இடுகைகள்

வைரஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநல குறைபாடு கொண்ட தம்பியின் பெயரில் கொலைகளை செய்யும் போலீஸ் அதிகாரி அண்ணன்!

படம்
  ஹரே ராம் - கல்யாண் ராம், பிரியாமணி ஹரே ராம் கல்யாண்ராம் 1,2, பிரியாமணி இரு பிள்ளைகள். ஒருவன் மென்மையானவன். இன்னொருவன் பிறப்பாலே வன்முறை எண்ணம் கொண்டவன். வன்முறை என்பதற்காக சீரியல் கொலை செய்பவன் அல்ல. யாராவது அவனை தூண்டிவிட்டால் எரிச்சல் ஊட்டினால் அவர்களை சும்மா விடுவதில்லை. மாறுகை மாறுகால் வாங்கும் அளவுக்கு கோபம் கொண்டவனாக இருக்கிறான். மனநல குறைபாட்டை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். அதுதான் படத்தின் பெரும் குறை. ஹரி நிதானமானவன், ராம் வன்முறையான ஆள். அம்மாவுக்கு இரு பிள்ளைகளும் முக்கியம். எனவே, தனது இரட்டையர்களாக பிறந்தவர்களைக் காக்க தானே ராமைக் கூட்டிக்கொண்டு தனியாக செல்கிறாள். அவளது கணவர் ஹரியை வளர்க்கிறார். ராமை திட்டியதால் மனைவி பிரிந்துபோனாள் என மனம் கலங்கி உடல் நலம் கெட்டு இறக்கிறார்.   நகரில் ஹரி உதவி கமிஷனராக உள்ளார். அங்கு சில நாட்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வரும் பத்திரிகையாளர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அதை முதலில் தற்கொலை என அனுமானித்தாலும் ஹரி அது கொலை என்று கூறி சந்தேகங்களை அடுக்கிறார். அடுத்து, அரசியல்வாதியின் மருத்துவர் தம்பி ஒருவர் அவரது ம

பசுக்களைத் தாக்கி பால் சுரப்பைக் குறைத்து கொல்லும் எல்எஸ்டி நோய் - பாதுகாப்பது எப்படி?

படம்
            பசுக்களைக் காப்பாற்றுங்கள் - தலித்துகளுக்கு எதிரான கட்டுரை அல்ல கால்நடைகளை தாக்கும் வைரஸ் நோய்  வேகமாக வட இந்தியாவில் பரவி வருகிறது. அதன் பெயர் எல்எஸ்டி. போதை வஸ்தாது பெயர் என்பதால் அதே அளவுக்கு கிளுகிளுப்பாக இருக்கும் என நினைக்கவேண்டாம். இது பசுக்களை கொன்று வருகிற வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர். லம்பி ஸ்கின் டிசீஸ் என்பதுதான் எல்எஸ்டிக்கான விளக்கம். கார்பிபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த வைரஸ் இந்நோயை ஏற்படுத்துகிறது. உணவு, நீர் ஆகியவற்றில் ஏற்படும் கலப்படம் மற்றும் பூச்சிகள், கொசு, உண்ணி ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய் கால்நடைகளுக்கு குறிப்பாக பசுக்களுக்கு பரவுகிறது. நோய் பரவி முதிர்ச்சி அடையும் காலம் 4 முதல் 14 நாட்கள். பசுக்களின் நிணநீர் கணுக்கள் வழியாக கிருமிகள் பரவி பசுக்களைப் பாதிக்கின்றன. அறிகுறிகள் என்னென்ன? உடல் வெப்பம் அதிகரிப்பு, சரியாக சாப்பிட முடியாது, பால் சுரப்பு குறைந்துவிடும், மூக்கில் நீர் வடிவது, எடை குறைவு ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், மகாராஷ்டிரா, உ.பி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தி அத

நோயை எதிர்க்கும் போராட்டத்தில் தன்னை உணர்ந்துகொள்ளும் தந்தையின் கதை! ட்ரெயின் டு பூஸன்

படம்
  டிரெய்ன் டு பூஸன் 2016 Director:  Yeon Sang-ho Sequel:  Peninsula கொரியப் படம். ஜோம்பிகளை மையமாக கொண்ட படம்தான். படம் ஜோம்பிக்கான காரணம், அதன் வைரஸ், அதன் வெவ்வேறு வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசவில்லை. ஜோம்பிகள் தாக்கும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்திருக்கிறார்கள். இப்படி உணர்ச்சிகளோடு சிறப்பாக ஒன்று சேர்வதால் படம் மகத்தான வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.  காங் வூ, டான் லீ ஆகியோர் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காங் வூ, நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கிறார். குழந்தை அவருடன் இருக்கிறது. காங் வூ தனது தாய், குழந்தையுடன் ஒரே வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது மகளுக்கு பிறந்த நாள் வருகிறது. மகள், அம்மாவைப் பார்க்க போகலாம். அதுதான் எனது ஆசை என்கிறாள். இதனால், அவளை பூஸன் நகருக்கு ரயிலில் கூட்டிச்செல்கிறார் காங் வூ. அப்படி போகும்போது ரயிலில், ஜோம்பி பெண் ஒருவர் ஏறிவிடுகிறார். கூடவே ரயில் பணியாளர் பெண் ஒருவரைக் கடித்துவிடுகிறார். இதனால் ரயில் முழுக்க ஜோம்பிகள் பெருக, இருபது பேர் மட்டுமே இதில் பிழைக்

மூக்கைச் சுரண்டி தின்னுவது சரியா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  மியூகோபேஜி - மூக்கைச் சுரண்டி தின்னுவது பதில் சொல்லுங்க ப்ரோ? பட்டாம்பூச்சி தான் புழுவாக இருந்ததை நினைவுகொண்டிருக்குமா? இது அறிவியலாளர்களுக்கே புரியாத புதிர்தான். புழுவாக இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாறும் நிகழ்ச்சியே வினோதமானது. புழுவை வைத்து செய்த அண்மைய ஆய்வில் வண்ணத்துப்பூச்சியாக ஆனாலும் கூட தான் புழுவாக இருந்த நிலையை மனதில் கொண்டிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  மூக்கிலுள்ள சளியை எடுத்து தின்பதை நான் ரசித்து செய்கிறேன். இது என் ஆரோக்கியத்தை கெடுக்குமா? மூக்கின் உள்ளே வரும் திரவம், காற்றிலிருந்து மூக்கினுள் செல்லும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை பிற நுண்ணுயிரிகளைத் தடுக்கிறது. அந்த திரட்டை எடுத்து சாப்பிட்டால் அவை உடலுக்குள் சென்றால் ஆபத்துதானே? குழந்தைகள் அறியாமல் செய்யலாம் ஆனால் வயது வந்தவர்கள் இதனை அறியாமலும் செய்யக்கூடாது. சளித்திரட்டை தின்பதை அறிவியல் ரீதியாக மியூகோபேஜி என்பார்கள். இதனை ஒரு பழக்கமாக கைக்கொண்டால் ரைனோடிலேஎக்ஸோமேனியா என்று கூறலாம்.  பிபிசி சயின்ஸ்போகஸ்

அடுத்த பெருந்தொற்று எதன் மூலம் பரவ வாய்ப்புள்ளது? - ஆராய்ச்சி சொல்லும் உண்மை

படம்
                அடுத்த பெருந்தொற்றின் ஊடகம் ! அடுத்த பெருந்தொற்று எந்த பறவை அல்லது விலங்குகளிடமிருந்து பரவ வாய்ப்பிருக்கிறது என தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர் . . கோவிட் -19 பெருந்தொற்று பரவிய வேகத்தில் மக்களை பலிகொண்டதோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது . வைரஸ் , பாக்டீரியாக்கள் இல்லாத இடமே கிடையாது . ஒரு குண்டூசி முனையில் நூறு கோடி நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நோயியல் வல்லுநர்கள் . அடுத்த பெருந்தொற்று எந்த உயிரினம் மூலம் பரவும் என்பதைக் கண்காணிக்கும் பணியை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர் . இதன்மூலம் 2019/20 இல் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னமே கண்டறிந்து தடுக்க முடியும் . காடுகள் , மனிதர்களின் உடல்நலம் , சூழல் ஆகிய மூன்றுமே பின்னிப்பிணைந்தவை .. மக்கள்தொகை பெருக்கம் அதிகரிக்கும்போது காடுகளில் வாழும் விலங்குகளோடு மனிதர்கள் தொடர்புகொள்ள நேருகிறது . இதன்விளைவாக நோய்த்தொற்று எளிதாக பரவுகிறது . இதில் முழுக்க விலங்குகளை குற்றம்சாட்ட முடியாது . ஆனால் அவற்றின் தொடர்பு வழியாக நோய்த்தொற்று எளிதாக பரவும்

கடல் பகுதியில் வாழும் வைரஸ்கள்!

படம்
  கடல் வைரஸ்கள்!  கடற்கரையில் நீச்சலடித்து குளிக்கும்போது, கடல்நீரை நீங்கள் குடிக்காமல் இருக்கமுடியாது. அந்த நீரில் இரண்டு லட்சம் கிருமிகள் வாழ்வதாக  ஆய்வாளர் குழு கூறியுள்ளது.  நீரில் நுண்ணுயிரிகள் வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் அவற்றின் எண்ணிக்கை பற்றி பலரும் ஆர்வம் கொண்டது 2015 ஆம் ஆண்டுதான். அப்போது, கடல் ஆராய்ச்சிக்குழு ஒன்று, 5,476 என்ற எண்ணிக்கையிலான வைரஸ்கள் கடல் நீரில் இருப்பதாக கண்டறிந்து கூறியது.  அடுத்த ஆண்டே அக்குழு, கடல் நீரிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 என்று அறிவித்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. பனிரெண்டு சதவீத அதிக வளர்ச்சி இது.  இது அழகான பிரமிக்க வைக்கும் ஆய்வு என்றார் நார்த் கரோலினா க்ரீன்ஸ்போரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரி வல்லுநர் லூயிஸ் மேரி போபே. உலகம் முழுக்க எழுபது சதவீதமுள்ள கடல்நீரை ஆராய்வது சாதாரண காரியம் அல்ல. 2015 -2016 ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதிகளில் 43 இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.  தாரா ஓசேன் ப்ராஜெக்ட்ட

நுண்ணுயிரிகள் கண்காணிப்பு!

படம்
  நுண்ணுயிரிகள் கண்காணிப்பு ஆஸ்திரேலியாவில் நிலம், நீர் உள்ளிட்டவற்றிலுள்ள நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சைகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் லேமா முயற்சித்து வருகிறார். இவர், பாசிகள் எப்படி நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பாசிகள் வெளியிடும் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார் கிம்.  நுண்ணுயிரிகளின் டிஎன்ஏக்களைத் தொகுத்து அதனை வரிசைப்படுத்த தொடங்கியுள்ளார். இம்முறையில் 1.7 மில்லியன் பாக்டீரியா, 1.2 மில்லியன் பூஞ்சைகள் ஆகியவற்றோடு பிறவகை நுண்ணுயிரிகள் 1.8 மில்லியன் அளவில் இணைக்கப்பட்டு மக்கள் அணுகும் தகவல்தளமாக இதனை உருவாக்கி வருகிறார். நுண்ணுயிரிகளை ஆவணப்படுத்தும் பணியில் 40 அறிவியல் அமைப்புகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதன் மூலம் வெப்பமயமாதலின் தாக்கத்தை அறிவதோடு, நுண்ணுயிரிகளை எப்படி வாழ்க்கைமுறையை மாற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்ற புத்திசாலித்தனமும் இதில் உள்ளது.  மாசுபடுதலை நுண்ணுயிரிகள் மூலம் எப்படி தடுக்கலாம் என்பதற்கும் இவற்றின் டிஎன்ஏக்களை ஆவணப்படுத்த

அரசும் தனியாரும் இணைந்து பணிபுரிய வேண்டும்!

படம்
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பத்து இத்தாலியர்களில் ஒருவர் குணமாகி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்கள் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மருத்துவமனை தலைவர் நரேஷ் திரேகானிடம் பேசினோம். அரசும் தனியாரும் இணைந்து மருத்துவத்துறையில் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறதே? கொரோனா போன்ற சூழல்களில் அரசிடம் கூட போதுமான படுக்கை வசதிகள், மருந்துகள், தங்கும் அறைகள் இருக்காது. இச்சூழலில் தனியாரின் மருத்துவ வசதிகளை அரசு பயன்படுத்திக்கொள்ள முடியும். சரியான மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள், வெண்டிலேட்டர் ஆகியவை நம்மிடம் போதுமான அளவு இல்லை. கொள்ளைநோய் சிகிச்சைக்கான செலவும் அதிகம். எனவே, முடிந்தவரை நோய் யாருக்கும் அதிகம் பரவாமல் இருந்தால் மட்டுமே பாதிப்பு குறைவாக இருக்கும். அதற்காகத்தான் அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இப்போது பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு சிகிச்சை செய்துள்ளீர்கள். இதிலிருந்து  பலருக்கும் சிகிச்சை செய்வதற்கான திறனை பெற்றுவிட்டீர்களா? நாங்கள் இப்போதுதான் இந்த நோயை சமாளிப்பதற்கான

கொரோ்னா ஏற்படுத்திய பொருளாதார இழப்பு!

படம்
SCMP கொரோனா பாதிப்பால் சென்னை மாவட்டத்தை விட்டு பிழைக்க வந்த அத்தனை பேரும் உயிர்பயத்துடன் ஊரைப்பார்த்து ஓடி வருகின்றனர். இதில் தொழிலாளர்கள்தான் அதிகம். வட இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ரயில்தான். அவர்கள் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்து கிடக்கிறார்கள். நூறு பேர் போகமுடியும் பதிவு செய்யப்படாத பெட்டியில் முன்னூறு பேர்களை அடைத்து பெருமைப்படுகிறது இந்திய ரயில்வே. தொழிலாளர்கள் உயிர்ப்பயத்துடன் ஓடினாலும், முதலாளிகள் ஓட முடியாது. பலரும் கொரோனாவினால் சரிந்தி தொழிலை தடுமாற்றத்துடன் நடத்தி வருகின்றனர். கொரோனா பீதியால் மால்கள், சினிமா தியேட்டர்கள், புகழ்பெற்ற உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை தினத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பலரும் ஆட்களை நீக்கி வருகின்றனர். பிரதமரே சொன்னாலும் வேலை இல்லாதபோது ஆட்களுக்கு சம்பளத்தைக் கொடுப்பது சாத்தியம் கிடையாது என்பதே உண்மை. தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சதவீதம் கடந்த பதினொரு ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும். 2016ஆம் ஆண்டு

தனிமைப்படுத்தலால் பிரபலமான எழுத்தாளர்கள்!

படம்
giphy நோய் தாக்காமல் தனியாக இருக்கச்சொல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. உற்சாகமாக வேலை பார்க்கும் மனிதர்களையும் இந்த காலகட்டம் சோம்பேறிகளாக்கி விடக்கூடும். இதனால் இப்படி நோய் பரவிய,  போர் காலகட்டங்களில் சாதனைகள் படைத்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் பற்றிய செய்திகள் இதோ.. ஷேக்ஸ்பியர் தனது கிங் லியர் எனும் படைப்பை எழுதும்போது நோய்களுக்கு பயந்து தனிமையில் இருந்தார். அப்போது வெளியில் பிளேக் நோய் வேகமாக பரவி வந்தது. அப்பாதிப்பிலிருந்து தப்பிக்க நினைத்தார் ஷேக்ஸ்பியர். அப்போது அரசு பொது இடங்கள் அனைத்தையும் மூடியிருந்தது. இதனால் இவர் பங்குதாரராகவும், எழுத்தாளராகவும் இருந்த கிங் நாடக கம்பெனியை நடத்த முடியவில்லை. இக்காலகட்டத்தில் கிங் லியர், மேக்பத், ஆன்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகிய படைப்புகளை எழுதி முடித்தார். ஐசக் நியூட்டன்  இவர் ஷேக்ஸ்பியருக்கு பின்னர் இதே போல தனியாக இருந்து அறிவியல் சாதனைகளை செய்தார். 1665ஆம்ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்த ஐசக் நியூட்டனுக்கு சோதனை பிளேக் வடிவில் வந்தது. அப்போது அவருக்கு இருபது வயது. கேம்பிரிட்ஜ் பல்கலையில் வகுப்புகள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்த

கொரோனாவை ஒழிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உதவுமா?

படம்
கொரோனாவுக்கு பல்வேறு மருந்துகள் கண்டறிய உலகம் முழுக்க ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். வைரஸ்களின் டிஎன்ஏ மாற்றிக்கொள்ளும் இயல்பால் அதனை அழிப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. எந்தெந்த வேதிப்பொருட்களை சேர்த்தால் வலிமையான மருந்தாக உருவாக்க முடியும் என சூப்பர் கணினியை நம்புகின்றனர் ஆய்வாளர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகம், சுமித் எனும் சூப்பர் கணினியை தங்களது ஆய்வுக்காக அணுகியுள்ளது. ஐபிஎம்மின் சூப்பர் கணினி எழுபதிற்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை ஒன்றாக கலந்து கொரோனாவிற்கான மருந்தை கூறியுள்ளது. சாதாரணமாக ஆய்வகங்களிலேயே மருந்துகளை கண்டுபிடிக்காமல் ஏன் கணினி மூலம் மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள்? காரணம், சாதாரணமாக ஆய்வு செய்து கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். வேதியியல் மற்றும் இயற்பியல் தெரிந்த நிபுணர்கள் மூலம்தான் நாங்கள் கணினிக்கான தகவல்களை உருவாக்கியுள்ளோம். வெறும் புரதங்களை மட்டும் கணினி கூறாமல் எந்த வேதிப்பொருட்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூட கணினி வரிசைப்படுத்தியுள்ளது என்கிறார் ஐபிஎம் கணினியைச் சேர்ந்த டேவ் துரக். நன்றி - டிஜிட்டல் டிரெண்ட்ஸ்

கோடையில் கொரோனா பரவுமா?

படம்
giphy கொரோனா இறப்பில் இத்தாலி சீனாவை முந்தி முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது. இறப்பை தடுக்க முடியுமா என்பதை விட பரவுவதை தடுக்கவே ஆராய்ச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். அதனால் பல்வேறு சூழல்களில் கொரோனா வைரஸ் பரவுமா என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்து வருகின்றனர். உடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீர்த்திவலைகள் வழியாக பரவும் கொரோனாவை எதிர்க்கும்  பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். ”கொரோனா வைரஸ் இன்ஃப்ளூயன்சா வைரஸ் போலவேதான் பரவுகிறது. நீர்த்திவலைகளை வழியாக பரவும் அதன் வேகத்தை கட்டுப்படுத்த சூழல்களின் பங்கு உண்டா என ஆராய்ந்து வருகிறோம் ” என்கிறார் ஆய்வாளர் சவீஸ் சஃபாரியன். வைரஸ்களின் மேலோட்டை வெப்பம் பாதிக்குமா என ஆராய்ச்சி செய்வதற்காக  இரண்டு லட்சம் டாலர்களை உதவித்தொகையாக சவீஸ் பெற்றிருக்கிறார். வைரஸ் தானாக எதையும் செய்யும் திறன் கொண்டது அல்ல. பிற உயிரிகளின் செல்களில் நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கி தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மேற்சொன்ன ஆய்வுக்காக வைரஸ்களின் மேலோடுகளை செயற்கையாக உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக, இதில் வைரஸ் மரபணுக்கள் இருக்காது. எனவே, வைரஸ் பாதிப்

இறந்தவர்களின் உடல்களை என்ன செய்வது? மத்திய அரசு தடுமாற்றம்

படம்
டெம்போ மேகசின் விதிகள் இயற்றப்படாத அபாயம்! கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது மூன்று பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கு எந்த கொள்கைகளும் அரசிடம் இல்லை. தற்போது எய்ம்ஸ் இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  கொரோனாவில் இறந்தவர்களை பிளாஸ்டிக் பேக்கால் மூடிவிடவேண்டும். அவர்களின் உடலிலுள்ள நீர் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இறந்த உடல்களை எரிக்கவேண்டும். புதைக்க கூடாது. இச்செயல்களை செய்பவர்கள் அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பது முக்கியம்.  உலகம் முழுக்க ஆறாயிரம் பேர் கொரோனாவால் இறந்துபோயுள்ளனர். இதில் இந்தியாவில் மூன்று பேர் என்று சந்தோஷப்பட முடியாது. காரணம், மக்கள்தொகை அதிகமுள்ள நாடான இந்தியாவில் சீனா அளவுக்கு விழிப்புணர்வு கிடையாது. முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று அலட்சியமாக இருப்பவர்களே அதிகம். மத்திய அரசு இதனை தாமதமாக புரிந்துகொண்டாலும் இதற்கான விதிமுறைகளை அமைக்க குழுவை அமைத்துள்ளது.  டில்லி மேற்குப்பகுதியிலுள்ள ஜானக்புரியைச்

இந்தியா மேலும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்!

படம்
பூனம் கேத்ரபால் சிங், உலக சுகாதார நிறுவனம் (கிழக்கு ஆசியா இயக்குநர்) இந்தியாவில் இரண்டுபேர் கோவிட் 19 பாதிப்பால் இறந்துள்ளனர். இதுபற்றி உங்களது கருத்து என்ன? இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இருவரை பலி வாங்கியுள்ளது. பொதுவாகவே வயதான ஆட்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும்  கோவிட் -19 பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு இன்று உலகில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் அதிகம். மத்திய அரசு கோவிட் 19 யை தேசியப் பேரிடர் என்று அறிவித்து, பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடை செய்துள்ளது நோயின் பரவலைத் தடுக்கும். இது நல்ல முயற்சி என்பேன். புதிதாக நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும்? சமூகத்திலிருந்து இனி மக்கள் கொஞ்ச காலத்திற்கு விலகி இருக்கவேண்டும். நுரையீரலை இந்த வைரஸ் பாதிப்பதால், சளி, தும்மல் மூலம் கொரோனா பிறருக்கு எளிதாக பரவும். எனவே மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில்  கூடுவதைத் தவிர்த்தாலே பிரச்னை கிடையாது. வைரஸ் எளிதாக பரவுவதையும் தடுக்க முடியும். உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு நாடுகளுக

சிலந்தி தான் கட்டிய வலையில் எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறது?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலந்தி தன் வலையில் இரைகளை எளிதாக வீழ்த்துகிறது. ஆனால் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி? சிலந்தி பசையை வாயிலிருந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குவித்து வைக்கிறது. அந்த இடங்களில் மட்டும் சிலந்தி நடந்து செல்வதில்லை. மேலும், அதன் கால்களில் வலையிலுள்ள பசையில் இருந்து விடுபடும்படியான அமைப்பு உள்ளது. நகம் போன்ற அமைப்பு அது. எனவே, சிலந்தி தான் கட்டியவலையில் சிக்கிக்கொள்வதில்லை. வைரஸ்கள்தான் நோயை ஏற்படுத்துகிறதா? அறிவியல்படி இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் அந்த பாதிப்பிற்கான தூண்டுதலாக இருக்கிறது என சொல்லலாம். எப்படியெனில், வைரஸ் பிற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நோய் பரப்பிய குறிப்பிட்ட விலங்குகளான வௌவால், பன்றி, கொசு ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் நேருவதில்லை. ஆனால் மனிதர்களுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல், உடல் கொப்புளங்கள் ஏற்படுகிறது. இதன் விளைவாக உள்ளுறுப்புகள் சேதமடைந்து மரணம் நேருகிறது. வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் காய்ச்சலை, உடல்நலிவை ஏற்படுத்துகிறது. வைரஸை முழுமையாக உடல் எதிர்ப்பதால் நமக்கு உடல் நலிவின் தீவ

கொரோனா வைரஸ் - கேள்வி பதில்கள்!

படம்
படம்: jPharmaceutical Technology மிஸ்டர் ரோனி ஃப்ளூவுக்கான தடுப்பூசியை கொரோனாவுக்குப் பயன்படுத்தலாமா? குறிப்பிட்ட வைரசுக்கான ஊசி, அந்த வைரசை மட்டுமே தடுக்கும். கொரோனாவுக்கான மருந்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே நீங்கள் ஃப்ளூவுக்கான மருந்தை பயன்படுத்தினால் கொரோனா கட்டுப்படாது. அதற்கு தனி மருந்துகள் சிகிச்சை தேவை. யாரை எல்லாம் தாக்கும்? இப்போதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தோராய வயது 65. இதுதான் வயது என்றில்லை. நமக்கு இப்போது கிடைத்த தகவல்படி இந்த வயது என புரிந்துகொள்ளலாம். ஃப்ளூ காய்ச்சலைப் பொறுத்தவரை இரண்டு வயதிலிருந்து பாதிப்பு தொடங்குகிறது. இதை என்ன சொல்லுவீர்கள்? கர்ப்பிணி பெண்களையும் ஃப்ளூ பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை பல்வேறு நுண்ணுயிரிகளும் பாதிக்கும். எந்த விலங்குகளிலிருந்து வைரஸ் பரவுகிறது? பாம்பு என நண்பர் கொரோனா வைரஸைக்குறிப்பிட்டு அதிரடியாக சொன்னார். ஆனால் உண்மையில் வௌவால்கள், பன்றிகள், கொசு, ஈக்கள் ஆகியவற்றிலிருந்தே அதிகளவு வைரஸ் தொடர்பான நோய்கள் மனிதர்களுக்கு பரவுகின்றன. வைரஸ்களுக்கு உயிருண்டா? செல்களை சுயமாக பெரு

வைரஸ்கள் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
giphy மிஸ்டர் ரோனி வைரஸ்கள் நம்மை எப்படி பாதிக்கின்றன? வைரஸ்கள் என்பதை புரதத்தை தம்முள் கொண்டவை. இவை வாழும் செல்களில் உள்ளே புகுந்து தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. இவை முதலில் உள்ளே புகுந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியுடன் மோதுகின்றன. அவை பலவீனமாக இருந்தால் நமக்கு நோய் ஏற்பட்டுவிடும். உயிருள்ள செல்களில் உள்ளே புகும் வைரஸ், ஸ்டார் ஜெராக்ஸ் போல ஏராளமான காப்பிகளை தன்னைப்போலவே எடுத்து முஸ்லீம்கள் போல குடும்பத்தைப் பெருக்குகின்றன. அந்த செல்களுக்கும் வேலை என சில விஷயங்கள் உண்டு. அவை இயங்காமல் போகும்போது உடலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, அந்த இடத்தில் வலி, காய்ச்சல், எரிச்சல், சொல்ல முடியாத உணர்வு ஆகியவை ஏற்படும். சார்ஸ், கொரோனா ஆகிய வைரஸ் பாதிப்புகளில் சுவாசப்பாதை பாதிக்கப்படும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நிம்மோனியா ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாஸ்க் அணிந்தால் நோய்களைத் தடுக்க முடியுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி மாஸ்க் அணிந்தால் வைரஸைத் தடுக்க முடியுமா? மாஸ்க் அணிந்து கொரோனா வைரஸை சோதிப்பதைப் பார்த்து இப்படியொரு கேள்வி. குறிப்பிட்ட அளவு காற்றில் பரவும் வைரஸ் மூலக்கூறுகளை தடுக்கலாம். ஆனால் சிறிய அளவு வைரஸ்களை மாஸ்க் மூலம் தடுக்க முடியாது. மருத்துவத்துறையில் பயன்படும் திக்கான மாஸ்க் கூட நிறைய வைரஸ்களை தடுக்க நினைப்பார்கள். ஆனால் இவையும் கூட பெரியளவு நம்பிக்கை தரும்படி செயல்படவில்லை. என்95 எனும் மாஸ்க்,  0.3 மைக்ரான் அளவு காற்று மூலக்கூறுகளை தடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாஸ்க் போடுவதோடு தேவையில்லாமல் யாருக்கும் கைகொடுக்காமல் இருப்பது, கைகளை அடிக்கடி கழுவது ஆகிய நடவடிக்கைகளை செய்வது முக்கியம். நன்றி - பிபிசி

கொரோனா வைரஸ் பாதிப்பு - தெரிஞ்சுக்கோ டேட்டா

படம்
தெரிஞ்சுக்கோ கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. மருந்து நிறுவன பங்குதாரரான பில்கேட்ஸ் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் இதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். சீனாவில் நூற்றுக்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் சீனாவிலிருந்து வந்த அறுபதிற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். கொரோனா வைரஸில் ஏழு வகைகள் உண்டு. அத்தனையும் மனிதர்களை தாக்கி கொல்லும். வுகான், ஹியூபெய் ஆகிய நகரங்களில் உள்ள மக்கள் தொகை 35 மில்லியன் ஆகும். வைரஸ் பிரச்னையால் இவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசிற்கு முன்பே சார்ஸ் பாதிப்பால் 774 பேர் பலியாகி உள்ளனர். 2012ஆம் ஆண்டு மெர்ஸ் பாதிப்பில் 858 பேர் வைகுந்தம் சேர்ந்தார்கள். 2019-2020 ஃப்ளூ காய்ச்சல் சீசனில் 8,500 முதல் 20 ஆயிரம் பேர் வரை இக்காய்ச்சலுக்கு பலியானார்கள். உலகம் முழுக்க நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகளை ஏற்படுத்தி மக்களை தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். பாதிப்பின் அளவு 33 சதவீதம். சார்ஸ் உடன் கொரோனா வைரஸ் ஒத்துப்போகும் அளவு 70%. மெர்ஸ் உடன் ஒத்துப்