இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, உலகின் கொடூர முகத்தை பேசும் கவிதைகள் - கோ யுன் - கவிதை நூல்

படம்
  தென்கொரிய கவிஞர் கோ யுன் 24  சிறிய பாடல்கள் கோ யுன் கவிதை நூல் காவிரி சிற்றிதழ் தமிழ் மொழிபெயர்ப்பு விவேக் ஆனந்தன்  சிறுநூல்வரிசை இணையத்தில் கொரிய நாட்டு கவிஞர்களைப் பற்றி தேடியபோது காவிரி சிற்றிதழ் வலைத்தளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்த்ததில் கொரிய நாட்டு கவிஞர் கோ யுன் எழுதிய சிறு நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது. கோ யுன் எழுதியுள்ள கவிதைகள் அனைத்துமே வாழ்க்கை சார்ந்த சலிப்பு, வேதனை, வலி, அரசியலின் கீழ்மை, போரால் அழியும் மக்களின் வாழ்க்கை என சற்று தீவிரமான தன்மை கொண்டவை. இதனால், இவை கவித்துவ அழகை இழந்துவிட்டன என்று கூற முடியாது. கவிதைகள் அனைத்துமே மறக்க முடியாத அனுபவங்களை தருவனவாக உள்ளன. இதற்கு காரணம், தனது கருத்தை சொல்ல அவர் பயன்படுத்தும் சொற்கள் துல்லியமாக அமைந்ததே காரணம். கூடவே எளிமையான வடிவமும் முக்கியமான அம்சம் எனலாம். விவேக் ஆனந்தனின் மொழிபெயர்ப்பில் கவிதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. ‘ஃபர்ஸ்ட் பர்சன்’ என்ற கவிதை நூலில் இருந்து   கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருந்து இலைகள் கீழே விழுவதை ஒரு கவிதையாக கோ யுன் எழுதியுள்ளார். இந்த கவிதை, வாழ்

கோடைக்கால வாசிப்புக்கான ஆங்கில கட்டுரை நூல்கள்!

படம்
  அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை நூல்கள் 2023 கோடைக்கால ஸ்பெஷல் யாரி ஆந்தாலஜி ஆன் ஃபிரண்ட்ஷிப் பை வுமன் அண்ட் குயிர் ஃபோல்ஸ் தொகுப்பு ஷில்பா பட்கே, நிதிலா கனகசபை தெற்காசியாவைச் சேர்ந்த 95 பங்கேற்பாளர்கள் பெண்கள், பால்புதுமையினர் பற்றி எழுதியிருக்கிறார்கள். நூலில் கதை, கட்டுரை, கவிதை, காமிக்ஸ் என பல்வேறு எழுத்து வடிவங்கள் உள்ளன. இவற்றின் வழியாக நட்பு, அது எப்படி உருவாகிறது, அதை நல்ல முறையில் எப்படி பராமரிப்பது என பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஷாடோஸ் அட் நூன் – தி சவுத் ஆசியன் ட்வென்டித் சென்சுரி ஜோயா சட்டர்ஜி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என மூன்று நாடுகளின் வரலாறு, அதன் அரசியல், உணவு என பல்வேறு விஷயங்களை விரிவாக பேசுகிறார். மூன்று நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு எப்படி தங்களை தகவமைத்துக்கொண்டன என்பதை நூல் விளக்குகிறது. எம்பயர் இன்கார்பரேட்டட் பிலிப் ஜே ஸ்டெர்ன் பிரிட்டிஷார் ஆட்சி செய்த நாடுகளில் பெரு நிறுவனங்களை உருவாக்கி வணிகம் செய்தனர். வரலாற்று ஆய்வாளர், பிரிட்டிஷ் அரச வம்சமே காலனி நாடுகளில் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி திட்டம் தீட்டி அ

நீ விரும்பி விளையாடும் பொம்மை நான்!

படம்
  காதல் விகடன் கவிதைகள்   உன் கோணல் எழுத்துக்கள் போல இல்லை இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்-கள் ஒரு கடிதம் இடேன்   யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் கைதட்டி அழைத்தபோது திரும்பிய உன்னை யாரோ ஒருத்தியாக நினைக்க முடியவில்லை -ஜா.பிராங்க்ளின் குமார் ஒரு சில முத்தங்களிலேயே உதறி விலகினாய் நாணமா என்றேன் நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய். அடிகள்ளி நாளைய முத்தங்களை இன்றுவரையா வைத்திருப்பேன்? -மா.காளிதாஸ் திருக்கல்யாணம் வண்டி கட்டி வந்து குவிகிறது ஊர் மொத்தமும் நம் திருமணத்திற்கு தேர் கட்டி வந்து குவிவார்கள் கடவுள் மொத்தமும் -பொன்.ரவீந்திரன் உன் விழி வில்லால் உயிர் உடைந்திட்ட ராமன் நான்   -ப்ரியன் கனிவானதொரு சொல்லோ நேசம் துளிர்க்குமொரு பார்வையோ சில்லறையற்ற பொழுதில் நீயெடுக்கும் பயணச்சீட்டோ போதுமானதாயிருக்கிறது உன்னை நேசிக்க -யாழினி முனுசாமி உப்பைக் கொட்டியவர்கள் கூட அள்ளிக்கொண்டு போகிறார்கள் ஆனால் நீயோ உன் உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு அள்ளாமலே போகிறாயே -தபூ சங்கர் நீ நடந்த தடங்களின் அடியில்தான் கிடக்கிறது நம்

நுரைத்து ததும்பும் மதுக்குவளையின் ஐஸ்கட்டி நீ!

படம்
  உன் விழிகளில் தேங்கிக் கிடக்கும் ப்ரியங்களின் மகரந்தம் இப்போதெல்லாம் தீண்டுவதே இல்லை என்னை… என்னை ஆற்றுப்படுத்தும் உன் வாஞ்சை மிக்க மொழிகள் மெல்ல மௌனத்தின் வெளியில் உலவிக் கொண்டு இருக்கின்றது. அன்பின் தாவரங்கள் மலர்ச்சியில் பெருகத் தொடங்கியிருந்தது. உன் கருணையினால்… நீ இன்றி அழுகிப் போகத் தொடங்கிவிட்டது செடிகளிலேயே மலர்கள் அழுகிய வாசனை மெல்ல மேலெழும்புகிறது 5.4 முன்னெப்போதோ நான் செய்த பாவத்திற்கு கிடைத்த தண்டனையாய் கருதிக்கொள்ளத்தான் வேண்டும்… ஒரு தேவதையைப் போல என்னோடு நீ வந்து இருந்து, நடந்து அற்புதம் புரிந்ததை இனி எப்போதும் நான் மறக்கவியலாது. ஆனால், நான்தான் சாத்தான் நான் உன்னை நுரைத்து ததும்பும் என் மதுக்குவளையின் ஐஸ்கட்டியாய் இட்டு வைத்தேன். மிக உயர்வானவைகள் எளிமையாகத்தான் இருக்குமென்பது எனக்கு புரியவில்லை இவ்வளவு நடந்தும்… கசப்புகள் மறந்து நான் உனக்காக காத்துக்கொண்டுதான் இருக்கிறேன் நீ மறுபடியும் என்னை மலர்த்துவாய் என்று… நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்து கிடக்கின்றன ப்ரியங்கள்….   தொகுப்பு அன்பரசு

வாசனையாக மாறியவளை முகரும் நாசி!

படம்
  பேருந்தில் ஏறும்போதே வாசனையின் தாழியில் வழிதவறி விழுந்தேன் மெல்ல மெல்ல நாசிகளில் நிரம்பிய வாசனை ஒரு பெண்ணின் உடலிலிருந்து என தோன்றியபோது.. நறுமணத்தில் மூழ்கத் தொடங்கியிருந்தேன்.   தீராத வாசனை திசையெங்கும் அலைக்கழித்தது திடீரென வாசனை வற்றிப்போனது மெதுவாக குறைந்த வாசனை நாசியைக் கூட அறியாமல் கடந்து போயிருந்தது அதிர்ச்சியுற்றவனாக கடந்த வாசனையின் வழிதேடி ஓடத் தொடங்கினேன். கூந்தல் அலைபாய ஒருத்தி மட்டும் முன்னே போய்க்கொண்டிருந்தாள். தீரா வாசனை அவளுடனே சென்று கொண்டிருந்தது முழுமையாக வாசனையாகவே மாறியிருந்தாள் நான் நாசியாக…  கவிதை- குமார் சண்முகம் படம்  - பிக்ஸாபே

நான் உணருகிற ஒரே வாசம்! - குமார் சண்முகம்

படம்
  முத்த வாசனை   - குமார் சண்முகம் கவிதைகள் உன்னை ஆவேசமாக முத்தமிட்டு திரும்புகிற போதெல்லாம் உன் மகத்தான வாசம் என் நாசியில் ஒட்டிக் கொள்கிறது   நீ   என்னை விட்டு பிரிந்து சென்று நெடுநேரமாகிய பிறகும் உன் வாசம் உன்னை   நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.   என்னில் பிறிதொரு வாசம்   உணர வாய்ப்பதில்லை நான் உணருகிற ஒரே வாசம் உன்னுடையதுதான்…

இரண்டு கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் - செகன் கருணதிலகா, ஜேனிஸ் பாரியட்

படம்
  கவிஞர் ஜேனிஸ் பாரியட் எழுத்தாளர் செகன் கருணதிலகா கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் செகன் கருணதிலகா புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் படிப்பது… நான் ஒரே நேரத்தில் நிறைய நூல்களைப் படிப்பேன். செவ்வியல் இலக்கியம், கட்டுரைகள், என்னுடைய துறை சாராத நூல்கள், இப்போது அசோக் ஃபெர்ரியின் தி அன் மேரேஜபிள் மேன், ஆர்மிஸ்டிட் மௌபினின் மோர் டேல்ஸ் ஆப் தி சிட்டி ஆகியவற்றை படித்து வருகிறேன். எலிசபெத் கில்பெர்டின் கமிட்டட் – எ ஸ்கெப்டிக் மேக்ஸ் வித்   மேரேஜ், அன்னா ரோஸ்லிங் ரோன்லண்ட்டின் ஃபேக்ட்புல்னெஸ், ஹன்ஸ் ரோஸ்லிங்க், ஆலா ரோஸ்லிங்க், இரா லெவினின் ரோஸ்மேரி பேரி ஆகியோரது நூல்களை படித்து முடித்தேன். எழுதும்போது..   மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு எழுதுவேன். என்னைச் சுற்றிலும் கத்தரிப்பூ, மெஜந்தா நிற விளக்குகள் எரியும்.   செவ்வியலான இசையைக் கேட்பேன். எழுதி முடித்தவுடன் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பேன். ஒரு கிளாஸ் என்பதைத்   தாண்டினால் எழுத்து வேலைகளை செய்ய முடியாது. எப்போதும் பிடித்த நூல்கள் குழந்தையாக இருக்கும்போது தி குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா. அகதா கிறிஸ்டியின்   அண்ட் தென் தேர் வேர் நன் நூல்.

வாழ்வை பிரதிபலிக்கும் அற்புதமான ஹைகூ கவிதைகள்! - ஜப்பானிய ஹைகூ - தி.லீலாவதி

படம்
  ஜப்பானிய ஹைகூ தமிழில் தி.லீலாவதி அன்னம் பதிப்பகம் தமிழிணையம் கவிஞர் அப்துல் ரகுமான் வழிகாட்டலில் ஹைகூ கவிதைகள் மீது ஆர்வம் வந்து எழுத்தாளர் தி.லீலாவதி மொழிபெயர்த்துள்ள ஹைகூ கவிதைகள் நூல். ஹைகூ கவிதைகள் மூன்றடி கொண்டவை. இதில் மிக குறைவான வார்தைகளில் வாழ்க்கை, சோகம், வறுமை, காதல், ஆச்சரியம், வெறுமை ஆகியவற்றை எளிதாக உணர்த்திவிட முடியும். தமிழ் மொழிபெயர்ப்பில் கவிதைகள் சிறப்பாகவே உள்ளன. தினத்தந்தி, மாலைமதி, தேவியின்   கண்மணி, பாக்யா வரை அனைத்து நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ்களிலும் ஹைகூ வெளியாகியுள்ளது. வெளியாகிக் கொண்டும் இருக்கிறது. இதன் இறுக்கமான வடிவம், குறைந்த வார்த்தைகள் ஆகியவை இதன் பலம். ஜப்பானிய ஹைகூவில் புகழ்பெற்ற ஹைகூ கவிதைகளை மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.   பாஷா, இஸ்ஸா ஆகியோரின் கவிதைகளை வாசிக்க உணர சிறப்பாக இருக்கிறது.   உதிர்ந்து வீழ்ந்த மலர் கிளைக்குத் திரும்புகிறதோ ஓ.. வண்ணத்துப்பூச்சி என்ற ஹைகூ அற்புதமானது. இந்த கவிதை கவிஞர் அப்துல் ரகுமானை ரசிக்க வைத்துள்ளது. எனவே, அவர் நூலை லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லியிருக்கிறார். இதேபோல

கவிதைகளின் நகரமாக டெல்லி எனக்கு பிடிக்கும்! - விமானி மார்க்

படம்
  மார்க் வான்ஹோனாக்கர்  விமானி, எழுத்தாளர்  சிறுவயதிலிருந்து வானத்தில் விமானம் ஓட்ட அசைப்பட்டவர்தான் மார்க். இப்போது அங்கே இங்கே என அலைந்து ஒருவழியாக காக்பிட்டில் உட்கார்ந்துவிட்டார். கூடுதலாக கிடைத்த நேரத்தில் ஸ்கை ஃபேரிங் என நூலை வேறு எழுதிவிட்டார். அதுதான் முதல் நூல். பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்றவர், அந்த அனுபவங்களை காதல் கடிதம் போல எழுதிய நூல்தான் இமேஜின் எ சிட்டி என்ற நூல். அவரிடம் இதுபற்றி பேசினோம்.  உங்களுக்கு பிடித்தமான விமானநிலையம் எது? மும்பையின் டெர்மினல் 2 என்பது எனக்கு பிடித்தமான இடம்.  2007இல் விமானத்தை முதல்முறையாக ஓட்டும்போது மும்பைக்குத் தான் ஓட்டிச்சென்றேன். இதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. டெல்லி விமானநிலையமும் எனக்கு பிடித்தமானது.  பிடித்தமான நேரம்? இரவில் விமானத்தில் பறப்பது பிடித்தமானது. அப்போது வானம் நிறைய நட்சத்திரங்கள் இருக்கும். அந்த நேரத்தில் கீழே பார்க்கும்போது நகரங்கள் ஒளிவிட்டபடி இருக்கும். சாலைகளிலிலும் பிரகாசம் தெரியும்.  பொதுவாக கார் ஓட்டுநர்களுக்கு பிறர் கார் ஓட்டி தான் உட்கார்ந்து வருவது பிடிக்காது. உங்களுக்கு எப்படி? ந

குழந்தைகளுக்கான எளிமையான கவிதைகளை இயற்றிய அமெரிக்க கவி!

படம்
  ஹென்றி வேட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ எளிமையான உணர்ச்சிகளை படைப்பாக்கியவர்! இவர் காலத்தில் பலரும் முக்கியமான இலக்கியப் படைப்புகளை உருவாக்க மெனக்கெட்டனர். ஆனால் வேட்ஸ்வொர்த் நேர்மையான மனிதர்களைக் கொண்ட சிறு உணர்ச்சிகளைப் பேசும் கவிதைகளை எழுதினார்.  இதன் காரணமாக இவரின் படைப்புகளை பலரும் குழந்தைத்தனமாக இருக்கிறது என விமர்சித்தனர். ஆனால் அன்றைய காலத்தில் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு படித்துக் காட்ட எளிதான கவிதை என்று இருந்தது ஹென்றியினுடையது மட்டும்தான்.  1807ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பிறந்தவர் ஹென்றி. அமெரிக்காவின் போர்லேண்டில் பிறந்தவர், தனது இளமைக் காலத்திலேயே இலக்கியத்திற்காக உழைப்பது என முடிவு செய்துவிட்டார்.  ஹென்றியின் பெற்றோர் அவரை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அனுப்பினார்கள். பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, போர்ச்சுக்கீஷ், ஜெர்மன் ஆகிய மொழிகளை கற்றுக்கொள்வான் என நம்பினார்கள். மைக்கேல் ஏஞ்சலோவின் கவிதையை சிறப்பாக மொழிபெயர்த்தார். பிறகு, டண்டே அலிகியரின் டிவைன் காமெடியை மொழிபெயர்ப்பு  செய்ததை இலக்கிய வட்டாரம் முக்கியமானது என குறிப்பிடுகிறது.  ஹென்றிக்கு இருமுறை திருமணம் ஆனது. முதல் மனை

சட்டம் படித்தாலும் எழுத்து மீதான ஆர்வத்தால் சாதனை படைத்த எழுத்தாளர் - விக்டர் ஹியூகோ

படம்
  விக்டர் ஹியூகோ விக்டர் ஹியூகோ இவரின் எழுத்துக்களில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் மக்கள் உணர்ந்தனர். பிரான்சின் மதிக்கப்படும் எழுத்தாளர் இவர். மனிதர்களின் அனுபவம், உண்மை ஆகியவற்றை எழுத்து வடிவமாக சிறப்பாக கொண்டு வந்தவர் இவர்தான்.  இலக்கியப் பங்களிப்பில் பகடி, கவிதை, த த்துவரீதியான எழுத்துகள், வரலாறு, விமர்சன கட்டுரைகள், அரசியல் பேச்சுகள் என ஏகத்துக்கும் எழுதி தள்ளியுள்ளார்.  ஹியூகோ பிரான்சின் பாரிஸ் நகரில் 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று பிறந்தார். இந்த ஆண்டோடு இவர் பிறந்து 220 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டு இன்னொரு ஆண்டு கூடும் என்பது நீங்கள் அறிய வேண்டிய அரிய தகவல்.  நெப்போலியன் ராணுவப்படையில் இருந்த ஜோசப் லியோபோல்ட் சிகிஸ்பெர்ட் யாரென்று தெரியுமா? அவர்தான் ஹியூகோவின் அப்பா.  பாரிஸ் நகரில் சட்டத்தில் பட்டம் பெற்றார். சட்டத்தை கொஞ்ச நாள் பயிற்சி செய்தார்.  பிறகுதான் ஆர்வம் எழுதுவதில் தொடங்கியது. முதலில் கருத்தை எளிதாக சொல்லுவதற்கான வடிவமான கவிதையை எழுத தொடங்கினார். பிறகு, சம்பவங்கள், நாடகங்கள், கட்டுரைகள் என எழுத தொடங்கினார். ஹியூகோவின் முதல் நாவல், ஹான் டி டிஐலாண்டே என்ற பெயரில் வெளி

2022இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய நூல்கள்!

படம்
  டிரேஸி ஃபிளிக் கேனாட் வின் டாம் பெரட்டா டிரேஸி ஃபிளிக்  என்ற பாத்திரம் எப்படி பாலின வேறுபாடுகளைத் தாண்டி தனது துறையில் வெல்கிறார் என்பதே கதை. எலக்சன் என்ற நூலை எழுதியபிறகு 25 ஆண்டுகள் கழித்து டிரேஸி ஃபிளிக் என்ற பாத்திரத்துடன் வாசகர்களை எழுத்தாளர் டாம் பெரட்டா சந்திக்க வந்துள்ளார். உயர்நிலைப்பள்ளி துணை முதல்வராக உள்ள டிரேசி பல்வேறு சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.  தி கிரேன் வைஃப் சிஜே ஹாசர் ஆய்வுக்காக செல்லும் பயணத்தில் காதல், அன்பு, திருமணம் ஆகியவற்றை புரிந்துகொள்கிறார் எழுத்தாளர் ஹாசர். இதன் விளைவாக நடக்கவிருந்த தனது திருமணத்தைக் கூட நிறுத்திவிடுகிறார். இப்படி செய்ய என்ன காரணம் என்பதை நூலில் ஹாசர் வாசகர்களுக்கு கூறுகிறார்.  ரெயின்போ ரெயின்போ லிடியா கான்கிளின் நூல் முழுக்க மாற்றுப்பாலினத்தவர்களின் கதைகள் நிரம்பி வழிகின்றன. ஓரினச்சேர்கைத் தம்பதிகள், சமூகத்தோடு இணைந்து வாழ விரும்பும் மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்கும் அனுபவங்கள், இதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என பல்வேறு உணர்வுகளை சொல்லும் கதைகளாக உள்ளன. விரும்புபவர்கள் இதனை வாங்கி வாசிக்கலாம்.  எய்தர் ஆர்

பேராளுமைகளை சந்தித்த அனுபவத்தை சொல்ல நினைத்தேன்! - கவிஞர் குல்ஸார்

படம்
  கவிஞர் குல்ஸார் குல்ஸார் கவிஞர், பாடலாசிரியர் ஆக்சுவலி ஐ மெட் தம் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார் குல்ஸார். நூல், சினிமா, இசை, இலக்கியம் பற்றி அவரிடம் பேசினோம்.  நூலுக்கான தலைப்பை எப்படி பிடித்தீர்கள்? என்னுடைய பயணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அந்த தலைப்பு மிகவும் சாதாரணமாக இருந்தது. பிமல்ராய், பண்டிட் ரவிசங்கர், மகாஸ்வேதா தேவி ஆகியோரை சந்தித்து பேசி பழகி இருக்கிறேன். இதுபோன்ற பெரிய ஆளுமைகளை சந்தித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். அதை வெளிக்காட்டும்படியாக நூல் தலைப்பை வைத்தேன்.  நூலில் சத்யஜித்ரே, கிஷோர்குமார், சுசித்ரா சென் ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.  நூலில் உள்ள பதினெட்டு ஆளுமைகளை சந்தித்து பேசி அவர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக உள்ளது. இவர்களில் சிலரைப் பற்றி நூலாக எழுத நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சில மனிதர்களைப் பற்றி கவிதைகளை எழுதி வைத்துள்ளேன். அவற்றை பின்னாளில் பிரசுரிப்பேன் என நினைக்கிறேன்.  யாருடனாவது பணியாற்றவேண்டும் என நினைத்துள்ளீர்களா? அந்தப் பட்டியல் பெரிது. குருதத்துடன் பணிபுரிய நினைத்தேன். அவர் படம் எடுத

உலகை மாற்றிய பெண்கள் - கவிஞர் சாபோ, எமிலி டிக்கின்சன்

படம்
                    பெண் கவிஞர் சாபோ தொன்மைக்கால புகழ்பெற்ற பெண் கவிஞர் தொன்மைக்காலத்தில் தனது ஆழ்மன உணர்ச்சிகள் , கருத்துகள் பற்றி பாடல்களை எழுதிய பெண்மணி . அந்த காலத்திலேயே இந்த வகையில் ஒன்பது பாகங்களாக கவிதை நூல்களை எழுதி குவித்தார் . இன்று சாபோ எழுதியவற்றில் 650 வரி கவிதைகள் மட்டுமே மிச்சம் .    சாபோ அன்றைய காலத்தில் டிரெண்டிங்கை பின்பற்றாமல் அதனை உருவாக்கியவராக இருந்தார் . இவர் எந்த ரிதத்தில் , எந்த பாணியில் கவிதையை எழுதினாரே அதே போல நகலெடுத்து ஏராளமான கவிஞர்கள் கவிதைகளை பின்னாளில் எழுதினர் . லையர் எனும் இசைக்கருவியை இசைக்க அதற்கு கவிதையைப் பாடுவது சாபோவின் திறமை . சாபோவின் காலம் 630 முதல் 612 வரை இருக்கலாம் . இவரது சொந்த வாழ்க்கை பற்றி நமக்கு குறைவான தகவல்களை கிடைக்கின்றன . கிரேக்க தீவான லெஸ்போஸில் பிறந்த பெண் கவிஞருக்கு மணமாகி பெண் குழந்தை இருந்திருக்கிறது . கடல் பயணி மீது காதல் கொண்டு அக்காதல் நிறைவேறாத தால் மலை உச்சியில் இருநது கீழே குதித்து உயிரை விட்டார் என்று தகவல்கள் சொல்லுகின்றன . தொன்மை நாணயங்களில் சாபோவின் உருவம் பொறிக்கப்பட்ட

சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்களை உசுப்பியவை ஃபைஸின் கவிதைகள்!

படம்
2 கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸ் 1979ஆம் ஆண்டு கவிதை ஒன்றை எழுதினார். அதன் பெயர் ஹம் தேக்கேங்கே. இக்கவிதை இன்று சர்ச்சையாகி வருகிறது. இதுபற்றி அவரது பேரன் உளவியல் மருத்துவர் அலிமாதி ஹஸ்மியிடம் பேசினோம். ஆங்கிலத்தில் - சோனம் ஜோஷி உங்கள் தாத்தா இறந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரின் கவிதை இக்காலகட்டத்திற்கும் பொருந்தும்படி இருப்பதைப் பற்றி சொல்லுங்கள். என் தாத்தா கிண்டலாக சொல்லுவார். பாகிஸ்தானின் நிலைமை மாறப்போவதில்லை. அதேபோல, என் கவிதைக்கும் வயது ஏறப்போவதில்லை. தாத்தாவின் கவிதை மீது சர்ச்சை ஏற்படுத்தி கான்பூர் ஐஐடி பேராசிரியரும், இந்திய பிரதமருமான மோடிஜியும் கவிதையை தீர்க்கமாக தங்கள் செயலின் மூலம் ஆமோதிக்கிறார்கள். உங்கள் தாத்தா எழுதிய கவிதையை தேசவிரோதம் என்று குற்றம் சாட்டி கான்பூர் இதற்கென தனி குழுவை அமைத்துள்ளதே? ஆம் என் தாத்தா தேசியவாதி கிடையாது. அவர் உலகவாதி. ஆசிய துணைக்கண்ட நாடுகளில் உள்ள அனைவரையும் தன் சகோதரர்களாகவே அவர் நினைத்தார். தன் படைப்புகளையும் அப்படியே எழுதினார். இன்று அது சட்டவிரோதம். தேசத்திற்கு எதிரானது என்று அரசால் கூறப்பட்டு