கோவிட் -19 தொற்றை அழிப்பதே இப்போதைக்கு முக்கியம்! - சேத் பெர்க்லி
heartfile டாக்டர் சேத் பெர்க்லி கவி நிறுவனத்தின் இயக்குநர்- கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்துடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்க முயன்று வருகிறார். கோவிட் -19 நோய்த்தொற்றை தடுப்பதற்கான முயற்சி எப்படி சென்றுகொண்டிருக்கிறது? தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான பணியில் அனைத்து நாடுகளையும் இணைத்து பணி செய்வதாக கூறுகிறீர்கள். அது சாத்தியமா? சாதாரணமாக ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. அதனை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி வணிகரீதியில் பயன்படுத்த நமக்கு பதினைந்து ஆண்டுகள் தேவைப்படும். பல்வேறு நாடுகளும் தமக்குள் ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்து கொண்டு செயல்படுவதால் பதினெட்டு மாதங்களில் இதற்கான மருந்துகளை நாம் கண்டுபிடித்துவிட முடியும். எங்களது கவி நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து எபோலா நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உதவியிருக்கிறோம். மேலும் பல்வேறு சுகாதார திட்டங்களில் நாங்கள் அவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்களது சுதந்திரமான செயல்பாட்டிற்காக தடுப்பூசி பத்திரங்களை வெளியிடுகிறோம். உலக தடுப்பூசி நிதிவசதி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு தன்னார்வலர்களின் நிதியுதவியையும் ப