இடுகைகள்

மாலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வலதுசாரிகளின் கொடுங்கனவாக மாறிய காந்தி - கடிதங்கள்

படம்
  விவாதங்களின் மையப் பொருளாக இன்றும் காந்தி அன்புள்ள முருகு அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? காந்தி பற்றி மாலன் எழுதியதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொள்கையை தன் உடலாகவே மாற்றிக்கொண்டு போராடிய காந்தி இன்றும் விவாதங்களின் மையமாகவே இருக்கிறார்.  கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லை. காய்ச்சல், பேதி என்று நிலைமை தீவிரமாக இருந்தது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். இன்னும் சிகிச்சைகள் முழுமையாக நிறைவு பெறவில்லை.  நாகரிகங்களின் மோதல் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாதகமானது. கட்டுரை நூலுக்காக விகடனின் விருது பெற்ற நூல் இது.  எங்களது இதழ், பல்வேறு நகரங்களில் மாணவர்களுக்கான வினாடிவினா போட்டிகளை நடத்தி வருகிறது. இதுதொடர்பான செய்திகளை வெளியிடச்சொல்லி ஆசிரியர் கூறுகிறார். இதனால் இதழ் தயாரிப்பு வேலைகள் நேரடியாக எனது தோளில் விழுந்து விடுகிறது. டைபாய்டு காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதனை எடுக்கவேண்டியுள்ளது. ஹீவெய் பற்றிய நூலை வாசிக்க நன்றாக உள்ளது. சாதாரண நிறுவனமாக தொடங்கி இன்று 5 ஜி வசதியை பிற நாடுகளுக்கு கொடுக்கும் வகையில் நிறுவனம்

மாலனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? - அந்திமழை வெளியீடு

படம்
எந்த இடத்தையும் அடைய அல்ல , சும்மா நடக்கவே விரும்புகிறேன் மாலன் அந்திமழை மூத்த பத்திரிகையாளரான மாலனை, அந்திமழை இளங்கோவன் அடையாளம் கண்டு  நேர்காணல் செய்துள்ளார். அவரின் முன்னாள், இந்நாள் எதிர்கால திட்டங்களை இந்த நூலில் நாம் நிதானமாக வாசித்து அறிய முடிகிறது. வங்கி அதிகாரியின் மகனாக பிறந்த மாலன், பின்னாளில் குங்குமம், தினமணி, இந்தியா டுடே, குமுதம், புதிய தலைமுறை, சன் டிவி என பல்வேறு ஊடகங்களில் சாதித்தவர். பல்வேறு புதிய முயற்சிகளை திறம்பட செய்தவர். இன்று மாலன் சமூக வலைத்தளங்களில் எழுதும் விஷயங்களின் சார்பு நிலை பற்றிய குறிப்பும் இந்த நூலில் ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. அது சரியா, தவறா  என்பது வாசிப்பவர்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். மாலனின் பாரதி பாசம், தினமணியில் செய்த மாற்றங்கள். அதன் கேப்ஷனை வடிவமைத்தது என நுணுக்கமான தகவல்கள் இதில் நிறைந்துள்ளன. குங்குமத்தில் சாவியின் நட்பு, திசைகளின் தொடக்கம், அதில் செய்த புதுமைகள், சுஜாதாவுடனான நட்பு,  திசைகளின் அட்டைப்பட மாற்றங்கள் என பல்வேறு விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. இந்தியா டுடே பத்திரிகையில் செய்திகளோடு சிறுகதைகளும் கொண