப்பவர்  என பல தூற்றுதல்கள் இருந்தாலும் நாடகம், சினிமா கதாபாத்திர விஷயங்களில் அனுபம் கேரின் திறமையை யாரும் மறுக்க முடியாது. அப்படி கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிப்பவர், டெல்லி நாடகப்பள்ளியின் முன்னாள் மாணவர். சிம்லாவைச் சேர்ந்த சிறுவன் உலகப் புகழ்பெற்ற திரை நட்சத்திரமாக உருவாகிறார் என்பது புதுமையான ஒன்றுதானே. பத்து வயதில் எனது வாழ்க்கையை எழுதி வைக்கத் தொடங்கினேன். எனது வாழ்க்கையை நூல் வடிவில் மக்களுக்கு வழங்கவே விரும்பினேன் என்று கூறியுள்ளார். 1955 ஆம் ஆண்டு பிறந்த அனுபம் கேர், இன்று 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்கு பரிசாக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் அண்மையில் தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இதில் தேசிய நாடகப்பள்ளி காலத்தில் தனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்பகுதி பிரமாதமாக எழுதப்பட்டுள்ளது. நாடகம் பற்றிய ப்ராஜெக்ட். ஆசிரியரிடம் கொடுக்க வேண்டிய நேரம். ஆனால் என்ன காரணத்தாலோ அனுபமால் எழுத முடியாமல் போய்விடுகிறது. ஆனால் குறிப்பிட்ட வகுப்பிற்கான ஆசிரியர் உறுதியாக சொல்லிவ