மனநல குறைபாடு கொண்ட தம்பியின் பெயரில் கொலைகளை செய்யும் போலீஸ் அதிகாரி அண்ணன்!
ஹரே ராம் - கல்யாண் ராம், பிரியாமணி ஹரே ராம் கல்யாண்ராம் 1,2, பிரியாமணி இரு பிள்ளைகள். ஒருவன் மென்மையானவன். இன்னொருவன் பிறப்பாலே வன்முறை எண்ணம் கொண்டவன். வன்முறை என்பதற்காக சீரியல் கொலை செய்பவன் அல்ல. யாராவது அவனை தூண்டிவிட்டால் எரிச்சல் ஊட்டினால் அவர்களை சும்மா விடுவதில்லை. மாறுகை மாறுகால் வாங்கும் அளவுக்கு கோபம் கொண்டவனாக இருக்கிறான். மனநல குறைபாட்டை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். அதுதான் படத்தின் பெரும் குறை. ஹரி நிதானமானவன், ராம் வன்முறையான ஆள். அம்மாவுக்கு இரு பிள்ளைகளும் முக்கியம். எனவே, தனது இரட்டையர்களாக பிறந்தவர்களைக் காக்க தானே ராமைக் கூட்டிக்கொண்டு தனியாக செல்கிறாள். அவளது கணவர் ஹரியை வளர்க்கிறார். ராமை திட்டியதால் மனைவி பிரிந்துபோனாள் என மனம் கலங்கி உடல் நலம் கெட்டு இறக்கிறார். நகரில் ஹரி உதவி கமிஷனராக உள்ளார். அங்கு சில நாட்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வரும் பத்திரிகையாளர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அதை முதலில் தற்கொலை என அனுமானித்தாலும் ஹரி அது கொலை என்று கூறி சந்தேகங்களை அடுக்கிறார். அடுத்து, அரசியல்வாதியின் மருத்துவர் தம்பி ஒருவர் அவரது ம