இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காடுகளின் வளத்திற்கும், பாதுகாப்பிற்கும் எறும்புகள் அவசியம்! -

படம்
மனிதர்களுக்கு எறும்புகள் அவசியத்தேவை! ஆராய்ச்சியாளர் கோரி மொரியு ஆங்கிலத்தில்: ஸ்ரீஜனா மித்ரா தாஸ் நன்றி: டைம்ஸ் எவோக் வெப்பமயமாதல் எறும்புகளின் இனப்பெருக்கத்தையும் பாதிக்கிறதா? சாதாரண மனிதர்கள் எறும்புகளை எப்படி பாதுகாப்பது? வெப்பமயமாதல் பாதிப்பு, மனிதர்கள் எறும்புகளின் புற்றை இடிப்பது ஆகிய காரணங்களால் எறும்புகளும் உலகில் மெல்ல அருகி வருகின்றன. தாவரங்கள், பூஞ்சைகள், நுண்ணுயிரிகள் ஆகியவையும் இந்த செயல்முறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காடுகளைக் காப்பதிலும் அதனை வளமுறச்செய்வதிலும் எறும்புகள் முக்கியப்பங்காற்றுகின்றன. எறும்புகளுக்கு என தனித்த பழக்க வழக்கங்கள் குணங்கள் உண்டா? எறும்புகளில் 15, 000 வகைகள் உண்டு. இதில் சில எறும்புகள் பிற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும். சில வகை எறும்புகள் தாவரங்களின் சாற்றை உறிஞ்சிக் குடித்து வாழும். காலனியாக இவை வீடமைத்து வாழ்கின்றன. மைர்மெகாலஜி எனும் படிப்பு எறும்புகளைப் பற்றியது. சமூக விலங்காக வாழும் எறும்புகளைப் பற்றி படிக்க ஆர்வமிருந்தால் இப்படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மரங்களுக்கும் எறும்புகளுக்குமான உறவை விவரியுங்கள். மரங்களில்

இர்பான்கானுக்கு மாற்றாக வேறு நடிகர் யாரும் இல்லை! - இயக்குநர் சுதீர் மிஸ்ரா

படம்
ity   சுதீர் மிஸ்ரா இந்தி சினிமா இயக்குநர் நன்றி: இந்தியா டுடே ஆங்கிலத்தில்: ஸ்ரீவஸ்தவா நெவாடியா பொதுமுடக்க காலத்தில் நீங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக சீரியஸ் மேன் என்ற படத்தையும். ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக ஹோஸ்டேஜ் இரண்டாவது பகுதியையும் எடுத்து முடித்திருக்கிறீர்கள். இதற்காக வேலை செய்வது எப்படியிருக்கிறது? நாங்கள் வேறு காலத்தில் பணிபுரிய நேரிட்டால் சிரமமாகவே இருக்கும். இப்போது எதற்கும் கவலைப்படவேண்டியதில்லை. என்னுடைய உதவியாளர்கள் தொழில்நுட்பம் சார்ந்த நுட்பங்களை அறிந்தவர்கள். எனவே அனைத்து வேலைகளையும் எளிதாக முடித்துவிட முடிகிறது. விரைவில் ஹோஸ்டேஜஸ் தொடரை நீங்கள் இணையம் வழியாக பார்ப்பீர்கள். கோவிட் -19 காலம் சினிமாவை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா? நாம் உயிர்வாழ்வதற்கே ஆபத்துள்ள சூழ்நிலையாக வெளியுலகம் மாறியிருக்கிறது. இந்த நிலை தொடரக்கூடாது என்றே நினைக்கிறேன். நெருக்கடியான காலம் நம்மை நமக்கே அடையாளம் காட்டியிருக்கிறது. பொறுமையாக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. நீங்கள் நடிகர் இர்பான்கானுக்கு நெருக்கமாக இருந்தவர். இப்போது நவாசுதீன் சித்திக்கை வைத்து சீரியஸ் மேன்

கடின உழைப்பு உங்களுக்கு பதற்றத்தையே ஏற்படுத்தும்! - எழுத்தாளர் ஹெட்லி

படம்
கடுமையான உழைப்பு நமக்கு சந்தோஷத்தையும் செல்வத்தையும் வழங்காது. எழுத்தாளர் செலஸ்ட் ஹெட்லி அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ஹெட்லி, சுயமாக உருவாகிய மனிதன், பல்வேறு பணிகளை செய்பவர் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிரிக்கிறார். தொழில்துறையினர் கடுமையான உழைப்பு பற்றி உருவாக்கியிருக்கும் அனைத்து கருத்துகளையும் எளிமையாக புறக்கணிக்கிறார். இதுபற்றி நாம் பொதுமுடக்க காலத்தில் யோசிப்பது நல்லது என்கிறார். இவர் அண்மையில் டூ ந த்திங் ஹவ் டு பிரேக் அவே ஃபிரம் ஓவர் வொர்க்கிங், ஓவர்டூயிங் அண்டஃ அண்டர்லிவ்விங் என்ற நூலை எழுதியுள்ளார். உழைப்பு பற்றி என்ன கருத்துகளை சொல்ல வருகிறார் என்பதை அறிய அவரிடம் பேசினோம். நம் வாழ்க்கையை மாற்றியுள்ள வைரஸ் கிருமிகள் நம்மிடம் சொல்லுவது என்ன? வைரஸ் நம்மிடம் பேசவில்லை. நாம்தான் நம்மிடம் பேசியுள்ளோம். அதற்கான சூழ்நிலையை வைரஸ் உருவாக்கி தந்துள்ளது. ஏன் நம்மால் வீட்டில் அமர்ந்து பணி செய்ய முடியவில்லை. கடுமையாக வெளியில் செல்ல தவிக்கிறோம். வீட்டில் இருந்தால் கூட நம்மால் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை. வீட்டைக் கூட காப்பகமாகவும், நம்மை அகதியாகவும

படிக்கும் வயதில் தொழிலதிபர்களாக சாதித்த மாணவர்கள்!

படம்
  லட்சங்களைக் குவிக்கும் இளம் தொழிலதிபர்கள் முன்னர் ஹார்வர்டு, கேம்ப்ரிட்ஜில் படித்துவிட்டு நிறுவனம் தொடங்கி வெற்றி பெறுவது பழங்கதையாகிவிட்டது. தற்போது படிக்கும்போது ஏதாவது நிறுவனம் தொடங்கி கல்லூரி படிக்கும்போது லட்சாதிபதியாக பல மாணவர்கள் மாறி வருகிறார். இதற்கு என்ன காரணம்? படிக்கும்போது பெற்றோர் துணையாக இருப்பார்கள். தொழில்முயற்சி என்றாலும் கூட எப்படியாவது உதவுவார்கள். ஆனால் முப்பது வயதில் உங்களை நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது நஷ்டமானாலும் அதனை நீங்களே ஏற்கவேண்டும் என மில்லினிய தத்துவம் சொல்லுகிறார்கள். இவர்கள் தங்களது முன்மாதிரி யாக கொள்வது ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ரிதேஷ் அகவர்வாலைத்தான். இவர் 17 வயதில் நிறுவனத்தைத் தொடங்கி, 22 வயதில் லட்சாதிபதியாகிவிட்டார். இவர் தந்த ஊக்கத்தினால் நிறைய டீனேஜ் இளைஞர்கள் துணிந்து தொழில்துறையில் காலடி எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ரத்தன் டாடா போன்றவர்களும் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் தேஷ்பாண்டே. இவர் தனது பெற்றோரிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஜெனரிக் மருந்துகளை

பெருந்தொற்றை சாதுரியமாக சமாளித்த பெண் தலைவர்கள்! - கற்றுக்கொள்ளலாம் வாங்க!

படம்
பெருந்தொற்றை சமாளித்த பெண் தலைவர்கள் உலக நாடுகளில் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் பெருந்தொற்றை சமாளிப்பதில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளன. அங்கு விரைவில் பொதுமுடக்கம் விலக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை தொடங்கப்பட உள்ளது. பின்லாந்து சன்னா மரின். வயது 34. உலகின் மிக இளம்வயது பெண் பிரதமர்களில் ஒருவர். பிரதமராக பதவியேற்று ஆறுமாதங்கள்தான் ஆகிறது. அப்போதுதான் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நாட்டில் கோவிட்   -19 ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏழாயிரம் பேர்களுக்கும் குறைவு. மார்ச் 18 முதல் பொதுமுடக்கம் அறிவித்து ஜூன் 1 முதல் இயல்பு வாழ்க்கை அங்கு தொடங்கவிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கவிருக்கின்றன. திரையரங்குகளில் ஐம்பது பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏஞ்சலா மேர்கல் ஜெர்மனி அதிபர். தன்னுடைய நாட்டு சுகாதாரத்துறையை மட்டுமல்லாது வெளியிலிருந்து வரும் செய்திகளையும் ஆராய்ந்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்றியவர். எழுபது சதவீதத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற உண்மையை அறிந்தவர், அதற்கேற்ப பொது முடக்கத்தை அறி

அளவில்லாத கடன்களை வாங்கி மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் அரசுகள்! - கடன்வரம்பும் உரிமைகளும்

படம்
கடன் பற்றாக்குறை தள்ளாடும் மாநிலங்கள் ஆங்கிலத்தில்: ஆனந் த் அதிகாரி, தீபக் மோண்டல் நன்றி: பிஸினஸ் டுடே பெருந்தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் செலவழிக்க பணமின்றி தடுமாறி வருகின்றன. மாநில அரசுகளுக்கு உள்ள தடை கடன் வரம்பு எல்லையைத் தாண்டி கடன் வாங்க முடியவில்லை என்பதுதான். தற்போது மத்திய அரசு மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்பு எல்லையை 3 முதல் 5 சதவீதமாக உயர்த்தியுள்ளன. 2008ஆம் ஆண்டு மத்திய அரசின் பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருந்தது. மோசமான பல்வேறு நிதிக்கொள்கைகள் காரணமாக தற்போது, 4 சதவீதம் எனும் அளவிற்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் கோவிட் -19 பாதிப்பைச் சமாளிக்க தற்போது 4.28 லட்சம் கோடி ரூபாயை கடன் பெறமுடியும். கடன் பெற்று அதனை சாமர்த்தியமான முறையில் செலவு செய்வது முக்கியம். இல்லையெனில் எந்த பயனும் கிடைக்காது. அடிப்படையில் மாநில அரசுகள் 3.5 சதவீதம் மட்டுமே கடனைப் பெறமுடியும். அதாவது, 7.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வெளியில் கடன்களைத் திரட்ட முடியும். இதனை அதிக நிபந்தனைகள் இன்றி பெற்றாலும், குறிப்பிட்ட வரம்புக்கு மீறி கடன்களை பெற நினைதால், பல்வேறு விதிகளை பின்பற்றிய

வாழ்க்கையில் நளபாகத்தை சமைத்து பரிமாறியவனின் கதை - நளபாகம் - தி.ஜானகிராமன்

படம்
பனுவல் கணையாழியில் தொடர்கதையாக வந்து இப்போது நாவலாகி உள்ளது. அடிப்படையாக ஜானகிராமனின் கதைகள் அனைத்தும் மனம், உடல் விதித்துள்ள விதிகளை மீறுவதுதான். இதிலும் அதே விஷயங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவை நேரடியாக நடைபெறுவதில்லை. நம்பிக்கை. வீண்பழி, வதந்தி, கிசுகிசு ஆகியவை இந்த நாவலில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.  நாயுடு என்ற சுற்றுலா அழைத்துச் செல்பவரிடம் தலைமை சமையல்காரராக காமேஷ்ச்வரன் இருக்கிறார். அங்கு சுற்றுலா வரும் ரங்கமணிக்கு அவரது வம்சம் தழைக்காத சோகம் உடலிலும் உள்ளத்திலும் இருக்கிறது. அவருக்கு, சமையக்காரரைப் பார்த்ததும் அவர் மூலமாக தன் வம்சத்தை மீள கொண்டு வந்துவிட முடியும் என கணக்கு போடுகிறார். இதற்காக அவரை தனது வீட்டுக்கு வேலைக்கு வந்துவிட அழைக்கிறார். இவரின் மனக்கணக்கை புரிந்துகொள்ளாத காமேஷ், இப்படி பாசமாக அழைக்கிறாரே என்று கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூரிலுள்ள நல்லூருக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நேரும் அனுபவங்கள்தான் கதை. தி.ஜாவுக்கு பழமையான விஷயங்கள், காவிரி ஆறு, கொல்லைப்புறம், மரங்கள், உணவு என என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் வாசகர்களுக்காக பரிமாறியிருக்கிறார். நூலை வாசிக்

கொரோனா தோல்வியை அரசு மறைக்க முயல்கிறது!

படம்
ஆத்மா நிர்மா பாரத் தோல்வியை மறைக்கும் முயற்சி!   இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளைப் பாருங்கள். வங்கதேசம், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் நாற்பது நாட்களுக்களுக்குள்ளாகவே கோவிட் -19 நோய்த்தொற்றை எதிர்கொண்டு மக்களை அதிலிருந்து மீட்டுவிட்டனர். இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது நோய்த்தொற்றுக்கான சிகிச்சை, தனிமைப்படுத்தல், மருந்துகள் ஆகியவற்றை விட யார் மூலம் நோய் அதிகம் பரவியது என்பது பற்றிய விவகாரங்களே இன்னும் தீரவில்லை. இந்துவா, முஸ்லீமா எந்த மத நம்பிக்கையாளர் இதனை பரப்பினார் என வெறுப்புடன் பேசிவருகிறார்கள். பொதுமுடக்க காலம் 67 நாட்களை எட்டிவிட்டது. இன்னுமே கூட நாம் மாதத்திற்கு ஏதாவது நாளை தேர்ந்தெடுத்து மாடிக்கு வந்து தட்டுகளை தட்டுவது, சங்கு ஊதுவது, மெழுகுவர்த்தி கொளுத்துவது, விளக்கேற்றுவது, குப்பைகளை கூட்டிக்கொண்டிருப்பவர்கள் மீது பூக்களை தூவுவது என பல்வேறு சிறுபிள்ளைத் தனங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். இதன்மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தெருக்களை சுத்தம் செய்பவர்களுக்கு என்ன கிடைத்துவிடும்? மருத்துவ உபகரணங்களுக்காக அரசை மன்றாடி வரும் அரசு மருத்துவர்களுக்கு மனநிம்மத

போருக்கு தயாராகுங்கள் என்று ராணுவத்திற்கு அழைப்பு விடுப்பது இயல்பானதுதான்! - டெய்லர் ஃபிராவல்

படம்
போருக்கு தயாராகுங்கள் என்று சீனா சொன்னது இயல்பானதுதான் எம்.டெய்லர் ஃபிராவல் எம்ஐடி பாதுகாப்பு ஆராய்ச்சி, அரசியல் அறிவியல் பேராசிரியர் சீன அதிபர் ஜின்பிங், மக்கள் விடுதலை ராணுவத்திடம் போருக்கு தயாராகுங்கள் என்று சொல்லியிருக்கிறாரே? அவர் கூறிய வார்த்தை ஒன்றும் புதிதல்ல கடந்த ஆண்டும் இதேபோலத்தான் கூறினார். மக்கள் விடுதலை நாளிதழில் இத்தகையை குறிப்புகள் 2018 இல் 1,300 முறையும், 2019 இல் 1,100 முறையும் கூறப்பட்டுள்ளன. ராணுவம் தனது இலக்குகளை நோக்கி முன்னேறச் செய்ய அதன் தலைவர் இப்படி ஊக்கமூட்டுவது வழக்கம்தான். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலும் இதுபோல பேசப்பட்டுள்ளது. சீனா டோக்லம் பகுதி முன்னேற்றத்தின்போது அமைதியாகவே இருந்தது. இதை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? Add caption 2017  ஆம் ஆண்டு முதலே டோக்லம் பகுதியில் எல்லைப்ப்பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. இதில் இந்தியா, சீனாவின் எல்லை மீறலுக்கு பதிலடியாக சீனா, பூடான் எல்லைப்பகுதியில் தன் படைகளை உள்ளே அனுப்பியது. இதனை சீனா தனது இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக கருதியது. அதேசமயம் இந்தியா பூடான் நாட்

தற்போது யூடியூப் போன்ற காட்சி ஊடகங்கள்தான் வலிமையாக உள்ளன! - பாடகி ஆஷா போஸ்லே

படம்
webneel ஆஷா போஸ்லே, இந்தி பாடகி உங்களுக்கு 86 வயதாகிறது. இந்த வயதில் திடீரென யூடியூபில் கணக்கு தொடங்கவேண்டுமென்று எப்படி தோன்றியது? பொதுமுடக்க காலத்தில் எனது பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிட நேர்ந்தது. எனது பேத்தி யூடியூபில் தனக்கென தனி சேனல் தொடங்கி அதில் பாடல்களைப் பாடி எடிட் செய்து பதிவிட்டு வந்தாள். அதைப்பார்த்துத்தான் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. உங்களது வாழ்க்கை அனுபவங்களை நீங்கள் நூலாக எழுதாமல் யூடியூபில் சொல்லிவருகிறீர்கள். இதற்கென ஏதாவது காரணம் உண்டா? யூடியூப் போன்ற காட்சி ஊடகத்தை எளிதாக பயன்படுத்த முடிகிறது. அனைவரும் இதனை எளிதாக பார்க்க முடியும். காட்சி ஊடகம்தான் இன்று வலிமையானதாகவும் உள்ளது. அனைவரிடமும் சென்று சேர்வதாக உள்ளது என்பதால் இதனை நான் தேர்ந்தெடுத்தேன். புதிய இசை, புதிய பாடல் வரிகள் மற்றும் ரீமிக்ஸ் பற்றி கருத்து என்ன? நாம் ஒரு பாடலை கிளாசிக் என்று சொல்ல காரணம், அதன் பாடல் வரிகள் மற்றும் இசைதான். இப்போது அதனை மாற்றி, பாடல்வரிகளை போட்டு மறு உருவாக்கம் செய்வதால் அதன் இயல்பு கெடுகிறது. கிளாசிக் என்று பாடல்களை சொல்லும் பொருளே இதன் காரணமாக மாறிவிடுகிறது. பொதுமு

வெப்பமயமாதல் காரணமாக புயல்களை அடையாளம் காண்பது கடினமாக மாறியுள்ளது. - மிருத்யுஞ்ஜெய் மொகபத்ரா

படம்
pixabay மிருத்யுஞ்ஜெய் மொகபத்ரா, வானியல்துறை இயக்குநர் வானியல் மாற்றங்களை அளவிடுவதற்கு கடல் முக்கிய பங்கு ஆற்றுகிறதா? கடல் நீரின் வெப்பநிலையை அளவிடவேண்டுமா? கடல்நீரின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிடுவது புயல் உருவாகுமா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும். இதன் வழியாக நம் நாட்டிற்கு பருவகாலங்களில் கிடைக்கும் மழைநீர் அளவையும் நம்மால் யூகித்து உணர முடியும். இந்த பிரச்னைகளால் பருவகாலங்களில் மழையின் அளவு குறைவதையும் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியும். இவற்றை எதிர்கொள்வதில் நிறைய சவால்கள் உள்ளனவா? பருவகாலங்களில் பெய்யும் மழைநீர் அளவை அளவிடுவதில் வெப்பமயமாதல் முக்கிய பங்கை வகிக்கிறது. இதன் காரணமாக நாங்கள் காலம்தோறும் பல்வேறு முறைகளைக் கையாண்டு வானிலையை கணித்து வருகிறோம். ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் புயலால் அடிக்கடி பாதிக்கப்படுகிறதே? தேசிய புயல் பாதுகாப்பு திட்ட அடிப்படையில் ஒடிஷா, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் அடிக்கடி புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவை புயலால் பாதிக்கப்படும் இடங்கள் என தேசிய பேரிடர் மையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்காள விரிகுடாவில்

வீட்டில் இருந்து வேலை செய்வதால் மனநலன் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும்! - டான் ஸ்வாபெய்

படம்
எதிர்கால வேலை என்பது டிஜிட்டலாகவே இருக்கும்! எழுத்தாளர் டான் ஸ்வாபெய் ஆங்கிலத்தில்: மாலினி கோயல் டான் ஸ்வாபெய் எழுத்தாளர் என்பதோடு மனிதவளத்துறை ஆலோசகர் மற்றும் வொர்க்பிளேஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ஆரக்கிள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ரான்ஸ்டாட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது இப்போதைய நிலைமையாக இருக்கிறது. இதில் பணியாளர்கள் அதிகம் உணர வாய்ப்பிருக்கிறதே? உலகில் இப்போதைய நிலைமையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தனிமையில் இணையம் சார்ந்துதான் பணியாற்றி வருகின்றனர். நேருக்கு நேராக சந்தித்து பேசுவது என்பதற்கு இணையம் வழியாக சந்தித்து பேசுவது மாற்று கிடையாது. இன்றுள்ள டிஜிட்டல் கருவிகள், மூளையில் டோபமைனை சுரக்க வைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் பெருந்தொற்று சூழ்நிலையில் இருநபர்களுக்கான சந்திப்பும் கூட வேறுபட்டுத்தான் அமைய வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கான ஏற்பாடுகள் மெல்ல இயல்பாகிவருகிறது. இந்த பணித்தன்மைக்கு எதிர்காலத்தில் என்ன வாய்ப்பு இருக்கிறது? எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் என்பது ஆட

கோவிட் -19 நோய்த்தொற்றால் மும்பையில் குற்றங்கள் குறைந்துவிட்டன! - மும்பை கமிஷனர் பரம்பீர் சிங்

படம்
மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் நகரில் குற்றவாளிகளைப் பிடிக்கும் உங்களது நோக்கம் இப்போது மாறியுள்ளது போல உள்ளதே? 26- 11 காலகட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல், அவர்களை எப்படி முடக்குவது என்பதை யோசித்தோம். கோவிட்-19 பிரச்னையைப் பொறுத்தவரை எதிரியை நம்மால் அடையாளம் காணமுடியவில்லை. எனவே தினசரி சானிடைசர், முக கவசங்களை காவல்துறையினருக்கு வழங்குவதுமாக பணி செய்கிறோம். இதுவரை பணியின்போது பலியான காவல்துறையினரின் குடும்பங்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் வழங்கியுள்ளோம். மேலும் காவல்துறை பவுண்டேஷன் மூலம் பத்து லட்ச ரூபாய் அளித்துள்ளோம். இது மட்டுமன்றி ஆக்ஸிஸ் வங்கியின் ஐந்து லட்சரூபாய் காப்பீடும் வழங்கப்படுகிறது. காவல்துறையினர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா? இரண்டு இணை கமிஷனர்கள், இரண்டு கூடுதல் கமிஷனர்கள் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3600 காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 900 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 250 பேர் குணமாகி பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் குணமாகி வரும் சதவீதம் அதிகரித்துள்ளது. உங்களுக்கு வயது 58 ஆகிறது.

பழங்குடிகளின் விற்பனைப் பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையை அதிகரித்துள்ளோம்! --அர்ஜூன் முண்டா

படம்
telegraph அர்ஜூன் முண்டா, பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் பழங்குடிகள் விற்கும் 45 பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பொது முடக்க காலத்தில் பொருட்களை குறைவான விலைக்கு பழங்குடிகள் விற்கும் சூழல் நேர்கிறது என்பதால் இந்த அறிவிப்பா? பொதுமுடக்க காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ளவர்களையும் பழங்குடிகளையும் காப்பது அரசின் கடமை. பழங்குடிகள் விற்கும் வனம் சார்ந்த பொருட்கள் 50 இன் குறைந்தபட்ச விலையை நாங்கள் உயர்த்தி அறிவித்துள்ளோம். மேலும் இந்த பட்டியலில் முப்பது பொருட்கள் மீதமிருக்கின்றன. இதுபற்றி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் செய்தியை தெரிவித்துள்ளோம். இந்த அறிவிப்பு மூலம் பழங்குடிகளின் பொருட்களுக்கு சந்தையில் சரியான விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பழங்குடிகளுக்கான உணவுப்பொருட்களை எப்படி வழங்கி வருகிறீர்கள்? பழங்குடிகள் நலத்துறை இதுபற்றி அனைத்து மாநில அரசுகளிடமும் பேசி வருகிறது. அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை உயர்த்துவது இதற்கான முக்கியமான முயற்சி. உணவுப்பொருட்களை பழங்குடிகளுக்கு வழங்குவதற்கான செயல்பாட்டில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கைகோ

அப்பாவின் பாசமா? காதலனின் நேசமா? முடிவெடுக்க தடுமாறும் மகள் - லவ்லி

படம்
youtube லவ்லி 2012 telugu இயக்கம் – ஜெயா இசை – அனுப் ரூபன்ஸ் ஒளிப்பதிவு – அருண்குமார் எஸ் அப்பாவின் வெறித்தனமான மகள் மீதான பாசம், அவளது காதல் வாழ்க்கையை எப்படி கோக்குமாக்காக மாற்றுகிறது என்பதுதான் கதை. அப்பாக்களுக்கு மகள் மீது தீவிரமான பற்றுதல் இருக்கும். இது அம்மாக்களுக்கு பையன்கள் மீது இருக்கும் ஆசையைப் போலத்தான். ஆனால் இந்த ஆசை, பிரியம் எல்லை தாண்டினால் என்னாகும்? என்பதுதான் கதை. மகாரதி என்ற தொழிலதிபரின் மகள் லாவண்யா. மகாரதி தன் மகள் எப்படி வளரவேண்டும். எங்கு படிக்கவேண்டும், எப்படி திருமணம் ஆக வேண்டும் என்பதையெல்லாம் கனவு கண்டு டைரியில் எழுதி வைத்தபடி இருக்கிறார். அவள் வாழ்க்கை தான் நினைத்தபடி இருக்கவேண்டும் என நினைக்கிறார். வாழ்க்கை நாம் நினைத்தபடியே இருக்கவேண்டும் என்றிருக்க என்ன அவசியம் வந்தது?  அப்படித்தான் அவளுக்குத் தோழியாக வாய்த்தவளான லல்லி மூலம் ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் பழக்கமாகிறார். தோழி தனது ஆண் நண்பரைப் பார்க்க நினைக்கிறாள். ஆனால் அவளுக்கு திடீரென தயக்கம் தோன்ற, தனக்கு பதில் லாவண்யாவை அனுப்புகிறாள். லாவண்யாவும் ஹோட்டலில் சென்று காத்திருக்கிறாள். அங்கு அவளை சந்

குருவைக் கொல்ல கையில் வாளெடுக்கும் சீடன் - முதல் யுத்தம் -பாலகுமாரன்

படம்
ஜிபி முதல் யுத்தம் பாலகுமாரன்.   சேரதேசத்தில் இருந்து அருண்மொழிப்பட்டன் சோழதேசத்திற்கு குதிரையில் வரும்போது கதை தொடங்குகிறது. காந்தளூர்க் கடிகைச்சாலையில் ஐந்து ஆண்டுகள் போர்ப்பயிற்சியும், ஓராண்டு ஆசிரியப் பயிற்சியும் முடித்துவிட்டு தஞ்சைக்கு வருகிறான். உபதளபதி தகுதியில் அவனுக்கு பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவனுக்கு அதைவிட அவனது காதலி சுந்தரியைப் பார்த்துவிட்டு தன் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுகிறதா என்ன? இதற்கான விஷயங்கள் அவனது குரு குஞ்சன் நம்பூதிரியிடமிருந்தே கிடைத்துவிடுகிறது. அவன் கையில் வெள்ளிக்கேயூரம் கட்டப்பட்டு வெளியேறும்போது, நாம் அனைவரும் விதியின் கைப்பாவைகள். நீயும் நானும் கையில் வாளோடு எதிரெதிராக நிற்கும் சூழல் இருந்தால் என் உடலை அங்கஹீனம் செய்யாமல் நெஞ்சில் வாளைப் பாய்ச்சி கொன்றுவிடு என்று கேட்டுக்கொள்கிறார். முதலில் நமக்கு இதைப்ப்படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், அடுத்த சில பகுதிகளைப் படிக்கும்போது, அந்த வார்த்தை எதிர்காலத்தை ஏறத்தாழ கணித்தபடியே குரு   கூறியிருக்கிறார் என்று உணர

சயாம் பூனை மிரட்டல் தலைவனை கண்டுபிடிக்கும் சங்கர்லால் - நியூயார்க்கில் சங்கர்லால் - தமிழ்வாணன்

படம்
ஜிபி நியூயார்க்கில் சங்கர்லால் தமிழ்வாணன்   தமிழ்வாணனின் அதிரடியான துப்பறியும் நாவல். டோக்கியோ சென்றிருக்கும் சங்கர்லால் அமெரிக்காவுக்கு பமேலா என்ற பணக்கார பெண்ணின் அழைப்புக்காக வருகிறார். ஆனால் அதற்குள் அவர் வருவதைப் பற்றிய செய்தி சட்டவிரோத குழுவின் தலைவனான பூனை என்கிற ஜாக்சனுக்கு கிடைக்கிறது. இதனால் சங்கர்லால் வந்தால் தனக்கு கிடைக்கிற பணம் கிடைக்காது என்பதால் அவரைக் கொல்வதற்கான ஒத்திகைப் பயிற்சியை நடத்த முயல்கிறான். இதில் அநியாயமாக ஜங்கிள்ஜான் என்பவன் உயிரை விடுகிறான். போலீசார் இந்த வழக்கில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கும் சங்கர்லால் துப்பறிவதில் பெரிய ஆர்வம் இல்லை. அவரோடு போட்டியிட்டு அவரை அவமானப்படுத்த நினைக்கிறார் நியூயார்க் காவல்துறை தலைவர் வில்லியம்ஸ். சங்கர்லால் பமேலாவுக்கு வந்த மிரட்டல் கடிதத்தைப்படித்துவிட்டு அவரை கவனமாக பாதுகாக்க நினைக்கிறார். ஆனால் அதற்குள் பூனை ஜாக்சன் முந்திக்கொள்ள நினைக்கிறான். பமேலாவைக் கொல்ல குறிப்பிட்ட நாளில் திட்டமிடுகிறான். ஆனால் அதற்குள் சங்கர்லாலைக் கொல்ல திட்டமிட்டு, அது நடக்காமல் போக அவனது அடியாள் ஆல்பர்ட்டை கொல்ல ஜாக்சன் உத்தர

காதலா, நட்பா குழப்பத்தில் பயணிக்கும் சொந்தக்காரப் பையன்! - சுட்டாலப்பாயி 2016

படம்
தெலுங்கு பன்ச் சுட்டாலப்பாயி ஆதி, நமீதா பிரமோத் இயக்கம்: வீரபத்ரம் சௌத்ரி ஒளிப்பதிவு: எஸ். அருண்குமார் இசை: எஸ். தமன் போலீஸ் கமிஷனரின் தங்கை காவ்யா, அண்ணனின் திருமண ஏற்பாடுகள் பிடிக்காமல் தன் தோழியுடன் உதவியுடன் வீட்டை விட்டு ஓடுகிறாள். அப்போது அவளால் பாதிக்கப்பட்டு அவளது அண்ணனின் கோபத்திற்கு ஆளாகும் பாப்ஜி, மன்னிப்பு கேட்க அங்கு வருகிறான். ஆனால் சூழ்நிலை சிக்கலால், காவ்யாவின் அண்ணன் பாப்ஜிதான் தன் தங்கையை கூட்டிக்கொண்டு செல்கிறான் என இரண்டாவது முறையும் தவறாக புரிந்துகொண்டு அவர்களைப் பிடிக்க போலீஸ் படையை ஏவுகிறார். இருவரும் போலீசில் சிக்கினார்களா? பிரச்னை இல்லாமல் நினைத்த இடங்களுக்கு சென்றார்களா? பாப்ஜி உண்மையில் காவ்யாவை காதலிக்கவில்லையா என்பதுதான் மீதிக்கதை. ஆஹா ஆதி முதல் காட்சியில் ஆச்சரியப்படுத்தினாலும் அதற்குப்பிறகு வரும் காட்சிகளில் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாடல்கள் வரும்போது மட்டும் துடிப்பாக இருக்கிறார். நமீதா பிரமோத துள்ளலாக நடித்து நடனமாடியிருக்கிறார். பாச அண்ணன் தங்கை கேட்டால் எதற்கு மறுக்க போகிறார்? திடீரென அவர் வீட்டை விட்டு ஓடுவது பொருந்

கட்டணசேவையில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் காதல் ஒருங்கிணைப்பாளன்! - அட்டா 2013

படம்
  அட்டா இயக்கம்: சாய் கார்த்திக் ஒளிப்பதிவு: அருண்குமார் இசை: அனுப் ரூபன்ஸ்   கல்யாணம் பதிவு செய்யும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணி செய்யும் நாயகன் அபி, அங்கு வரும் காதல் தம்பதிகளுக்கு கட்டணசேவை அளித்து திருமணம் செய்து வைக்கிறான். ஆனால் அதிலும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார். ஒருமுறை பணக்கார காதல் தம்பதியை பிரிக்க நினைக்கும்போது, ஏற்படும் சிக்கலால் அவரின் வாழ்க்கையே மாறுகிறது. அவரின் காதலி பிரியா, அவரை விட்டு பிரிகிறார். இருவரும் ஒன்றாக எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் கதை. ஆஹா சுஷாந்த் நன்றாக நடித்திருக்கிறார். சிலசமயங்களில் வாயில் பீடாவைக் குதப்பிக்கொண்டே வசனம் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது. ஷான்வி திமிரான பணக்காரி கதாபாத்திரத்திற்கு அம்சமாக பொருந்துகிறார். காதல் பாட்டு முதல் கிளப் பாட்டு முதல் தனக்கு என்ன வருமோ அத்தனை விஷயங்களையும் நம்முன் இறக்கி வைத்திருக்கிறார். ஐயையோ தன் அக்காவிற்கு எப்படி திருமணம் ஆனது என்பதை அவரின் தங்கை அறிய இவ்வளவு தாமதம் ஆகுமா என்று தெரியவில்லை. காதல் சோதனைகள் நீண்டுகொண்டே செல்வது அயர வைக்கிறது. மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதற்கே

அனுபவங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது எப்போதும் சரியானது அல்ல! - உளவியலாளர் பிரக்யா அகர்வால்

படம்
உளவியலாளர் பிரக்யா அகர்வால் நாம் குறிப்பிட்ட விஷயங்களில் முடிவெடுப்பதில் ஏன் தவறுசெய்கிறோம்? நாம் குறிப்பிட்ட விஷயத்தில் முடிவெடுக்க நிறைய தகவல்களை மூளையில் சோதித்தே செய்கிறோம். ஆனால் வேகமாக முடிவெடுக்கும் சூழலில் நாம் நமக்கு கிடைத்துள்ள தகவல்களை பகுத்தறியாமல் உடனே முடிவெடுத்து விடுகிறோம். இதனால் நிறைய பின்விளைவுகள் ஏற்படுகின்றன. இதில் முந்தைய நமது அனுபவங்களை கருத்தில் கொள்கிறோம். அவற்றை நமது பார்வைக் கோணத்தில் அணுகுவதால் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதில் நமக்கு எந்த லாபங்களும் கிடையாதா? ஏன் இல்லாமல். நீங்கள் சிறப்பங்காடிகளுக்கு செல்கிறீர்கள். ஊட்டச்சத்து பானங்களை பார்க்கிறீர்கள். நெஸ்லே, அமுல் என்றால் எது சிறப்பானது என உடனே முடிவு செய்து அமுலை தேர்ந்தெடுப்பீர்கள். இதில் நாம் கலோரியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் தேவையில்லாமல் நேரம் வீணாகும் அல்லவா? உணவுப்பொருட்கள் என்பதை தாண்டி இந்த சிந்தனை மக்களின் வாழ்க்கையை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் இந்த விவகாரங்களில் என்ன பங்கை வகிக்கின்றன? அவை மனிதர்களின் ஆழமான ஈகோக்களை மோதி வெடிக்