இடுகைகள்

பாலிகிராப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெடுஞ்சாலை கொலைகாரருக்கு மாற்று! - அவருக்கு பதிலாக இவர்

படம்
  நீதியைக் காப்பாற்றுவதற்கு காவல்துறை உள்ளது. அதன் வழியாக நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி சட்ட ஒழுங்கை காப்பாற்றுகிறது. ஆனால் இப்படி நடக்கும் செயல்பாடுகள் எளிதானவை அல்ல. சரியாக நடக்கிறது என்றும் கூறமுடியாது. குற்றங்கள் நடந்து அவற்றை காவல்துறை அறிய முடியாமல் அல்லது செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க   தாமதமாகும்பொழுது குற்றவாளி என யூகித்தவர்களை மாட்டிக்கொடுப்பது வாடிக்கை. இதில் குற்றவாளி என காவல்துறையில் கூறப்படுபவர்களின் உறவினர்களே அவர்தான் குற்றவாளி என தனிப்பட்ட வன்மத்திற்கு இடம் கொடுத்து அவர்களை பழிவாங்கினால் எப்படியிருக்கும்? ஆபெல் என்பவரின் விவகாரத்தில் இப்படித்தான் உண்மைகள் வளைக்கப்பட்டன. அரசு அமைப்புகள் இதற்கு கூறிய பதில்களும்   என்னென்ன சொல்றான் பாருங்க என்ற ரீதியில் இருந்தன. ஐ-45 கொலைகாரர் என அழைக்கப்பட்டவர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவர் செய்த கொலைகள் அத்தனையும் நிஜம். ஹூஸ்டன், கால்வெஸ்டன் இடையிலான நெடுஞ்சாலைதான் 45 என குறிப்பிடுகிறார்கள். இந்த சாலையில் 1982-1997 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 42 சிறுமிகள், இளம்பெண்கள் காணாமல் போய் பிறகு பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். நா

பொய் சொல்வதை எப்படி கண்டுபிடிப்பது?

படம்
  குற்றத்தை ஒப்புக்கொள்ளுவார்களா? சாதாரணமாக நாம் செய்த தவறுகளைக் கூட ஈகோ பார்த்து நானா, செய்யவேயில்லையே என கூறுவோம். வேறுவழியின்றி அதனை நிரூபித்தால் இதற்காகத்தான் செய்தேன் என்று கூறுவதுதானே உலக வழக்கம். இந்தவகையில் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை குற்றம் செய்த உணர்ச்சிகள் இருக்காது. காவல்துறையினர் கடுமையாக முயற்சி செய்து தந்திரங்கள் செய்து அவர்களை விசாரணையால் மிரட்டலாம். அதில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தை உணர்ந்தால் அவர்களே நான் தான் கொலைகாரன் என்று ஒப்புக்கொள்வார்கள். அப்படியில்லாதபோது எளிதில் தங்களை காவல்துறையில் ஒப்படைக்க மறுப்பார்கள்.  என்னதான் குற்றங்களை செய்தாலும் கூட காவல்துறை அதில் பெரிய ஈடுபாடு எடுத்து அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்யாதபோது யாருக்குமே போரடிக்குமே? மேலும் சீரியல் கொலைகார ர்களுக்கு தாங்கள் செய்த பல்வேறு விஷயங்களை உலகம் அறிந்துகொள்ளவேண்டுமென நினைப்பு வேறு இருக்கும். இதனால் காவல்துறையில் தானாகவே சரண்டர் ஆவது நடைபெறும். இதனால் பெரும்பாலான குற்றவாளிகள் நாடு முழுக்க பரபரப்பான செய்தியாகி பிரபலம் ஆன கதைகளும் உண்டு.  பொய் சொல்லச் சொல்லாதே ஒருவர் உண்மை பேசுகிறாரா, அல்