இடுகைகள்

கமிஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த வணிகம் எது?

படம்
pixabay உலகம் முழுக்க நடைபெறும் வியாபாரம் பலதரப்பட்டது. முன்னர் பத்திரிகையாளர் சாய்நாத் தனது நூலில் எழுதியுள்ளது போல இடைத்தரகர்கள் விவசாயிகளின் வாழ்க்கையை சூறையாடினர். இதனால் பல விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை கிடைக்காமல் தடுமாறினர். இதனைக் கண்ட அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை விட்டு வெளியேறினர். இதனை இன்று இணைய நிறுவனங்கள் மாற்றியுள்ளன. வணிக நடைமுறையில் ஃபேர் ட்ரேட் நடைமுறை முக்கியமானது. இதில் குறிப்பிட்ட விவசாய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பொருட்களை அளித்து விவசாயத்திற்கு உதவுகின்றன. இதில் கிடைக்கும் லாபத்தை விவசாயியும், நிறுவனமும் பகிர்ந்துகொள்கின்றன. இதில் இடைத்தரகர்களின் பங்கு குறைவு. ஆனால் ஃபேர் ட்ரேட் எனும் வியாபாரத்திற்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே இவ்வணிகத்தை செய்ய முடியும். இதற்கு மாற்று இல்லாமல் இல்லை. சந்தையில் அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு நேரடியாக பொருட்களை விற்கிறார்கள் அல்லவா? அதுதான். ஃபேர் ட்ரேட் நடைமுறை உலகளவில் வெற்றி பெறுவதற்கான காரணம், இதன் வலைப்பின்னல் அமைப்புதான். 1. விவசாயிகளுக்கு தேவையான விளைபொருட்கள், உரங்கள் என உதவிகள் அனைத்