இடுகைகள்

செய்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பீப்பர் மினி செயலி மூலம் அனைத்து குறுஞ்செய்தி செயலிகளுக்கும் செய்தி அனுப்ப முடியும்!

படம்
  ஆப்பிளோடு மல்லுக்கட்டும் பீப்பர்! அண்மையில், பீப்பர் என்ற செயலி  இணையத்தில் பிரபலமானது.  இதன் சிறப்பு, இதை ஒருவர் ஆண்ட்ராய்ட் போனில், தரவிறக்கி அதன் மூலம் பிற உரையாடல் செயலிகளுக்கு செய்திகளை அனுப்ப முடியும். குறிப்பாக, ஆப்பிளின் ஐபோனில் உள்ள ஐமெசேஜ் செயலிக்கு செய்திகளை அனுப்பலாம். உலக நாடுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற உரையாடல் செயலிகளுக்கு வரம்புகள் உண்டு. அதாவது, அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் மட்டுமே அவர்களுக்குள் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ள முடியும், வாட்ஸ்அப்பில் இருப்பவர் டெலிகிராம் அல்லது சிக்னல் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்தியை அனுப்ப, பகிர முடியாது. ஆனால் பீப்பர் செயலி மூலம் பிற உரையாடல் செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்குக் கூட செய்திகளை அனுப்ப முடியும். இதுவே பீப்பரை பிரபலப்படுத்திய முக்கிய அம்சம். ஆப்பிள் ஐபோன் அதன் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் விரும்பப்படுகிறது. தற்போதைய சூழலில், ஆண்ட்ராய்ட் இயக்கமுறைமையைப் பயன்படுத்துபவர் அனுப்பும் செய்தி, ஐபோனுக்கு வரும்போது பச்சை நிறத்தில

பிரதமர் மோடி பேசினால் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் பேசினால் தவறா? - கரண் தாப்பர், எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர்

படம்
  கரண் தாப்பர் எழுதிய நூல் சவுண்ட் அண்ட் ஃப்யூரி பத்திரிகையாளர் கரண் தாப்பர்  இந்தியாவின் முக்கியமான செய்தியாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நேர்காணல் மூலம் புகழ்பெற்றவர், கரண் தாப்பர். டிவியில் இவர் நேர்காணல் செய்யும் ஆளுமைகள் பீதி ஏற்பட்டு ஓடும் அளவுக்கு சர்ச்சையான படி கேள்விகளை அடுக்குவார். இப்படி எடுத்த இருபத்தியொரு நேர்காணல்களை சவுண்ட் அண்ட் ஃப்யூரி என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம். ஆக்ரோஷமாக கேள்விகளைக் கேட்டு பிரபலங்களை தடுமாறச்செய்யும் நேர்காணல் முறையில் நீங்கள் பிரபலமானவர். இந்தியாவில் இந்த முறை மெல்ல அழிந்து வருகிறதா? இப்போதைய இந்திய சூழ்நிலையில் நீங்கள் கூறியபடி,   ஆக்ரோஷமான கேள்விகளை கேட்கும் முறை அழிந்துதான் வருகிறது. ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை இப்படியில்லை. அன்று, டிவி சேனல்கள் அரசியல்வாதிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அவர்களை அழைத்து பேசின. கடுமையான கேள்விகளைக் கேட்டன. இன்று அரசியல்வாதிகள் டிவி சேனல்களுக்கு பணம் கொடுத்து தங்களுக்கு ஏற்றபடி கேள்விகளை கேட்க வைக்கின்றனர். பிரதமரிடம் கேள்வி கேட்கும் செய்தியாளரின் கேள்விகளைப் பா

செய்தியில் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம்

படம்
  பொதுவாக   நிறைய பிரபலங்கள் / அரசியல்வாதிகள் பேட்டி எடுக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.   பிறகு, பத்திரிகையாளரை அழைத்து செய்தியை எழுதிய உடனே அல்லது அதை வெளியிடும் முன்னர் இறுதி வடிவத்தை ஒருமுறை அவர்களுக்கு அனுப்பித் தரும்படி கேட்பார்கள். பேசிய வார்த்தை, அர்த்தம் மாறியிருக்கிறதா என்று சரி பார்க்கத்தான் இந்த சோதனை. இந்த முறை இப்போது ஊடகங்களில் பழக்கமாகிவிட்டது. பத்திரிக்கைகள் செய்தி ஆதார மனிதர்களிடம் அச்சேறாத செய்தியை அனுப்பி, அவர்களின் திருத்தங்களைக் கேட்டு பிறகு அதைச் செய்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். அனைத்து கட்டுரைகளுக்கும், இதுபோல திருத்தங்கள் செய்து கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது சரியானதல்ல. முடிந்தவரை பத்திரிகையாளர்கள் இம்முறையைத் தவிர்க்கவேண்டும். தவறுகள் ஏற்படாமல் இருக்க, பேசும்போது முறையாக அதை ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுவிட்டு கட்டுரையை எழுதலாம்.இப்படி எழுதப் பழகினால் கட்டுரைகளில் திருத்தங்கள் குறையும். நாளடைவில்   தகவல் பிழைகள் இருக்காது.   செய்திகளை, பேட்டி எடுப்பவர்களிடம் காட்டிவிட்டு பிரசுரிப்பது என்றால் அதை செம்மை

செய்தியை ஆராய பத்து நொடி விதி முக்கியம்!

படம்
  செய்திகளை எழுதுவது, அதிலுள்ள அறம் பற்றி யோசிப்பது எல்லாம் சரிதான். ஆனால் செய்தியை எழுதுவது என ஒப்புக்கொண்டால் அதை குறிப்பிட்ட நேரத்தில் எழுதி க் கொடுத்தே ஆகவேண்டும்தானே? பிராந்திய மொழி நாளிதழில் குறிப்பிட்ட பகுதிகளை பார்த்து செய்தி சேகரிப்பவர் குறைந்தபட்சம் நான்கு செய்திகளையேனும் தரவேண்டிய அழுத்தம் இருக்கிறது. செய்தியை முந்தி எழுதி தருவதில் உங்கள் சக போட்டியாளர்களாக நிருபர்களும் உங்கள் கூடவே அருகில் இருக்கிறார்கள். நேரவரம்பும் இருக்கிறது. எப்படி இந்த அழுத்தங்களை சமாளிப்பது? ஒரு செய்தியை எழுதி அனுப்பலாமா, காட்சி ஊடகத்தில் வீடியோவை ஒளிபரப்பலாமா என்ற சூழ்நிலை வந்தால் பத்து நொடி சிந்தனை என்ற விதியைக் கையாளலாம். இவ்வகையில் உங்களிடம் உள்ள செய்தியை எந்த வித அழுத்தங்கள் இன்றி கவனமாக ஆராய வேண்டும். எனக்கு என்ன தெரிந்திருக்கிறது, இன்னும் என்ன தெரிந்துகொள்ளவேண்டும் என்ற இரு கேள்விகள் செய்தியில் முக்கியமானவை. அப்போதுதான் செய்தியை ஆழமாகவும் விரிவான தன்மையில் செம்மையாக்க முடியும். முழுமையில்லாத செய்தியை எப்போதும் பிரசுரிக்க கூடாது. ஒரு செய்தியை எழுதுகிறீர்கள். அதில் தனிநபரின் மதம் பற்றிய குற

செய்திகளை எழுதும்போது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

படம்
  ஒரு விவகாரத்தில் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கிறீர்கள் என்றால், முதலில் அந்த விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள முயலுங்கள். அதில் மக்களுக்கு கூறவேண்டிய விஷயம் என்னவென்று பத்திரிகையாளர்கள் இறுதியான முடிவுக்கு வரவேண்டும். ஒரு விவகாரம் சரியா, தவறா என்று முடிவெடுப்பது உண்மையான கொள்கை ரீதியான தன்மையைக் குறிக்காது. அந்த விவகாரத்தில் ஏதும் செய்யாமலேயே சரியான முடிவு கிடைத்துவிடும் என்றாலும் கூட அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு பிரச்னையை வெவ்வேறு வழிகளில் சரியானது என்று சொல்லும்படி தீர்க்க முடியும் என்றால் கீழ்க்கண்ட கேள்விகளை பத்திரிகையாளர் கேட்டுக்கொண்டு பதில் கண்டறிவது முக்கியம். பிரச்னையை இந்த வகையில் தீர்க்கும்போது உலகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? அரசு, சட்ட விதிகள், மத கோட்பாடுகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? அவை என்ன மாதிரியான எதிர்வினைகளை வெளிப்படுத்தும்? அனைத்து மக்களுக்கும் சமரசமாக செல்லும்படியான தீர்வு, நடுநிலையான முடிவு ஏதேனும் இருக்கிறதா? பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைக்கும்படி என்னால் செயல்பட முடியுமா? எனது செயல்பாட்டால் மக்கள் பயன் பெறுவார்களா? பிரச்னையை நான

வினோதரச மஞ்சரி - ஜாலி தகவல்கள்

படம்
  ஒரு நொடிக்கு நமது மூளை ஆராயும் தகவல்களின் எண்ணிக்கை , 1 கோடியே 10 லட்சம் திட, திரவ நிலையில் ஆக்சிஜனின் நிறம், வெளுத்த நீலநிறம் உலகில் முதன்முதலில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டஆண்டு 1828. ஆம்னிபஸ்(Omnibus) என்ற பெயரில் பிரான்சின் நான்டெஸ் நகரில் போக்குவரத்து சேவை தொடங்கியது. மனிதர்களின் எச்சிலில் உள்ள வலிமையான வலிநிவாரணி வேதிப்பொருள், ஒபியர்பின் (Opiorphin)  ஒருவர் ஒருமுறை இருமும்போது,  அவரின் எச்சிலில் இருந்து வெளியே பரவும்  வைரஸ்களின் எண்ணிக்கை, 20 கோடி   டால்பின், தன்னை கண்ணாடியில் பார்த்தால் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் https://transportgeography.org/contents/chapter8/urban-mobility/omnibus-london-19th-century/

உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல்வழிச்செய்திகள்!

படம்
  உணர்வுகளைச் சொல்லும் குரல்வழிச்செய்தி!   இன்று பெரும்பாலும் குறுஞ்செய்திகளை எழுதி அனுப்புவதை விடகுரல் வழியே செய்தி அனுப்புவதே புகழ்பெற்றுள்ளது. பொதுமுடக்கம் பலரையும் வெளியிடங்களில்  சந்திப்பதைத் தடுத்திருக்கிறது. இதன் காரணமாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்களில் கூட குரல்வழிச் செய்திகள் அதிகம் அனுப்பப்படுகின்றன.  2013ஆம் ஆண்டு  இந்த வசதி வா்ட்ஸ்அப்பில் நடைமுறைக்கு வந்தாலும், புகழ்பெற்றது பொதுமுடக்க காலகட்டத்தில்தான்.  இன்று போனில் வரும் அழைப்பே, மிகவும் அவசரம் என்றால் மட்டும்தான் என்பதாக மாறியிருக்கிறது. புதிய தலைமுறையினர் பெரும்பாலும் குரல்வழிச் செய்தியை உரையாட அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அப்படி என்ன சிறப்பு?  ஒருவர் தன்னுடைய குரலில் தான் நினைப்பதை நண்பரிடம் பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் வேண்டும்போது இந்த செய்தியைக் கேட்டுக்கொள்ளலாம். உடனடியாக பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், ஒருவர் தனது குரல் வழியாக பிறரிடம் பேசும்போது நேரடியாக பேசுவது போன்ற நெருக்கம் உருவாகிறது.  எதையும் படிக்க அவசியமில்லாமல் காதில் கேட்டுக்கொண்டு செய்தியை அறிந்துகொள்ளலாம். பதில் அளிக்க விரும்பினால் கூட அந்த நேரத்

பத்தாவது பெயிலா? கொடைக்கானலில் எனது வீட்டில் வந்து தங்குங்க!- புதுமை மனிதர் சுதீஷ்

படம்
  செய்திஜாம் ஆஹா! சமையல் சாதனை! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயணன், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் வென்றிருக்கிறார். இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த இவர் சமையல் நிகழ்ச்சியின் 13 ஆவது சீசனின் வெற்றியாளராகி 1.86 கோடி ரூபாயை வென்றிருக்கிறார். ”உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள மனிதர்களைக் கண்டுபிடியுங்கள். அவர்களை எப்போதும் உங்கள் பின்னால் வைத்துக்கொள்ளுங்கள். தினந்தோறும் உங்களை ஆச்சரியப்படுத்திக்கொள்ளும்படியுங்கள். இதை வாசிக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்டுள்ளார் ஜஸ்டின்.  https://www.indiatimes.com/entertainment/celebs/indian-origin-justin-narayan-wins-masterchef-australia-season-13-takes-home-rs-186-crore-544905.html காட்சிப்படம் ! காட்டுத்தீயை அணைக்க முயலும் விமானம்! இடம் அமெரிக்கா, வாஷிங்டன் அபாரம்! பசியின் மொழி! ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையத் உஸ்மான் அசார் மெக்சூசி. இவர் பசிக்கு மதமில்லை என்ற திட்டத்தை தொடங்கி ஐந்து நகரங்களில் உள்ள 1,500 மக்களுக்கு தினசரி உணவிட்டு வருகிறார். இதனை பத்து ஆண்டுகளாக செய்துவருபவருக்கு ஐ.நா அமைப்பு, காமன்வெல்த் பாய்ன்ட

விலை பேசப்பட்ட கடவுள்- கட்டுரைகள்(அறிவியல், சமூகம், பொருளாதாரம், இயற்கை, தொழில்நுட்பம்) - மின்னூல் வெளியீடு

படம்
     இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களை பேசுகின்றன. முடிந்தளவு ஆய்வுநோக்கில் எழுதப்பட்டுள்ளன. உலகளவில் பிரபலமான பல்வேறு ஊடகங்களில் வெளியான கட்டுரைகளை ஆதாரமாக கொண்டவை. ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்திகளை முதன்மைப்படுத்தும் நோக்கத்தை கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை வாசிக்கும் யாரொருவரும் உணர முடியும். எழுதப்பட்டும் கட்டுரைகளை எப்படி இருக்கவேண்டுமென பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதன் காரணமாகவே கட்டுரைகளின் நோக்கம் பிடிபட்டது. அதற்கேற்ப நிறைய மாற்றங்களை செய்ய முடிந்தது. இதனை வெளியிட்டு உதவிய தினமலர்  நிறுவனத்திற்கும் நன்றிகள் கோடி.  நூலை வாசிக்கவும், வாங்கவும்..... https://www.amazon.in/dp/B095KTXV9X

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கு உதவும் சிம்பிளான சில பழக்கங்கள்!

படம்
            சிகரெட் புகைப்பதை எப்படி நிறுத்துவது ? நடக்கலாம் குதிக்கலாம் ஓடலாம் பொதுவாக சிகரெட் பிடிப்பதற்கான துடிப்பு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே ஏற்படுகிறது . எனவே அந்த நேரத்தில் எழுந்து நடப்பதை வழக்கமாக்கி கொள்வது நல்லது . இதன்மூலம் உடனே சிகரெட் பிடிப்பதற்கான எண்ணம் ஏற்படாது . தினசரி உடற்பயிற்சி செய்வது என்பது மன அழுத்தத்தைப் போக்கும் . புகைப்பதை எழுதுங்களேன் எப்போது புகைப்பிடிக்க தோன்றினாலும் உடனே அதனை நோட்டில் எழுதி வையுங்கள் . இதன்மூலம் எந்த நேரத்தில் சூழலில் புகைப்பது தொடங்குகிறது என்பதை அறியலாம் . கொஞ்சம் பழங்கால டெக்னிக்காக இருந்தாலும் சூப்பரான வெற்றி சூத்திரம்தான் . தயங்காமல் பயன்படுத்தலாம் . ஆலோசனை குழுவாக , தனியாக ஆலோசனை செய்யலாம் . இதன்மூலம் பிறரின் அனுபவங்கள் இழப்புகள் ஆகியவை மற்றவருக்கு பாடமாக அமையும் . போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு குழு தெரபி கூட வழங்கப்படுகிறது .. ஒருவர் டூ ஒருவர் என ஆலோசனை செய்வது புகைப்பிடிப்பதில் பெரிய பலனை அளிக்காது . இணையத்தில் பல்வேறு ஆலோசனைகள் கிடைக்கின்றன . இதற்கென தொலைபேசி எண்களும் உ

செய்தி இலவசமல்ல!

படம்
  அண்மையில் ஆஸ்திரேலியா, உள்நாட்டிலுள்ள செய்தி நிறுவனங்களைக் காப்பாற்ற புதிய சட்டங்களை உருவாக்கியது. இது அங்கு செய்திகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்து கோடிகளில் வியாபாரம் செய்த கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. உடனே அவர்கள் நாங்கள் எங்கள் சேவையை வேறு நாடுகளுக்கு மாற்றிக்கொள்கிறோம் என மிரட்டல் விடுத்தனர். ஆனால் அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.  இதனால் கூகுளும், ஃபேஸ்புக்கும் ஆஸ்திரேலியாவில் தங்களது சேவைகளை முதன்முறையாக பணம் கொடுத்து பெறவிருக்கின்றனர். கூகுள், பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெற்று அதற்கேற்ப தகவல்களை அவருக்கு அனுப்பி வியாபாரம் செய்துவருகின்றனர். விளம்பர வருவாய் கோடிக்கணக்கில் இருந்தாலும் அதனை உருவாக்குபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் புகார் கொடுத்ததால் ஆஸ்திரேலிய அரசு சட்டங்களை மாற்றி அவர்களை காப்பாற்ற முனைந்துள்ளது.  மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசின் முடிவை ஏற்றுள்ளது. இந்த நிறுவனம் பிங் எனும் சர்ச் எஞ்சினையும், லிங்க்டு இன் தளத்தையும் நடத்தி வருகிறது. பிற நிறுவனங்கள் இதனை வரவேற்கவில்

செய்திகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி ? மிஸ்டர் ரோனி மனிதர்கள் ஏன் செய்திகளைத் தெரிந்துகொள்வதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்? காரணம் இது மரபணுரீதியான தன்மை.  மனிதர்களின் மூளையில் உணவுத்தேவைக்கான கேள்வி எழுப்பும் அதனை தேடச்சொல்லும் பகுதிதான் செய்திகள், உண்மை, ஃபேஸ்புக் கிசுகிசு, லைட்ஸ் ஆன் சுனில் பகுதியில் மஞ்சள்தேக நடிகை பற்றியும் அறிந்துகொள் என்று கூறுகிறது. எனவே இதெல்லாம் உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளத்தான். அதனால என்னாகும என்று கேட்காதீர்கள். எதற்காவது உதவும் என வைத்துக்கொள்ளுங்களேன். நன்றி: பிபிசி