சுயநலமான காரியக்காரர்களால் நண்பருக்கு ஏற்பட்ட துயரம்!
சில உறவுகளை நாம் தேடிச்செல்கிறோம். சில உறவுகள் நம்மைத் தேடி வருகின்றன. என்னைப் பொறுத்தவரை நம்மைத் தேடி வரும் உறவை முக்கியமாக பார்க்கிறேன். அதில் நாம் ஏற்பவையும் குறைவுதான். அனைத்தும் நமது குணநலன்களுக்கு ஏற்ப இருப்பதில்லை. கார்ட்டூன் கதிரை நான் முதல்முறையாக முரசு அலுவலகத்தில் பார்த்தபோது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. இவரின் திறமையை நாம் நிச்சயம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கு இருந்த சூழலில் அவருக்கு அதிக நம்பிக்கையைத் தர முடியவில்லை. ஆனால் அவரின் வலைப்பூ சென்று சோதித்துப் பார்த்தேன். நான் அப்படி செய்தது ஆசிரியர் தூயவருக்கு பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. ஆனால் எதையும் லட்சியம் செய்யும் நிலையில் இல்லை. இப்படியொரு திறமைசாலி ஏன் உளுத்துப்போன இதழுக்கு வந்திருக்கிறார் என நினைத்தேன். அப்போது கார்ட்டூன் கதிரவனுக்கு, சாதி சார்ந்து இயங்கும் பத்திரிகையில் வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கை தோன்றியிருக்கிறது. பின்னாளில் அது தவறான முயற்சி என உணர்ந்திருப்பார். கார்ட்டூன் கதிரவன் பதினைந்து நாட்களில் மயிலாப்பூரில் உள்ள தினசரியில் வேலைக்கு சேர்ந்ததைப் ப