இடுகைகள்

கோடாரிக்காம்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தவறுகளை தட்டிக்கேட்போம்! -ரான்பாக்சி முதல் இன்போசிஸ் வரை

படம்
இன்போசிஸ் நிறுவனம் அண்மையில் தவறான வணிக நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. இக்குற்றச்சாட்டை முனவைத்தவர் பற்றி பலரும் மறந்திருப்பார்கள். இவர்கள் மீதும் இவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மீண்டிருப்பதோடு பல்வேறு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை இவர்கள் வெளிக்கொண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது பங்குச்சந்தையை முறைப்படுத்தும் செபி, நிறுவனங்களின் தவறான நடவடிக்கையைத் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிலான பரிசை வழங்குகிறது. தவறுகளை வெளிப்படுத்துவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அவர்களின் புகைப்படம், முகவரி ஆகியற்றை ரகசியமாக பாதுகாக்கின்றனர். 2014ஆம் ஆண்டு இதுபோல தவறுகளை கண்டுபிடித்து கூறுகிறவர்களை பாதுகாக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. நிறுவனங்களின் விதிமீறல்களை அரசுக்கு சொல்வது, அமெரிக்காவில் பராக் ஒபாமாவின் ஆட்சியில் 2008ஆம்ஆண்டுதான் தொடங்கியது.அப்போது பொருளாதார சிக்கல்கள் தொடங்கியிருந்தன. எனவே பங்குச்சந்தையைக் காப்பாற்றவே அரசு, வ