மாலையில் வீசும் காற்று சற்று ஆறுதலாக உள்ளது!

 








நரசிங்கபுரம் 28/3/2023

அன்பரசு சாருக்கு  அன்பு வணக்கம். நேற்று பேசிய உரையாடல் மகிழ்ச்சி தந்தது. அதில், கடிதமாக எழுதவேண்டியதை பேசிவிட்டேன். பேசத் தவறியதை கடிதத்தில் எழுதுகிறேன்.

சமீபத்தில் மெகா ஸ்டாரின் இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று, கிரிஸ்டோபர். காம எண்ணமே ஒருவனை அழிக்கிறது. சாதாரண மனிதன் தவறான ஆசைகளை வெளிப்படுத்தினால் மரணமே வழி என்பதாக கதை அமைந்துள்ளது. மம்மூட்டியின் தர்ம செயல் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தது. கொடூரமான காட்சிகள் நெஞ்சை உலுக்கின.

இரண்டாவது படம், ஒன். 2021இல் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சில காட்சிகளை யூட்யூபில் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். பார்க்க வேண்டிய படம். நான் ஃபேஸ்புக்கில் வங்கி மேலாளரைப் பற்றி புகார் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு எவ்வளவு மதிப்பு உள்ளதென வியந்தேன்.

இந்தப்படத்திலும் மம்மூட்டியின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது. நிதானமான பேச்சு, அதிரடி முடிவு என முதலமைச்சராக வலம் வந்து நம்மைத் தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் நம்பர் ஒன் என சொல்லி படத்தை முடிக்கிறார். முதலமைச்சர்கள் பார்க்க வேண்டிய படம்.

இன்று பிளாக்கரை இன்ஸ்டால் செய்தேன். ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே எழுதிய ராங்கிப் பட விமர்சனத்தை பேஸ்ட் செய்து பதிவேற்றினேன். கணிதம் சம்பந்தமாகவும் எழுதி வருகிறேன். கணிதக் குறியீடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைப் பற்றி எழுதி ஒரு புத்தகமாக தொகுக்கலாம் என முயற்சிக்கிறேன். அதற்கான அடித்ததளம் இன்று நடந்தது.

எப்போதும் இல்லாத அளவிற்கு அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் அதிக நெரிசல் காணப்படுகிறது. வேலைக்கு செல்லும் ஆட்கள் அதிகமாகிவிட்டனர்.

தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து சகோதரர் மற்றும் அவரின் நண்பருடன் சேர்ந்ந்து உடற்பயிற்சி செய்கிறேன். மூன்று கி.மீ. தார் சாலையில் ஓட்டம். வெயில் அதிகமாக உள்ளது. மாலையில் வீசும் காற்று சற்று ஆறுதலாக உள்ளது. உடலைப் பார்த்ததுக்கொள்ளுங்கள். அதிக நீர் அருந்த வேண்டுகிறேன். நன்றி

காந்திராமன்

https://in.pinterest.com/pin/830562356288306105/

கருத்துகள்