இடுகைகள்

ஹோமியோபதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருந்து = நஞ்சு ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள்

      மருந்து = நஞ்சு ஹோமியோபதி மருத்துவம் பற்றிய அனுபவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹோமியோபதி மருத்துவம் புழக்கத்தில் உள்ளது. ஒப்புநோக்கில், தெற்கை விட வடக்கில் ஹோமியோ மருத்துவர்கள் அதிகம். இதற்கு காரணம், ஆங்கில மருத்துவர்கள் அங்கு குறைவு. அவர்களை ஏனோ அரசு சரியான சம்பளத்தில் நியமனம் செய்யவில்லை. அரசின் அடிப்படை நோக்கமே அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதுதானே? மக்களுக்கு உதவ வேண்டும் என்பது அவசியமா என்ன?  நாட்டின் ஆட்சித்தலைவரே போலி அறிவியலை மனமுவந்து ஊக்குவிக்கும்போது, அலோபதி பின்தங்குவதில் ஆச்சரியமென்ன? சமுதாய மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி குறைந்துவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு மட்டுமே நிதி கொடுத்து குறைந்த மருத்துவர்களை வைத்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கிறார்கள். அடிப்படை தேவைகளுக்கான நிதியை கோவில்களைகட்ட, சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களை இடிக்க, மதக்கலவரங்கள் செய்ய வடக்கு தேசம் பயன்படுத்துகிறது. அதேபோக்கு, தெற்கிலும் தொடங்க அச்சாரம் ஆந்திரத்தில் போடப்பட்டுள்ளது. அடிப்படையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டி...

வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள்!

படம்
       வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள் அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு டிவி சேனலின் தமிழ்ப்பிரிவு, ஒரு வீடியோவில் மருத்துவமுறை பற்றி விவாதித்திருந்தது. ஹோமியோபதி, பற்றிய வீடியோதான் அது. அதில் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்துமே விவாதத்திற்கானவை. அவற்றை முற்றாக நம்ப அல்லது மறுக்க முடியாது. அந்த செய்தி வீடியோவில், ஹோமியோபதி அறிவியல் நிரூபணம் கொண்ட மருத்துவமுறை அல்ல. மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் நோயாளிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மாரடைப்பு என்பது போன்ற செய்திகளை ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கான கமெண்டுகளில், செய்தியை ஏற்கிறோம், மறுக்கிறோம், விவாதிப்போம் என்றெல்லாம் எந்த பதிவுகளும் இல்லை. அலோபதியைப் பற்றி வீடியோ போடுங்கள்.ஏன் இந்த மருத்துவமுறையைப் பற்றி போடவில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னும் சிலர், ஹோமியோபதி எங்களுக்கு பலன் கொடுத்து நோய் தீர்ந்தது. அதைப் பற்றி இப்படியொரு வீடியோ போட்டால் எப்படி என வம்புக்கு வந்தார்கள். மேற்கு நாடுகளில் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தாலும் கூட பிரதமரை அமைச்சர்களை அரசு ஊடகம் கேள...

மாற்று மருத்துவமுறைகளுக்கு அதிகரிக்கும் மவுசு! சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதிக்கு திரும்பும் மக்கள்

படம்
            இந்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் அலோபதியை தவிர்த்த பிற மருத்துவ முறைகளை அதிகம் ஊக்குவித்து வருகிறது . இதன் புதிய தாக்கமாக அலோபதி மருத்துவர்களிடம் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை கற்று்க்கொள்ளுவது பற்றிய விதிகள் வெளியிடப்பட்டு சர்ச்சை ஏற்படுத்தின . இதை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் சங்கம் மிக்சோபதி என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர் . கோவிட் -19 காலம் மாற்று மருத்துவமுறைகளின் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சியுள்ளது . புல் , பூண்டு என கிண்டல் செய்யப்படும் பாரம்பரிய மருத்துவமுறைகள் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்துள்ளன . சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் முக்கியமான உதாரணம் . பதினைந்து மூலிகைகளை கொண்டு மாத்திரை , சூரணமாக விற்கப்பட்டு வருகிறது . தமிழக அரசு இதனை மாநிலமெங்கும் குடிக்க பரிந்துரை செய்தது . அலோபதியை விட ஹோமியோபதி , சித்த ஆயுர்வேத மருந்துகள் கோவிட் -19 க்கு சிறப்பான பயன்களைத் தந்துள்ளன . புகழ்பெற்ற தெரபி முறைகள் ரெஃப்ளெக்ஸாலஜி உடலின் பல்வேறு ஆற்றல் புள்ளி...

ஹோமியோபதி என்னென்ன நோய்களைத் தீர்க்கும் என்பதை விவரிக்கும் நூல்!

படம்
        ஹோமியோபதி டாக்டர் விஜய் ஆனந்த் கிழக்கு பதிப்பகம் இந்திய அரசு மெல்ல அலோபதி மருத்துவமுறைக்கான ஊக்கத்தை குறைத்து இந்திய மருத்துவமுறைகளுக்கு திரும்பி வருகிறது . ஆயுர்வேத மருத்துவர்கள் இனி வரும் காலத்தில் அறுவை சிகிச்சைகளும் செய்யக்கூடும் எனும்படியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது . அலோபதிக்கு நிகரான பல்வேறு மருத்துவ முறைகளில் ஹோமியோபதியும் ஒன்று . இந்த நூலில் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை விவரித்து அதன் அறிகுறிகளை தெளிவுபடுத்தி அதற்கான ஹோமியோபதி மருந்துகளின் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளார் மருத்துவர் . இதனால் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது . பிற மருத்துவமுறைகளை அறிந்துகொள்வது சில நோய்களைத் தீர்க்க உதவும் என நம்பலாம் . இனி வரும் காலத்தில் ஒரே மருத்துவமுறையில் நோய்களுக்கான தீர்வுகளைத் தேடுவது கடினம் . அனைத்து மருத்துவமுறைகளையும் இணைத்து அதற்கான கருவிகளையும் மருந்துகளையும் பயன்படுத்துவது புத்திசாலித்தனம் . ஹோமியோபதி மருத்துவம் பற்றிய நூல் இந்த நம்பிக்கையை நமக்கு அளிக்க...