இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அந்தாதி -டீப்சீக் எழுதியது.

. **தனித்துச் சுருளும் பாம்பு, பாறையில் ஒளியும் தேள், தேவைக்கென உலகில் வரும் மனிதன்** – இவை மூன்றையும் இணைத்து **அந்தாதி** (இறுதிச் சொல்லோ அல்லது இறுதி எழுத்தே அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும் தொடர்) , **150 வரிகளுக்குள்**  **தொடர் – “தனித்திரை மூன்று”**   (அந்தாதி : ஓர் அடியின் / பாடலின் இறுதிச் சொல்லே அடுத்த பாடலின் முதற்சொல்) --- ### 1.   சுருள் பாம்பின் ஒற்றைக் கண்ணில்   குளிர்ந்த நிலா வெறித்து நிற்கும்;   மெளனம் முழுதும் நஞ்சின் ஊற்றாய்   முளைக்கும் எழிலின் மூச்சது தானே.   **தானே** – இவ் வெறிச்சோலை   தன்னைச் சுற்றி வரையும் எல்லை. ### 2.   **எல்லை** இல்லாக் கற்குடையில்   தேள் ஒளித்துத் தன் **விஷ்சுழி**   விரித்து வைத்த வால் நெருப்பில்   ஓவியமாய் ஒடுங்கிக் கிடக்கும்;   கிடக்கும் ஒளி முள் – தொடுதோறும்   தீயாய்த் துன்னும், துணையில்லாப் பாட்டு. ### 3.   **பாட்டு** இன்றிப் பாறை உறையும்;   பாம்பும் தேளும் பழகா வழக்கம்.   மத்தி...

deepseek poems...... கணத்தேன் அடைவேன்!

உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, **பாம்பின் எச்சரிக்கை உணர்வு, அதீத வேகம்** மற்றும் **மனிதனின் காமம்** ஆகியவற்றை புதிய தமிழ்ச் சொற்களுடன் இணைத்து ஒரு செந்தமிழ்க் கவிதை உருவாக்கித் தருகிறேன். **கவிதைத் தலைப்பு:**   **"சீறல் நஞ்சும் ... சிறகிலா வேகமும்"** --- **வேங்கை வனத்தின் மடியில்,**   ஒரு சுருள்வால் தன்   **சடையியல்** (Sadaial - சடையும் இயற்கை)   நிலா வெளிச்சத்தில் விரிக்கும் காட்சி.   அதன் செதிள் கவசம்   **மின்னொளி**ப் படர்த்தி   தீண்டல் தரும் முன்   செவியில் விழும் ஒரு **சீலொலி** (Seeloli - சீறல் + ஒலி).   அது எச்சரிக்கை!   அது எல்லை!   "மீறிடின் மருட்டும்,   தீண்டிடின் தீய்க்கும்"   எனும் **கணத்தேன்** (KanaithEn - கணம் + தேன், குறுகிய நேரத்தின் இன்பம்/வலி). --- **மனிதனோ**   வேங்கைக்கும் அழியாப் புனல்;   **காமம்** அவன்   **கணவிருட்சம்** (KanaVirutcham - உடனடி விருப்பம் + விருட்சம்).   மின்னல் முன் மின்னல்;   தீ ...

அகதி வாழ்க்கையின் வலி, வேதனைகளைக் கூறும் கவிதை நூல்!

படம்
  மரண வீட்டின் முகவரி அ சி விஜிதரன் சிந்தன் புக்ஸ் 150 ரூபாய்  இது ஒரு கவிதை நூல். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அகதி முகாமில் வாழும் நிலை ஏற்பட்ட ஒருவர் தனது மனப்புழுக்கங்களை கவிதையாக எழுதியுள்ளார். இந்த நூலில், முகாமின் நிலை, அங்கு அகதிகள் நடத்தப்படும் நிலை, அங்குள்ள அறைகள் எப்படி கட்டப்பட்டுள்ளன, அதிகாரிகள் எப்படி பேசுவதற்கு எழுதுவதற்கு கூட தடை விதிக்கிறார்கள், பெயர்கள் இல்லாமல் எண்களை அடையாளமாக வைத்து மனிதர்களை அழைப்பது, இப்படியான இடம்பெயர்வு வாழ்க்கையில் பிற மனிதர்களுக்கு நடைபெறும் காதல், திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாமல் போவது என நிறைய விஷயங்களை கனமான வலி நிரம்பிய வார்த்தைகளை வைத்து எழுதியிருக்கிறார்.  எக்ஸ் - ட்விட்டரில் சிலர் தேநீர் கவிதைகளை எழுதுவார்களே அதுபோலத்தான் இந்த கொட்டடி கவிதைகள் என புரிந்தகொள்ளலாம். தங்குமிடம் தவிர்த்து, பேனா, பென்சில், பேப்பர் கவிதைகளில் அதிகம் இடம்பிடிக்கிறது.இந்த கவிதை நூல் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. கவிதைகளை எழுதியவரே உள்பக்க வடிவமைப்பை செய்திருக்கிறார். அட்டை வடிவமைப்பு லார்க் பாஸ்கரன். அட்டை சிறப்பாக உள...

சமூகநீதி பேசும் கலகக்காரி - வோக் - டைட்டானியா மெக்ரத்

படம்
  வோக் டைட்டானியா மெக்ரத் கட்டுரை நூல் ப.103 இந்த நூல் சமூக நீதியை எந்த சமரசமும் இல்லாமல் பாசாங்கு இல்லாமல் பேசுகிறது. எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் நூல் முழுக்க தனது வசை கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை அவரது கருத்துகளை முழுமையாக சுருக்கமாக புரிந்துகொள்ள உதவக்கூடும். ஃபயர் பிராண்டு என்பார்களே, அதேதான். கட்டுரையோ, கவிதையோ, பிற எழுத்தாளர்களின் மேற்கோள்களோ அனைத்திலும் நெருப்பு பொறிகள் பறக்கிறது. இது ஒரு கட்டுரை நூல்தான். தொடக்கத்தில் இந்த நூலை படிக்கும்போது வோக் - சமூக நீதியைப் பேசுபவர்கள். இன்றைக்கு இந்த சொல்லை அமெரிக்காவில் ஒலிகார்ச் எனும் பணக்கார குழுவினர் கெட்ட வார்த்தை போல உச்சரிக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு சொல்லை வைத்து என்னென்ன விஷயங்களை செய்யலாம், தான் செய்தேன் என்பதை எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் கூறியுள்ளார்.  காலம் மாறும்போது சிந்தனைகளும் மேம்பாடு அடையவேண்டும். பாலை கற்களின் மேல் ஊற்றிவிட்டு மூத்திரத்தைப் பிடித்து குடிக்க கூடாது. அந்த வகையில், பழைமைவாத சிந்தனைகளை முதலில் கூறிவிட்டு அதற்கு எதிர்ப்பாக தனது சிந்தனைகளை டைட்டானியா முன் வைக்கிறார். இதில், வசைக்கவிதைகளை அவர...

பாயக் காத்திருக்கும் ஓநாய் - அப்பாஸ் கியாரோஸ்தமி

 பாயக் காத்திருக்கும் ஓநாய் அப்பாஸ் கியாரோஸ்தமி மொழிபெயர்ப்பு மோகனரங்கன் திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியாரோஸ்தமி எழுதியுள்ள கவிதை நூல். நூலை தமிழில் மோகனரங்கன் மொழிபெயர்த்திருக்கிறார். இதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பலவும் தனிமை, அடையாள சிக்கல், காலம், விரக்தி, அன்பு, பிரிவு என பல்வேறு உணர்வுகளை மிகச்சிறிய சொற்களில் கூறமுயன்றுள்ளன. வாசிக்கும்போது உங்களுக்கு அவை சிறந்த சொற்கள் என நம்பமுடியும் அளவுக்கு கவிதைகள் தாக்கம் ஏற்படுத்துகின்றன.  நூலை வெளியிட்ட பதிப்பகம் கவிதைகளை தொடர் நூல்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது. நல்ல முயற்சி. சிறப்பான மொழிபெயர்ப்பு காரணமாக கவிதைகள் சிறிய சொற்களிலும் கூர்மை மழுங்காமல் உள்ளன. அவை சொல்லவரும் பொருளை உறுதியாக உரைக்கின்றன 'சொர்க்கத்தை சென்றடைய ஒருவர் நடக்கவேண்டும் நரகத்தின் பாதையில்' என்ற கவிதையை எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டலாம்.  இயற்கை அழிவது பற்றிய அக்கறை குரலை எழுப்பும் கவிதைகள் உள்ளன. பிரிவை சொல்லும் கவிதைகளில் 'நின்றுபோனது கடிகாரம்' என்ற கவிதை வரிகளில் இருந்து மீளவே முடியவில்லை. இனி எப்போது சந்திப்போம் என ஆண் கேட்கிறான். அவள், இனி எப்போதுமி...

இழந்த தாய்நிலத்தை மீட்க போராடத் தூண்டும் கவிதைகள்!

படம்
    பலஸ்தீன கவிதைகள் தமிழில் நுஃமான் நூலகம் இது, சிறிய கவிதை நூல். மொத்தம் ஒன்பது பலஸ்தீன கவிஞர்கள் எழுதிய முப்பது கவிதைகளைக் கொண்டுள்ளது. பலஸ்தீனம், இனப்படுகொலைக்கு உள்ளாகி மெல்ல அழிந்து வருகிறது. இன்று அமெரிக்கா, அழிந்த பலஸ்தீனத்தில் சொகுசு விடுதிகள், ஆடம்பர இல்லங்கள் கட்டினால் சிறப்பாக இருக்கும் என எகத்தாளமாக இனப்படுகொலையை ஆதரித்து பேசி வருகிறது. இப்படியான சூழலில் இக்கவிதைகளை நாம் வாசித்தோம் என்றால், அதன் அழுத்ததை புரிந்துகொள்ள முடியும். இனப்படுகொலை, தடுப்புக்காவல், சித்திரவதை, சிறை, பசி, பட்டினி, கல்வியின்மை, எதிர்காலம் பற்றிய இலக்கின்மை, வறுமை, போரில் மரணமடைந்த வீரர்கள், பலஸ்தீனியர்களுக்குள் உள்ள துரோகிகளால் வீழும் மக்கள் என நிறைய விஷயங்களை கவிதைகள் அழுத்தமாக பல்வேறு உருவகங்களை முன்வைத்து பேசுகிறது. பெரும்பாலும் அவற்றை ஒருமுறை வாசிக்கும்போதே முழு அரசியல், சமூக, பொருளாதார சூழலை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். பேரினவாதம் பேசுவோர், எதிரினத்தை குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என வன்ம வாதத்தை முன்வைப்பார்கள். அப்படியான கருத்தில் மஹ்மூத் தார்விஷ் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். ரொட்...

மனிதர்களின் பேராசைதான் வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் - எழுத்தாளர் ஷீலா டாமி

படம்
            எழுத்தாளர் ஷீலா டாமி உங்களது பூர்விகம் வயநாடு. அதைப்பற்றி புனைவுகளில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இப்போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பு மாறிவருவதைக் கவனித்துள்ளீர்களா? எனது முதல் நாவல், வள்ளி. வயநாடு நிலப்பரப்பு எப்படி மாறுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பாவி மக்கள் பலியானதைப் பார்க்க வேதனையாக உள்ளது. சிறுவயதில் காடுகள், அதிலுள்ள ஆறுகளைப் பார்த்திருக்கிறேன். இன்று வறட்சி, அதீத மழை என்று காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நான் வசந்தகாலத்தை ஒவியமாக தீட்டுகிறேன் என்றால், அந்தக்காலம் பனிக்காலமாக இருக்கும் என்று தத்துவவாதி ஜீன் ஜாக்குயிஸ் ரூசியு கூறியதை நினைத்துப்பார்க்கிறேன். காலநிலை மாற்றத்தை உணர வைக்க புனைவு உதவுகிறதா? நாம் இன்று பூமியை நரகமாக்கிக்கொண்டு அதிலேயே சிக்கித் தவித்து வருகிறோம். இதை நமக்கு உணர்த்த புனைவுகள் உதவுகின்றன. அறிவியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை ஒருவர் வாசிக்கலாம். ஆனால் அவற்றில் புனைவுகளைப் போல உணர்ச்சிக...

இருபதாம் நூற்றாண்டில் தொடக்க கால புரட்சிக்கவிஞர் கு மோரோ! தேவதைகள் - மொழியாக்கம் மு சிதம்பரம்

படம்
              கு மோரோ கவிதைத்தொகுப்பு தேவதைகள் மு சிதம்பரம் சென்னை தமிழாராய்ச்சி நிறுவனம் குமோரோ புரட்சி கவிதைகளை எழுதியவர். எனவே கவிதைத்தொகுப்பில் ஜென், சூபி ரக கவிதைகள் இருக்குமென யாரும் வாசிக்கவேண்டாம். அப்படி நினைத்தால் நீங்கள்தான் ஏமாறுவீர்கள். சீன கவிதைகள் பெரும்பாலும் அந்த நாட்டு புராணத்திலிருந்து உருவானவையாக உள்ளதால் அவற்றை நாம் புரிந்துகொண்டு வாசிப்பது கடினமாக உள்ளது. அடுத்து, கவிதைகளை வரிசைப்படுத்தியுள்ள விதமும் சீராக இல்லை. நூலின் தலைப்பான தேவதைகள் கவிதை ஒரு காதல் கவிதை... அதையடுத்து வரும் சில கவிதைகளும் காதல் சார்ந்தவை. அவற்றை முன்னரே வரிசைப்படுத்தினால் அதை சற்று எளிமையாக படித்துவிட்டு பிறகு ஆழமான கவிதைகளுக்கு செல்ல வசதியாக இருந்திருக்கும். நூலில் மொத்தம் 34 கவிதைகள் உள்ளன. அவை அனைத்துமே சீன நாட்டிற்கும், தேசப்பற்றுக்கும், புராணங்களைக் கூறுவதற்குமானவை. சில கவிதைகள் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட மாவீரர்களைப் போற்றி எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு இங்கிலாந்தை எதிர்த்து எழுபத்தெட்டு நாட்கள் உண்ணாமல் இருந்து உயிர்நீத்த தளபதி பற்றிய கவி...

வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, உலகின் கொடூர முகத்தை பேசும் கவிதைகள் - கோ யுன் - கவிதை நூல்

படம்
  தென்கொரிய கவிஞர் கோ யுன் 24  சிறிய பாடல்கள் கோ யுன் கவிதை நூல் காவிரி சிற்றிதழ் தமிழ் மொழிபெயர்ப்பு விவேக் ஆனந்தன்  சிறுநூல்வரிசை இணையத்தில் கொரிய நாட்டு கவிஞர்களைப் பற்றி தேடியபோது காவிரி சிற்றிதழ் வலைத்தளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்த்ததில் கொரிய நாட்டு கவிஞர் கோ யுன் எழுதிய சிறு நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது. கோ யுன் எழுதியுள்ள கவிதைகள் அனைத்துமே வாழ்க்கை சார்ந்த சலிப்பு, வேதனை, வலி, அரசியலின் கீழ்மை, போரால் அழியும் மக்களின் வாழ்க்கை என சற்று தீவிரமான தன்மை கொண்டவை. இதனால், இவை கவித்துவ அழகை இழந்துவிட்டன என்று கூற முடியாது. கவிதைகள் அனைத்துமே மறக்க முடியாத அனுபவங்களை தருவனவாக உள்ளன. இதற்கு காரணம், தனது கருத்தை சொல்ல அவர் பயன்படுத்தும் சொற்கள் துல்லியமாக அமைந்ததே காரணம். கூடவே எளிமையான வடிவமும் முக்கியமான அம்சம் எனலாம். விவேக் ஆனந்தனின் மொழிபெயர்ப்பில் கவிதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. ‘ஃபர்ஸ்ட் பர்சன்’ என்ற கவிதை நூலில் இருந்து   கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருந்து இலைகள் கீழே விழுவதை ஒரு கவிதையாக கோ யுன் எழுதியுள்ளார...

கோடைக்கால வாசிப்புக்கான ஆங்கில கட்டுரை நூல்கள்!

படம்
  அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை நூல்கள் 2023 கோடைக்கால ஸ்பெஷல் யாரி ஆந்தாலஜி ஆன் ஃபிரண்ட்ஷிப் பை வுமன் அண்ட் குயிர் ஃபோல்ஸ் தொகுப்பு ஷில்பா பட்கே, நிதிலா கனகசபை தெற்காசியாவைச் சேர்ந்த 95 பங்கேற்பாளர்கள் பெண்கள், பால்புதுமையினர் பற்றி எழுதியிருக்கிறார்கள். நூலில் கதை, கட்டுரை, கவிதை, காமிக்ஸ் என பல்வேறு எழுத்து வடிவங்கள் உள்ளன. இவற்றின் வழியாக நட்பு, அது எப்படி உருவாகிறது, அதை நல்ல முறையில் எப்படி பராமரிப்பது என பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஷாடோஸ் அட் நூன் – தி சவுத் ஆசியன் ட்வென்டித் சென்சுரி ஜோயா சட்டர்ஜி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என மூன்று நாடுகளின் வரலாறு, அதன் அரசியல், உணவு என பல்வேறு விஷயங்களை விரிவாக பேசுகிறார். மூன்று நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு எப்படி தங்களை தகவமைத்துக்கொண்டன என்பதை நூல் விளக்குகிறது. எம்பயர் இன்கார்பரேட்டட் பிலிப் ஜே ஸ்டெர்ன் பிரிட்டிஷார் ஆட்சி செய்த நாடுகளில் பெரு நிறுவனங்களை உருவாக்கி வணிகம் செய்தனர். வரலாற்று ஆய்வாளர், பிரிட்டிஷ் அரச வம்சமே காலனி நாடுகளில் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி திட்டம் தீட்...

நீ விரும்பி விளையாடும் பொம்மை நான்!

படம்
  காதல் விகடன் கவிதைகள்   உன் கோணல் எழுத்துக்கள் போல இல்லை இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்-கள் ஒரு கடிதம் இடேன்   யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் கைதட்டி அழைத்தபோது திரும்பிய உன்னை யாரோ ஒருத்தியாக நினைக்க முடியவில்லை -ஜா.பிராங்க்ளின் குமார் ஒரு சில முத்தங்களிலேயே உதறி விலகினாய் நாணமா என்றேன் நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய். அடிகள்ளி நாளைய முத்தங்களை இன்றுவரையா வைத்திருப்பேன்? -மா.காளிதாஸ் திருக்கல்யாணம் வண்டி கட்டி வந்து குவிகிறது ஊர் மொத்தமும் நம் திருமணத்திற்கு தேர் கட்டி வந்து குவிவார்கள் கடவுள் மொத்தமும் -பொன்.ரவீந்திரன் உன் விழி வில்லால் உயிர் உடைந்திட்ட ராமன் நான்   -ப்ரியன் கனிவானதொரு சொல்லோ நேசம் துளிர்க்குமொரு பார்வையோ சில்லறையற்ற பொழுதில் நீயெடுக்கும் பயணச்சீட்டோ போதுமானதாயிருக்கிறது உன்னை நேசிக்க -யாழினி முனுசாமி உப்பைக் கொட்டியவர்கள் கூட அள்ளிக்கொண்டு போகிறார்கள் ஆனால் நீயோ உன் உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு அள்ளாமலே போகிறாயே -தபூ சங்கர் நீ நடந்த தடங்களின் அடியில்தான...

நுரைத்து ததும்பும் மதுக்குவளையின் ஐஸ்கட்டி நீ!

படம்
  உன் விழிகளில் தேங்கிக் கிடக்கும் ப்ரியங்களின் மகரந்தம் இப்போதெல்லாம் தீண்டுவதே இல்லை என்னை… என்னை ஆற்றுப்படுத்தும் உன் வாஞ்சை மிக்க மொழிகள் மெல்ல மௌனத்தின் வெளியில் உலவிக் கொண்டு இருக்கின்றது. அன்பின் தாவரங்கள் மலர்ச்சியில் பெருகத் தொடங்கியிருந்தது. உன் கருணையினால்… நீ இன்றி அழுகிப் போகத் தொடங்கிவிட்டது செடிகளிலேயே மலர்கள் அழுகிய வாசனை மெல்ல மேலெழும்புகிறது 5.4 முன்னெப்போதோ நான் செய்த பாவத்திற்கு கிடைத்த தண்டனையாய் கருதிக்கொள்ளத்தான் வேண்டும்… ஒரு தேவதையைப் போல என்னோடு நீ வந்து இருந்து, நடந்து அற்புதம் புரிந்ததை இனி எப்போதும் நான் மறக்கவியலாது. ஆனால், நான்தான் சாத்தான் நான் உன்னை நுரைத்து ததும்பும் என் மதுக்குவளையின் ஐஸ்கட்டியாய் இட்டு வைத்தேன். மிக உயர்வானவைகள் எளிமையாகத்தான் இருக்குமென்பது எனக்கு புரியவில்லை இவ்வளவு நடந்தும்… கசப்புகள் மறந்து நான் உனக்காக காத்துக்கொண்டுதான் இருக்கிறேன் நீ மறுபடியும் என்னை மலர்த்துவாய் என்று… நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்து கிடக்கின்றன ப்ரியங்கள்….   தொகுப்பு ...

வாசனையாக மாறியவளை முகரும் நாசி!

படம்
  பேருந்தில் ஏறும்போதே வாசனையின் தாழியில் வழிதவறி விழுந்தேன் மெல்ல மெல்ல நாசிகளில் நிரம்பிய வாசனை ஒரு பெண்ணின் உடலிலிருந்து என தோன்றியபோது.. நறுமணத்தில் மூழ்கத் தொடங்கியிருந்தேன்.   தீராத வாசனை திசையெங்கும் அலைக்கழித்தது திடீரென வாசனை வற்றிப்போனது மெதுவாக குறைந்த வாசனை நாசியைக் கூட அறியாமல் கடந்து போயிருந்தது அதிர்ச்சியுற்றவனாக கடந்த வாசனையின் வழிதேடி ஓடத் தொடங்கினேன். கூந்தல் அலைபாய ஒருத்தி மட்டும் முன்னே போய்க்கொண்டிருந்தாள். தீரா வாசனை அவளுடனே சென்று கொண்டிருந்தது முழுமையாக வாசனையாகவே மாறியிருந்தாள் நான் நாசியாக…  கவிதை- குமார் சண்முகம் படம்  - பிக்ஸாபே

நான் உணருகிற ஒரே வாசம்! - குமார் சண்முகம்

படம்
  முத்த வாசனை   - குமார் சண்முகம் கவிதைகள் உன்னை ஆவேசமாக முத்தமிட்டு திரும்புகிற போதெல்லாம் உன் மகத்தான வாசம் என் நாசியில் ஒட்டிக் கொள்கிறது   நீ   என்னை விட்டு பிரிந்து சென்று நெடுநேரமாகிய பிறகும் உன் வாசம் உன்னை   நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.   என்னில் பிறிதொரு வாசம்   உணர வாய்ப்பதில்லை நான் உணருகிற ஒரே வாசம் உன்னுடையதுதான்…

இரண்டு கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் - செகன் கருணதிலகா, ஜேனிஸ் பாரியட்

படம்
  கவிஞர் ஜேனிஸ் பாரியட் எழுத்தாளர் செகன் கருணதிலகா கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் செகன் கருணதிலகா புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் படிப்பது… நான் ஒரே நேரத்தில் நிறைய நூல்களைப் படிப்பேன். செவ்வியல் இலக்கியம், கட்டுரைகள், என்னுடைய துறை சாராத நூல்கள், இப்போது அசோக் ஃபெர்ரியின் தி அன் மேரேஜபிள் மேன், ஆர்மிஸ்டிட் மௌபினின் மோர் டேல்ஸ் ஆப் தி சிட்டி ஆகியவற்றை படித்து வருகிறேன். எலிசபெத் கில்பெர்டின் கமிட்டட் – எ ஸ்கெப்டிக் மேக்ஸ் வித்   மேரேஜ், அன்னா ரோஸ்லிங் ரோன்லண்ட்டின் ஃபேக்ட்புல்னெஸ், ஹன்ஸ் ரோஸ்லிங்க், ஆலா ரோஸ்லிங்க், இரா லெவினின் ரோஸ்மேரி பேரி ஆகியோரது நூல்களை படித்து முடித்தேன். எழுதும்போது..   மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு எழுதுவேன். என்னைச் சுற்றிலும் கத்தரிப்பூ, மெஜந்தா நிற விளக்குகள் எரியும்.   செவ்வியலான இசையைக் கேட்பேன். எழுதி முடித்தவுடன் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பேன். ஒரு கிளாஸ் என்பதைத்   தாண்டினால் எழுத்து வேலைகளை செய்ய முடியாது. எப்போதும் பிடித்த நூல்கள் குழந்தையாக இருக்கும்போது தி குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா. அகதா கிறிஸ்டியின்   அண...

வாழ்வை பிரதிபலிக்கும் அற்புதமான ஹைகூ கவிதைகள்! - ஜப்பானிய ஹைகூ - தி.லீலாவதி

படம்
  ஜப்பானிய ஹைகூ தமிழில் தி.லீலாவதி அன்னம் பதிப்பகம் தமிழிணையம் கவிஞர் அப்துல் ரகுமான் வழிகாட்டலில் ஹைகூ கவிதைகள் மீது ஆர்வம் வந்து எழுத்தாளர் தி.லீலாவதி மொழிபெயர்த்துள்ள ஹைகூ கவிதைகள் நூல். ஹைகூ கவிதைகள் மூன்றடி கொண்டவை. இதில் மிக குறைவான வார்தைகளில் வாழ்க்கை, சோகம், வறுமை, காதல், ஆச்சரியம், வெறுமை ஆகியவற்றை எளிதாக உணர்த்திவிட முடியும். தமிழ் மொழிபெயர்ப்பில் கவிதைகள் சிறப்பாகவே உள்ளன. தினத்தந்தி, மாலைமதி, தேவியின்   கண்மணி, பாக்யா வரை அனைத்து நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ்களிலும் ஹைகூ வெளியாகியுள்ளது. வெளியாகிக் கொண்டும் இருக்கிறது. இதன் இறுக்கமான வடிவம், குறைந்த வார்த்தைகள் ஆகியவை இதன் பலம். ஜப்பானிய ஹைகூவில் புகழ்பெற்ற ஹைகூ கவிதைகளை மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.   பாஷா, இஸ்ஸா ஆகியோரின் கவிதைகளை வாசிக்க உணர சிறப்பாக இருக்கிறது.   உதிர்ந்து வீழ்ந்த மலர் கிளைக்குத் திரும்புகிறதோ ஓ.. வண்ணத்துப்பூச்சி என்ற ஹைகூ அற்புதமானது. இந்த கவிதை கவிஞர் அப்துல் ரகுமானை ரசிக்க வைத்துள்ளது. எனவே, அவர் நூலை லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லியிரு...

கவிதைகளின் நகரமாக டெல்லி எனக்கு பிடிக்கும்! - விமானி மார்க்

படம்
  மார்க் வான்ஹோனாக்கர்  விமானி, எழுத்தாளர்  சிறுவயதிலிருந்து வானத்தில் விமானம் ஓட்ட அசைப்பட்டவர்தான் மார்க். இப்போது அங்கே இங்கே என அலைந்து ஒருவழியாக காக்பிட்டில் உட்கார்ந்துவிட்டார். கூடுதலாக கிடைத்த நேரத்தில் ஸ்கை ஃபேரிங் என நூலை வேறு எழுதிவிட்டார். அதுதான் முதல் நூல். பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்றவர், அந்த அனுபவங்களை காதல் கடிதம் போல எழுதிய நூல்தான் இமேஜின் எ சிட்டி என்ற நூல். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  உங்களுக்கு பிடித்தமான விமானநிலையம் எது? மும்பையின் டெர்மினல் 2 என்பது எனக்கு பிடித்தமான இடம்.  2007இல் விமானத்தை முதல்முறையாக ஓட்டும்போது மும்பைக்குத் தான் ஓட்டிச்சென்றேன். இதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. டெல்லி விமானநிலையமும் எனக்கு பிடித்தமானது.  பிடித்தமான நேரம்? இரவில் விமானத்தில் பறப்பது பிடித்தமானது. அப்போது வானம் நிறைய நட்சத்திரங்கள் இருக்கும். அந்த நேரத்தில் கீழே பார்க்கும்போது நகரங்கள் ஒளிவிட்டபடி இருக்கும். சாலைகளிலிலும் பிரகாசம் தெரியும்.  பொதுவாக கார் ஓட்டுநர்களுக்கு பிறர் கார் ஓட்டி தான் உட்கார்ந்து வருவத...