நான் உணருகிற ஒரே வாசம்! - குமார் சண்முகம்

 











முத்த வாசனை  - குமார் சண்முகம் கவிதைகள்



உன்னை ஆவேசமாக முத்தமிட்டு

திரும்புகிற போதெல்லாம்

உன் மகத்தான வாசம்

என் நாசியில் ஒட்டிக்

கொள்கிறது

 

நீ  என்னை விட்டு பிரிந்து சென்று

நெடுநேரமாகிய பிறகும்

உன் வாசம் உன்னை

 நினைவூட்டிக்கொண்டே

இருக்கிறது.

 

என்னில் பிறிதொரு வாசம்

 உணர வாய்ப்பதில்லை

நான் உணருகிற ஒரே

வாசம் உன்னுடையதுதான்…



கருத்துகள்